Friday, September 26, 2014

பொருளியல் ஆசிரியர் வரதராஜன்..!


பொருளியலும் வரதரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகவே உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் படித்த மாணவர்கள் நினைத்திருப்பர்!வடக்கில் பொருளியல் என்றாலே கூடவே வரதரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் பலருக்கும்!

உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவுக்குள் காலடி எடுத்துவைத்த போது 'இதெல்லாம் ஒரு மேட்டரா'என்று எனக்கிருந்த இறுமாப்பு தகர்ந்தது வரதரின் முதலாவது வகுப்பில் தான்!

ஒவ்வொரு பொருளியல் எண்ணக்கருக்களையும் அதன் ஆதி முதல்கொண்டு முழுமையாக விளக்குவதில் வரதருக்கு நிகர் அவரே!


பொருளியல் அவர் இரத்தத்தில் ஊறிய ஒன்று!அதுவே பிடிக்காத பொருளியலையும் பலருக்கு பிடித்தமானதாக்கியது!தீவிர நாட்டுப்பற்றாளன்.இதனாலேயே இந்தியன் ஆர்மியாலும், பின்னர் அண்மையில் இனந்தெரியாதோராலும்(!) கடத்தப்பட்டார்.கல்விமான்.அரசியல்-பொருளாதார விமர்சகர். வகுப்புகளில் அரசியல்-பொருளாதார நுண் காமெடிக்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.

ஒருசில ஆசிரியர்கள் தான்,ஆசிரியர் என்கின்ற ஸ்தானத்தையும் தாண்டி மனதில் ஒரு ஹீரோவாக,கடவுளாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.பொருளியலைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோருக்கு வரதர் அப்படித்தான்..!சிறந்த பொருளியல் ஆசானை தமிழ் மாணவர்களும் கல்விச் சமூகமும் இன்று இழந்து நிற்கின்றது!

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...