Showing posts with label உல்ட்டா. Show all posts
Showing posts with label உல்ட்டா. Show all posts

Monday, June 20, 2011

பீட்டர் பசங்க என்ன பண்ணுவாங்க??


மனிதர்கள் பலவிதம்..அதில் ஒரு விதம் தான் இந்த பீட்டர் பசங்க..
நீங்கள் கூட ஒருவராக இருக்கக்கூடும் இந்த வகையறாவில்..
நாம தமிழர் தானே?
ஆங்கிலம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாதது தான்..வேற்று மொழி நபர்களுடன் உரையாடும் போது கட்டாயமானது.
ஆங்கிலத்தின் பயன்கள் பற்றி நான் இங்கு அறிக்கை வாசிக்க வரவில்லை..
ஆனா நம்ம பயலுக கொஞ்சப் பேர் பண்ணுற அலப்பரைகள் தான் தாங்க முடியல பாஸ்..

ஒத்துக்கலாம் அவங்களுக்கு நம்மள விட கொஞ்சம் இங்கிலீசு கூட தெரியும்னு.அதுக்காக இப்பிடியா?
நம்ம ப்ரெண்டு ஒருத்தன் இல்ல இல்ல ரெண்டு பேர் இருக்கானுக,அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

1 )நம்ம கூட தமிழ் படம் பாக்க வரமாட்டானுகள்..எங்கயாச்சும் இங்கிலீசு படமெண்டா அது சப்ப படமெண்டாலும் பார்க்க போவானுகள்.அவனுக தமிழ் படம் பாக்கிறத நாம பாத்தா அவங்கட மீட்டர் எதோ கொறஞ்சிடுமாங்க!

2 )சாப்பிட போற எண்டா ஏதாச்சும் இங்கிலீசு பெயர் வைச்ச ஹோட்டலுக்கு தான் போவானுகள்.ஹோட்டல் எண்டு தமிழில பெயர் போட்டிருந்தா கூட அதுக்கு தடா தான்!நாம கையேந்தி பவன் எண்டாலும் பிரிச்சு மேய்வம்..அவங்கள் பக்கத்தில நிண்டு இந்தா மச்சான் ஒரு வடை சாப்பிடு எண்டா அவங்க பண்ற ரவுசு இருக்கே..எதோ எலிசபெத் பரம்பரை மாதிரி!இந்தாடா வாழைப்பழம் எண்டா வாங்கமாட்டானுகள்..பனானா எண்டா உரிச்சு வைக்க போடுவாங்கள் ரெண்டு பேரும்!

3 )ரோட்'ல சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா ஏதாச்சும் நல்ல பிகர் வந்தா நாம சட்டப்படி பிகர்டா எண்டுவம்..அவங்க ரெண்டு பெரும் தங்களுக்க "nice structure no" அப்பிடி எண்டுவாங்கப்பா..

4 )நாம எலாம் வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..நம்மள விட்டிட்டு போயி பிலியட்ஸ் விளையாடுவாங்க பாருங்க..
இவனுகள என்னேங்குறது?



5 )எவனோடயாச்சும் சண்டை எண்டா நம்மட வாயில என்னங்க வரும் உடன?இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?
"he is very stupid no..mother ******" அப்பிடி எண்டு திட்டுவாங்க பாருங்க...


6)நம்மள மாதிரி சண் டி.வி விஜய் டி.வி எல்லாம் பாக்கமாட்டாங்கப்பா..ஸ்டார் டி.வி,V டிவி தான் பாப்பானுகள்..பாத்திட்டு சும்மா இருந்தா பரவாயில்லைங்க,நம்மள வைச்சுக்கொண்டு அதில நடந்த சீனுகள் பத்தி கதைப்பாங்க பாருங்க..ஜேம்ஸ் கமரூன் கூட இந்தளவுக்கு அலசி இருக்கமாட்டார் பாருங்க!


7)எங்காச்சும் போகேக்க யாராச்சும் ரிசப்சனிஸ்ட் பிகருகள்கிட்ட நம்மள தள்ளி விட்டிட்டு போய் மொக்க போடுவாங்க இங்கிலீசில..இவங்களையெல்லாம் ஏன்டா கூட்டிட்டு வந்தோம்னு இருக்கும்..இப்பிடித்தான் சொந்த செலவில அடிக்கடி சூனியம் வைச்சுக்குவம் நாம!


8)நம்மள மாதிரி லோக்கல் கடையில எல்லாம் போயி ஷர்ட் பான்ட் வாங்க மாட்டாங்க..ஏதாச்சும் இன்டர்நசனல் கடை அதுவும் a /c போட்டு இங்கிலீசில பெயர் போட்டிருந்தா மட்டும் தான் உள்ள காலை விடுவாங்க!

9)அதில ஒருத்தன் ஒரு பத்து மாசம் தான் யு.கே'ல இருந்திட்டு வந்தவன்..போகேக்க நம்மள மாதிரி தானுங்க போனவன்..
போயிட்டு வந்ததில இருந்து அவன் படுத்துவான் பாருங்க...ஒரே ஒரு வார்த்தைய வைச்சு சந்து போந்து இஞ்சு இடுக்கெல்லாம் யூஸ் பண்ணுவன்..
அது என்னெண்டு பாக்குறீங்களா?
"How come?"
இப்பிடி தான் "How horrible" எண்டு சொல்ல போயி "How horable" எண்டு சிலிப் ஆகிட்டான் பயபுள்ள..விடுவாங்களா நம்ம பசங்க?
இப்ப அவரிண்ட செல்ல பெட் நேம் "ஹொவ் ஹோரபில்" தானுங்க!!

10)அதாச்சும் பரவாயில்லைங்க,பேஸ் புக்கில தமிழில ஸ்டேடஸ் போட்டா கமெண்டு பண்ணமாட்டாங்க..லைக் பண்ண மாட்டாங்க..
இங்கிலீசில A...B...C....D.....அப்பிடீன்னு போட்டாலே குஷி ஆகிடுவாங்கப்பா..

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களையும் போய் சேர ஓட்டுப் போடுங்கள்.கருத்துகளை பின்னூட்டத்தில் கூறிச்செல்லுங்கள்..

ஆக்சுவலி இதொரு மீள் பதிவாக்கும்...அந்த இரண்டு நண்பர்களும் மன்னிச்சு..

Post Comment

Tuesday, December 14, 2010

பாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)!



ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பேரப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்தப் பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).
இப்பிடித்தான் ஒரு தடவ "மெட்ராஸ் ஐ" வந்தப்போ பாட்டிக்கு மட்டும் வரல..ஏனென்டா அந்த சமயம் பாட்டி அத்திப்பட்டி கிராமத்தில ஒரு பங்சனுக்கு வடை சுட போயிருச்சு.(பாட்டிட வடை ஒத்து வராமத் தான் அத்திப் பட்டி கிராமமே அழிஞ்சது யாருக்குமே தெரியாது..நீங்க சிட்டிசன்'ல பாத்ததெல்லாம் சுத்தப் பொய்)

பாட்டி ஸ்பெஷல் வடை ஒண்ணு சுடும்.அதிண்ட ஸ்பெஷல் என்னெண்டா சாதா வடையோட ஒரு வாழைப்பழமும் சேர்த்து விக்கிறது தான்.அந்த சாப்பாட்டில மயங்கினான்களோ இல்லையோ தின்னு போட்ட வாழைப்பழ தோல்'ல வழுக்கி விழுந்தவங்க ஏராளம் பேர்!!
அவ்வாறு வழுக்கி விழுந்தவங்களுக்கு பாட்டி வெள்ள நிவாரண நிதியில இருந்து நஷ்ட ஈடு குடுப்பாங்க.
.

பாட்டிக்கு தினசரி வருமானமே எக்கச்சக்கம்..அதால புருஷன் வேலை செய்யனுமேண்டு தேவை இருக்கல.
அதால தினசரி நாட்டுச் சரக்கு அடிப்பதும் நடு ரோட்'டில படுப்பதும் தான் தலையாய கடமை எண்டு வாழ்ந்து வந்தார்..

இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).

உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..
(இவர் தான் மிஸ்டர் சின்னப்பு,One and only husband)

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)


(ஆயிப் போன காக்கா)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..


ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பெறப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்தப் பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).

இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).
உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..


என்ன அண்ணே சூடா இருக்கியா..வேணும்னா சூட ஒரு காப்பி சாப்பிடுறியா?
வேணாமா..அப்ப நீ காபி சாப்பிட இங்க வரல?
அப்ப இந்த நிலா நிலா ஓடிவா பாட்ட பாரண்ணே கொஞ்சமாவது சூடு தணியும்..

இப்பிடித்தான் நண்பர் நாஞ்சில் பிரதாப்'பும் ஒரு தடவ குரங்கு கதை சொல்லப் போயி அடி வாங்கினாரு.
ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்..பதிவுலகில் பெரும்பாலானோர் விஞ்ஞானிகளே!!ஒரு பதிவு போட எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாங்க தெரியுமா..?(போடுறதே மொக்க பதிவு இதுக்க அட்வைஸ்'சு வேறயா)..ஆனா வெளில இருந்து பாக்கிற பசங்க எதோ லுச்சாத் தனமா நம்மள ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க..(கையில கிடைச்சான் செத்தான் என்கிற மாதிரி)..ஒவ்வொரு இரவும் எவ்வளவு நடுக்கத்தோட வாழுறம் எண்டு நமக்குத்தான் தெரியும்!!
வன்முறைக் கலாசாரம் வேணாம்.எதுவா இருந்தாலும் பின்னால(அதாங்க பின்னூட்டத்துல)சொல்லுங்க நண்பெர்ஸ்!!

Post Comment

Monday, November 29, 2010

என்திரனில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சா...!!



எந்திரன் படத்தில் டி ஆர் ராஜேந்தர் நடிச்சிருந்தா என்னாகி இருக்கும்??
அவர் தானே பாடல்,மியூசிக் எல்லாமே...
தனக்கு பாடல் எப்படி எழுதி இருப்பார் என்று ஒரு சிறிய கற்பனை..
பாடிப்பாருங்கள் எந்திரன் பாடலோடு ஒப்பிட்டு!!



இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் காறித் துப்பும்
இவன் சிறுவன் தாண்டிய உயரம் கொண்டவன்
ஆடு ஆடு தாடி நக்கும்
நீ அழகே TR அழகே
TR என்பவன் எதற்கும் அஞ்சான்!!

அறிவேன் அறிவேன் நானே 1000 அறிவேன்
உன் போல் ரசிகன் கிடைத்தால் சும்மா விடுமா!
திரைக்கதை...என்னோடு
டைரக்சன் ....என்னோடு
நான் பாட்டுக்கும் மியூசிக் போட்டேன் ஹிட்டு ஆகலையே...
***********************************************************************************

டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா
இரும்பிலே முளைக்கும் இருதயம்
மேற்கிலே முதல் சூரிய உதயம்!!
T R "உ உன்னோடு
ஐசு நீ என்னோடு
தாடி தான் என்னோடு
ப்ளேடு உன் கண்ணோடு
சினிமாவே காணாக் காதல்
மச்சினி உன்னோடு...!!
டண்டணக்கா ஏய் டணக்கு ணக்கா



**********************************************************


MLA சீட்'டுகள் தமிழ் நாட்டில் எத்தனை..
திமுக அதிமுக கட்சிகள் தான் மொத்தம் எத்தனை..
அம்மாவை பிரிந்தால்..
யாவோடு சேரும் சிந்தனை...ஐயோ...
TR TR ஒரே ஹீரோ
அழகின் மொத்தம் நானா....??
நான் வளர்ந்தும் வளராத பையனா..
இல்லை மூளை வளர்ச்சியில் பையனா
இல்லை எதுகை மோனைக்கு பிறந்த பயபுள்ளயா..
அழகின் மொத்தம் நானா...
**************************************************************

பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
பூம் பூம் TR தான் TR தான்..
Zoom Zoom TR தான் TR தான்
தாமில் சினிமாவின் விடியலோ TR
பே-ர-ர-சுவின் தந்தையோ TR
எந்தன் லீலையின் பிள்ளையோ சிம்பு
சிம்பு வம்பு சிம்பு வம்பு வம்பு சிம்பு!!



கொஞ்சம் அனுபவிச்சிருந்தா உங்க கருத்துகள்,ஓட்டுகளை விட்டுச்செல்லுங்கள்!!

Post Comment

Friday, October 15, 2010

நயன்"னை வைச்சிருக்கேன்-பிரபுதேவா!!(மொக்கை)

சத்தியமா இது பிளாஷ் நியூஸ் இல்லேங்க..என்ன பண்ற சூடா தலைப்பு வைச்சா தானே விழுந்தடிச்சு வாராங்க நம்மள்ட மாதிரி மொக்கை ப்ளாக்'குக்கு எல்லாம்!!மன்னிச்சூ.....
இப்ப சூடா போய்கிட்டிருக்கிற மேட்டர்'எ சும்மா மொக்கையா கலாய்ச்சு பாப்பமே எண்டு ஒரு சின்ன முயற்சி தாங்க..
காதலன் படத்தில பிரபுதேவாட பாடலையே உல்ட்டா பண்ண போறமாக்கும்..
ஊர்வசி ஊர்வசி பாடலை அப்பிடியே மாத்தி இப்ப பிரபுதேவா பாடினா எப்பிடி இருக்கும்??
இப்பிடித்தான் பாருங்க...
பாட்டு தெரியாதவங்க முதல்லில இத பாருங்க..தமிழ் ல இந்த பாட்டு தெரியாதவங்களே இருக்க முடியாது..அதால....இது தெலுங்கு ஊர்வசி...


நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா..
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..
வாழ்க்கையை வாழவே
keep'பு தாண்டா ஓர் வழி
வாலிப வாழ்க்கையில்
நயனு தாண்ட என் வழி..!
நயன்தாரா நயன்தாரா
take it easy நயன்தாரா
பார்ட்டி வீட்டே கும்"னு இருந்தா
தேவை இல்லே நீ தாரா..

சொல்லடி ரம்லத் ரம்லத்
உன்கிட்ட என்ன இருக்குதெண்டு..
நீயடி ரம்லத் ரம்லத்
குறைய சொல்லடி நயனுக்கிட்ட

முதலு மனுசி முரண்டு பிடிச்சா
take it easy பாலிசி..
ஒழுங்கா இருந்து கெட்டுப் போனா
take it easy பாலிசி..
கள்ள ஜோடின்னு மீடியா சொன்னா
take it easy பாலிசி..
சிம்புகிட்ட லிப்கிஸ் குடுத்தா..
take it easy பாலிசி..
கேளடி ரம்லத் ரம்லத்
தாடி தானே என்னுகிட்ட
நீயடி ரம்லத் ரம்லத்
பாடி தானே உன்னுகிட்ட...!!

பெஸ்ட்டு ஜோடி அவார்டு குடுத்தா
take it easy பாலிசி..
சிம்பு first 'டு நானு செகண்டு..
take it easy பாலிசி..
கண்ட இடத்தில் அடிப்பேன்னு சொன்னா
take it easy பாலிசி..
களவா ஹோட்டல் ரூமுக்கு போனா
take it easy பாலிசி...

நயன்தாரா:
கண்டதும் காதல் வடியாது
நயன்தாரா போல வடிவேது
பூமியில் காதல் கிடையாது
வப்பாட்டி நானே பல பேர்க்கு
ரம்லத்:
போராட்டம் ஏதும் செய்யாமல்
தாராவை விரட்ட முடியாது
கண்ணகி சிலை தான் இங்குண்டு
ரம்லத்தின் சிலையொன்று இங்கேது !!

மொக்க பதிவுன்னு வேற போட்டிட்டன்...ஒட்டு போடாம போகலாமாங்க??

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...