Tuesday, February 5, 2013

அனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..!!



          

கால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா...!

பட்டாபட்டி ஆண்ட்ராயர்,பனியன் சகிதமாக கிளு கிளுவென அனுஷ்காவின் கால்களை ரசித்து எப்பம்விடக்கூடிய மாதிரி,அனுஷ்கா காலடியில் மனோ பாலா...!

அனுஷ்காவின் ஒரு கை மட்டும் கட்டப்பட்டிருக்கிறது.மனோ பாலாவின் இரு கைகளுமே கட்டப்பட்டிருக்கின்றன.பாவம் மனோ!வெண்ணைக்குடமே பக்கத்திலிருந்தாலும்,கைகள் கட்டப்பட்டிருந்தால் என்ன செய்துவிட முடியும்...!

"என்னோட பாடிய பார்க்காதை "ப்ரெய்ன்"னை பார் என்று பன்ச் அடிக்கும் மனோ பாலா,தான் ஒரு ஐடியா குடோன் என்பதை நிரூபிக்கிறார்.எப்படி என்பதை திரையில் காணுங்கள் என்று கூறி ஆவலாக வந்த உங்கள் வாயில் அல்வா கொடுக்க மனம் இடம்தரவில்லை எனக்கு.

அனுஷ்கா கால்களை அப்படியே பார்த்தால் யாருக்கு தான் கிறக்கம் ஏற்படாது!படத்தில் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கும்.நேரில் பார்த்த மனோ பாலா?வெட்கத்தை விட்டு அனுஷ்காவிடம் "சட்டு புட்டின்னு உன்னோட காலை என்னோட பனியனுக்க விடு" அப்பிடின்னு ஒப்பினா கேட்டிடுறார் மனோ!ஏது பனியனுக்க காலா????


என்னடா இதுவரை தமிழ் சினிமாவில் ஆம்லெட் போட்டிருக்கிறார்கள், பம்பரம் விட்டிருக்கிறார்கள் ஏன் பட்டாசு கூட போடுவதை தான் பார்த்திருக்கிறோம்.பொதுவாக இயக்குனர்களின் கிரியேட்டிவிட்டி இப்படியான விஷயங்களை வைத்து தான் அளவிடப்படுகிறது.ஆனால் இவை எல்லாமே ஹீரோயின்களுக்கு ஹீரோக்களால் செய்யப்பட்டவை.காமெடியன்கள் செய்ததே கிடையாது.அதுவும் அனுஷ்கா மாதிரி ஹீரோயின் போயி மனோ பாலாவின்ட பனியனுக்க....ச்சா சா நடக்கவே நடக்காதின்னு தான் நானும் நெனைச்சேன் பாஸ்..ஆனால் நடந்தது??

பெரும்பாலான பெண்கள் போலவே ஒன்றும் ஜோசிக்கவில்லை அனுஷ்கா(அவளும் பெண் தானே!!)., மனோ பாலா பனியனுக்குள் காலை விட்டால் மனோ பாலாவின் உசிர் போவதற்கு கூட வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூட கருணை வரவில்லை.சரி அந்த நினைப்பு வராத வரையில் நமக்கு சந்தோசமே என்று காத்திருக்க,ஏற்கனவே தொடை தெரிய போட்டிருந்த குட்டை பாவாடையை கூட மறந்து,கீழே இருந்த மனோ பாலாவின் பனியனுக்குள் தனது காலை தூக்கி போடுகிறார் அனுஷ்கா!(விடுகிறார் என்றே வைத்துக்கொள்ளுங்கள், கிளுகிளுப்பாக இருக்கும்!)

உள்ளே விட்டு குடைய,வெளியில் கால்விரலால் தடவ...மனோ பாலா நெளிய கூனி குறுக...பார்க்கிறவன் கடுப்பிலே கருக...என்று மிக தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட ஸீன் அது.இயக்குனர் சுராஜ்'க்கு எவ்வளவு பாராட்டினாலும் தகும்.எங்களை விட மனோ பாலா தான் பாராட்டி தீர்த்திருப்பார்.ஏன் எக்ஸ்ட்ராவா அமவுண்ட் செட்டில் பண்ணியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை !!

சினிமாவுக்குள் நடிக்க வந்ததற்கு இந்த சீனில் நடித்த பின்னர் தான் முழுப்பயன்,பிறவிப் பெரும்பயன் அடைந்திருப்பார் மனோ பாலா என்று அடித்து கூறலாம்.ஏன்னா படத்தின் ஹீரோ கார்த்திக்கே இந்தளவு நெருக்கமான ஸீன் படத்தில் இல்லைன்னா பார்த்துக்கோங்க!!

           

அலெக்ஸ் பாண்டியன் பற்றி..!

அலெக்ஸ் பாண்டியன் படம் வெளிவர முன்னரே மசாலா ஹிட் அடிப்பதற்கான அனைத்துவித தகுதிகளையும் படம் கொண்டிருந்ததாக கருதியிருந்தேன்!காரணம் சிம்பிள்.இதுவரை தோல்விப்படமே கொடுக்காத ஹீரோ(சகுனி அவரேஜ்),சந்தானம் என்கின்ற காமெடி கிங், "கார்த்திக்-சந்தானம்" ஜோடி கல்லா கட்டிய படங்கள் பல! அப்புறம் ஹாட் ஹீரோயின் அனுஷ்கா,மசாலாவுக்கே உருவான இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத், ஏற்கனவே வந்து ஹிட் ஆனா "பேட் பாய்"பாடல்(ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கும் ஒருதடவை மீள மீள ஒளிபரப்பட்டுக்கொண்டிருந்தது), பிரமாண்ட ப்ரோமோசன் நடவடிக்கைகள்-பிரமாண்ட பாடல் வெளியீட்டு நிகழ்வு என்பன படம் நிச்சயம் வெற்றி தான் என்கின்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தது எனக்கு! 

படம் வெளிவந்தது முதல் கொண்டு வெளிவந்த விமர்சனங்களை வைத்து பார்த்தபோது அல்டிமேட் "சுறா","வில்லு" மற்றும் "ஏகன்","ஆழ்வார்" போன்ற படங்களை எல்லாம் மறக்க வைக்க கூடிய அவதார படம் வந்துவிட்டதாகவே அனைவரும் பேசிக்கொண்டனர். சுறா படத்தை முண்டியடித்து போய் முதல் ஷோ பார்த்த அனுபவம் இருந்தமையால் இதற்க்கெல்லாம் பயப்பிடாமல் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்தேன்.ஆனால் தியேட்டர் போய் பார்க்க எனக்கும் பிடித்திருக்கவில்லை;என்னுடன் வருவதற்கு நண்பர்கள் எவருமே தயாராக இருக்கவும்மில்லை.ஏற்கனவே அவர்கள் அனைவரினது பேச்சிலும்,மூச்சிலும்  'ப்ளட்' வந்துகொண்டிருந்ததை பார்த்த போது அவர்கள் ஏற்கனவே பாண்டியனை பார்த்துவிட்டனர் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தது!அப்புறம் என்ன,வீட்டில் 'சிடி' தான்!!



படத்தில் சொல்லிக்கொள்ளும்படியாக இருந்த ஒரே சீனையும் மேலே சொல்லியாகிவிட்டது.வேறு ஏதாவது சொல்லியாகணுமே என்று கேட்போருக்கு:

*தெலுங்கு படங்கள் போன்றது என்று கூறியிருந்தனர் பலர்.ஆனால் அவர்கள் கூட எதோ சற்று நம்ப கூடிய வகையில் காட்டுவார்கள்.பத்தடி தூரத்தில்,பத்து பஜரோ ரக வாகனத்தில் அம்பது பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு வர,அலெக்ஸ் பாண்டியனும் அனுஷ்காவும் ஓடி தப்புவதை பார்க்கும் போதே ரவுடிகள்  மேல இருந்த மதிப்பு சுத்தமா போச்சுயா எனக்கு!இனிமேல் நானும் யாராவது ரவுடியோட போயி வம்புக்கு இழுக்கலாம்னு இருக்கேன்..யார் வர்றீங்க?

*ஆரம்பத்தில கொஞ்சம் கலகலப்பாக இருந்தாலும் பின்னாடி பெரும்பாலான சந்தானம்-தங்கச்சிகள் மூணு பேர்-கார்த்தி அடிக்கும் லூட்டி கடுப்பேத்துது.செம போர்.அதில கேவலமான இரட்டை அர்த்த வசனங்கள் என்று பார்த்தால் சில காட்சிகள் கூட... ஒரு காட்சியில் தங்கச்சிகளை குனிய வைத்து...(..!!? )எதோ விளையாட்டு விளையாடுவார் கார்த்தி.வழமை போல சந்தானம் போய் தடுக்க,சரி நீ குனி அவங்களுக்கு பதிலாக என்று சந்தானத்தை குனிய வைத்து.... மிகுதியை படத்தில் பார்த்து கொள்ளுங்கள்.

**வில்லன்கள் துரத்த,ஒரு வாகனத்தில் அலெக்ஸ் சந்தானம்,அனுஷ்காவுடன் பறக்கிறார்.இடையே ஒரு பெரிய மதில்(தூண்)வருகிறது.அப்படியே பாய்கிறார் வாகனத்துடன்.பாருங்கள் எந்த சேதாரமின்றி மதிலை உடைத்துக்கொண்டு மூவரும் வந்து இறங்குகின்றனர் மதிலுக்கு மறுபக்கம்!இதில் ஏற்கனவே வாகனத்தின் முன்,பின் கண்ணாடிகள் உடைந்திருந்தன.வாகனத்தின் முன்னாடி கார்த்தி,சந்தானம் இருந்தார்கள். நேரே வந்த மதில் கற்கள் இருவரையும் தொட்டு தடவிவிட்டு சென்றமையால் காயமே இல்லை இருவருக்கும்!

                                (அந்த மயிர் குச்-குச்செறியும் காட்சி இது தான் ) 

** துப்பாக்கி பட க்ளைமாக்ஸ்'ல் விஜய்யின் கையை அவிழ்த்துவிட்டு அடி பார்ப்போம் உண்மையான ஆம்பிளையாக இருந்தால் என்று ஒரு சீன் வருமே?அவிழ்த்துவிட்டு அடிவாங்கி வில்லன் இறப்பது போன்ற காட்சி?அது துப்பாக்கியில் வரும் போதே அதிகமாய் கலாய்க்கப்பட்டது ஞாபகமிருக்கலாம்.அதே க்ளைமாக்ஸ் தான் இங்கும்!அது தான் சன்டிவியில் பாஸ்கி சொல்வார்,மிக அருமையான,புதுமையான ஐடியா,இதை போல எங்கும் கண்டிருக்கமாட்டீர்கள் க்ளைமாக்ஸ் என்று!இனிமேல் "உண்மையான ஆம்பிளையாக இருந்தால் அவிழ்த்து விடு அடி பார்க்கலாம்"என்று யாரும் கேட்டால் ஏன் கெஞ்சினால் கூட வேண்டாம் பாஸ் போயிராதீங்க..உங்களுக்கு தான் ஆபத்து..!!  

படத்தின் ப்ரோமோ பாடல் "பேட் பாய்ஸ்" படம் வெளிவர முன்னமே வெளியாகி ஓரளவுக்கு ஹிட் ஆகியிருந்தாலும் கூட,அது படத்தில் இடம்பெறவில்லை.படத்தில் இடம்பெற்ற மிகுதி அத்தனை பாடல்களும் சுமார் ரகம் என்று தான் கூற முடியும்.ஒன்று கூட தேறவில்லை.மசாலா படம் ஒன்றுக்கு பாடல்கள் ஹிட்டாக அமைவது முக்கியமான விடயம்.விஜய்யின் பல மசாலாக்கள் ஓடியதற்கு பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆனது முக்கிய காரணம்.இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் தனது வழமையான கடமையை செய்யவில்லை போல் தான் தெரிகிறது.அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் மசாலா படங்கள் தான்.அவற்றிலும் சொதப்பலாமா!

                       

இவ்வளவும் தாண்டி படத்தின் கதை என்ன என்று கேட்கும் மகராசன்கள் படத்தின் முதல் பதினைந்து நிமிட காட்சியை மட்டும் பார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.அப்புறம் தெரியும்யா படம் முழுசா பார்த்தவனோட வலி...!!

குறிப்பு:பதிவின் தலைப்புக்கு காரணம் அந்த பாழாப்போன இயக்குனர் சு.......னா பானா சுராஜ் தான். "பிட்டு" பிரியர்கள் இதற்க்கு எதிராக தடையுத்தரவு கேட்டு கோர்ட்டு கேஸுன்னு போயிராதீங்கப்பா!



Post Comment

Monday, January 14, 2013

பவர்ஸ்டாரும் பரதேசி நாய்களும்..!




  
இது கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை பேஸ்புக் இல் பகிர்ந்துகொண்ட  என்னுடைய  நிலைத்தகவல்கள்;இரண்டுமே திருட்டை பற்றியது..!

||ஒருவரின் உழைப்பை திருடுவதென்பது பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் நடந்தேறிவரும் ஒரு விடயம்.ஒருவரின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அதற்கேற்ற வெகுமதியோ,இல்லை 'இதற்கு சொந்தக்காரர் இவர்தான்"என்று கிரெடிட் கொடுப்பதையோ பலர் விரும்புவதில்லை.பேஸ்புக்கில் ஒருவருடைய நிலைத்தகவலை திருடி,உரியவரின் பெயர் குறிப்பிடாது தமது எண்ணம்போல பகிர்வதில் ஆரம்பித்து கீச்சுக்கள், வலைப்பதிவுகள்,பத்திரிகை முதல்கொண்டு ஊடகத்துறையிலும் இது சாதாரணமாக நடந்தேறிக்கொண்டே வருகிறது.உணர்ந்தே செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா என்று கூட ஜோசிக்கமுடிவதில்லை.வயதுக்கு வந்தோர் என்று மார்தட்டிகொள்வதை விடுத்து, அந்த வயதுக்கேற்ற செயல்களை செய்கிறோமா என்று இவர்கள் சிந்திக்கவேண்டும்.

உங்களது சொந்த ஆக்கமில்லாமல் வேறு யாராவது எழுதிய ஆக்கங்களையோ,பார்த்ததில் பிடித்தவற்றையோ பகிர தோன்றினால் அவற்றுக்கு சொந்தமானவரின் பெயரை ஒருமூலையிலேனும் குறிப்பிடுங்கள்.உங்களுடையதை,உங்கள் அனுமதியில்லாமல்,உங்கள் பெயர் குறிப்பிடாமல் வேறு எங்கையாவது பார்க்கும் கணத்தில் தான் அந்த வலியை உங்களால் உணரமுடியும்.||

||||"சமீபத்தில் தங்களின் blog பார்க்க நேர்ந்தது. தங்களின் கீழ்க்கண்ட post - ல் உபயோகபடுத்தபட்டிருக்கும் படங்கள் அனைத்தும் சென்னை ******* ***** மற்றும் சென்னை **** நண்பர்கள் மதுரை பேரணியில் கலந்துகொண்டபோது எடுக்கபட்டது, இவை அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி தாங்கள் blog - ல் உபயோகபடுத்தபட்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படங்களை உடனடியாக நீக்குமாறு கேட்டுகொள்கிறோம். இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும். தங்களின் இந்த தவறான செயலால் அப்படங்களில் இடம்பெற்ற பெண்கள், ஆண்களின் வாழ்கையில் பாதிப்பு ஏற்படுவதை தாங்கள் உணர வேண்டும்

"இணைய தேடியந்திரத்தில் பரவிக்கிடக்கும் படங்களை உபயோகிப்பதில் கூட சில பிரச்சனைகள் இருப்பதை இப்போது தான் உணர்கிறேன். ஓரினச்செயற்க்கையாளர்கள் பற்றிய பதிவில் நான் இணையத்தில் எடுத்து உபயோகித்த படங்கள் சம்பந்தமாக சென்னையிலிருக்கும் ஒரு "நிறுவனத்தின்"இயக்குனர் எனக்கு அனுப்பியிருந்த மெயிலின் ஒருபகுதி தான் இது.இனிமேல் இவற்றிலும் அவதானமாய் இருக்கவேண்டும் நான்.கொய்யாலே இனி என்னோட விஷயங்களை ஆட்டயப்போட்டு போடுற ஒவ்வொருத்தருக்கும் நானும் மெயில் அனுப்பலாம்னு இருக்கேன் ;)||||

--------------------------------------
இது நேற்று நான் பவர் ஸ்டார் பற்றி பகிர்ந்துகொண்டது:


தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்,விமர்சனங்களை எல்லாம் மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் நிதானமும் இருந்தால் யாராக இருந்தாலும்,அவர்கள் நினைத்ததை ஒருநாள் அடைந்துவிட முடியும் என்பதற்கு மிக சரியான நடைமுறை உதாரணம் பவர்ஸ்டார்.


ஆரம்பத்தில் ஒரு கோமாளியாக பார்க்கப்பட்டு பின்னர் சிலகாலம் செல்ல,காமெடியனாக பார்க்கப்பட்டு இன்று நிஜமாகவே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்டார் ஆக உருவெடுத்திருக்கிறார் என்றால் மேலே கூறிய பண்புகள் தான் காரணம்.கோமாளியாக பார்த்த சக நடிகர்கள் தொடக்கம் அவரை "நீயாநானா"நிகழ்வுக்கு அழைத்து இன்னமும் கோமாளியாக்க முயன்ற கோபிநாத் வரையில் எவருமே பவர்ஸ்டார் இந்த இடத்தை பிடிப்பார்,இத்தனை ரசிகர்களை பெறுவார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். 

2011 இல் பவர்ஸ்டார் என்றால்,அவர் யார் என்று கெட்டவர்கள் தான் அனைவரும்.ஆனால் இன்று இவரை தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது.ஜெயா டிவி,சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கை உயர்த்திக்க பவர்ஸ்டாரை சிறப்பு அதிதியாக அழைத்துக்கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஷங்கரின் கடல் படத்தில் ஒப்பந்தமான பவர், நேற்று வெளியான "கண்ணா லட்டு திங்க ஆசையா" படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் பட்டை கிளப்பியிருக்கிறார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் பல ரசிகர்கள் கிடைத்திருப்பது கண்கூடு.

எச்சந்தர்ப்பத்திலும் மாறாதது அவரது புன்சிரிப்பு தான்.(அது தான் எனக்கு பிடித்ததும் கூட.(Mister Cool !)) நிகழ்வுகளில் வந்து "என் இனிய ரசிகப்பெருமக்களே" என்று கூறும்போதோ,முகத்துக்கு நேரே இழிவாக எவராவது பேசும் போதோ,மாறாதது என்னமோ அந்த வசீகர புன்னகை தான்.தனக்கு ஐம்பது லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அன்று கூறியது கேட்டு சிரித்தவர்களில் பலர் இன்று இவர் ரசிகர்களாகி இருக்கிறார்கள்.ஐம்பது லட்சம் ரசிகர்களை பெறுவேன் என்கின்ற தன்னம்பிக்கையை நிகழ்த்தி காட்டியிருக்கும் பவர் ஸ்டாரின் அந்த துணிச்சல் எத்தனைபேருக்கு வரும்??

சினிமாவுக்குள் வந்ததற்கு காரணம் என்ன என்பதற்கு "புகழ்" என்பதே அவரின் பதிலாக இருந்தது.நினைத்ததை இருவருடங்களுக்குள் சாதித்துவிட்டார் பவர் ஸ்டார்.ஒவ்வொருத்தரிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விடயம் இருக்கும்.பவர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக்கொள்ள பலவிடயங்கள் இருக்கின்றன.அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையற்றதை விட்டுவிடுங்களேன்!!

#பவர்ஸ்டார்-நிகழ மறுத்த அற்புதம் இல்லை-நிகழ்ந்த சரித்திரம்!!

என்னுடைய பேஸ்புக்கில் நேற்று பகிர்ந்துகொண்டதை இங்கு சென்று உறுதிப்படுத்திகொள்ளலாம்.

------------------------------------------------
இதை அப்படியே காப்பி பண்ணி என்னுடைய பெயரை எங்கும் குறிப்பிடாமல் "அவ்ளோ பெரிய காமெடி இல்லை இது" என்கின்ற பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்,நான் பகிர்ந்த மறு கணமே.ஷங்கரின் கடல் படத்தில் என்று தவறுதலாக எழுதியிருந்தேன்.அது ஷங்கரின் "ஐ" படம்.அந்த தவறையும் அப்படியே ஒப்புவித்திருக்கிறார்கள்.

எத்தனை லைக்ஸ் எத்தனை ஷேர்ஸ் என்று பாருங்கள். எனது நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலர் கூட அங்கு லைக் செய்திருக்கின்றனர்.யாரை சொல்லி நொந்துகொள்வது? 




இந்த பேஜ் அட்மின் பெயர் "சிம்பு ரசிகன் டிஷாந்தன்"

நானும் எனது நண்பர்கள் புவிகரன்,ஜீவதர்ஷன்,அஹ்மத் ஷாஜ் போன்றோரும் அவர்களின் பதிவுக்கு சென்று உரிமை கோரி போர்க்கொடி தூக்கிய பின் சில மணி நேரங்களின் பின்னராக எனது பெயர் "via மைந்தன் சிவா" என்று இணைக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எமது எக்கவுண்ட் மூலம் நிலைத்தகவல் பதிந்தால் எடிட் செய்ய வசதி கிடையாது.ஆனால் பேஜ் அட்மின்களுக்கு அந்த வசதி இருக்கிறது.அதன் மூலம் என் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது. 

என்னுடையதை அவர் களவாடிவிட்டார் என்று அடிபடுவதற்க்காகவோ,என்புகழ் பரப்பவோ இதனை கூறவில்லை.என்ன தான் எடுத்து கூறினாலும் இவர்கள் திருந்துவது போன்று தெரியவில்லை.காப்பிரைட்ஸ் என்பது சமூக வலைத்தளங்களில் முக்கியமாக பேஸ்புகில் சாத்தியமில்லாதது.எவ்வித பாதுகாப்பும் கிடையாது.ட்விட்டரில் கூட ட்வீட்களை ப்ரொடெக்ட் பண்ணி வைக்கும் வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.அதனால் பதிவின் சொந்தக்காரருக்கு தெரிவிக்காமலும்,அவருடைய பெயரை குறிப்பிடாமலும் காப்பி பேஸ்ட் பண்ணும் நடவடிக்கைகள் தாராளமாக இடம்பெற்று வருகின்றன.சொந்தமாக சிந்தித்து பதிவு போட தெரியாத,சுயபுத்தி இல்லாத,கற்பனை வளம் இல்லாத,வெட்கம் மானம் ரோஷம் எதுவுமற்ற,சொல்புத்தி கேட்காத,சுயபுத்தி கூட இல்லாத "நாய்கள்"தான் இப்படியான காரியத்தை செய்வார்கள் என நம்புகிறேன்.ஆயிரம் பிரச்சனைகளை தாண்டி கல்யாணம் செய்பவன் ஒருவன்,முதலிரவுக்கு செல்பவன் இன்னொருவன் என்பது போல எழுதுவது ஒருவன் ஆனால் காப்பி பண்ணி பகிர்ந்து அதன் க்ரெடிட்ஸ் முழுவதையும் பெற்றுக்கொள்வது இன்னொருவனாக இருக்கும்.நாம் எழுதிய பதிவு இன்னொருவனால் ஷேர் செய்யப்பட்டு(அனுமதி இன்றி,நமது பெயர் கூட இன்றி) அங்கு இருநூறு ஷேர் நானூறு லைக்ஸ் வாங்குவதை பார்க்கையில் உங்களுக்கு புரியக்கூடும் அந்த வேதனை.


தேவையில்லாமல் டாக் செய்யவேண்டாம் என்று எத்தனையோ தடவை கூறியும் டாக் பண்ணுபவர்களை போன்றவர்கள் தான் இவர்களும்.இரு தரப்பையும் திருத்த முடியாது.ஒரு சமயம் டாக் பண்ண வேண்டாம் என்று நிலைத்தகவல் பகிர்ந்திருந்த அன்றே சிலர் டாக் பண்ணியிருந்தார்கள்.இவர்களை நினைத்து சந்தோசம் தான் கொள்ளமுடியும்!!வெட்கம்கெட்ட ஜென்மங்கள்.பேஸ்புக் பதிவுகளுக்கும் காப்பிரைட்ஸ் அல்லது ப்ரோடேக்சன் சக்கர்பெர்க் கொண்டுவந்தால் தான் இவர்கள் தொல்லையை நிறுத்த முடியும்.

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே...இது என்னுடைய இருநூற்றி ஐம்பதாவது பதிவு :) 

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...