Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts
Showing posts with label பின்நவீனத்துவம். Show all posts

Saturday, August 11, 2012

இலக்கியவாதி மிஸ்டர் "கோபாலு"!!


இலக்கியவாதி ஆகணும்கிற ஆசை கோபாலுக்கு விவரம் அறிஞ்ச வயசிலேருந்து பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருந்திச்சு.பிரெஞ்சு,ருசிய இலக்கியவாதிகள் அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட எதோ இந்த ஜெமோ,சாரு,எஸ் ரா அளவுக்காச்சும் கோபால்'ங்ற பெயர் பரபரப்பாய் அடிபடனும் இல்லாவிட்டால் இலக்கிய உலகை விட்டே ஒதுங்கி இருக்கணும்னு முடிவு பண்ணினான் கோபாலு.ஆனாலும் ஓவர் நயிட்டில ஒபாமா'வா கூட ஆகலாம் இந்த நாசமா போன இலக்கியவாதி ஆக முடியாதிங்கிற விஷயம் கொஞ்ச நாள் போக போக தான் புரிய ஆரம்பிச்சுது.

                         

சரி இவனுக என்னதான் அப்பிடி எழுதுறானுகன்னு முக்கி முக்கி வாசிச்சா கூட புரியமாட்டேங்குதே;யார்கிட்டயாச்சும் கேட்கலாம்னா கூட கோபாலின் வைராக்கியம் அதற்க்கு இடம்கொடுக்கவில்லை.இலக்கியம்னு எழுதுரவணுக எழுத்து தான் புரியமாட்டேங்குது..வாஸ்தவம் தான்,ஆனால் இலக்கியவாதிகளோட சேர்ந்து சுத்துற பயலுக எழுதுற எழுத்து கூட ஒரு இழவுக்கும் புரியமாட்டேங்குதே என்னடா செய்யலாம்னு ஜோசிச்சு ஜோசிச்சே கோபால்க்கு பல இரவுகள் தூக்கம் பறிபோயிருந்தது!ஏதும் "ஸ்பெசல் ட்ரெய்னிங்" கிளாஸ் போய் இதெல்லாம் கத்துக்கலாம்னா எந்த வார இறுதி பத்திரிகைகளிலும் அதற்க்கான விளம்பரங்கள் ஏதும் வருவதில்லை.

நானும் எத்தனையோ கதைகள் கட்டுரைகள் முதல்கொண்டு பிட்டு வரைக்கும் வாசிச்சிருக்கேனே ஏன் எனக்கு மட்டும் இப்பிடி..சேர்த்து வைச்சிருந்த காசெல்லாம் ஒன்று திரட்டி ஐநூறு ஆயிரம் பக்கம் வரக்கூடியதா பெரிய பெரிய புஸ்தகங்கள் எல்லாம் வாங்கி படிக்க முயற்ச்சித்தான்.கோபாலின் ராசிக்கு அவன் வாங்கியவை அனைத்தும் ரஷிய புஸ்தகங்கள்.அதில் வரும் பெயர்கள் கூட கோபாலின் பற்களுக்குள் சிக்குப்பட்டு உள்ளே செல்லமுடியாமல் அவஸ்தை தந்தன.எவ்வளவு தான் முயன்றும் மூன்று நான்கு பக்கங்களுக்கு மேலே கிரகித்து படிக்க முடியாமல் போகவே அந்த முயற்சியும் மண்ணைக்கவ்வியது.

இலக்கிய புஸ்தகங்களை படிக்காமலே,நாவல்களில் நுழைந்து நெளிவுசுளிவுகளை கண்டறியாமலே,நவீனத்துவங்கள் பற்றி பூரண தெளிவில்லாமலே வெறுமனே ஒரு இலக்கியவாதியின் அடிவருடியாய் ரெண்டு வருஷம் இருந்திருந்தாலே கோபாலு ஒரு "குட்டி இலக்கியவாதி"ஆகியிருக்கலாம்.அல்லது சில புஸ்தக கண்காட்சிகளுக்கு சென்று சில பல புஸ்தகங்களின் மதிப்புரை மற்றும் முன் இரு பக்கங்களை மாத்திரம் மனப்பாடமாக்கிவிட்டு அதை வைத்து சமூக வலைத்தளங்களில் நடக்கும் இலக்கிய வெட்டுக்குத்துகளில் தனது பங்குக்கு கிளறிவிட்டு குளிர் காய்ந்திருக்கலாம்.இப்படியான சூட்சுமங்கள் தெரியாத அப்பாவிகள் இலக்கிய உலகில் தாக்குபிடிப்பது குறைவு என்று கோபாலுக்கு தெரிந்திருக்கவில்லை.

இலக்கியவாதியாய் எழுதி தான் நிரூபிக்க முடியல;வாழ்ந்தாவது நிரூபிப்போம்னு முடிவு செஞ்சான் கோபாலு.பேஸ்புக்கில் வொர்க்(work) என்பதற்கு "இலக்கியவாதி"ன்னு போட்டுகிட்டான்.பெயரை கூட தஸ்தாயெவ்ஸ்கி என்று மாற்றிவிட்டிருந்தான்.இணையத்தில நாலஞ்சு இலக்கியவாதிக எழுதினத காப்பி பண்ணி தன்னோட ஸ்டேடசாய் போட்டு பார்த்தான்.வெறுமனே மாலை நேரங்களில் நண்பர்களுடன் அரட்டை அடிக்க செல்வதாய் இருந்தால் கூட வீட்டில் எங்கு போகிறாய் என்று கேட்டால் "இலக்கிய மாநாடு"இல்லாவிட்டால் ஏதும் உள்ளூர்/உலக இலக்கிய சந்திப்பு அப்பிடின்னு தான் சொல்லிவிட்டு கிளம்புவான்.

மாயாவி காமிக்ஸ் கூட வாசித்து வளந்திராத நண்பர்களிடம் ""எக்சைல்" நாவலில் சாரு என்ன சொல்ல வர்றார் தெரியுமாடா?இப்பெல்லாம் "எக்செல்"இல் படம் கூட வரையலாம்னு பின்னவீனத்துவமாய் சொல்ல வர்றார்டா..பெரிய பெரிய புஸ்தகங்கள் வாசிச்சவங்களுக்கு கூட இது புரியலைன்னா பாத்துக்கோவேன்" என்று கூட பேசிப்பார்த்தான்..


கோபாலு இலக்கியவாதியாய் காட்டிக்க எடுத்த முயற்ச்சிகள் எல்லாம் செவிடன் காதில் இளையராஜா மியூசிக் என்ற மாதிரி தான் முடிந்திருந்தது.சின்ன வயசில இருந்து எதையும் நெனைச்சிட்டா சாதிக்காமல் விடமாட்டான் கோபாலு."நான் ஒரு இலக்கியவாதி"ங்கிற விஷயம் அவனோட நாடி நரம்பெல்லாம் ஊறி கிடந்தது.சிறுவர் கதைகள் சிலவற்றை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி பார்த்தான்.அவை கூட வெளிவரவில்லை.சிலசமயம் பத்திரிகை ஆசிரியர் இவனோட "இலக்கியவாதி கோபால்" என்ற பெயரை பார்த்து தான் சிறுவர் கதைகளை வெளியிடவில்லையோ என்னமோ.

கல்யாணம் கட்டி பிள்ளை குட்டி பிறந்த பிறகும் அவனோட ஆசைகள் அப்படியே கிடந்தன.கோபாலுக்கு தன் மீது வெறி இல்லை..அவனோட வெறி முழுதும் இலக்கியம் மீது தான் என்ற விஷயம் கோபால் மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் புரிய ஆரம்பித்ததும் வீட்டில் தினசரி களோபரம் தான்.வீட்டுக்கு வெளிகதவில் கூட "இலக்கியவாதி கோபு" அப்பிடின்னு போர்டு மாட்டினா எந்த பொண்ணு தான் சும்மா இருப்பாள்!கோபாலு பிள்ளைகள் பாடசாலைக்கு ஏதும் கவிதை கட்டுரை எழுதனும்னா இரவு பகல் பாராது நித்திரை முழித்து செய்து கொடுப்பான்.எப்பவாச்சும் இரண்டாம் மூன்றாம் பரிசுகளை "இலக்கியவாதி"கோபால் பிள்ளைகள் தட்டி சென்றிருக்கின்றனர்!

வீட்டில ஏதும் காரியம் ஆகணும்னா "மிசிஸ்" கோபால் தானே ஏதும் கடிதமோ அஞ்சலட்டையோ "இலக்கியவாதி கோபால்" என்று தலைப்பிட்டு தன்னோட அட்ரசுக்கு போஸ்ட் பண்ணி விடுவாள்.அதை பார்த்து கோபு மேலும் கீழும் குதிப்பதை பார்க்க சகிக்காவிட்டாலும் கூட,எதோ தன்னோட காரியம் ஆகணுமேன்னு கோபாலோட ஆத்துக்காரி...பாவம் அவளுக்கும் வேறு வழி தெரியவில்லை.தன்னோட பிள்ளைகளை இலக்கியவாதிகளுக்கு தான் கட்டி கொடுக்கணும்னு கூட நெனைச்சிருந்தான் கோபாலு.அப்புறம் வரும் மாப்பிளை தன்னை விட சிறந்த இலக்கியவாதியாய் இருந்துவிட்டால் தனது மானம் என்னாவதுன்னு அந்த முயற்ச்சியை ஆரம்பத்திலேயே கைவிட்டுவிட்டான்.
------
இப்போதெல்லாம் பேஸ்புக்கில் கோபாலுக்கு நாலஞ்சு ரசிகர்கள்.கோபாலின் இலக்கியத்தை வாசிப்பவர்கள்.தமிழ் நயத்தை ரசிப்பவர்கள்.அவர்கள் தான் கோபாலின் உலகம்.தன்னால தமிழ் இலக்கியத்துக்கு ஏதும் செய்யமுடியலையே என்ற கவலைய விட, இந்த சமூகம் ஒரு நல்ல இலக்கியவாதியை இழந்துவிட்டது என்கின்ற சோகம் தான் கோபாலின் மனதை  இறுதி காலத்தில் வாட்டிக்கொண்டிருந்தது.

                                

தனது நீண்ட கால கனவின் பிரகாரம் ஏற்கனவே வீட்டுக்கு அண்மையிலிருக்கின்ற மயானத்தில் தனது பெயரில் ஒரு நினைவுச்சின்ன கோபுரம் ஒன்றை கடந்த வாரம் தான் கட்டி முடித்திருந்தார். இன்னமும், அதில் "இலக்கியவாதி கோபு" என்கின்ற பெயரும்,கீழே "இவன் ஒரு எழுத்தாளனாய் வாழ்ந்தான்...இறந்தும் அவன் எழுத்து பேசப்படும்"என்கின்ற வாக்கியமும் தான் பொறிக்கப்பட இருக்கின்றது.இன்று அதை பொறிப்பதற்கு கூட ஒருவனை ஏற்பாடு செய்தாகிவிட்டது.இலக்கிய மாநாடு ஒன்றுக்கு தலைமைதாங்க செல்லவேண்டும் என்று கூறி கிளம்பவேண்டியது தான் பாக்கி.அதுவும் முடிந்துவிட்டால் கோபாலுக்கு  தனது வாழ்க்கையில் தான் நினைத்த அத்தனையையும் சாதித்துவிட்ட பெருமையுடன் கண்ணை மூடுவான்...இலக்கியவாதி ஆவதை தவிர!


Post Comment

Wednesday, August 1, 2012

பின்நவீனத்துவம்-விளங்காதோருக்கான ஒரு விளக்கம்!




 

இப்போதுள்ள இணையச் சூழ்நிலையில் எல்லா வாசகர்களையும் பயமுறுத்தும் வார்த்தை பின்னவீனத்துவம் என்னும் Post modernism தான்.
பின்னவீனத்துவம் என்றால் என்னவென்றே தெரியாமல் சற்றேரக்குறைய ஒரு நடுக்கத்துடனேயே பலர் அந்தச் சொல்லை பார்க்கிறார்கள்.இதைப்பற்றி "லீனா ரோய்" எழுதி இருக்கும் குறிப்பை பகிர்ந்துகொள்கிறேன்.பின்நவீனத்துவம் பற்றி மண்டையை போட்டு குழம்பிக்கொண்டு இருப்போருக்கு இது சிறிதேனும் விளக்கத்தை கொடுக்குமென நம்பலாம்.

பின்னவீனத்துவம் என்ன என்று அதைப் புரிந்து கொள்ள விரும்புபவர்கள் கூட, எங்கே எனக்கு இது தெரியவில்லையே எனச் சொன்னால் என்னை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயத்தில் அதை வெளியே சொல்வதில்லை. அப்படீன்னா என்னவென்று கேட்பதுமில்லை.
இதில் உள்ள இன்னுமொரு சோகம் என்னவென்றால் பின்னவீனத்துவ எழுத்தாளர்கள் மற்றும் பின்னவீனத்துவவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்தும் பலர் லத்தீன், ஆபிரிக்க, பிரெஞ்சு நூல் ஆசிரியர்களின் பெயர்களை சொல்லி வாசகர்களை பின்னிப் பெடலெடுத்துவிடுவார்கள்.

தமிழ் நூல்கள் வாசிப்பதற்கே அல்லப்படும் வாசகன் ஆங்கிலத்தில் யாரோ சில எழுத்தாளர்களை தெரிந்து வைத்திருப்பான். அவனிடம் போய் பூக்கோ, உம்பர்த்தோ எக்கோ என்றால், உம்பாட்டைப் பார் என்றுவிட்டு ஆளே காணாமப் போய்விடுவான்.
இதில ஆங்கிலமே அரிச்சுவடு என்னான்னு தெரியாத என்னைப் போல உள்ளவர்கள் பாடு அதைவிட மோசமாக போய்விடும். எதையுமே தமிழிலேயே படித்து வஞ்தோமா.....

தமிழில் தன்னை ஒரு பின்னவீனத்துவவாதி அல்லது எழுத்தாளன் என்று சொல்லும் பலர் இப்படி பயமுறுத்துவதை இண்டலக்சுவல் டெர்ரரிசம் Intellectual Terrorism என்றே சொல்லலாம். எனக்கு எவ்ளோ தெரியுது பார் உனக்கு தெரியாதில்ல.... என்ற ஒரு ஏளனப் பாவனையுடன் பயமுறுத்துவது.



அதிகபட்சம் என்போன்ற சாதாரண வாசகன் நாலு தமிழ்நூலைப் படித்திருப்பான். அவன் கிட்டப்போய், ஆங்கில நூலைப் படித்த சிலர் அடிக்கும் ஜல்லியால் அடங்கிப் போய் அவனிருக்க, தென்னமெரிக்காவின் வாயில் நுழையாத நூல்களின், அதை எழுதிய எழுத்தாளர்களின் பெயரைச் சொல்லும் போது பொறியே கலங்கிடாதா....?

இந்த இண்டலக்சுவல் டெர்ரரிசமானது பலருக்கு படியளக்க, தமிழில் இந்த பின்னவீனத்துவம் என்ற சொல்லே இப்போ புரியாமல் போய்விட்டது.
பலர் இது கறிக்குதவாது என்று அந்தப் பக்கம் தலைகாட்டவே தயங்குகிறார்கள்.

இப்போ இதை யாராவது தீர்க்கனும் இல்லையா.....? குறைந்த பட்சம் இக்களத்திலாவது இதுபற்றி தெரியப்படுத்தனும் அல்லவா....??
அப்படீன்னா...! அட...!! ஆமாய்யா.....!!! இப்போ நான் உங்களுக்கு இந்த பின்னவீனத்துவம் என்றா என்ன என்று புரிய வைக்கப் போகிறேன்.

இதை நகைச்சுவையாக எடுக்காம சீரியசா படியுங்கள். அதாவது பின்னவீனத்துவன் என்றா என்னவென்றே தெரியாதவர்கள் மட்டும்.
தெரிஞ்சவங்க தங்களுக்கு தெரிஞ்சத சேர்ந்து இங்கே அதை பகிர்ந்துக்கலாம்.

இத நான் ஏன் இங்க எழுத வந்தேன்னா......! நான் பல பின்னவீனத்துவ நூல்களைப் படிச்சிருக்கேன். ஆனால் சமீபத்தில வெளியான சாரு நிவேதிதாவுடைய மிக அருமையான "ஸீரோ டிகிரி" வாசித்தேன். தமிழில் வந்ததில் தமிழராலேயே எழுதப்பட்ட மிக அருமையான நூல் இது.
ஆனால் பல நண்பர்கள் இந்த நூலைப் பற்றி என்னிடம் சொல்லி மருகியது இதுதான் .... "அடப் போங்க லீனா ஒன்னுமே புரியல" என்பதுதான்.
"தலையும் புரியல வாலும் புரியல. அதிகப்படியாக 5 பக்கமே தாண்ட முடியல" என்று தலையால் அடித்துக் கொண்டு அதை நன்றாக இருக்கிரது என்று சொன்ன என்னை ஒரு மாதிரியாகவே பார்த்தார்கள்.
இவனும் சாரு மாதிரி ஆகிட்டானோ என்பது போல.....
சாருவில் எனக்கு தனிப்பட்ட முறையில் பல விமர்சனங்கள் உண்டு. இப்படி எழுதி விட்டேன் என்பதால் அவற்றுடன் சமரசம் செய்து விட்டேன் என்பதல்ல அர்த்தம்.
அந்த விமர்சனங்களுக்கு அப்பால் சாருவின் எழுத்தை ரசிப்பவன் நான். 

 

இதை டாம் அண்ட் ஜெர்ரி பிலாசபி என்று கூட சொல்லலாம். அதாவது வெறுப்பும் விருப்பும் ஒரே இடத்திலேயே இருக்கும்.
காட்டூனில் எல்லாம் பிலாசபியா என்று நீங்க கேப்பீங்க....
ஆமா.....!
"அலைஸ் இன் வொண்டெர்லாண்ட்" என்னும் கார்ட்டூன் மற்றும் சிறுவருக்கான கதையில வரும் சிரிக்கிற பூனையே ஒரு பின்னவீனத்துவ குறியீடுதான் என்று சொல்வார்கள்.
அட...! இவனும் புரியாம பேச ஆர்ம்பிச்சிட்டானா என்று நெனைக்கிறீங்கதானே...! ஒன்னும் பயப்பட வேணாம் உங்களுக்கு புரியிற மாதிரியே எல்லாத்தையும் பார்க்கலாம்.

என்ன ஆரம்பிக்கலாமா.....??? 


பழமைவாதம் பற்றியும் நவீனத்துவம் பற்றியும் நான் சொன்னது ஓரளவுக்காவது உங்களுக்கு புரிந்திருக்கும்.

இப்போ நாம நேரடியாகவே இதுவரை எமக்கு மாயமானாக காட்சிதந்த பின்னவீனத்துவத்த பற்றிப் பார்க்கலாம்.....

பழமைவாதத்திலும், நவீனத்துவத்திலும் சொல்லப்பட்ட கோட்பாடுகளை ஆராய்ந்து பாத்துச்சு இந்தப் பின்னவீனத்துவம்.
இவற்றில் எப்பவுமே உண்மையான ஒன்று நிலையாக இல்லை. எல்லாமே சில காலத்துக்கு அப்புறம் மறுக்கப்படுது.
இன்னைக்கு உண்மையென்றது நாளைக்கு மறுக்கப்படுகிற போது, அத நாம் ஏன் ஒரு தத்துவமா ஏத்துக்கனும் என்று சிந்தனை இருந்திச்சா.....
இதுவே சாக்காகிப் போச்சு பின்னவீனத்துவத்துக்கு.

 

இந்த காலகட்டத்தில இரண்டாம் உலக்ப்போர் நடந்து முடிஞ்சு உலகமே ஒரு வழியா அலங்கோலப்பட்டுப் கிடந்திச்சு.
ஒருபக்கம் மார்க்ச்சியம் தந்த நாடுகள் வல்லரசாகவும், மறுபக்கம் முதலாளித்துவம் தந்த நாடுகள் வல்லரசாகவும் இருந்து,
ஐரோப்பாவை குறிப்பா உலகை இரண்டாப் பிச்சு எடுத்துச்சு.
இதோட தொடர்ச்சியா யார் வல்லவன், யார் நல்லவன் என்ற "பனிப்போர்" முதலாளித்துவ நாடுகளுக்கும் சோசலிச நாடுகளுக்கும் இடையில் நடக்க ஆரம்பிச்சுது.

பனிப்போர் என்றால் என்னான்னு உங்களுக்கு தெரியும் என்றாலும், இப்படிப்பட்ட சொல்லாடல்களை வைத்துத்தான் சிலர் எம்மைப் பயமுறுத்துவதால் இதையும் புரிய வைக்கலாம்.
அதாவது அமெரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் தமக்குள் யார் பெரியவன் என்பதை ஒரு நேரடி யுத்தம் ஒன்றால் முடிவு செய்யாமல், கத்தியின்றி இரத்தமின்றி மறைமுகமாக பலவிதங்களில் ஒருவரை ஒருவர் அழிக்க முயற்சித்ததை பனிப்போர் என்பார்கள்.

 

அதாவது சூடான யுத்தம் இல்லாமல் குளிரான யுத்தம் (Cold war).

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது 1950 தொடக்கம் 1960 வரைக்குமான காலகட்டத்தில்....
பிரான்ஸ் நாட்டிலிருந்து மிஷேல் பூக்கோ (Michel Foucalt), ஜாக் டெரிடா (Jaques Derrida), ஷோன் லியோடார்ட் (Jean Francois Lyotard) என்னும் மூவர் ஒரு சிந்தனையை முன்வச்சாங்க.

அந்தச் சிந்தனையின் பெயர்தான்......
 பின்னவீனத்துவம்.


பூக்கோ, டெரிடா, லியோடார்ட் ஆகியோர் சொன்ன இந்த பின்னவீனத்துவம் அப்படி என்னத்ததான் சொல்லுது என்று பார்ப்போமா.....?

மார்க்சியம் போன்ற நவீனத்துவங்களையும், கிரேக்க கதைகள் போன்ற பழமைவாதங்களையும், தத்துவங்களையும் பெரிய கதைவிடும் செயல் என்று பின்னவீனத்துவம் சொன்னது.
அதைப் "பெருங் கதையாடல்" என்னும் சொல்லைப் பாவித்துபின்னவீனத்துவம் நிராகரித்தது.
அப்போதய கட்டங்களில் மார்க்சீயம் மிகப் பெரிய வலுவுடன் இருந்த தத்துவமாக காணப்பட்டது. அதையே பின்னவீனத்துவம் எதிர்த்தது.

அதுமட்டுமல்ல, நான் மேலே சொன்ன பூக்கோ, டெரிடா, லியோடார்ட் என்பவர்கள் பிரான்சில் இருந்த சோஷலிச இயக்கங்களில் அங்கத்தவர்களாக இருந்து, அதிலிருந்து மாறுபட்டு இந்த பின்னவீனத்துவத்தை முன்வைத்தனர்.

இப்போது உங்களுக்கு சில விசயங்கள் புரிய ஆரம்பிக்கலாம்.
ஆம்....! இந்தப் பின்னவீனத்துவம், சோசலிசத்தை எதிர்ப்பதன் மூலம் முதலாளித்துவத்தின் கைக்குழந்தையாக மறைமுகமாக மாறியது.
அதாவது, ரஷ்ய சார்பான கொள்கையை விலக்கிவிடுவதால் தானாகவே அமெரிக்க சார்பான கொள்கையை ஆதரிப்பதாக அது அமைந்தது.

இதை மேலும் விளக்க வேண்டும்....!
ஒரு சமுதாயம், தனது விடுதலைக்காக புரட்சியை மேற்கொண்டால், பின்னவீனத்துவமோ ஒரு சமுதாயம் விடுதலை அடைய வேண்டிய அவசியமே இல்லை, ஆனால் அதற்குள் இருக்கும் சிறு சிறு குழுக்களுக்கு மட்டும் விடுதலை போதுமானது என்றது பின்னவீனத்துவம்.


இதை ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.........
பெரும்பாண்மையான சிங்களவரிடமிருந்து விடுதலையடைய தமிழினம் புரட்சி செய்ய வேண்டும் என்று புறப்பட்டால்,
அப்படி ஒன்றும் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் விடுதலையே தேவையில்லை. தமிழர்களுக்குள் இருக்கும் தலித்துகளுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும், தனித்தனியே விடுதலை அளித்தால் மட்டும் போதும் என்றது..

இதை மேலோட்டமாக பார்க்கும் போது அட....! இவர்கள் சொல்வது சரிதானோ என்ற மயக்கமே நமக்கு ஏற்படும். குறைந்த பட்சம் அந்த தலித்களுக்கும், பெண்களுக்கும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்குமாவது இது சரிதானே என யோசிக்கத் தோன்றும்.

ஆனால் இதை சரியாக உற்று நோக்கினால், இதனால் பயனடையப் போவது சிறுகுழுக்களான தலித்களை விட பெரும்பாண்மை சிங்கள அரசாகத்தான் இருக்கும்.
மொத்த தமிழினத்துக்கும் விடுதலை கிடைக்கும் போது அதன் கூறுகளாக இந்தச் சிறு குழுக்களுக்கும் சேர்த்து விடுதலை கிடைக்க சந்தர்ப்பம் இருகலாம்.
ஆனால் அதை விடுத்து ஒட்டு மொத்தச் தமிழர்களையும் ஒன்றாக சேர விடாமல் தனித்தனியாக குழு குழுவாக பிரிக்கும் முயற்சியை இந்தப் பின்னவீனத்துவம் செய்கிறது.

இந்தக் கொள்கை எப்போதும் முதலாளித்துவ மேம்போக்கான சக்திகளுக்கு மறைமுகமான ஆதரவை கொடுக்கிறது.
ஆனால் இவர்களைக் கேட்டால், இதோ பார்! தலித்தியம் என்பது எவ்வளவு முக்கியமானது. அதை யாருமே கண்டு கொள்ளவில்லை நாம்தான் அது பற்றிப் பேசுகிறோம். ஹோமோ செக்சுவல் ஈடுபாட்டினரும் மனிதர்கள்தானே அவர்களை எங்களைத் தவிர யாரும் கண்டுகொள்வததில்லை என்பார்கள்.
 

இதில் இன்னுமொரு விசயத்தையும் நான் சொல்ல வேண்டும்.
மாக்சியம் பகுத்தறிவுவாதத்தை முன்வைத்தது. எனவே இந்த பின்னவீனத்துவம் பகுத்தறிவுவாதம் என்பதே நடைமுறைக்கு உதவாது என்று மறைமுகமாக ஆன்மீகத்தைத் தாங்கிப் பிடித்தது.

இப்போது இதுவரை நான் சொன்னவற்றில் இருந்து சரியாக சிந்தித்தீர்களென்றால் ஏன் இந்தப் பின்னவீனத்துவவாதிகள் என்று சொல்லும் அனைவரும் தமிழீழ விடுதலைக்கு எதிராக குரல் கொடுக்கிறார்கள் என்பது புரியும்.
அவர்கள் யார் யார் சிந்தித்தால் இதற்கு விடைகள் பளிச்சென உங்களுக்கு புரிந்து போகும்.

அட..! பின்னவீனத்துவம் என்பது இவ்வளவுதானா என்று நீங்கள் நினைத்தால்.....
இல்லை. இன்னும் உண்டு என்பதுதான் அதற்குப் பதில்.

அப்படின்னா அவை என்ன என்ன....?

அதை அடுத்துப் பார்ப்போம்..........
 

மேலோட்டமாக பின்னவீனத்துவத்தில் ஒரு கொள்கையை மேலே நான் சொல்லியிருந்தேன்.
அதுதவிர்ந்த அடுத்தவற்றை உங்களுக்கு புரியவைப்பதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றுள்ளது.

அது என்னவென்றால்........
"பின்னவீனத்துவவாதிகள் எழுதும் நாவல்கள் எதுவுமே தலைகால் புரியவில்லையே!
ஆனாலும் பலர் அவற்றை நல்லாயிருக்கிறது என்று சொல்வது மட்டுமல்லாமல் பல நாவல்கள் படித்ததாகவும் சொல்கிறார்களே!
ஒரு நாவலே விளங்காவிட்டால் எப்படி அடுத்த நாவல் படிக்க ஆரம்பிக்கிறார்கள்.? இவர்களுக்கு விளங்குவதால்தானே தொடர்ந்து படிக்கிறார்கள்.
இவர்களுக்கு விளங்குகிறது, எனக்கு ஏன் விளங்கவில்லை? அப்படி என்றால் நான் முட்டாளா.....?"
அப்படி என்று நிறைய இளைஞர்கள் மறுகிப் போகிறார்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இப்போ உடன் அளிக்க வேண்டும். அதை சொல்லிவிட்டுத்தான் நான் அடுத்த கட்ட்டத்துக்கு நகர வேண்டும்.

இதைச் சொல்வதற்கு நான் உங்களுக்கு, முன்னர் நடந்ததாகச் சொல்லப்படும் ஒரு சம்பவத்தைச் சொல்ல வேண்டும்

பிக்காசோ என்னும் ஓவியரை உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். அவர் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லப்படும் நவீன ஓவியத்தின் ஜாம்பவான் ஆவார்.
இவரது வீட்டில் ஒரு நாள் திருடன் ஒருவன் புகுந்து திருடிச் சென்றுவிட்டான்.

அதிர்ஷ்டவசமாக திருடன் தப்பிச் செல்லும் போது, பிக்காசோ அவனைப் பார்த்துவிட்டார்.
காலையில் வந்து திருட்டு சம்மந்தமாக விசாரித்த காவல்துறையினருக்கு, பிக்காசோ திருடனைப் பார்த்தது பெரிய ஆறுதலையளித்தது.
அதுமட்டுமல்லாமல் பிக்காசோ மிகப்பெரிய ஓவியரென்பதும் வாய்ப்பாகப் போனது.
காவல்துறையினர் பிக்காசோவிடம் அந்த திருடனை அப்படியே உங்களால் வரைந்து தரமுடியுமா எனக் கேட்டனர்.
அதற்கு பிக்காசோ, உடனே முடியும் எ னப் பதிலளித்து அடுத்த தினம் திருடனின் ஓவியத்தை தருவதாக சொன்னார்.

ஓவியமும் காவல்துறையினர் கைகளுக்கு கிடைத்தது.
ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால்.......
அந்த ஓவியத்தின்படி, காவல்துறையினர் ஒரு கோழி, ஒரு நாய், ஒரு தபால் பெட்டி மற்றும் விளக்குக் கம்பம் ஒன்று என்பவற்றையே கைது செய்ய வேண்டி இருந்தது.

காரணம் நிச்சயமாக உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம்....! பிக்காசோ திருடனின் சித்திரத்தையும் மாடர்ன் ஆர்ட் என்னும் நவீன ஓவியமாக வரைந்து கொடுத்ததுதான்.

இனி எனது கடமை மிகச் சுலபமாகிவிடும் என நினைக்கிறேன்.......
அதாவது, வழமையான ஓவியங்கள் ஒரு காட்சியையோ, நபரையோ தத்ரூபமாக அப்படியே வரைவது.
ஆனால் மாடர்ன் ஆர்ட் என்பது ஒரு ஓவியனுக்கு மனதில் ஓடும் விம்பங்கள், நினைவுகள் ஏன் சங்க்கீதங்களைக் கூட வரைய அனுமதிக்கிறவு. அதுவும் அவர் மனதில் அவை பற்றி என்ன தோன்றுகிறதோ அந்த வடிவத்திலேயே வரைவது.
அதற்கென்று எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. எதையும் எப்படியும் அவருக்கு அந்த காட்சியை வெளிக்கொண்டு வர தோன்றுகிறதோ அப்படியே வரையலாம்.
 

ஆனாலும்..........
ஒரு ஓவியர் அதை எப்படி வரைகிறாரோ அதை அப்படியேதான் அந்த ஓவியத்தைப் பார்ப்பவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமும் கிடையாது. பார்ப்பவரும் தனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதுதான் அந்த ஓவியத்தில் உள்ளது என எடுத்துக் கொள்லலாம்.

உதாரணமாக சூரிய உதயம் என்று, ஓவியம் ஒன்றை மாடன்ர்ன் ஆர்ட்டிஸ்ட் வரைந்தால், அதில் நிச்சயமாக சூரிய உதயம்தான் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் தோற்றுப் போவீர்கள்.
அதைப் பார்க்கும் போது அங்கே சூரியனை தேடுவதும் தப்பு.
பார்ப்பவருக்கு அது குதிரைகள் ஓடுவது போலத் தெரிந்தால், அதுதான் அந்த ஓவியத்தின் அர்த்தம்.

ஓவியத்தைப் படைத்தவர் அதை வரைந்ததோடு மறைந்து விடுகிறார். அதைப் பார்ப்பவர் எப்படி பார்க்கிறாரோ அதுதான் அந்த ஓவியத்தில் இருப்பதன் அர்த்தமாகிவிடும்.

புரிகிறதா.......?

அது போலத்தான் இந்த பின்னவீனத்துவ நாவல்களும்.
ஒருவர் ஒரு நாவலை எழுதுவதும் போது மனதில் என்ன படுகிறதோ, அதையே எழுதுவார். அத்துடன் அவர் கடமை முடிகிறது. பின்னர் அதை வாசிப்பவர் என்னவிதமாக புரிந்து கொள்கிறாரோ அதுதான் அந்த நாவலின் கருவே.

அந்த நாவலை எழுதியவர் அத்துடன் மறைந்து விடுகிறார்.
இதையே பின்னவீனத்துவம் "ஆசிரியன் இறந்துவிட்டான்" என்னும் ஒரு சொல்லை உபயோகப்பட்டுத்தி விளக்குகிறது.

இந்த "ஆசிரியன் இறந்து விட்டான்" என்பது பின்னவீனத்தின் மிக முக்கிய சொல்லாடல் ஆகும்.

ஒரு மாடர்ன் ஆர்ட் எப்படி வரையப்படுகிறதோ அப்படியேதான் பின்னவீனத்துவம் எழுதப்படுகிறது.
எழுதும் போது எந்த ஒரு விதிகளும் வரையறையும் இல்லாமல் மனதில் தோன்றுவதை அப்படியே எழுதுவது.
அதை வாசிப்பவர் தனக்கேற்றால் போல அதை விளங்கிக் கொள்வது. இதுதான் இங்கு விதி.

இதை மேலும் சில உதாரணங்களுடன் தொடர்ந்து விளக்குகிறேன்..

மாடன் ஆர்ட் எனப்படும் நவீன ஓவியம் பின்னவீனத்துவம் என்னும் ரீதியில் எல்லாராலும் வரையப்படுவதில்லை.
பலர் அதை பின்னவீனத்துவ சிந்தனை இல்லாமலேயே முயற்சி செய்திருக்கிறார்கள். புதுக்கவிதை போல....

புதுக்கவிதையை பின்னவீனத்துவம் என்னும் சிந்தனைக்குள் அடக்காமல் பலர் அதைப் புனைந்துள்ளனர். ஆனால் பின்னவீனத்துவ கவிதைகள் அனைத்தும் புதுக்கவிதை வட்டிவிலேல்யே அமைந்திருக்கும்.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளல் வேண்டும்.


பாப்லோ பிக்காசோ கியூபிசம் (Cubism) என்னும் தத்துவத்தின் அடிப்படையில் தனது மாடர்ன் ஆர்ட்டை வரைந்தார். இந்த கியூபிசம் பின்னவீனத்தின் ஒரு அம்சம்தான்.
சித்திர வகைகளில் ஆன்டி ஆர்ட், மற்றும் ஆன்டி ஆன்டி ஆர்ட் என்னும் வகைகளும் இவையுள் அடங்கும்.
அத்துடன் கொலாஜ் ஓவியம் என்று உருவாக்கப்படும் ஓவியங்கள் பின்னவீனத்துவத்தின் சரியான அமைப்பாக இருக்கும்.


இது பற்றி ரொம்ப இப்போ பார்த்தால் குழப்பமே மிஞ்சும். ஆனாலும் பிக்காசோவின் கியூபிச சித்திரங்களை கூகிளில் பார்த்தீர்களானால் இது புரிந்து போகும்.

நன்றி-லீனா  ரோய்


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...