Thursday, June 30, 2011

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”

Trisha

ஹிஹி இது ரொம்ப கேவலமா இருக்குன்னு ஜோசிக்கிரவங்க எஸ் ஆகிடுங்க...இல்ல எல்லாரையும் போல முன்னுக்கே இப்பிடி டிஸ்கி போட்டுகிட்டா பின்விளைவுகள் குறைவா இருக்கும்னு நிருபன் தான் சொன்னாரு ஹிஹி.

இது நான் படித்து ரசித்த ஜோக் ஒன்னு...ஆளுக்காள் ஒவ்வொரு எஸ் எம் எஸ்'சை வைத்து பதிவு போடேக்குள்ள நான் இதை பண்ண கூடாதா.

ஜோக்கை வாசியுங்க..செம காமெடி தான்!!

என்ன முனியா, நான் ஊர்லே இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?”

“பெருசா ஒண்ணுமில்லைங்க. நம்ம நாய் செத்துப் போச்சு”

“அடக் கடவுளே… த்சோ..த்சோ.. நல்லாத்தானேடா இருந்திச்சு. எப்படி திடீர்னு செத்துச்சு?”

“கெட்டுப்போன மாட்டுக்கறியை தின்னுடிச்சுங்க”

“மாட்டுக் கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு?”

“நம்ம வீட்லதாங்க”

“நாமதான் மாட்டுக் கறி திங்கிறதில்லையேடா”

“நாம திங்கிறதில்லைங்க. நெருப்புல அவிஞ்சிபோன மாடு மூணு நாளா கெடந்து கெட்டுப்
போச்சுங்க. அதத்தான் நாய் தின்னிடிச்சு”

“நம்ம மாடா?”

“ஆமாங்க”

“ஐயய்யோ எப்பிடிடா எரிஞ்சி போச்சு?”

“மாட்டுக் கொட்டாய் தீப்பிடிச்சிடிச்சுங்க”

“ஐயய்யோ… எப்பிடிடா?”

“வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயில விழுந்திடுச்சு”

“வீடு எப்படிடா எரிஞ்சது?”

“குத்து விளக்கு விழுந்து தீ பரவிடிச்ச்சுங்க”

“குத்து விளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா?”

“அதுக்காக செத்தவங்க தலை மாட்டிலே விளக்கு வெக்காம இருக்க முடியுமா?”

“யார்ரா செத்தது?”

“உங்க அம்மா”

“எப்படி செத்தாங்க”

“தூக்கு போட்டுக்கிட்டு”

“ஏன்?”

“அவமானத்திலதான்”

“என்னடா அவமானம்?”

“வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித் துப்பாதா?”

“ஓடிப் போனது யாரு?”

“உங்க பொண்டாட்டிதான்”


ஹிஹி என்ன சொல்லுது பாஸ்??

Post Comment

Tuesday, June 28, 2011

மைக்கல் ஜாக்சனின் எங்கேயும் காதல் பாடல் -2!!

ஆல்ரெடி நங்கை பாடலுக்கு நான் மைக்கல் ஜாக்சனின் ஆட்டத்தை போட்டிருந்தேன்..
அதை பார்க்க கிளிக்குங்க!

இது அடுத்த நங்கை பாடலுக்கான மைக்கல் ஜாக்சனின் ஆட்டம்...
பார்க்க பார்க்க சலிக்காத ஆட்டங்களில் ஜாக்சனின் ஆட்டங்களுக்கு
எப்பவுமே ஒரு தனி இடமுண்டு..
அத்துடன் எமக்கு பரிச்சியமான தமிழ் பாடல்களுக்கு
மைக்கல் ஜாக்சன் ஆட்டம் போடும் பொது
அதன் கிளர்ச்சியே
தனி தான்!!

மைக்கை பிடித்துக்கொண்டு ஆடுவதில் மைக்கல் ஜாக்சனே கில்லாடி!!!
மைக் ஆட மைக் ஆட..
மைக்கல் ஜாக்சன் கூட ஆட....

இந்த பாடலில் வரும் பொண்ணு பரவாயில்லை,...முன்னைய பாடலில் வந்த பொண்ணை விட கொஞ்சம் ரசிக்கலாம்!!!
மறக்காம வீடியோ பாருங்க....ஒரு உற்சாகம் பிறக்கும் நான் கரண்டி!!

இரு நாட்களுக்கு முன்னர் தான் மைக்கல் ஜாக்சனின் இரண்டாவது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது நினைவிருக்கலாம்!

ஹிஹி எடிட்டிங் நீங்களா பாஸ்??சூப்பர்னு எல்லாம் பாராட்ட வேணாம்..காரணம் இந்த மாதிரி வேலைகளில நான் கொஞ்சம் மட்டு...
மற்றைய வேலைகளில...ஹிஹி சுத்த மட்டு!!!

Post Comment

Monday, June 27, 2011

ஓட்டவடைக்கு பகிரங்க மெயில்!!

ஓட்ட வட நாராயணன்

யாருக்கு-ஓட்டவடை நாராயணன்(ஓமக்குச்சி)
யாரால்-மைந்தன் சிவா
விடயம்-ஹன்சிகா பத்திய பஞ்சாயத்து முடிவு

அன்புள்ள ஓட்டவடை நண்பா,

நலம் நலமறிய ஆவல்,எல்லாம் வல்ல பிரெஞ்சு காதல் பெருமான்
உங்கள் நலம் காப்பார்னு எனக்கு பூரண நம்பிக்கை..

நீங்க நான் பார்த்த ஹன்சிகா மொத்வாணி என்னும் குண்டு குளுகுளு
பிகரை எனக்கு வேணும்னு என்னோடு கடந்த சில வாரங்களாக அடிபட்டு
உண்ணாவிரதம் இருந்து ஐ நா முன்னாள் ஆர்ப்பாட்டம் பண்ணி பல
தில்லாலங்கடி வேலையெல்லாம் பண்ணி முயன்று பார்த்தீர்கள்..
ஆனால் ஹன்சிகாவோ மைந்தன் தான் கதியின்னு இருந்ததால
உங்களால ஹன்சிகா நிழலை கூட தொட முடியல..பார்க்கவே
ஐயோ பரிதாபம் ஓட்டவடை அப்பிடின்னு உலகமே பேசிகிட்டது..

சக பதிவர் நிரூபன்,மற்றும் சி பி செந்தில்குமாரை அண்ணரை எல்லாம்
என்னிடம் தூது விட்டு பார்த்தீர்கள்.நான் மசியவில்லை..
அப்பிடி டாப்பில் இருந்த நான்(முன்னர் டாப்சியை லபக்கினது வேறு கதை)
இப்போது உங்கள் மேல கொஞ்சம் கருணை கொண்டு இறங்கி வந்திருக்கிறேன்..

அதாவது ஹன்சிகாவை உங்களுக்கு விட்டுத்தரலாம்னு..
இந்த முடிவை நான் யாருக்கும் பயந்தோ,மனோ அண்ணனின் மிரட்டலுக்கு
அடிபணிந்தோ எடுக்கவில்லை...உங்க மேல இருக்கிற பாசத்தால தான்
எடுத்தேன்...

அத்துடன் ஹன்சிகாவை கட்டி சோறு போட முடியவில்லைன்னு கடந்த
பதிவில் கூட சொல்லி இருந்தேன்...அது உண்மை தான்..பிள்ளைக்கு
ஒரு நாளைக்கு ரெண்டு கிலோ அரிசியும் அரைக்கிலோ சிக்கின்,முட்டை
பருப்புன்னு என்னோட ரேசன் பில்லு தான் எகிறுது..

அத்துடன்,லேட்டஸ்ட்'டா கார்த்திகான்னு ஒரு பிகர் நல்ல ஹோம்லியா
வந்திருக்காங்க..கோ படம் பாத்தவுடனே எனக்கு அவங்கள பிடிச்சு போச்சு..
அவங்க ஹன்சிகா அளவுக்கு குண்டா இல்லை..சோ,சாப்பாட்டு செலவு
மிஞ்சும்...
ஹன்சிகா மாதிரி வெயிட்டு இல்லை..சோ,என்னால இலகுவா அவங்கள தூக்க
கூட முடியும்...
அது பத்தாதுன்னு மாலை நாலுமணி ஆச்சுன்னா ஒரு கிட்டாரை தூக்கிகிட்டு தெருவுக்கு போயிருந்து பாட்டு பாடி பிச்சை கேக்குது...
வாரவங்க பிச்சை போடுறாங்களோ இல்லியோ நல்லா கடலை போடுறாங்க...
அவங்கட "கல்ச்சர்" எனக்கு ஒத்து வரல...

அது பரவாலைன்னு பாத்தா,குட்டை கால்ச்சட்டையோட தான் இருக்காங்க..
வீட்ட இருக்கேக்க ஓகே,நான் பாத்துப்பன்..ஆனா வீதியில போகேக்க
சின்ன குழந்தையும் "ஆ"வெண்டு பாக்குதுகள்...அது தான் எனக்குத்தாங்க
முடியல...

அதனால இந்த வாரத்தில இருந்து கார்த்திகா பத்தி தான் நான் பதிவு போடுறதா
இருக்கேன்...அப்புறம் எனக்கும் ஹன்சிகா வேணாம் கார்த்திகா தான்
வேணும்னு கெளம்பி வந்தா,அப்புறம் சேதாரங்களுக்கு நான் பொறுப்பில்லை..
வரும்போதே இன்சுரன்ஸ் பண்ணி வரவும்..

லோலிட்டா இனி உங்களுடன்....
என்னமோ எதோ.....இனி என்னுடன்...

நீங்க உங்க பாதையில போங்க...
நான் என் பாதையில போறன்..காரணம்,
என் வீடு சிறீலங்கால...
உங்க ஊடு பிரான்சில...

மேலதிக சந்தேகம் இருந்தா பின்னூட்டமிட்டு தொடர்புகொள்ளலாம்...

நன்றி..
"நண்பேண்டா" மைந்தன் சிவா!!


வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு..ஒன்னு ஹன்சிகா மற்றையது கார்த்திகா..வெட்டினது மைந்தன் சிவா!

Post Comment

Sunday, June 26, 2011

ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல் முடிவு!!




படம்:ஹன்சிகா மேல் கன்னாபின்னா காதல்
குரல்:மைந்தன் சிவா
இசை:டி ஆர் ராஜேந்தர்
பாடல்:மைந்தன் சிவா

கண்ணே ஹன்சிகாவே
கன்னி மயிலென
கண்டேன் உன்னை நானே...
கனவிலும் உன்னை நான் பார்க்கிறேன்...
ஓட்டவடை உன்னை நான் கேக்கிறேன்..
என்னவள் தானே...ஹன்சி
என்னவள் தானே....

தப்சி என்றால் ஒரு வகை கப்சி...
பெப்சி என்றால் அதிலொரு டேஸ்டி..
நீயொரு பிகர் தானே..
உடல் நடுங்கும் மார்கழி குளிர் தானே...
ஏனோ ஓட்டை விதி செய்தது..
நீயோ என்னை கைப்பிடித்தது...
ஆரிராரோ..ஒஹ் ஆரிராரோ

காதல் கொண்டேன்
கனவினை வளர்த்தேன்..
கன்சிகா உன்னை நான்
கட்டிலில் புதைத்தேன்...
உன்னோடு ஒன்றானேன்..
எந்நாளும் இதை நீ மறவாதே...
நீயில்லாமல் எது நின்மதி..
நீ தானே என்றும் என் சந்நிதி...
ஆரிராரோ..

ஹிஹி என்ன ஜோசிக்கிறீங்க...சோக பாட்டு வருதுன்னா??
ஒண்ணுமில்ல ஹன்சிகா என்ன விட்டு போயிட்டா...
அப்பிடின்னு சொன்னா அது எனக்கு தான் மரியாதை குறைவு..
ஹன்சிகா எனக்கு வேணாம்னு நான் தான் ஒதுங்கிட்டேன்..

எவ்வளவோ கஷ்டப்படுறாரு ஓட்டவடை ஹன்சிகாவ அடையுறதுக்கு.
எனக்கு தனி மெயில் அனுப்பி கெஞ்சுறாரு..(ஆதாரம் கேட்டால் சைபர் க்ரைமுக்கு அனுப்பி வைக்கப்படும்).
பல பதிவு பகல் இரவுன்னு கண் முழிச்சு கட்டிங் எடிட்டிங் வேலை செய்து போடுறார்...
அவர்ட கன்னா பின்னா காதலை பாத்து நான் மனமிரங்கிட்டேன்..

பாவம் என்ன தான் இருந்தாலும் நம்மட பயல்...தெரிஞ்ச பயல்..
கொண்டு போகட்டுமே...
கவனமா வைச்சு காப்பாத்துப்பா...ஹன்சிகா ஒரு தீனி பண்டாரம்...
எப்ப பாரு சாப்பாடு குடுத்துகிட்டே இருக்கணும்..
நாலு நாள் வைச்சு சாப்பாடு போட்டே நான் நடுத்தெருவுக்கு வந்திட்டேன்..
நீங்களும் பிரான்ஸ் தெருவுக்கு வந்திடாதையப்பா..

ஹிஹி என்னடா இப்பிடி அடிபட்டவன் சிம்பிளா விட்டுக்குடுக்கிறானே எண்டு பாக்கிறீங்களா??ஹிஹி அதுக்கான காரணமே வேற...
சொல்லட்டா???

நேத்து தான் கோ படம் பாத்தேன்..அதில வந்த ராதா பெத்த மவ கார்த்திகாவோட என்னவோ எதோ...ஆகிபோச்சு எனக்கு..
அப்போ தான் ஹன்சிகாவ ஒப்பிட்டு பாத்தேன்...
உவாக்...ஓடிப்போ ஓட்டவடையிட்ட எண்டு கலைச்சுவிட்டேன்..
பாவம் அழுதுகொண்டு போச்சு கால் டாக்சி பிடிச்சி பிரான்சுக்கு..

என்ன நடந்திச்சோ தெரியல...

சரி ஹன்சிகா முடிஞ்சு இனி கார்த்திகா புராணமான்னு சலிச்சிக்கபிடாது நீங்க ஹிஹி

Post Comment

Saturday, June 25, 2011

ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படி??

ஹாய் நண்பர்களே,
நம்முள் பலபேர்,(ஹிஹி சத்தியமா நான் இல்லை)
வெறுமனே மொக்கை பதிவுகளை போட்டு காலத்தை கடத்தி
வருகிறனர்..எந்த நாளும் மொக்கை போட்டால் பார்ப்பவர்களுக்கு அலுப்படிச்சிடாது??

அதனால தான் புதிய பதிவர்கள்,மற்றும் பழைய பாழாப்போன மொக்கை பதிவர்களுக்கு
நான் ஆக்கபூர்வமாய் பதிவு போடுவது எப்படின்னு சொல்லி கொடுக்கலாம்னு
நெனைச்சேன்...புதுசா வந்த பதிவர்களுக்கு சில வேளை தெரியாமல் இருக்கலாம்
எப்படி ஆக்கபூர்வமாய் பதிவு போடுவதென்று..
நான் சொல்லப்போற விசயங்களை கப்பென்று கட்ச் பண்ணி,இந்த பதிவை
புக்மார்க் பண்ணி வைச்சிருந்தீங்கன்னா,வருங்காலத்தில் உங்களுக்கு
பெரிய உதவியா இருக்கும்..
ஓகே???சரி வாங்க ஆக்க பூர்வமாய் பதிவு போடும் நடைமுறைக்குள்ள போவம்.

முதலில,அதிகாலை எழுந்து காலைக்கடன் முடித்து,வடிவாக தலை முழுகி அல்லது
குளித்து சுத்தமாக வர வேண்டும்..

அப்புறம் புத்தாடைகள் அணிந்து(கவனிக்க புத்தாடை நாட் பழைய ஆடை)உங்க
இஷ்டமான கோயிலுக்கு சென்று வடிவாக தொழ வேண்டும்,
"கடவுளே ஆக்கபூர்வமாய் பதிவு போடப்போறன் இன்ட்லி தமிழ்மணத்தில்
ஓட்டுகள் வாங்கி பல்லாயிரக்கணக்கான வாசகர்கள் வந்து வாசிக்க வேண்டும் கடவுளே"
அப்பிடீன்னு நீங்க கடவுளை வேண்டுதல் வேண்டும்...இட் இஸ் வெரி இம்போர்ட்டன்ட்..

அப்புறமா வீட்ட வந்து உங்க உங்க கணணியை ஆப்பின் பண்ணி
லாகின் ஆகி டாஷ்போர்ட் போறீங்க..

அங்க போனாக்கா நியூ போஸ்ட் அப்பிடின்னு ஒரு ஆப்சன் இருக்கும்..
அத கிளிக் பண்ணுங்க..

இப்போ நீங்க ஆக்கபூர்வமா பதிவு போட ரெடி...
இப்போ தலைப்பு வைக்கணும்..தலைப்பு தான் ஒரு பதிவுன் கண்கள்!!!
சோ,நீங்க கில்மா தலைப்பெல்லாம் வைக்ககூடா..அப்புறம் அது
ஆக்கபூர்வமற்ற பதிவு அப்பிடீன்னு போயிடும்..
ஆகவே நீங்க எப்பிடி தலைப்பு வைக்கிறீங்கன்னா,
"ஆக்கபூர்வமான பதிவு"
அப்பிடி வைக்கிறீங்க...பிகாஸ்,நீங்க போடப்போற பதிவு ஆக்கபூர்வமான பதிவு தானே பாஸ்!!!

சரி தலைப்பு வைச்சாச்சு பதிவு என்ன போடுறது???
அது உங்க இஷ்டம்...ஆக்கபூர்வமா என்ன உங்க மனசில உதிக்குதோ,அத அப்பிடியே
கொட்டிடுங்க வெளில சிந்தாம சிதறாம...
முக்கியமா பதிவுக்கு இடையில எல்லாம் ஹன்சிகா,தப்சியின் படங்கள் போடக்கூடாது...
நல்ல சீனரி படங்களை தேடி எடுத்து போடுங்க..அதுவும் இல்லாவிடில்,
சாமி படங்கள் போடுங்க..(அதுக்காக கந்தசாமி படம் இல்லை)..

இப்ப பாத்தீங்கன்னா,பதிவுலகுக்குள் வந்த சின்ன புள்ளைக்கு கூட
ஆக்கபூர்வமா பதிவு போடுறது எப்பிடின்னு தெரியவந்திருக்கும்..

சோ,இனி நாம ஆக்கபூர்வமான பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கலாம்!!
அந்த பெருமையெல்லாம் என்னை வந்து சேரட்டும்!!!!ஹிஹிஹி

பதிவுலகத்தை கெடுக்கிரான்னு இனி யாரும் என்ன பாத்து திட்டமுடியாது பாருங்க.

Post Comment

Thursday, June 23, 2011

பில்லா- 2 அஜித் புதிய தோற்றத்தில்???

ஹிஹி ஹிஹி விஷயத்தை சொல்ல முதலே சிரிக்கிறேன்'னு சொன்னா விசயம் அந்தளவு காமெடியானது தான்..

இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற எம்பி அஸ்வர் அவர்கள் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்
சனாதிபதியால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும்,பிள்ளைகளுக்கு கல்வியறிவு ஊட்டப்படுவதாகவும்
தெரிவித்திருந்தார்...இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது மட்டுமல்லாது,அவர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்ற கேள்வி
பரவலாக எழுப்பப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்,அஸ்வர் எம்பி நேற்று பல்டி அடித்து அது தமிழ்செல்வனின் மனைவி என்று கூறி,
அந்த உரை நிகழ்த்தும் போது தான் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாகவும்,அதனால் இந்த தவறு நிகழ்ந்து விட்டது என்றும் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்
பாராளுமன்றத்தில் நேற்று..
அந்தளவுக்கு இந்த வயசில் என்ன உணர்ச்சிவசப்படுதல் வேண்டி கிடக்கு மாண்பிமிகு எம்பிக்கு அதுவும் இந்த விசயத்தில்??
சனாதிபதி கூட இந்த கருத்தால் ஆடிப்போய்விட்டாராம்!!!

President Wilson Hotel, Royal Penthouse Suite


ஸ்விட்சலாந்தில் உள்ள "ப்ரெசிடென்ட் வில்சன்"(President Vilson)ஹோட்டல் தான் உலகில் அதிகளவான
கட்டணங்களை கொண்ட ஹோட்டலாக பதிவாகி உள்ளது..
ஒரு இரவுக்கான கட்டணமாக 65000 $ தொகையை அறவிடுகிறது.
இதனுள் அடங்கும் வசதிகள் என்ன தெரியுமா??
பன்னிரண்டு அறைகள்,பன்னிரண்டு குளியலறைகள்,ஒரு பில்லியேட்ஸ்
மேஜை,அப்புறம் ஒரு ஜிம்,தனிப்பட்ட பாரம்தூக்கி(லிப்ட்) என படு சொகுசான
இடம் தான் இந்த விலைக்கு அதுவும் ஒரு நாள் இரவுக்கான தொகையாகும்.
ஸ்விஸ் நாட்டின் ஜெனீவா நகரில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.


தனது அம்பதாவது படமான மங்காத்தா பெரும்பாலும் முடிந்து விட்ட தறுவாயில்,அடுத்த
படமாக பில்லா-2 இல் நடிக்க இருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்.
இந்த படத்தில் இருபது வயது பையனாக நடிக்க இருக்கிறாராம் அஜித்.இதற்காக உடம்பை குறைக்கும் வேளையில் மும்மரமாக ஈடுபடுகிறாராம்.
முதலில் விஷ்ணுவர்த்தன் இயக்குவதாக இருந்த பில்லா -2 பின்னர் சக்ரி டோல்டி இயக்கத்துக்கு மாறியிருந்தது தெரிந்ததே...
ஆல்ரெடி மங்க்காத்தாவில் நரைத்த தலை முடியுடன் நடித்திருக்கும் அஜித் ,பில்லாவில் இன்னும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றப்போவது அவரது ரசிகர்களுக்கு அல்வா தான்!!

கிங்க்ச்டனில் நடைபெற்ற இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது...
பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் ,குறைந்தளவு ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக மாறி இருந்தது..
63 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற ராகுல் திராவிட் ஆட்டனாயகனாய் தெரிவுசெய்யப்பட்டார். முதல் இனிங்க்சில் ரைனா,மற்றும் பாஜியின் இணைப்பாட்டம் தான் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாய் அமைந்தது என்றாலும்,இரண்டாம் இனிங்க்சில் திராவிட் சதமடித்திருந்தார்.
ஆரம்ப வீரர்களான முகுந்த் மற்றும் முரளி விஜய் பெரிதாக சோபிக்கவில்லை..
முறை விஜய்க்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போதிலும் சர்வதேச கிரிக்கட்டில் தனக்கொரு இமேஜ்'ஜை பதிக்க தவறிவருகிறார் என்றே கூறலாம்..

இன்று வாழ்வில் ஒரு படி கடக்கிறேன்...ம்ம்

Post Comment

பதிவர் சந்திப்பு+சாரு+விஜய்!!

கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.
அதனால பதிவுகளின் தரம் அது கேள்விக்குறியாக இருந்தது(ஆமா வழமையா எதோ தரமாய் தானே எழுதி கிழிச்சவன்).
நண்பர்களின் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை..
இடைக்கிடையில் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலானோர் "தொடரும்"
பதிவுகளை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
ஆனால் முடிந்தளவுக்கு அனைவர் தளங்களுக்கும் சென்று கமெண்டிட்டு வாக்கிட்டு வந்திருந்தேன்..
ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி
இந்தியாவில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளும்,அதன் போட்டோக்களும்
இடைக்கிடையே எனக்கு சிரிப்பை வாரி வழங்கி இருந்தன...
அந்த வகையில்,சிபி,மனோ,மணிவண்ணன்,சங்கரலிங்கம் சார்,சீனா ஐயா,ஷர்புதீன் போன்றோருக்கு நன்றிகள்..
கோமாளி செல்வா,மற்றும் சிபி அண்ணே
போட்டோக்களை பார்த்தவுடன் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா??
ஹிஹி சொல்லமாட்டேனே...
வம்பை விலைக்கு வாங்குபவரை இப்போ கூலிங் க்ளாஸ்'னு தான்அழைக்கிறார்களாம்..
இனிமேல் பதிவுலகில் பெயர்கள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ?
தக்காளி...
வெங்காயம்..
லாப்டாப்...
கூலிங் க்ளாஸ்..
கில்மா...
அருவா..
வடை...
கோமாளி...
சிரிப்பு போலீஸ்
பன்னிகுட்டி
ஆட்டுக்குட்டி

பலருக்கு சந்திப்பில வெட்டுக்குத்து,கொலை எல்லாம் நடக்காததில கவலைன்னு அவங்க பதிவுகள வாசிக்கும் போதே தெரிஞ்சது..
முக்கியமா பிளையிட் பிடிச்சு போன மனோ அட்லீஸ்ட் ஒரு கொலையாச்சும் பண்ணுவார்னு எல்லாரும் பரவலா
நேரடி ஒளிபரப்பை பார்க்க ஆவலா இருந்திருக்காங்க...ஆனா நேரடி ஒலிபரப்பு சில பல காரணங்களால் தடைப்பட
அவங்க குழு குளுகுளுப்பு இல்லாம போச்சு..அவ்வ்வ்வ்

ம்ம்ம் அது இருக்கட்டும்...
அப்புறம் சூடாக அலசப்படும் விஷயம் "சாரு"பற்றியது..


இதை பற்றி எத்தனையோ ஆக்கங்கள் அலசல்களை வாசித்தும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதவனாய்
இருக்கிறேன்..அவ்வாறு நடந்திருக்கலாமோ இல்லை திட்டமிடப்பட்ட வேலையோ என்று தெரியவில்லை..
தமிழச்சி தனது தளத்தில் கிழித்திருக்கிறார் சாரு பற்றி..

சாரு நிவேதிதா வாசகர் வட்டம்னு ஒரு வட்டம் இருக்கு பேஸ்புக்கில..அதில இணைந்து இருக்கிறேன் நான்
கடந்த சில மாதங்களாக..இன்று அதனை பார்க்கும் போது ஆக்ரோஷமும் எதிர்ப்புகளும் மாறி மாறி விழுவதை
காண முடிந்தது...இணையத்தள வாசிகளும் தங்கள் ஊகங்களை மாறி மாறி வெளியிடுகிறனர்.
ஆனால் எனக்கென்னமோ அந்த பெண்ணின் உரையாடல் போலியானதோன்னு தான் தோணுது..


அப்புறம் விஜய்..

சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..
பெரும்பாலும் திரைவிமர்சனங்களை பாருங்கள்..படம் வந்த உடனே இருவர் படம் சொதப்பல் என்று
விமர்சனம் இட்டால்,அடுத்து விமர்சனம் போடுபவர்கள் பெரும்பாலும் அதே கருத்திலேயே விமர்சனம்
செய்துவிடுவார்கள்..இது வழமையாக இங்கு நாம் காணும் காட்சிகள்..
அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது.
இப்போ கலைஞர் ஆட்சியை விட்டு இறங்கியவுடன் சும்மா இருந்தவர்களும் எழும்பி நின்னு கலைஞரை
அடிக்கவில்லையா...இவர்கள் அடுத்த முறை அம்மா தோற்றால் கூட இதே மாதிரி அம்மாக்கு எதிராக எழுதி
பட்டியலிடுவார்கள்..
இதை தான் காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளல் என்பதா??அல்லது எரிகிற வீட்டில் என்னவோ பிடுங்கிறது
என்பார்களே...அந்த மாதிரியா??
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கிறார்கள்..ஆனால் விஜய் மற்றும் அவரது ரசிகர்களே
பெரும்பாலும் தாக்கப்படும் ரசிகர்களாகி இருக்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு விஜய்'யை அல்லது அவர்களை சார்ந்தோரை
தாக்கி பேசுவதன் மூலம் தாங்கள் பிரபல்யம் பெறலாம் என்ற நினைப்புத்தான் வேறொன்றும் இல்லை..

இதே கோஷங்கள்,அஜித்,கமல்,ரஜனி,தனுஷ்,சிம்பு போன்றோரின் பிறந்த தினங்கள் வரும்போதோ அல்லது சாதாரணமாகவோ
எழுப்பபடுவதில்லை...
அப்புறம் ஏன்??நாங்க உங்களுக்கு பைட்ஸ்'ஸா??ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா??

அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் வ்வ்வ்வவ்வ்வ்வவ் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்

Post Comment

Tuesday, June 21, 2011

தளபதியே பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!



இளைய தளபதி விஜய்...
விஜயின் வரலாறோ,அவரின் பெருமைகளையோ பீற்றப்போவதில்லை நான் இப்போது..
ஆனால்,
சாதாரண சின்ன பையனாக இருந்த காலத்தில் ,விஜய் ஏன் என்னை கவர்ந்தார்,
நான் ஏன் விஜய் விசிறி ஆனேன் என்பதை உங்களுக்கு சொல்லலாம்னு கெளம்பிட்டேன்...
நீங்க நெனைச்சாலும் என்னை தடுக்க முடியாது..

ஆரம்பத்தில் நான் ஆக சிறுவனாக இருந்த போது அஜித்,விஜய்,பிரஷாந்த் என்று
அனைவரது படங்களுக்கும் சரி சமமான ஆசையுடன் பார்க்க செல்வது வழக்கம்..
அப்போது அஜித் விஜய் பிரச்சனை பெரிதாக பூதாகரமாக வெடிக்காதிருந்த காலம்..
இளைய நட்சத்திரங்களாக தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவரும்
ஜொலிக்கத் தொடங்கிய காலத்தை தான் நான் கூறுகிறேன்..
பிடித்த முன்னணி கதாநாயகிகளாக சிம்ரன் மற்றும் தேவயானி
பாடி ஆடி,குடுக்கப்பட்ட காசுக்கு வில்லன் கலைத்தால் ஓடிக்கொண்டிருந்த
காலம்...

அந்த காலத்தில் விஜய் படமோ அஜித் படமோ,பாரபட்சமில்லாமல்
ஆவெண்டு பார்ப்போம்..
விஜய் என்று தனிய நான் விசிறியாக வெளிக்கிட்டது(ஹிஹி அஜித் படங்களும் பாக்கிறது தான்)..
ஒரு காலகட்டத்தில்...அதாவது விஜய் கில்லி திருப்பாச்சி சிவகாசி என்று மெகா ஹிட் படங்களை
வழங்கிய காலப்பகுதியில் தான் நான் விஜய் ரசிகனானேன்..

அதில் தவறொன்றும் இல்லையே??

அன்றிலிருந்து இன்று மட்டும் விஜய் ரசிகனாகவே இருக்கிறேன்...

விஜய் அரசியல் போவது பிடிக்காமல் தனிப்பதிவோன்று கூட போட்டிருந்தேன் இந்த வருட ஆரம்பத்தில்...
அந்தவகையில் நான் ஒரு கண்மூடித்தனமான ரசிகன் அல்ல...ஆனால் ரசிகன்..!!!

விஜய்யின் ஆரம்பகால படங்கள் எனக்கு பெரிதாக பரீட்சியம் இல்லை...என் நண்பர்களே நக்கலடித்திருக்கின்றனர்..
அஜித்தை பிடிக்காதென்றில்லை..அவரின் நடிப்பு,கொள்கைகள் பிடிக்கும்..
இனிமேல் அவர்களின் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல் இருந்தால் சந்தோசம்(நானும் உட்பட)

நாளை தனது பிறந்தநாளை கொண்டாடும் இளைய தளபதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

நேரமோ இந்த வாரம் எட்டாக்கனியாக இருக்கிறது...
என்றாலும் என்னால் முடிந்தளவுக்கு உங்கள் தளங்களுக்கு வருகிறேன்..
என்றாவது வர முடியாமல் வராதிருப்பின்,
மன்னிக்க..

Post Comment

Monday, June 20, 2011

பீட்டர் பசங்க என்ன பண்ணுவாங்க??


மனிதர்கள் பலவிதம்..அதில் ஒரு விதம் தான் இந்த பீட்டர் பசங்க..
நீங்கள் கூட ஒருவராக இருக்கக்கூடும் இந்த வகையறாவில்..
நாம தமிழர் தானே?
ஆங்கிலம் என்பது இன்றைய வாழ்வில் இன்றியமையாதது தான்..வேற்று மொழி நபர்களுடன் உரையாடும் போது கட்டாயமானது.
ஆங்கிலத்தின் பயன்கள் பற்றி நான் இங்கு அறிக்கை வாசிக்க வரவில்லை..
ஆனா நம்ம பயலுக கொஞ்சப் பேர் பண்ணுற அலப்பரைகள் தான் தாங்க முடியல பாஸ்..

ஒத்துக்கலாம் அவங்களுக்கு நம்மள விட கொஞ்சம் இங்கிலீசு கூட தெரியும்னு.அதுக்காக இப்பிடியா?
நம்ம ப்ரெண்டு ஒருத்தன் இல்ல இல்ல ரெண்டு பேர் இருக்கானுக,அவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?

1 )நம்ம கூட தமிழ் படம் பாக்க வரமாட்டானுகள்..எங்கயாச்சும் இங்கிலீசு படமெண்டா அது சப்ப படமெண்டாலும் பார்க்க போவானுகள்.அவனுக தமிழ் படம் பாக்கிறத நாம பாத்தா அவங்கட மீட்டர் எதோ கொறஞ்சிடுமாங்க!

2 )சாப்பிட போற எண்டா ஏதாச்சும் இங்கிலீசு பெயர் வைச்ச ஹோட்டலுக்கு தான் போவானுகள்.ஹோட்டல் எண்டு தமிழில பெயர் போட்டிருந்தா கூட அதுக்கு தடா தான்!நாம கையேந்தி பவன் எண்டாலும் பிரிச்சு மேய்வம்..அவங்கள் பக்கத்தில நிண்டு இந்தா மச்சான் ஒரு வடை சாப்பிடு எண்டா அவங்க பண்ற ரவுசு இருக்கே..எதோ எலிசபெத் பரம்பரை மாதிரி!இந்தாடா வாழைப்பழம் எண்டா வாங்கமாட்டானுகள்..பனானா எண்டா உரிச்சு வைக்க போடுவாங்கள் ரெண்டு பேரும்!

3 )ரோட்'ல சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா ஏதாச்சும் நல்ல பிகர் வந்தா நாம சட்டப்படி பிகர்டா எண்டுவம்..அவங்க ரெண்டு பெரும் தங்களுக்க "nice structure no" அப்பிடி எண்டுவாங்கப்பா..

4 )நாம எலாம் வாங்கடா கிரிக்கட் விளையாடுவம்ன்னு சொன்னா வரமாட்டானுகள்..நம்மள விட்டிட்டு போயி பிலியட்ஸ் விளையாடுவாங்க பாருங்க..
இவனுகள என்னேங்குறது?



5 )எவனோடயாச்சும் சண்டை எண்டா நம்மட வாயில என்னங்க வரும் உடன?இவங்க என்ன பண்ணுவாங்க தெரியுமா?
"he is very stupid no..mother ******" அப்பிடி எண்டு திட்டுவாங்க பாருங்க...


6)நம்மள மாதிரி சண் டி.வி விஜய் டி.வி எல்லாம் பாக்கமாட்டாங்கப்பா..ஸ்டார் டி.வி,V டிவி தான் பாப்பானுகள்..பாத்திட்டு சும்மா இருந்தா பரவாயில்லைங்க,நம்மள வைச்சுக்கொண்டு அதில நடந்த சீனுகள் பத்தி கதைப்பாங்க பாருங்க..ஜேம்ஸ் கமரூன் கூட இந்தளவுக்கு அலசி இருக்கமாட்டார் பாருங்க!


7)எங்காச்சும் போகேக்க யாராச்சும் ரிசப்சனிஸ்ட் பிகருகள்கிட்ட நம்மள தள்ளி விட்டிட்டு போய் மொக்க போடுவாங்க இங்கிலீசில..இவங்களையெல்லாம் ஏன்டா கூட்டிட்டு வந்தோம்னு இருக்கும்..இப்பிடித்தான் சொந்த செலவில அடிக்கடி சூனியம் வைச்சுக்குவம் நாம!


8)நம்மள மாதிரி லோக்கல் கடையில எல்லாம் போயி ஷர்ட் பான்ட் வாங்க மாட்டாங்க..ஏதாச்சும் இன்டர்நசனல் கடை அதுவும் a /c போட்டு இங்கிலீசில பெயர் போட்டிருந்தா மட்டும் தான் உள்ள காலை விடுவாங்க!

9)அதில ஒருத்தன் ஒரு பத்து மாசம் தான் யு.கே'ல இருந்திட்டு வந்தவன்..போகேக்க நம்மள மாதிரி தானுங்க போனவன்..
போயிட்டு வந்ததில இருந்து அவன் படுத்துவான் பாருங்க...ஒரே ஒரு வார்த்தைய வைச்சு சந்து போந்து இஞ்சு இடுக்கெல்லாம் யூஸ் பண்ணுவன்..
அது என்னெண்டு பாக்குறீங்களா?
"How come?"
இப்பிடி தான் "How horrible" எண்டு சொல்ல போயி "How horable" எண்டு சிலிப் ஆகிட்டான் பயபுள்ள..விடுவாங்களா நம்ம பசங்க?
இப்ப அவரிண்ட செல்ல பெட் நேம் "ஹொவ் ஹோரபில்" தானுங்க!!

10)அதாச்சும் பரவாயில்லைங்க,பேஸ் புக்கில தமிழில ஸ்டேடஸ் போட்டா கமெண்டு பண்ணமாட்டாங்க..லைக் பண்ண மாட்டாங்க..
இங்கிலீசில A...B...C....D.....அப்பிடீன்னு போட்டாலே குஷி ஆகிடுவாங்கப்பா..

பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களையும் போய் சேர ஓட்டுப் போடுங்கள்.கருத்துகளை பின்னூட்டத்தில் கூறிச்செல்லுங்கள்..

ஆக்சுவலி இதொரு மீள் பதிவாக்கும்...அந்த இரண்டு நண்பர்களும் மன்னிச்சு..

Post Comment

Sunday, June 19, 2011

சண்டே போட்டோ காமெடி(++1)

ஹாய் மக்களே எப்பிடி சுகம்??இன்னிக்கும் வேலை இருக்கா?
உங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்...

உங்க பையனும் இப்பிடியா???

Cartoon Jokes Scraps and Graphics
பொண்ணுங்க வண்டி பார்க் பண்றதே இப்பிடித்தான் ..ஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
பாவம் அவங்க என்ன பண்ணுவாங்க!


Cartoon Jokes Scraps and Graphics
எனக்கு புரியல
(25 +)


Cartoon Jokes Scraps and Graphics
பாட்டிக்கு குசும்பு போகல பாருங்க இந்த வயசிலையும்!!
தாத்தா பாவம்:(
Cartoon Jokes Scraps and Graphics
இது நம்ம ஊராத்தான் இருக்கும்!!
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹிஹி

Cartoon Jokes Scraps and Graphics
புருஷன் பரவால...எக்ஸ்ட்ராவா ஒன்னு தான்...ஆத்துக்காரி...அவ்வ்வ்வ்
கட்டில் ஸ்ட்ராங்கு..பேஸ்மென்ட்டு கொஞ்சம் வீக்கு!!


Cartoon Jokes Scraps and Graphics
இது தான் தனக்கு தானே ஆப்பு வைக்கிறது எண்டுறதா??

Cartoon Jokes Scraps and Graphics

அடச்சீ கிறிஸ்மஸ் பாப்பா நீங்களா??
Cartoon Jokes Scraps and Graphics
ஹிஹி சிக்கின் சிக்கின்....

சண்டே கலாட்டா ஓவர்....Enjoy the day!!!
See you all in next weak!!

Post Comment

Saturday, June 18, 2011

வன்கூவர் நகரை பிரபல்யப்படுத்திய முத்தம்!!!

பேஸ்புக்,டுவிட்டார்,ப்ளாக் என்று பல ஐட்டங்கள் இருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அது பிரசித்தம் பெறுவதற்கு ஒரு சில மணி நேரமே போதுமானது!!!வீதியில் கட்டிப்புரண்டு முத்தத்தில் திளைத்த காதலர்களுக்கும் இதே கதி நடந்திருக்கிறது வன்கூவரில்!!

அவுச்திரேலியனான ஸ்காட் ஜான்ஸ் மற்றும் கனேடிய கல்லூரி மாணவி அலெக்ஸ் தாமஸ் ஆகியோரே இந்த முத்த சண்டையில் ஈடுபட்டு தற்பொழுது
உலகப்பிரசித்தி பெற்றிருக்கின்றனர்.அந்த கீழே காட்டப்பட்டுள்ள படம் எடுத்து முடியும் தறுவாயில் மாணவி அலெக்ஸ் தாமஸ் காயப்பட்டிருக்கிறார் முத்தத்தின் கோரத்தால் என்றால் பாருங்கள்!!
இன்று இவர்கள் டிவி,பத்திரிகைகள்,பேஸ்புக்,டுவிட்டர்,ப்ளாக் என்று பேமஸ் ஆகி இருக்கின்றனர்!!


The identity of Vancouver’s famous kissing couple is revealed


வன்கூவர்'இல் நடைபெற்ற ஸ்டான்லி கப் இறுதிப் போட்டியை பார்க்கவந்திருந்தனர் இவர்கள் இருவரும் தனித்தனியாக..
அந்த போட்டி முடிந்தவுடன் வீதியில் சந்தித்துக்கொண்ட இருவரும் இந்த முத்த விளையாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர்!!

இவர்கள் யார் என முதலில் அடையாளம் கண்டது ச்கொட்டின் சகோதரி தான்..அப்புறம் ச்கொட்டின் தந்தையார் தனது பேஸ்புக்கில் இந்த போட்டோவை இணைத்து ஸ்டேடஸ் போட்டிருக்கிறார் "காதல் செய்யுங்கள் ,யுத்தம் செய்யாதீர்கள் என்று!!!


This is my Son hows that for making love not war!
  • 10 people like this.
    • Nash d'Peng Yu To all Leaders all around the world please take note that LOVE is very important than WAR...
      about an hour ago
    • Nelly Berger Yes make love, not war haha
      24 minutes ago


"But despite some of our initial assumptions, the kiss seen 'round the world wasn't the product of a riot-fueled, uncontrollable passion. Brett Jones instead notes that Thomas was injured and his son was coming to her aid"

அவர்களது குடும்பத்தினர் அதனை ஒரு சாதாரணமான செய்தியாகவே கருதி இருக்கின்றனர்..அத்துடன் தந்தையார் பல்வேறு ஊடகங்களுக்கு இதைப்பற்றி பெருமையாக கருத்து கூறி வருகிறார்...
அவர் பேஸ்புக்கில் போட்டுள்ள ஸ்டேடசுகளை பார்த்தாலே புரியும்..


For those asking if I am proud of Scott absolutely that he can bring love to a situation like that and help turn a negative news story to a very positive one. Maybe we need the media to always look for the positive as it shows that good news does sell.
about an hour ago
  • 14 people like this.
    • Brian Goodwin ur familly has such a wonderful positive outlook
      about an hour ago
    • Janette Nicholson i just saw it...brought a tear to my eye, such a neat pic too!! :)
      about an hour ago
    • Troy Namath The photo is absolutely brilliant.
      54 minutes ago
    • Daniel Imer Its a great picture.
      54 minutes ago
    • Ana Del Pozo Cusic that's right! turning a negative news story to a very positive one, is the way it is going... so thanks to your son to start this
      47 minutes ago
    • Andrew Bliss Cain This is what we need in the World today,positive people doing positive things.The most intriguing thing is that it was spontaneous,not planned,way to go.Good story!!!
      37 minutes ago


இது தாங்க இறுதி பஞ்ச்!!!
Hi Everyone thanks for all the friends requests, messages from everyone who has sent good wishes. We really appreciate your support and that you love the spirit of the photo. "Love amoungst the Chaos". Its so true that Love can shine anywhere. Check out the page "Lets make a Difference" as well and "like" it.

இவர்கள் தான் அந்த இருவரும்!!!!
Scott Jones and Alexandra Thomas share a laugh in Vancouver on Friday.

ஜோன்ஸ் இயற்கையாகவே ஒரு ஜாலியான காமெடியான பையன் எனவும்,இப்போது அவர் காமெடியுடன் கலந்த காதலை
"passion ' ஆக கலந்து தந்திருக்கிறார் என்று அவரது தந்தை பெருமையாக கூறுகிறார்!!

“Relationships do buckle under that pressure unless you have the ability to be very centred. Even if it wasn’t Scott, the guy who took the picture captured a moment in time that is iconic.”

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...