Showing posts with label மனிதாபிமானம். Show all posts
Showing posts with label மனிதாபிமானம். Show all posts

Friday, September 26, 2014

மனிதாபிமானம்..!

'எவ்வளவு கொடூரமாக கட்டிவைத்து கொலை செய்திருக்கின்றனர் ISIS தீவிரவாதிகள்..!மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றாள் அந்த சிங்கள பெண்மணி என்னிடம்.

'உண்மை தான்..மனிதாபிமானம் அற்றவர்கள்'என்றேன்.

கைகள் கட்டியபடி உயிர்பிச்சைகேட்டு மண்டியிட்டு நின்ற என் சகோதரங்களின் நினைவு ஒருகணம் ஞாபகத்திற்கு வந்து சென்றது.'சரி,எல்லா சிங்களவர்களும் அப்படி இல்லைத்தானே!' என்று என்னை நானே சமாதானம் செய்ய முயற்சித்தேன்.

'அப்படி இல்லை என்றாலும்,இதனை என்னிடம் சொல்லும்போது ஒருவித குற்ற உணர்ச்சியாவது அவளிடம் இருந்திருக்கவேண்டுமே! அப்படி ஏதும் தெரியவில்லையே.. ஒருவேளை,நம் சகோதரர்கள் மட்டும் மனிதாபிமானத்திற்குள் உள்ளடங்கவில்லையா என்ன?'

இதை வாய்விட்டு அவளிடம் கேட்கவிரும்பவில்லை.'ஏன் கார்பெட்ல A9 ரோட்டு போட்டிருக்காங்க..யாழ்ப்பாணம் வரைக்கும் ரெயின் போகுது..மார்வலஸ் டெவலப்மெண்ட் நோர்த் சைட் ஆப்டர் வார்'என்கின்ற அந்த மிக அரிதான உண்மைகளை எத்தனை தடவைகள் தான் நானும் கேட்பது..!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...