Saturday, February 9, 2013

"கடல்"துளசியும் நம்ம மணி சாரும்..!





"இருக்கின்றதா இல்லையா" என்பதை கண்டுபிடிப்பவன் உண்மையிலேயே ஒரு திறமைசாலி தான்.தொடர்ந்து பல வருடங்களாக தனது கூர்ந்த அவதானிப்பின் மூலமும், தேடல்கள், ஆய்வுகள் அதன் மூலம் மனம் நிலைநிறுத்திக்கொண்ட முடிபுகள் அடிப்படையில் தான் பெரும்பாலானவர்கள் "இருக்கின்றதா இல்லையா?" பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுக்கின்றனர்.

இது நிச்சயமாக ஒரு சிக்கலான பிரச்சனை;அதுமட்டுமல்ல பல முக்கிய முடிவுகளை எடுப்பதில் இந்த "இருக்கின்றதா இல்லையா" பிரச்சனையின் பதில் தான் தீர்மானிக்கும் சக்தியாக அமைகிறது. காரணம்,பெரும்பாலானோர் இல்லாமலிருப்பதை மறைக்க "அது" இருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள், சிலர் இருப்பதை மறைத்து "அது" இல்லாமலிருப்பதாக காட்டிக்கொள்கிறார்கள்.

அவர்களை குற்றம் சொல்லி பயனில்லை.காரணம் எங்களில் தானே பல வகையினர் இருக்கின்றார்கள்.சிலருக்கு "அது"இருப்பது பிடிக்கும்.சிலருக்கு இல்லாமலிருப்பது தான் பிடிக்கும்!இரண்டாவது வகையறாவை சார்ந்தவர்களை சந்திக்கும்போது,'ஏன் இவர்களுக்கு இப்படியான ரசனை" என்று கேட்டுக்கொள்வேன்.நான் எப்போதும் முதல் வகையறாவுக்குள் தான்."அது"இருந்தால் தான் பிடிக்கும். இல்லாவிட்டால் சப்பென்று இருக்கும்.அதனால் பிடிப்பதே இல்லை.

இதனால் தான் என்னமோ,சிறுவயதிலிருந்தே தினசரி நான் பார்ப்பனவற்றை, அவதானிப்பனவற்றை மனதில் பதித்து வந்திருக்கிறேன்.அது இப்போது எனக்கு பெரிதும் கைகொடுக்கின்றது. "இருக்கின்றதா..இல்லையா"என்று எனது நண்பர்கள் குழம்பும் சந்தர்ப்பங்களில் என்னால் இலகுவாக கூறிவிட முடிகிறது அது இருக்கிறது அல்லது அது இல்லை என்று.முதலில் என்னுடன் முரண்பட்டுக்கொள்ளும் நண்பர்கள்,பின்னர் தங்களது கூர்மையான நுண் பார்வையினால் தெளிவடைந்து 'ஆமாண்டா அது இருக்கிறது"என்று தலையாட்டிக்கொள்வார்கள். 


ஆனால் எப்போதாவது என்னையே 'இருக்கின்றதா...இல்லையா'என்று ஒரு முடிவுக்கு வரமுடியாமல் குழப்பிய சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன.நாம் பார்ப்பவர்கள் காலமாற்றத்துக்கேற்ப எப்படி மாறிக்கொள்கிறார்கள், மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை அவர்களின் படிப்படியான வளர்ச்சியை வைத்து ஊகித்துக்கொள்ளலாம்.ஆனால் சிலரின் நடத்தை எப்போதும் குழப்பகரமாகவே இருக்கும்.நம்ம மணிரத்தினம் மாதிரி!(அப்பாடி மேட்டர் முடிஞ்சு மேட்டருக்கு வந்தாச்சு.)
------------------------
             http://www.tamilvix.com/wp-content/uploads/2012/02/Mani-Ratnams-Kadal.jpg

சிறுவயதுகளில் கெட்டவர்களோடு சேராதே,கெட்ட நண்பர்கள் சகவாசம் வைத்துக்கொள்ளாதே என்று படித்து படித்து வீட்டில் கேட்கும் அறிவுரைகளால் சில காலம் சிலரை விட்டு பிரிந்தே இருப்போம்,முக்கியமாக பள்ளி பருவத்தில்.ஆனால் நாம் வளர,எம்முடன் சேர்ந்து கூடவே வளரும் சிந்திக்கும் திறன் 'இது தாண்டா யதார்த்தம்'என்று பல உண்மைகளை உணரவைத்துவிடுகின்றது.கெட்டவர்களுடன் சேராதுவிட்டால் சமூகத்தில் தனித்துவிடப்பட்டுவிடுவோம் என்கின்ற உண்மையும்,எப்படியோ எங்களை சுற்றி இப்படியானவர்கள் தான் இருக்கப்போகின்றார்கள்,அவர்களை சமாளித்து செல்லும் வழியை நாங்கள் தான் கண்டுகொண்டு அதன்படி வாழவேண்டும் என்பதை வாழ்க்கை கற்றுத்தருகிறது.ஆமா இதற்கும் கடலுக்கும் என்னா சம்பந்தம்?படத்தின் கதை-விமர்சனம் படிக்கலாம்னு வந்தவர்கள் இந்த இடத்துடன் நிறுத்திவிட்டு கிளம்புங்கள்.

படத்தில 'டச்' பண்ணினது ரஹ்மான் மற்றும் ராஜீவ் மேனன் தான்.இருவரும் தங்கள் பங்கை திறம்பட முடித்து கொடுத்திருக்கிறார்கள்.அது படத்துக்கு பொருந்தியதா இல்லையா என்பது இயக்குனர் மணியின் தலை மேல் போடவேண்டிய பிரச்சனை.அங்காங்கே ஜெயமோகன் 'மதம்"சார்பாக வரும் வசனங்களில் ஜொலிக்கிறார்.அரவிந்தசாமியை பாதிரியார்/சர்ச் சார்ந்த கதைகளில் பார்த்து போதும் என்றாகிவிட்டது.அதே பழைய அரவிந்த சாமி தான்.எந்த மாற்றமும் இல்லை டயலாக் டிலிவரி,ஆக்சனிலிருந்து அனைத்திலுமே!அர்ஜூன் மற்றும்,கார்த்திக் மகன் கெளதம் இருவரும் என்னை கவர்ந்தனர்.

எத்தனையோ பெரிய பெரிய கடல் போன்ற விடயங்களை தொடுவதற்கு மணிரத்னம் முயன்றிருக்கின்றார்.ஆனால் அந்த விடய தலைப்புகளை மட்டுமே தனது 'கடல்' படத்தில் கொடுக்க முடிந்திருக்கிறது.இதுவே ஒரு புதுமுக இயக்குனரோ,அந்தளவு பெயர் பெறாத இயக்குனரோ இயக்கியிருந்தால் சிலசமயம் பேசப்பட்டிருக்கும்.ஆனால் இது 'மணி'சார் படம் என்கின்ற இடத்தில் தூக்கிவைத்து பார்ப்பதனால்/பார்த்திருப்பதால் அந்த ஏமாற்றம் தான்,படத்தில் இருந்த சில நல்ல விடயங்களையும் பேசாமல் முடங்க வைத்திருக்கிறது.

படம் ஆரம்பித்து ஒரு அரை மணிநேரம் எதோ ஒரு பெரிய 'ட்ரீட்' காத்திருக்கிறது என்று ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுவிட்டு அதற்க்கு பின்னர் மணி சார் தனது அண்மைய படங்களை சுட்டிக்காட்டி நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி திரும்ப கேட்கிறார்..
'நான் எதிர்பார்ப்பை தூண்டினால் நீ எதிர்பார்த்து காத்திருப்பியா"?
(நான் காத்திருந்தேன் கடலில் கதை"இருக்கின்றதா-இல்லையா"என்கின்ற எதிர்பார்ப்போடு!)
**
**
**
**
**
**
**
**
**
**
****
********
**********
********************

என்ன நாக்கு தொங்குதா?சரி சொல்லிடறேன்.விடமாட்டீங்களே!நாயகி துளசி அந்தளவுக்கு ஒன்னும் 'ஒர்த்'கிடையாது.படத்தில அந்த கிஸ்ஸு ஸீன் கூட கிடையாது."துளசி" எல்லாமே  'ஈஸ்ட்'போட்டு பொங்கவைத்த பாண் பாஸ்.அவங்க அக்காவ போல ஒண்ணிரண்டு படங்கள் நடிக்கலாம். அதற்க்கப்புறம் 'பெருக்க வைத்தவற்றை சிறுக்க'வைக்க முயற்ச்சிக்கலாம். பிரச்னையை முடித்துவிடுகிறேன்.சொன்னால் வல்கரா பேசிறான்னு சொல்லிடமாட்டீங்களே!

'இருக்கின்றது...ஆனால் செயற்கையாக...!!"
| படத்தில் கதை -துளசியில் சதை

Post Comment

Tuesday, February 5, 2013

அனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..!!



          

கால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா...!

பட்டாபட்டி ஆண்ட்ராயர்,பனியன் சகிதமாக கிளு கிளுவென அனுஷ்காவின் கால்களை ரசித்து எப்பம்விடக்கூடிய மாதிரி,அனுஷ்கா காலடியில் மனோ பாலா...!

அனுஷ்காவின் ஒரு கை மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.மனோ பாலாவின் இரு கைகளுமே கட்டப்பட்டிருக்கின்றன.பாவம் மனோ!வெண்ணைக்குடமே பக்கத்திலிருந்தாலும்,கைகள் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்துவிட முடியும்...!

"என்னோட பாடிய பார்க்காதை "ப்ரெய்ன்"னை பார் என்று பன்ச் அடிக்கும் மனோ பாலா,தான் ஒரு ஐடியா குடோன் என்பதை நிரூபிக்கிறார்.எப்படி என்பதை திரையில் காணுங்கள் என்று கூறி ஆவலாக வந்த உங்கள் வாயில் அல்வா கொடுக்க மனம் இடம்தரவில்லை எனக்கு.

அனுஷ்கா கால்களை அப்படியே பார்த்தால் யாருக்கு தான் கிறக்கம் ஏற்படாது!படத்தில் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.நேரில் பார்த்த மனோ பாலா?வெட்கத்தை விட்டு அனுஷ்காவிடம் "சட்டு புட்டின்னு உன்னோட காலை என்னோட பனியனுக்க விடு" அப்பிடின்னு ஒப்பினா கேட்டிடுறார் மனோ!ஏது பனியனுக்க காலா????


என்னடா இதுவரை தமிழ் சினிமாவில் ஆம்லெட் போட்டிருக்கிறார்கள், பம்பரம் விட்டிருக்கிறார்கள் ஏன் பட்டாசு கூட போடுவதை தான் பார்த்திருக்கிறோம்.பொதுவாக இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டி இப்படியான விஷயங்களை வைத்து தான் அளவிடப்படுகிறது.ஆனால் இவை எல்லாமே ஹீரோயின்களுக்கு ஹீரோக்களால் செய்யப்பட்டவை.காமெடியன்கள் செய்ததே கிடையாது.அதுவும் அனுஷ்கா மாதிரி ஹீரோயின் போயி மனோ பாலாவின்ட பனியனுக்க....ச்சா சா நடக்கவே நடக்காதின்னு தான் நானும் நெனைச்சேன் பாஸ்..ஆனால் நடந்தது??

பெரும்பாலான பெண்கள் போலவே ஒன்றும் ஜோசிக்கவில்லை அனுஷ்கா(அவளும் பெண் தானே!!)., மனோ பாலா பனியனுக்குள் காலை விட்டால் மனோ பாலாவின் உசிர் போவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூட கருணை வரவில்லை.சரி அந்த நினைப்பு வராத வரையில் நமக்கு சந்தோசமே என்று காத்திருக்க,ஏற்கனவே தொடை தெரிய போட்டிருந்த குட்டை பாவாடையை கூட மறந்து,கீழே இருந்த மனோ பாலாவின் பனியனுக்குள் தனது காலை தூக்கி போடுகிறார் அனுஷ்கா!(விடுகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள், கிளுகிளுப்பாக இருக்கும்!)

உள்ளே விட்டு குடைய,வெளியில் கால்விரலால் தடவ...மனோ பாலா நெளிய கூனி குறுக...பார்க்கிறவன் கடுப்பிலே கருக...என்று மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஸீன் அது.இயக்குனர் சுராஜ்'க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.எங்களை விட மனோ பாலா தான் பாராட்டி தீர்த்திருப்பார்.ஏன் எக்ஸ்ட்ராவா அமவுண்ட் செட்டில் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை !!

சினிமாவுக்குள் நடிக்க வந்ததற்கு இந்த சீனில் நடித்த பின்னர் தான் முழுப்பயன்,பிறவிப் பெரும்பயன் அடைந்திருப்பார் மனோ பாலா என்று அடித்து கூறலாம்.ஏன்னா படத்தின் ஹீரோ கார்த்திக்கே இந்தளவு நெருக்கமான ஸீன் படத்தில் இல்லைன்னா பார்த்துக்கோங்க!!

           

அலெக்ஸ் பாண்டியன் பற்றி..!

அலெக்ஸ் பாண்டியன் படம் வெளிவர முன்னரே மசாலா ஹிட் அடிப்பதற்கான அனைத்துவித தகுதிகளையும் படம் கொண்டிருந்ததாக கருதியிருந்தேன்!காரணம் சிம்பிள்.இதுவரை தோல்விப்படமே கொடுக்காத ஹீரோ(சகுனி அவரேஜ்),சந்தானம் என்கின்ற காமெடி கிங், "கார்த்திக்-சந்தானம்" ஜோடி கல்லா கட்டிய படங்கள் பல! அப்புறம் ஹாட் ஹீரோயின் அனுஷ்கா,மசாலாவுக்கே உருவான இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஏற்கனவே வந்து ஹிட் ஆனா "பேட் பாய்"பாடல்(ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒருதடவை மீள மீள ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது), பிரமாண்ட ப்ரோமோசன் நடவடிக்கைகள்-பிரமாண்ட பாடல் வெளியீட்டு நிகழ்வு என்பன படம் நிச்சயம் வெற்றி தான் என்கின்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தது எனக்கு! 

படம் வெளிவந்தது முதல் கொண்டு வெளிவந்த விமர்சனங்களை வைத்து பார்த்தபோது அல்டிமேட் "சுறா","வில்லு" மற்றும் "ஏகன்","ஆழ்வார்" போன்ற படங்களை எல்லாம் மறக்க வைக்க கூடிய அவதார படம் வந்துவிட்டதாகவே அனைவரும் பேசிக்கொண்டனர். சுறா படத்தை முண்டியடித்து போய் முதல் ஷோ பார்த்த அனுபவம் இருந்தமையால் இதற்க்கெல்லாம் பயப்பிடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.ஆனால் தியேட்டர் போய் பார்க்க எனக்கும் பிடித்திருக்கவில்லை;என்னுடன் வருவதற்கு நண்பர்கள் எவருமே தயாராக இருக்கவும்மில்லை.ஏற்கனவே அவர்கள் அனைவரினது பேச்சிலும்,மூச்சிலும்  'ப்ளட்' வந்துகொண்டிருந்ததை பார்த்த போது அவர்கள் ஏற்கனவே பாண்டியனை பார்த்துவிட்டனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது!அப்புறம் என்ன,வீட்டில் 'சிடி' தான்!!



படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்த ஒரே சீனையும் மேலே சொல்லியாகிவிட்டது.வேறு ஏதாவது சொல்லியாகணுமே என்று கேட்போருக்கு:

*தெலுங்கு படங்கள் போன்றது என்று கூறியிருந்தனர் பலர்.ஆனால் அவர்கள் கூட எதோ சற்று நம்ப கூடிய வகையில் காட்டுவார்கள்.பத்தடி தூரத்தில்,பத்து பஜரோ ரக வாகனத்தில் அம்பது பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வர,அலெக்ஸ் பாண்டியனும் அனுஷ்காவும் ஓடி தப்புவதை பார்க்கும் போதே ரவுடிகள்  மேல இருந்த மதிப்பு சுத்தமா போச்சுயா எனக்கு!இனிமேல் நானும் யாராவது ரவுடியோட போயி வம்புக்கு இழுக்கலாம்னு இருக்கேன்..யார் வர்றீங்க?

*ஆரம்பத்தில கொஞ்சம் கலகலப்பாக இருந்தாலும் பின்னாடி பெரும்பாலான சந்தானம்-தங்கச்சிகள் மூணு பேர்-கார்த்தி அடிக்கும் லூட்டி கடுப்பேத்துது.செம போர்.அதில கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் என்று பார்த்தால் சில காட்சிகள் கூட... ஒரு காட்சியில் தங்கச்சிகளை குனிய வைத்து...(..!!? )எதோ விளையாட்டு விளையாடுவார் கார்த்தி.வழமை போல சந்தானம் போய் தடுக்க,சரி நீ குனி அவங்களுக்கு பதிலாக என்று சந்தானத்தை குனிய வைத்து.... மிகுதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

**வில்லன்கள் துரத்த,ஒரு வாகனத்தில் அலெக்ஸ் சந்தானம்,அனுஷ்காவுடன் பறக்கிறார்.இடையே ஒரு பெரிய மதில்(தூண்)வருகிறது.அப்படியே பாய்கிறார் வாகனத்துடன்.பாருங்கள் எந்த சேதாரமின்றி மதிலை உடைத்துக்கொண்டு மூவரும் வந்து இறங்குகின்றனர் மதிலுக்கு மறுபக்கம்!இதில் ஏற்கனவே வாகனத்தின் முன்,பின் கண்ணாடிகள் உடைந்திருந்தன.வாகனத்தின் முன்னாடி கார்த்தி,சந்தானம் இருந்தார்கள். நேரே வந்த மதில் கற்கள் இருவரையும் தொட்டு தடவிவிட்டு சென்றமையால் காயமே இல்லை இருவருக்கும்!

                                (அந்த மயிர் குச்-குச்செறியும் காட்சி இது தான் ) 

** துப்பாக்கி பட க்ளைமாக்ஸ்'ல் விஜய்யின் கையை அவிழ்த்துவிட்டு அடி பார்ப்போம் உண்மையான ஆம்பிளையாக இருந்தால் என்று ஒரு சீன் வருமே?அவிழ்த்துவிட்டு அடிவாங்கி வில்லன் இறப்பது போன்ற காட்சி?அது துப்பாக்கியில் வரும் போதே அதிகமாய் கலாய்க்கப்பட்டது ஞாபகமிருக்கலாம்.அதே க்ளைமாக்ஸ் தான் இங்கும்!அது தான் சன்டிவியில் பாஸ்கி சொல்வார்,மிக அருமையான,புதுமையான ஐடியா,இதை போல எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள் க்ளைமாக்ஸ் என்று!இனிமேல் "உண்மையான ஆம்பிளையாக இருந்தால் அவிழ்த்து விடு அடி பார்க்கலாம்"என்று யாரும் கேட்டால் ஏன் கெஞ்சினால் கூட வேண்டாம் பாஸ் போயிராதீங்க..உங்களுக்கு தான் ஆபத்து..!!  

படத்தின் ப்ரோமோ பாடல் "பேட் பாய்ஸ்" படம் வெளிவர முன்னமே வெளியாகி ஓரளவுக்கு ஹிட் ஆகியிருந்தாலும் கூட,அது படத்தில் இடம்பெறவில்லை.படத்தில் இடம்பெற்ற மிகுதி அத்தனை பாடல்களும் சுமார் ரகம் என்று தான் கூற முடியும்.ஒன்று கூட தேறவில்லை.மசாலா படம் ஒன்றுக்கு பாடல்கள் ஹிட்டாக அமைவது முக்கியமான விடயம்.விஜய்யின் பல மசாலாக்கள் ஓடியதற்கு பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது முக்கிய காரணம்.இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது வழமையான கடமையை செய்யவில்லை போல் தான் தெரிகிறது.அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மசாலா படங்கள் தான்.அவற்றிலும் சொதப்பலாமா!

                       

இவ்வளவும் தாண்டி படத்தின் கதை என்ன என்று கேட்கும் மகராசன்கள் படத்தின் முதல் பதினைந்து நிமிட காட்சியை மட்டும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.அப்புறம் தெரியும்யா படம் முழுசா பார்த்தவனோட வலி...!!

குறிப்பு:பதிவின் தலைப்புக்கு காரணம் அந்த பாழாப்போன இயக்குனர் சு.......னா பானா சுராஜ் தான். "பிட்டு" பிரியர்கள் இதற்க்கு எதிராக தடையுத்தரவு கேட்டு கோர்ட்டு கேஸுன்னு போயிராதீங்கப்பா!



Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...