Showing posts with label வைரமுத்து. Show all posts
Showing posts with label வைரமுத்து. Show all posts

Thursday, December 9, 2010

கமலைப் பாராட்டிய கவிப்பேரரசு..!!


கே எஸ் ரவிக்குமாரின் இயக்கத்தில் அண்மையில் கமல் திரிஷா மாதவன் சங்கீதா நடித்து வெளியாக உள்ள மன்மதன் அம்பு திரைப்படத்தில் கவிஞர் என பெயரிடப்படாத கவிஞர் நடிகர் கமல் பாடல்களை எழுதியுள்ளார்.
அந்த கவிதைகளை பார்த்த கவிப்பேரரசு வைரமுத்து கமலின் கவிதைகளுக்கு விசிறியாகிவிட்டராம்!!

இலக்கியச் செறிவோடும் கவிதை நயத்தோடும் எழுதப்பட்ட கவிதைகளை பார்த்து படக்குழுவினர் மட்டுமன்றி கவிப்பேரரசுவும் அடிமையாகிவிட்டார்!தமிழ் திரையுலகில் கமல் ஒரு இரகசியக் கவிஞர் என்று புகழாரம் சூட்டி இருக்கிறார் வைரமுத்து.!
அதுமட்டுமல்லாது மேலும் பல கவிதைகளை கமல் எழுத வேண்டும் என்று அன்பாக கேட்டுக்கொண்டுள்ளார் வைரமுத்து.

உதயநிதி ஸ்டாலின் தயாரித்த மன்மதன் அம்பு'க்கு அமெரிக்க மற்றும் கனடாவில் திரைப்பட உரிமை மூன்று கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் தசாவதாரத்துக்கு 1 .5 கோடி மட்டுமே பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கமலின் அந்தக் கவிதை இவ்வாறு செல்கிறது பாருங்கள்.கமல் மற்றும் திரிஷா ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்...

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
கலங்கமுள்ளவள் எச்சரிக்கை

உடனே கையுடன் கை கோர்த்தாளா??
ஒழுக்கம் கேட்டவள் எச்சரிக்கை!

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவமுள்ளவள் எச்சரிக்கை

கலவி முடிந்த பின் கிடந்தது பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை..

கவிதை இலக்கியம் பேசினாளாயின்
காசை மதியாதாள் எச்சரிக்கை...

உன்னுடன் இருப்பது சுகமேன்றாளா ..
உறுதியாய் சிக்கல் எச்சரிக்கை..

அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கேள்

கூட்டல் ஒன்றே குறியொன்றானபின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்

உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
ஜோசிக்காமல் வருவதை எதிர்கொள்

முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேஎனக்கொள்

காமம் எனப்படும் பண்டைய செயலில்
காதல் கலவாது பார்த்துக்கொள்!!!

கமலின் இந்தக் கவிதை திரிஷா மற்றும் கமல் குரலில் அந்தப் பாடல் இதோ கேளுங்கள்...
உரையாடல்கள் பல சேர்ந்து அமைந்த பாடல்..கேட்டுப் பாருங்கள் புரியும்!!
திரிஷா:நீங்க பக்திமானா??
கமல்:நான் புத்திமானா என்பதே கேள்விக்குறியாக உள்ளது...


இவ்வாறு தொடர்ந்து செல்கிறது அந்தக் கவிதை..அனைத்தும் அப்பட்டமெனினும் அத்தனையும் உண்மையே..
காமம் எனப்படும் பண்டைய செயலில் காதல் கலவாது பார்த்துக்கொள்!!ஆஹா என்ன ஒரு கவிதை..
அனுபவக் கவிதையோ கமலுக்கு..??

"கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்..
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறைகள் கூடிடக்கண்டேன்"

நிச்சயம் வாழ்க்கையில் ஒரு அனுபவக் கவிதை தான் இது..சமூகத்தில் நடைபெறும் கூத்துகளின் உண்மையான வெளிப்பாடு இந்தக் கவிதை..
தமிழ் திரையுலகில் திரைப்படங்களுக்கு தற்பொழுது பெரும்பாலும் "பாடல்கள்'ளே எழுதப்படுகிறன.
கவிதைகள் மிகக் குறைவு,தரமான கவிதைகள் சொற்பமே!!
இசையமைப்பாளரால் வழங்கப்படும் இசைக்கு வார்த்தைகளை நிரப்பும் வேலையே நடைபெறுகிறது..
அல்லாவிடில் பேரரசு தான் தன் படங்களில் "கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்" போன்றனவற்றை தொடர்ந்து "பாடல்கள்" என்ற டைட்டில்'ம் சேர முடியுமா?டி ராஜேந்தர் தான் பேரரசுக்கு குரு எனலாம்.அன்றைய காலங்களில் இவற்றைப் பண்ணினாலும் அவரின் பாடல்கள் ஓரளவுக்கு ஆதல் அர்த்தங்களை புகட்டின.
இவ்வாறான சூழ்நிலையில் கமலின் இந்தக் கவிதை பாடலானது வரவேற்கத் தக்க முயற்சியே.வைரமுத்து பாராட்டியது போல இனி வரும் காலங்களிலும் நாம் கமலின் கவிதைகளை ரசிக்க முடிந்தால் அது தமிழ் திரையுலகிற்கு கமலின் நடிப்பைத் தாண்டிய இன்னொரு சிறந்த பங்களிப்பாகவே இருக்கும் என்பதில் ஐயமில்லை.

கவிதை முழுவதும் ஆபாச வார்த்தைகள் தானெனினும் வாழ்க்கை பற்றிய புரிதல்களுக்கு இவ்வாறான சமூக விழிப்புணர்ச்சி கவிதைகள் கட்டாயம் தேவை..

Post Comment

Wednesday, December 1, 2010

புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா??




இன்று டிசம்பர் முதலாம் தேதி, உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது..

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது எயிட்ஸ் முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில்1981 இல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் ஹெச்ஐவி எனக் கண்டறியப்பட்டது.

எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். 2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.எயிட்ஸின் உலகப்பரம்பல் கீழ்வரும் பட்டத்தின் மூலம் நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.



2007 இல் இந்தியாவில் அண்ணளவாக 2 .3 மில்லியன் எயிட்ஸ் தொற்றுநோயாளர்களும்,2010 இல் இலங்கையில் அண்ணளவாக 3000 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர்..
புள்ளிவிபரத்துக்குள் உள்ளடங்காமல் எத்தனை பேரோ!!

வெண்பாவின் கட்டுமானத்தை உயிர்கொல்லி எயிட்ஸின் எதிர் ஆயுதாமாக கொண்டு வைரமுத்து கவிப்பேரரசுவால் எழுதப்பட்ட கவிதையை விழிப்புணர்வுக்காக தருகிறேன்...உலக எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனங்கள்,மக்கள் இந்தக் கவிதையை எந்த வடிவத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது..


ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரிêட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!

துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!



முக்கிய குறிப்பு :பாதுகாப்பான உடலுறவு பால்வினை நோய்களை தடுக்கும்..
DO SAFE:BE SAFE !!

Post Comment

Saturday, November 27, 2010

காதலி காதலி காதலில் தவிக்...கிறே....ன்...!!


1996 இல் மிகச்சிறந்த நகைச்சுவை படம் தமிழில் எதுவென்று கேட்டால் மறுக்காமல் வரும் ஒரே
பதில் அவ்வை ஷண்முகி தான்!
கே எஸ் ரவிக்குமாரின் அற்புதமான இயக்கத்தில்,கமல்,மீனா,நாகேஷ்,ஜெமினி கணேஷன்,ஹீரா,மணிவண்ணன்,நாசர் என்று மிகப் பெரிய நடிகர் பட்டாளத்துடன்,கிரேசி மோகனின் எழுத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது!
இன்று கூட நம் அனைவர் மனதிலும் உள்ள திரைப்படமென்றால் அது உண்மை!!

ஹரிஹரன் மற்றும் சுஜாத்தாவின் இனிமையான குரல்...
ரஹ்மானின் இசையில் சுஜாதா ஒரு சில பாடல்கள் பாடிக்கொண்டிருந்த காலம் அது,
அத்தனையும் முத்துக்கள்..இன்றைய காலங்களில் அவரின் குரலை கேட்க முடியாதது வருத்தமே...
குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார் போலும்!!

காதலா காதலா காதலில் தவிக்கிறேன் என்ற பாடல் தான்
படத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும்.
காதலி காதலி என்று ஹரிஹரன் மட்டும் பாடிய பாடல்
அல்பத்தில் மட்டுமே காண முடியும்.


அவ்வை ஷண்முகி படத்தில் ஒரு பாடல்...தேனிசைத்தென்றல் தேவாவின் அருமையான இசையில் அமைந்த பாடல் தான் "காதலா காதலா காதலில் தவிக்கிறேன்"என்ற பாடலாகும்.
மெல்லிசையில் தவழும் இந்தப் பாடல் 1996 இல் அனைவரையும் கட்டிப் போட்ட பாடலாகும்.
இன்று கேட்டாலும் மென்மையான சுகம்...

காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்
காதலி காதலி காதலில் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன்

நாள் தோறும் வீசும்
பூங்காற்றைக் கேளு
என் வேதனை சொல்லும்....
நீங்காமல் எந்தன்
நெஞ்சோடு நின்று
உன் ஞாபகம் கொள்ளும் ..
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழைத் துளி
இந்த ஈரம் என்று வருமோ...

(காதலி...)

ஓயாத தாபம்
உண்டான வேகம்
நோயானதே நெஞ்சம்...
ஊர் தூங்கினாலும்
நான் தூங்க மாட்டேன்
தீயானதே மஞ்சம்...
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று
மணிவிழி மானே மறந்திடு இன்று
ஜென்ம பந்தம் விட்டுப் போகுமா ...


Post Comment

Wednesday, September 15, 2010

விளையாட ஜோடி தேவை !!

1997 ஆம் ஆண்டு வெளி வந்த மின்சாரகனவு திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் ரஹ்மான் இன்னொரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.அத்துடன் flimfare விருதும்,தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தன.அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரஹ்மானின் இசையிலும்,ஹரிஹரனின் இனிமையான குரலிலும்,வைரமுத்துவின் வரிகளாலும் அனைவர் மனதையும் கொள்ளையடித்தது..இன்று கூட பலரின் நெஞ்சங்களின் ரிங் டோன் ஆக வெண்ணிலவே இருக்கிறது என்றால் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த பாடலுக்கு நடனமாடிய படத்தின் நாயகன் பிரபுதேவாக்கு டன அமைப்புக்கு தேசிய விருது கிடைத்தது ஞாபகமிருக்கலாம்!!
பெரும்பாலானவர்களுக்கு முழுப்பாடல் வரிகளுமே மனப்பாடமாக இருக்கும் என்பது திண்ணம்!!
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதன் வரிகள் இதோ..

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பல தேசிய விருதுகளுக்கு சொந்தமாகிய அந்தப்பாடலை நீங்களும் இன்னொரு முறை பார்த்து ரசியுங்களேன்!!சரி சரி மெய்மறந்து இருந்தது போக ஒரு ஒட்டு போட்டு போங்கப்பா!!

Post Comment

Wednesday, August 18, 2010

வைரமுத்து-தெரிந்தவை தெரியாதவை!


பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து

பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.

பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .

தகப்பனார்:ராமஸ்வாமி தேவர்.

தாயார்:திருமதி அங்கம்மாள்

மனைவி:பொன்மணி

மகன்:கார்க்கி ,கபிலன்

எழுத ஆரம்பித்தது:7'வது வயதில்

  • 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
  • 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
  • பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
  • உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
  • பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
  • உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
  • திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
  • முதல் வசனமெழுதிய படம்-நட்பு.

பெற்ற விருதுகளில் சில :

  1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
  2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
  3. M.G ராமச்சந்திரன் விருது-1989
  4. கலைமாமணி விருது-1990
  5. தேசிய விருது-1993 (ரோஜா)
  6. தேசிய விருது-1995 (கருத்தம்மா)
  7. தேசிய விருது-1995 (பவித்திரா)
  8. தேசிய விருது-2000 (சங்கமம்)
  9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
  10. பத்மஸ்ரீ விருது -2003.
  11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
வைரமுத்துவின் முதலாவது திரைப்பட பாடலாகிய பொன் மாலை பொழுது பாடல் உங்களுக்காக.முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாகும்.அன்று தொடங்கிய வைரமுத்துவின் பயணம் இன்னும் ஓயாமல் இந்திரன் வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது :



பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள் மற்றவர்களையும் பதிவு சென்றடைவதற்காக..

Post Comment

Tuesday, August 17, 2010

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ?


பாடல்களுக்காக நான் படம் பார்த்த காலமுண்டு..அதுவும் முக்கியமாக இசைப்புயலின் பாடல்களுக்காக..அந்த வரிசையில் எனக்கு பிடித்த ஒரு படம் தான் தாளம்.தமிழிலும்,ஹிந்தியிலும் வெளியான இத் இத்திரைப்படம் ரஹ்மானுக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது என்றால் மிகையாகாது.ரஹ்மானின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் தாளம் திரைப்பட பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதை அவதானித்திருக்கலாம்..தமிழில் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் கவித்துவ வரிகளாலும் ரஹ்மானின் மனம் வருடும் இசையாலும் என்னை மிகவும் கவர்ந்தன.உங்களையும் கவர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் ..

பாடலாசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து

பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம்,ஷோபா

இசை:இசைப்புயல் A .R .ரஹ்மான்

வெளியாகிய தேதி:30-Aug-1999

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை ...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாயில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை)

எங்கே என் புன்னகை பாடலுடன் உங்களை இணைத்து உங்கள் ஞாபகங்களை மீட்டுங்கள்!.



பதிவு பிடித்திருந்தால் உங்கள் பின்னூட்டல்களும் ஓட்டுகளும் விழட்டுமே!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...