Showing posts with label தளபதி. Show all posts
Showing posts with label தளபதி. Show all posts

Friday, September 26, 2014

‪மணிரத்தினம்‬ ‪க்ரேட்‬..!


இன்று 'தளபதி'படம் போய்க்கொண்டிருந்தது.வேறொரு சேனலும் மாற்ற மனசு இடம்தரவில்லை.எத்தகைய க்ளாஸிக் படம் அது.!ரஜனி-மம்முட்டி-அரவிந்தசாமி,ஸ்ரீவித்யா, ஷோபனா,ஜெய்ஷங்கர்,பானுப்பிரியா என்று எத்தகைய நடிகர் பட்டாளம்,கூடவே இளையராஜாவும்..!

ஜெய்ஷங்கருக்கு ஸ்ரீவித்யாவின் மகன் தான் சூர்யா என்று தெரிந்துவிடும்.அதன்பின்பு ஒரு காட்சியில் மூவரும் கோயிலில் கும்பிட்டுக்கொண்டிருக்க,பின்னால் ரெயில் சத்தம் கேட்கும்.தாய் கண்ணீருடன் குற்ற உணர்ச்சி ததும்ப ஏக்கத்துடன் திரும்பிப்பார்ப்பாள்..மகனும் ஏக்கத்துடன் திரும்பிப் பார்ப்பான்..இதை ஜெய்ஷங்கர் பார்த்துக் கண்ணீர்விடுவார்.ஜெய்ஷங்கருக்கு பின்னாடி கமெரா வந்து இந்த மூவரினதும் வெவ்வேறுவித தவிப்புகள் உணர்ச்சிகள்,அழுகைகளை ஒன்றுச்சேர காட்டும் அந்த ஒரு ஷொட் போதும் இந்தப் படம் காலம் கடந்து பேசப்பட..!

ஒரு நாலைந்து ட்விஸ்ட்டுகளையும்,சுமாரான திரைக்கதையையும் சாதா நடிகர்களையும் வைத்து குறும்பட லெவலில் ஓரிரு படங்களை தந்தவுடன் அவர்களை அடுத்த மணிரத்தினம் இவர் தான் என்று நம்மவர்கள் புகழ்வதைப் பார்க்கும்போது நாம் 'தரமான தமிழ் படங்களில்'எந்தளவு தூரம் நாம் காய்ந்துபோய் கிடக்கின்றோம் என்பது புலனாகின்றது..!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...