Sunday, November 25, 2012

நயிட்டியில் அலையும் மாதவிகள்..! |16+|




நேரம் மாலை ஆறு முப்பது.


இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் முன்னாடி அமர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது.இன்றும் ஒரு அரைமணி நேரம் நின்று பார்த்துவிடுவது என்ற எண்ணத்துடன் இடுப்பழவே உயரமான பால்கனி  சுவற்றின்மீது சாய்ந்துகொண்டு அவனின் அறையினை அடிக்கடி நோட்டம்விட்டுக்கொண்டு இருந்தாள் மாதவி.

இன்று நேற்றல்ல,அவன் அந்த வீட்டுக்கு குடிவந்த காலத்திலிருந்து தினசரி காலை மாலை என்றும் பார்க்காமல் அவன் அறை கதவு திறந்திருக்கும் பொழுதெல்லாம் மாதவி,பால்கனியில் உலவ மறப்பதில்லை! "அவன்"தான்; "பெயர் எல்லாம் தெரிந்துகொண்டு தான் சைட் அடிக்க வேண்டும் என்று சட்டம் மட்டும் இருந்தால் உலகத்தில 95 வீதமானோர் பாடு ரொம்பவே கஷ்டமாயிடும்" என்று ஜோசித்துக்கொண்டாள்.

ஒரு அரை மணிநேரம் மீனுக்காய் காத்திருக்கும் கொக்கு மாதிரி பால்கனியில் நின்றால்,மீன் ஓரிரு தடவையாச்சும் வெளியே வந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்லும் என்பது மாதவியின் காத்திருப்பு கற்றுக்கொடுத்த பாடம்.நயிட்டியில் இருக்கும் பெண்கள் மீது ஆண்களுக்கு ஒரு கிரேஸ் இருப்பது மாதவி பலர் கண்களை அவதானித்ததில் இருந்து கற்றுக்கொண்ட இன்னொரு பாடம்.கற்றுக்கொண்ட பாடங்களை எல்லாம் ஒன்றுசேர பிரயோகிப்பதில் மாதவி படு கில்லாடி.

எத்தனை வேலைகள் இருந்தாலும், தினசரி கடமைகளில் இதுவும் ஒன்றாகிப்போனது;காரணங்கள் என்ன என்பது பற்றி இவள் பெரிதாக அலட்டிக்கொள்ளவுமில்லை.அவனை பார்க்காத நாள் ஏனோ அவளுக்கு முழுமையடைவதில்லை.அவளது நண்பிகளில் பலர் தாங்களும் இந்தமாதிரி அடிக்கடி இப்போது நடந்துகொள்வதாக சொல்வதை கேட்கையில்,இதுவொரு பொதுவான விஷயம் தான்;தப்பில்லை என்கின்ற தைரியம் மாதிவிக்கு ஒரு மேலதிக தூண்டுதலை கொடுத்திருந்தது.அளவான மாவு நிறமும்,நயிட்டி தவிர்ந்த எந்த ஆடையாய் இருந்தாலும் திமிறி நிற்கும் அவள் அழகுகளும் நயிட்டியோடு கூட்டணி அமைத்து பால்கனி சுவரில் மெதுவாய் சாய்ந்து நிற்கையில்,வீதியால் செல்லும் எந்த ஆணும் திரும்பிப்பார்க்காமல் சென்றதில்லை.

பால்கனியில் நிற்கையில் வீட்டு ஹாலில் இருந்த மஞ்சள் வெளிச்சம் நயிட்டியில் இருந்த மாதவியின் அழகை வர்ணித்து காட்டியதோ என்னமோ,அவளை காத்திருக்க வைக்க பிடிக்காமல் காயப்போட்டிருந்த துணிகளை எடுப்பது போல வெளியில் வந்தான் அவன்.இலவசமாய் கிடைக்கும் கில்மாவை எந்த இளைஞன் தான் வேண்டாமென்பான்!என்னதான் இவள் வலிந்து போய் பால்கனியில் நின்றாலும்,"அவன்"வெளியில் வந்ததை உடனேயே கண்ணெடுத்து பார்க்க திராணியற்று தன்பார்வையை கீழே வீட்டு படலைபக்கம் திருப்பிய மாதவி,என்ன ஜோசித்தாளோ  என்னமோ கண்ணிமைக்கும் நொடியில் உள்ளே சென்றுவிட்டாள். 

ஒன்றுமே புரியாமல்,என்னவாய் இருக்குமென்று ஜோசித்துக்கொண்டு அவன் சாவகாசமாய் கீழே பார்க்கவும்,வேலைமுடிந்து வந்த அவளின் கணவன் படலையை திறக்கவும் சரியாகவிருந்தது..!மாதவி ஹாலில்,குழந்தைக்கு இரவு உணவை அவசரமாய் குழைத்து வாயில் தள்ளுவது மெதுவாக சாத்தப்பட்ட கதவிடுக்கில் தெரிந்து மறைந்தது.

-{யாவும் கற்பனை} 


Post Comment

Sunday, November 18, 2012

துப்பாக்கி-இரண்டாவது ஆட்டம்..!


விஜய் டிவியில் முருகதாஸ் மற்றும் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முருகதாஸ் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார்.அது என்னான்னா,துப்பாக்கி பண்ணும்போது தனக்கு  சொல்லிக்கிட்டே விடயம்,என்னோட டார்கெட் ரிப்பீட் ஆடியன்ஸ் தான்; தியேட்டருக்கு ஐந்து தடவை வந்து  சலிக்காத மாதிரி படம் இருக்கணும் அப்பிடின்னு சொன்னார்.ஐந்து தடவை என்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட,படத்தை பலர் இரண்டு தடவை பார்த்திருக்கிறார்கள்.போடா போடி என்கின்ற இன்னொரு தீபாவளி ஆப்சன் இருந்தும் கூட துப்பாக்கியை இரண்டாவது தடவை பார்க்க தூண்டியது முருகதாசின் வெற்றி தான்.



எனது துப்பாக்கி விமர்சனத்தில்,எனக்கு படம் பிடித்திருந்தாலும்,"ஆகா ஓகோ" அளவுக்கு பிடித்திருக்கவில்லை என்று கூறியிருந்தேன்."அதிகமான எதிர்பார்ப்புகள்" இருந்தால் சிலசமயங்களில் இப்படி நடப்பது வழக்கம் என்றும் "மீண்டும் ஒருதடவை படத்தை பாருங்க,எனக்கும் "சிவாஜி" படம் முதல்தடவை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது,ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கையில் பிடித்த படங்களில் ஒன்றானது" என்று பிரபல பதிவர் "எப்பூடி ஜீவா"ண்ணா சொல்லியிருந்தார்.வேலை நிமித்தமாக யாழ் சென்றிருந்த சமயம் கிடைத்த சிறிது நேரத்தை "துப்பாக்கியுடனான எனது இரண்டாம் ஷோ"வுடன் செலவிடலாம் என்று நண்பனுடன் களத்தில் குதித்திருந்தேன்.

 ஏலவே படம் வெளிவந்த இரவு தலைநகரில் "துப்பாக்கியுடனான எனது முதலாம் ஷோ" முடிந்திருந்தது.ஆனால் நான் யாழில் பார்க்க சென்றது படம் வெளிவந்து நான்காம் நாள்.என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்.கொழும்பில் இல்லாத அளவுக்கு பெரியளவிலான துப்பாக்கி கடவுட்டுகள் "செல்லா திரையரங்கை " பிரம்மாண்டப்படுத்திக்கொண்டிருந்தன.அது போதாதென்று  ரசிகர் பட்டாளம்..!நான்காம் நாள் மதிய நேர காட்சிக்கு தியேட்டர் நிறைந்து,மேலதிக கதிரைகள் பக்கம் பக்கமாக போடப்பட்டு தான் காட்சி ஆரம்பித்தது.தியேட்டர் கதவு மூடும்போது அவர்கள் ஆர்ப்பரித்த சத்தத்தை வைத்தே ஒரு வெறித்தனமான ரசிகர்பட்டாளத்துடன் தான் படம்பார்க்கின்றேன் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்..!

||இந்த காட்சி தான் படத்தில் மிக பிடித்தது..அப்படியே பாட்ஷாவில் பிள்ளையார் சிலைக்கு பின்னாடி இருக்கும் குண்டை கண்டுபிடிக்க ரஜனி கிளம்பி வரும் காட்சி மனசில் வந்து சென்றது.||

இவர்கள் மத்தியில் இருந்து முதலாவது ஷோ பார்த்திருந்தால் எனது விமர்சனம் "துப்பாக்கி-சூப்பர் டூப்பர் ஹிட்"என்கின்ற தலைப்போடு தான் வந்திருக்கும்.காரணம் கொழும்பில் முதல் ஷோ பார்கின்ற போது கூட இந்தளவு ஆக்ரோஷ்யமான ரசிகர்களை காணமுடிந்திருக்கவில்லை.படம் செல்ல செல்ல,வில்லன் வரும்போது கூட எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.சரி என்னதான் இருந்தும் கூட "துப்பாக்கி"மீதான எனது அபிப்பிராயத்தில் ஒன்றும் பெரிதளவான மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.முதல் தடவை பார்த்துவிட்டு 63 மார்க் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.இம்முறை சற்று அதிகமாக ஒரு 69-70 மார்க் கொடுக்கலாம்னு மனசு சொல்லுது.

துப்பாக்கி ஒரு ஹாலிவூட் படமாக இருந்திருந்தால்,இந்த பொண்ணு பார்க்கும் படலம் இருந்திருக்காமல்,ஹீரோ ஆக்சனில் இறங்கும்போது துணைக்கு ஹீரோயின் வருவதாகவும்,கிளைமாக்ஸ்க்கு அருகாமையில் இருவரும் புரிந்துணர்வோடு சேர்வதாகவும் காட்சிகள் அமைந்து,அதன்பின்னர் சாதாரண ஆக்சன் படமாக இருந்தால் ஒரு முத்தத்துடனும்,செம ஆக்சன் படமாக இருந்தால் ஒரு கட்டில் சண்டையுடனும் மேட்டரை முடித்திருப்பார்கள்.தமிழில் துப்பாக்கி வெளிவந்ததால் தேவையில்லாத "இழுவை"காதல் காட்சிகளும் சோர்ந்துபோன சில பாடல்களும் ஒன்றுசேர்ந்து படத்தின் வேகத்தையும் சுவாரசியத்தையும் கெடுத்துவிட்டிருக்கிறது.

"குட்டி புலி கூட்டம்" பாடலும் "கூகிள் கூகிள்"பாடலும் தான் கேட்கவும்,பார்க்கவும் நன்றாக வந்திருக்கின்றது."நிஷா நிஷா" பாடலை நல்ல டூயட்டாக எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது.வழமையான ஹாரிஸ் டச் மாற்றானை தொடர்ந்து துப்பாக்கியிலும் மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும்.ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகணும்னா அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தி வந்திருக்கவேண்டும்.வழமையாக படங்களுக்கு தனது பாடல்களால் ஒரு எக்ஸ்ட்ரா வால்யூ கொடுக்கின்ற ஹாரிஸ்,இம்முறை மாற்றான்,துப்பாக்கி என்று இரு பெரிய படங்கள் ஒரு சமயத்தில் கையில் வந்துவிட ஒரு படத்துக்கு கொடுக்கும் இசையை இரண்டு படங்களுக்கு பகிர்ந்து வழங்கியிருப்பது போல்தான் தோன்றுகிறது. மாற்றானுக்கும் "நாணி கோணி" பாடல் மட்டும் தான் ஹிட் ஆனது;இதுவும் மாற்றான் அவரேஜ் படமாக மாறியிருந்ததற்க்கு ஒரு காரணம்.

 சற்றே இழுபடும் காதல் காட்சிகளும்,பாடல்களும்,அங்காங்கே சில லாஜிக் பிழைகளும் தான் துப்பாக்கியில் சொல்லக்கூடிய எதிர்மறை விமர்சனங்கள்.அதையும் தாண்டி கேரளாவில் ரெக்கோர்ட் கலெக்சன்,தமிழ்நாட்டில் பில்லா,மாற்றானை பின்தள்ளி ஒப்பினிங் கலெக்சன் ரெக்கோர்ட் என்று மீண்டும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி,ஒப்பினிங் கிங் என்று முருகதாஸ் தயவோடு நிரூபித்திருக்கிறார் இளையதளபதி விஜய்.ரஜனி கூட படத்தை இருதடவைகள் பாத்திருப்பதாக முருகதாசிடம் கூறியிருக்கிறார்.கவுதம் மேனனின் படம் கைவிடப்பட்டது விஜய்க்கு ஒரு இழப்பு.இல்லாவிட்டால் அதுவும் ஒரு சூப்பர் ஹிட் என்று இப்போதே கூறியிருக்கலாம்.நடிப்புக்கு தீனி கொடுத்திருப்பார்.அண்டர்ப்ளே பண்ணும் போது தான் விஜய்க்கு நடிப்பு வருமோ என்னமோ. 

விஜய் விமர்சகர்களாலும் விமர்சனங்களாலும் கழுத்துவரை நெரிக்கப்படும் போது,தனக்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று காட்டிக்கொண்டவர்கள் பலரும் இப்போது "விஜய் எப்போதுமே என் பேவரிட்" என்ற ரீதியில் கருத்துக்கூற தலைப்பட்டுவிட்டனர்.வெற்றிகளோடு கூட இருப்பது போல தோல்விகளின் போதும் நான் இவர் ரசிகனே என்று உரக்க சொல்பவன் தான் உண்மையான ரசிகன்.அத்தகைய காலங்களில் விமர்சனங்களுக்கு அஞ்சி ஒழிந்திருந்துவிட்டு படங்கள் வெற்றிபெறும் காலங்களில் மட்டும் வெளியே தலைகாட்டுவது ரசிகனுக்கு அழகல்ல.நல்லது,விஜய் தொடர்ச்சியாக நான்கு ஹிட் கொடுத்திருப்பதால் அடுத்து சில வரிசையான ப்ளாப்  படங்களை எதிர்பார்க்கலாம். அப்போது ஓடி ஒளிந்துவிடமாட்டீர்கள் தானே..?

டிசம்பரில் "கும்கி","நீதானே என் பொன்வசந்தம்" வெளிவரலாம்.விஸ்பரூபம் அடுத்த வருடம் தான்.பெரும்பாலும் பொங்கலுக்காவது கமல் ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதனால் துப்பாக்கி தொடர்ந்து சிலகாலம் தியேட்டர்களில் ஓடப்போகிறது. மறுபக்கத்தில் "போடாபோடி" பெரிதாக மக்களை கவரவில்லை.இந்த வருடத்தில் "நண்பன்","வேட்டை","காதலில் சொதப்புவது எப்படி","ஒருகல் ஒருகண்ணாடி", "கலகலப்பு","பிட்சா" போன்ற பத்துக்கும் குறைவான படங்களே வசூல்ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.இதில் "ஓகே ஓகே"யை தாண்டி துப்பாக்கி "ஆண்டின் மிகச்சிறந்த படம்"ஆக தெரிவுசெய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்ற அதேசமயம்,இவ்வருடத்தில் சூர்யா,அஜித் போன்றோர் ஒரே ஒருபடத்தை மட்டுமே ரிலீஸ் செய்திருக்கும் போது,விஜய்  நண்பன்,துப்பாக்கி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பது கடந்த நான்குவருட கசப்பான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது தற்காலிகமாய்.! 


--------------------------------------------------------------

கமலின் விஸ்பரூபத்தில் கூட ஸ்லீப்பர் செல்ஸ் பற்றிய காட்சிகள்,துப்பாக்கியை ஒத்த காட்சிகள் வருவதால் என்னசெய்வது என்று கமல் குழம்பிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.எப்படியோ விஸ்பரூபம் கமலுக்கு "ஆளவந்தான்"வசூல் ரீதியாக தந்த அடியை மீண்டும் தரப்போகிறது என்று ஏலவே எதிர்பார்த்திருக்கிறேன்.என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அத்துடன் துப்பாக்கிக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பால் பிரச்சனை ஆகியிருக்கிறது. விஸ்பரூபத்தையும் இது கட்டாயம் பாதிக்கத்தான் போகிறது.

               அடுத்ததாக அஜித்துடன் முருகதாஸ் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தென்படுகின்றன."தீனா" போன்று அஜித்க்கு அடுத்த மைல்கல்லாக அப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.இந்த சமயத்தில முருகதாஸ்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்."அஜித் விஜய்னு இரண்டு பேரையும் வைச்சு படம் பண்ணி இருக்கீங்க,ஒரு டைரக்டரா இரண்டு போரையும் எப்படி பார்க்கிறீங்க?".இது தான் கேள்வி.அதற்க்கு முருகதாஸ் சொல்லியிருக்கும் பதில்:

"இப்பகூட என்னை பாலிவூட்ல பார்த்தா "என்னது...நீங்க டைரக்டரா?"னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க.இப்பவே இப்பிடின்னா பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன்..ஆனா,அப்பவே என்ன நம்பி "தீனா"வாய்ப்பு கொடுத்தவர் அஜித்.அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு.ஆனா நான் வளர்ந்து இந்திப்படம் வரைக்கும் இயக்கிய பிறகு,இப்போ ஏழாவதாகப் பண்ணிய படம் தான் துப்பாக்கி.விஜய் இப்போ என் நண்பர்.அவர் யார்கிட்டயும் சினிமாவை தாண்டி எதுவும் பேசமாட்டார்னு சொல்வாங்க.ஆனா அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச் ஆகிட்டோம்.இப்பவும் அஜித் விசை ரெண்டு பேரையும் சந்திச்சிட்டு தான் இருக்கேன்.எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டல் அடிச்சிக்கிறாங்க.ஆனால் அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் இன்னொருத்தர பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை.ஒருத்தரை பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையா பேசிப்பாங்க.இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல நட்பு இருக்கு.அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்"  

ரஜனியை விடுத்து பார்த்தால்,ஒப்பினிங் கலெக்சன் போட்டி அஜித் விஜய் இருவருக்கும் மாறி மாறி நடந்து வருவது வழக்கமாகி இருக்கிறது.ஒருவர் படம் ஹிட் ஆகையில் அடுத்தவரை இவர் ஓவர்டேக் செய்கிறார்.அடுத்த தடவை அடுத்தவர் ஓவர்டேக் செய்கிறார்.இது நிலையாக ஒருவரிடம் இருக்கப்போவதில்லை.மாறிக்கொண்டே இருக்கப்போகிறது.அதற்காக ஒவ்வொரு படம் வரும்போதும் அடிச்சிக்கனுமா தல!தல தளபதி ரசிகர்கள் தனியே உக்கார்ந்து,ஏன் வேணும்னா கும்பலா கூட உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிக்கவேண்டிய விடயமிது.வேண்டுமென்றால் தலையின் அடுத்த படத்துக்கு நாங்களே திரண்டு வருகிறோம் முதல் காட்சிக்கு.நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்..

                      

விஜய்யோட வில்லங்கம் அந்த எஸ் எ சந்திரசேகரை போட்டு தள்ளிடுங்கப்பா......!!! ஏற்கனவே காவலன் வெளியீட்டில் தகராறு ஆகியதற்கு இவர் தான் முக்கிய காரணம்.முருகதாஸ் துப்பாக்கி தொடங்கும் போது கூட தொல்லை கொடுத்தவர்.துப்பாக்கியில் தேவையில்லாத காட்சிகளை நீக்குவதோடு நிறுத்தி இருக்கலாம்.இப்போது விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக வேறு நடிப்பார்னு அறிக்கை விட்டிருக்கான் இந்த பய.(எங்க அரசியலுக்கு வரும்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மிஸ் ஆகிடுமேங்கிற பயம் தான்.)வழமையாகவே விஜய்யிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து படத்தை கெடுக்கும் இந்த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ...! ஐ ஆம் வெயிட்டிங்..!

Post Comment

Tuesday, November 13, 2012

துப்பாக்கி-எப்படி நிலவரம்?




Thuppaki Movie Latest HD Stills, New Posters and Wallpapers - Image 10 of 23

முருகதாஸ் கூட விஜய்  இணைந்து பணியாற்றிய முதல் படம் என்பதுவே துப்பாக்கி படத்துக்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்து எகிறவிட்டிருந்தது.கூடவே ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று தெரிந்தபோது எதிர்பார்ப்பு இன்னமும் கூடியது..காஜல் நாயகி என்றவுடன் கிளுகிளுப்பும் கூடவே சேர்ந்துகொண்டது.மாற்றானுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,ஆரம்பத்தில் எஸ் எ சி-முருகதாஸ் பிரச்சனையால் தடுமாறி,பின்னர் "கள்ளத்துப்பாக்கி" பிரச்சனையால் இழுபட்டு இழுபட்டு,இறுதியாக "U " செர்டிபிகேட் தகுதி பெற்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கின்ற துப்பாக்கி வெடித்திருக்கிறதா இல்லை புகை மட்டும் தள்ளியிருக்கிறதா என்று பார்க்கலாம்..

ஒரு சாதாரண கதையை வித்தியாசமாக கையாண்டு "ஆக்சன் திரில்லர்" என்னும் வகையறாவுக்குள் துப்பாக்கியை கொடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்.இந்தியன் ஆர்மியில் இருக்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கையில் அங்கு இடம்பெறும் குண்டுவெடிப்புகளால் ஈர்க்கப்பட்டு வாலேன்டியராக அதற்குள் தலையை போட்டு தீவிரவாத கும்பலின் தலையை எவ்வாறு தீர்த்துக்கட்டுகிறார் என்பதே படத்தின் கதை.ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்.


வழமையான விஜய்யின் மசாலா பட வகையறாவுக்குள் இது இல்லை என்பதால் சில அடிமட்ட விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்க கூடும்.நகைச்சுவை என்று அதற்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் கூட போலீசாக வரும் சத்தியன் சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்,மறுபக்கம் விஜய் யின் சீனியர் ஆபீசராக வரும் ஜெயராம்,தான் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் வயிற்றை புண்ணாக்குகிறார்.அது போக விஜய்யின் வழமையான குறும்புகளும் படத்தில் உண்டு.

கட்டடம் விட்டு கட்டடம் தாவும் சண்டைக்காட்சிகளாக அல்லாமல் துப்பாக்கியில் சண்டை காட்சிகள் அனைத்தும் சூப்பர் ரகம்.படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் ட்விஸ்ட்கள் நாங்கள் எதிர்பாராத நேரங்களில் வருகிறது.பின்னணி இசை கலக்கல்.எழுத்தோட்டத்திலும்,வில்லனுக்கான காட்சிகளிலுயும்,திடீர் திருப்பங்களிலும் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது. 


ஏலவே படத்தின் ஆடியோ வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தன.நீதானே என் பொன்வசந்தம் ஆல்பம் மற்றும் போடா போடி ஆல்பம் போன்றவற்றை பின்தள்ளி ரேட்டிங்கில் முதலிடத்தில் துப்பாக்கி ஆடியோ அல்பம் இருந்துகொண்டிருக்க,"கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன்" பாடல் அனைவரது வாயிலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.மாற்றானில் தனது திறமையில் சற்றே சறுக்கி இருந்த ஹாரிஸ் துப்பாக்கியில் அந்த தப்பை செய்திருக்கவில்லை என்று நினைத்தேன்.பாடல்கள் நன்றாக இருந்தாலும் பாடல்களின் காட்சியமைப்பில் முருகதாஸ் சொதப்பியிருக்கிறார் என்று கூறலாம். பாடல்களின் வெற்றிக்கு இணையாக விசுவல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை..




வில்லன் படத்துக்கு ஒரு ப்ளஸ்.ஹீரோ போன்ற உடல்வாகுடன் பயமூட்டும் பின்னணி இசையில் வரும் வில்லன் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் கலக்கல்.காஜல் அறிமுக காட்சியில் சேலையில் வருகிறார்..கொள்ளை.!!!ஆனால் அதற்க்கு பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் ஏனோ பெரிதாக பிடிக்கவில்லை.காஜலுக்கான ஆடை செலேக்சன் சுத்த வேஸ்ட்டு.கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறார்.படத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை காட்சிகள் சற்று அதிகம்.ஒன்று இரண்டு வசனங்களில் கூட..!

"ஸ்லிப்பர் செல்ஸ்" எனப்படும்,நாட்டில் சாதாரண குடிமகனாய் இருந்து உயர்மட்ட கட்டளை கிடைத்தவுடன் அதனை செயல்படுத்த உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பவர்கள் தான் படத்தில் முக்கிய இடம்பெறுகிறார்கள்.மும்பை குண்டுத்தாக்குதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான்.விஜய் உட்பட பன்னிரண்டு பேர் வில்லனின் குழுவினரை பின்தொடர்ந்து தாக்கும் காட்சி க்ளாஸ்.அதை போன்றது தான் தன் தங்கையை பணயம் வைத்து தனது நாயின் உதவியுடன் தீவிரவாதிகளின் இடத்தை கண்டுபிடித்து ரணகளம் பண்ணும் காட்சி கூட!

ஏழாம் அறிவில் தமிழர் பெருமை பேசிய முருகதாஸ் துப்பாக்கியில் "இந்தியன்"என்கின்ற நாமத்தை கையில் எடுத்திருப்பது தெரிகிறது.படம் சற்றே நீண்ட மாதிரி தோன்றினாலும் இரண்டரை மணி நேர படம் தான்.கொஞ்சம் மெதுவாக நகர்கிறது துப்பாக்கி,அதனாலோ என்னமோ படம் கொஞ்சம் நீளமாக தோன்றலாம்.நல்ல கதையை வைத்து ஆக்சன் திரில்லர் என்று கூறி படைத்திருக்கும் துப்பாக்கியில் சற்றே வேகத்தை  இருக்கலாமோ என்று தோன்றியது. முருகதாஸ் இயக்கத்தினாலோ என்னமோ விஜய் இப்படத்தில் நடித்திருக்கிறார்!!பாடல்காட்சிகளில் வாயை திறந்து பாடுகிறார். 

படம் முடிந்து வெளியில் வந்தால் பலருக்கு படம் சூப்பரா சொதப்பலா என்று சொல்லத்தெரியாத நிலையிலேயே வீடு சென்றதை காண முடிந்தது.சிம்புவின் "போடா போடி" துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும், வேறு பெரிய படங்கள் இப்போது வராது என்ற அனுகூலத்தாலும் துப்பாக்கி ஓடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. துப்பாக்கி "ஹிட்"தான். ஆனால் அடுத்த கில்லி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்ததாலோ என்னமோ எனக்கு தோன்றியதை எழுதினேன்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றோர் பலருக்கு படம் நன்றாக பிடித்திருக்கிறது.பார்க்கலாம் என்ன ரிசல்ட் வரப்போகிறது என்பதை.
எனது மார்க் 63/100
ஒருதடவை பார்க்கலாம் கட்டாயமாக.

ரேட்டிங் ஒப்பீடு:     Behindwoods      Moviecrow
பில்லா 2                             2.0                      44%
தாண்டவம்                       2.5                       58%
மாற்றான்                          3.0                       65%
துப்பாக்கி                         3.5                       74%

இன்னமும் ஒரு எதிர்மறை விமர்சனம் வெளிவரவில்லை.விஜய்  ரசிகரல்லாதோர் கூட படம் பாருங்க என்று விமர்சனம் செய்யுமளவுக்கு கவர்ந்திருக்கிறது.இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

குறிப்பு:துப்பாக்கிக்கு தொடர்ந்து  நல்ல விமர்சனங்களே வந்தவண்ணமுள்ளன.எது எவ்வாறு இருந்தாலும்,இது என்மனதில் தோன்றிய விமர்சனம்.இரண்டாவது தடவை பார்க்கலாம்னு இருக்கிறேன்..!


Post Comment

Sunday, November 11, 2012

"திருத்தணி"-"பேரரசுக்குஆஸ்கார் நிச்சயம்.!"


                      
தியேட்டர்ல திருத்தணி படம் ஓடுது என்றாலும்,பேரரசுவின் கடைசி படமான "பழனி",விஜயகாந்தின் "விருதகிரி" பார்த்த அனுபவத்தில் வீட்டிலேயே டிவிடி வாங்கி பார்த்துவிடலாம் என்று முடிவு செய்திருந்தேன். விருதகிரி ஓசில பார்க்கப்போய் கூட,அரைவாசியில் எழும்பி ஓட முயற்சித்த காரணத்தால் வீட்டிலேயே இருந்து பார்க்கலாமென்ற முடிவு;எழும்பி ஓடிட முடியாது பாருங்க.

வாங்க,நேரடியாவே விமர்சனத்துக்கு(?!!) போயிரலாம் பாஸ்.படம் தொடங்கி முதல் பத்து பதினஞ்சு நிமிஷம் ஒப்பினிங் பைட் பாஸ்.ஏன் எதற்கு என்று கேட்கக்கூடாது.சிவகாசி "பல்லாக்கு பாண்டி" மாதிரி இதிலும் ஒரு பாண்டி;அண்ணன் செத்துபோயிட்டாரு கடைய மூடுங்கடா பஸ்ஸ கொளுத்துங்கடா ஸீன் தான்..அதை மீறினவன அடிக்க கை ஓங்கும்போது தான் ஹீரோ என்ரி என தெரியாததா என்ன.சாதாரணமா பேரரசு பட ஒபினிங்  பைட் லெந்தா இருக்கும்னு முன்னாடியே தெரிஞ்சதால  அந்த காப்'ல நான் போயி டின்னர் முடிச்சிட்டு வந்தேன்..பைட்டுக்கு  அப்புறம் என்ன வரும்னு சுனாமிக்கு பின்னாடி பிறந்த குழந்தைக்கே தெரிஞ்சது தானே.

"நீ வான வேடிக்கை வெடிடா
அந்த வானம் உனக்கு புடிடா.."னு "டா"ல முடியுற மாதிரி பேரரசுவின் அற்புத வரிகளில் ஒரு ஒபினிங் சாங்..பாட்டு முழுவதுமா வாழ்க்கைக்கான தத்துவங்கள் நிறைய பரவி கிடக்குது பாஸ்.பொறுக்கி எடுத்து வாழ்க்கையை நெறிப்படுத்தி கொண்டால் வாழ்க்கை "ஜோய் அலுக்காஸ்" தங்க நகை மாதிரி ஜொலியா ஜொலிக்கும்..!(தியேட்டர்ல படம் பார்க்க போனவன் இந்த கணத்திலேயே எழும்பி ஓடியிருந்தான்னா புத்திசாலி..ஓடாதவன் திறமைசாலி..பொறுமைசாலி..பலசாலி etc !)

                     
சிவகாசி'ல அசின் தன் "பாடிய" காட்டுற ஜிம் வரும்லே..அதே ஜிம்ல தான் சுனைனா ஹீரோயினா இன்ரோ ஆகிறாங்க.அசின் எப்பிடி தனக்கு தன்னைய மாதிரியே ஒரு "சிஸ்டர்"இருக்குன்னு விஜய் காதில பூ சுத்தினாங்களோ,அதே மாதிரி இதில சுனையா தன் அப்பா ஒரு போலீஸ் கமிசனர்,அம்மா கிரிமினல் கோர்ட் ஜட்ஜ்'னு பரத்துக்கு பெரிய பூவா சுத்துறாங்க...வழமையான பேரரசு முட்டாள் ஹீரோ மாதிரி பரத்தும் இத நம்பிடுறாரு..ஹீரோயின் தட்டுற தாளத்துக்கு எல்லாம் ஆடுறார்.

சிவகாசி சீன்கள் படத்தில் ஏகப்பட்டது வந்து தொலைத்தது.ஆரம்பத்தில் விஜய் வந்து பைட் பண்ணினார்...இல்லங்க விஜய் பைட் பண்றமாதிரி ஒரு ஜீவன் கனவுகண்டிச்சு. அப்போ தான் ராஜ்கிரண் வந்து சொல்லுவாரு.."எல்லா இடத்திலையும் விஜய் வருவாரு..ரஜனி வருவார்னு எதிர்பார்க்க முடியாது..நம்ம பிரச்சனைய நாம தான் பாத்துக்கணும்..!"அப்பிடின்னு(நோட் பண்ணிக்கோங்க பன்ச்  டயலாக் பாஸ்)."என்னாத்த சொல்வேனுங்கோ வடுமாங்கா ஊறுதுங்கோ."பாடல் கூட ஒரு மேடை நிகழ்ச்சியில் வந்து தொலைத்தது.விஜய்  கூட ஒரு படம் பண்ணனும்னு "பேரரசு வெயிட்டிங் போல"... வேட்டைக்காரன் பாடல்களை கூட விட்டுவைக்கலைப்பா..இது பரத் படமா விஜய் படமான்னு பார்ப்பவர்களுக்கு கட்டாயம் டவுட் வந்தேதீரும்.ஒருதடவை மங்காத்தா கூட வந்து விளையாடிட்டு போனார்னா பாத்துக்கோங்க.பக்கா மசாலா விரும்பிகளை மீண்டும் தன்னோட அதரப்பழசான மசாலாவை வைத்து தேய்த்துவிட பார்த்திருக்கிறார் பேரரசு.



சுனைனா அப்பா அம்மா இல்லாத அனாதை எண்டு தெரிஞ்சவுடன அவங்க மேல லவ்வாகிறார் பரத்து..அப்பாவோட இறந்துபோன தங்கச்சின்னு சொல்லி பத்து நாளு சுனையா,பரத் வீட்டிலையே தங்கிறமாதிரி ஒரு சீன்.வீட்டில இருக்கிற அவ்ளோ பேரும் அப்பிடியே நம்பி நம்ம உசிரவாங்கிறாங்க..அப்பவே டிவிடிய நிறுத்திட்டு வேற ஏதாச்சும் "இங்கிலீசு"படத்தில மனச ஆசுவாசப்படுத்தி இருக்கணும்..ஆனாலும் கேப்டனின் விருத்தகிரி கொடுத்த தைரியம்.. முழுவதுமாய் இருந்து பார்க்க முடிவுபண்ணினேன்.

சமூகத்தில நடக்கிற கொடுமைகளை பரத் தட்டி கேட்பார்னு எதிர்பார்க்கிற ராஜ்கிரண்(அவர் ஒரு மிலிட்டரி) ஏமாந்து போறார்.சுயநல சமூகம்னு காரணம் காட்டுறார் பரத்.அம்மா இப்படி ஒரு காரணத்தால தான் செத்து போனாங்கன்னு அதற்க்கு ஒரு ப்ளாஷ் பாக்.எங்கடா ரொம்ப பெருசா போகபோகுதோ,இரவுக்கடன்களை முடிச்சிரலாம்னு பாத்தா சின்ன ப்ளாஷ் பேக் வைச்சு ஏமாத்திட்டார் பாஸ்.அது முடிஞ்சவுடன ஒரு டூயட் சாங்.அது முடிஞ்ச கையோட பரத் ஒரு பெரிய ஆக்சிடெண்ட்ல சிக்கிறார் பாருங்க.. ஐயோ பாவம்,பிழைக்கவேமாட்டார்னு எதிர்பார்த்திருக்க எந்திரிச்சு நடக்கிறார் பரத்.டாக்டர் பரத்கிட்ட "இனி நீங்க ஒரு ஆறு மாசம் தான் உசிரோட இருப்பீங்க"னு  குண்டை தூக்கி போடுறார்.
                          

அதைக்கேட்டு வீட்டாருடன் வேண்டுமென்றே பகைத்துக்கொள்ளும் பரத்தை "சின்ன வயசில சாதிச்சிட்டு செத்தவங்க தான் மனுசங்க மனசில என்னைக்கும் வாழ்வாங்க'னு உசுப்பேத்தி விடுறார் மிலிட்டரி .அதாச்சும் அதற்க்கு பிறகு வருவது எல்லாமே"சரவெடி...இல்ல தாண்டவம்...இல்ல அகோரம்...இல்ல எப்படியாச்சும் நீங்களாவே நெனைச்சுக்கொள்ளனும்.அப்படி நினைவு வந்திராவிட்டால் இந்தப்படம் உங்களுக்கு மெகா ஹிட்டு படம் தான் போங்க.!
உசுப்பேற்றிய அடுத்தகணமே ஒரு அநியாயம் கண்ணெதிரே நடக்குது.அடித்தாடுகிறார் பரத்.ஆடி முடிந்தவுடன அவராவே போலீசுக்கு கால் பண்ணி ஆம்பளைனா அரெஸ்ட் பண்ணுடான்னு ஏசி'க்கு தன்னோட டீடெயில்ஸ் கொடுப்பார் பாருங்க.அத நீங்களும் அனுபவிக்கனும்க.
பெயர்:திருத்தணி 
வயசு:இருபத்தா"று" 
ஹைட்டு :அஞ்சு புள்ளி ஆ"று" 
வெயிட்டு :அறுபத்தா"று" 
நிறம்:சிவப்பு 
குணம்:நெருப்பு 
பிடிச்சது:பருப்பு 
---------------------------------
என்னடா கோடு  போட்டிருக்கேன்னு ஜோசிக்கிறீங்களா??திருத்தணி கமெர்சியல் ப்ரேக்னு போடுறாங்க.அதுக்கு அப்புறமா ரோட்டில குப்பை போடுறவன்ல  இருந்து தலையில ஆயி போற காக்கா வரைக்கும் விடாம சுட்டு தள்ளிக்கிட்டே இருக்காரு பரத்.இந்த டீட்டெயில் எல்லாம் தேவையா பாஸ்?  

எல்லாம் ஓகே நான் எதிர்பார்த்த சீன்  இன்னும் காணலையேன்னு வழிமேல விழி வைச்சு காத்திருக்க ஒரு கருப்பு பஜரோ'ல வந்து இறங்கிறார் நம்ம தலை பேரரசு..அண்ணனோட என்ரி  ஒவ்வொரு படத்தில ஒவ்வொரு மாதிரி மாசா கிளாசா இருக்கும்லே.ஹீரோ இன்ட்ரோவ விட அண்ணனோட இன்ட்ரோ தான் இப்பெல்லாம் அவரோட படத்தில ஹைலைட்டு ..! வந்தார்...வசனம் பேசினார்...டி  ஆர் சிம்புக்கு அப்பன்,தான் வம்புக்கு அப்பன்னு சொல்லி படத்தில தன்னோட வேலைகள் என்ன என்னன்னு பட்டியல் போட்டாரு பாருங்க...எனக்கு தூக்கமே வரலைன்னு சொல்லமாட்டேன்..இது தலைவர் காலம் காலமா பண்ற மேட்டராச்சே..இதுக்கெல்லாம் பயந்தா தலைவர் பேரரசு பான்(Fan) ஆக முடியுமா பாஸ்! 


அப்புறம் என்ன க்ளைமாக்ஸ் அப்பிடின்னு கேக்கிற சினிமா ரசனையே இல்லாத பக்கி பன்னாடைகளுக்கு..
பரத் எல்லாம் செய்துவிட்டு சரண்டர் ஆகிறார்.ஆனால் பரத்தை அரெஸ்ட் பண்ணாமல் "ஏசி"பைட் பண்றார்.அதில இடையில் வந்த ராஜ்கிரண் உசிர கொடுக்கிறார்.பைனல் ட்விஸ்ட்டு என்னன்னா,ஆறுமாசம் தான் உசிரோட இருப்பாய்ன்னு டாக்டர் சொன்னது பொய்.ராஜ்கிரண் தான் தப்புகளை தட்டிகேட்க அவ்வாறு  சொல்லச்சொன்னார் என்று டாக்டர் சொல்றாரு.

ஆனா பாருங்க படம் பார்த்தவுடன உங்க உசிரு போயிடும்னு எந்த டுவிஸ்ட்டும் படத்தில வைக்காமலே வஞ்சகம் பண்ணிட்டாருங்க தலீவர் பேரரசு..!
பாடல்கள் சுமார் ரகம்.ஒரே ஒரு மெலொடி  பாடல் நல்லா இருந்திச்சு..ஆனால் பலபாடல்கள் சாயல் இருந்ததால அதுகூட ஞாபகம் இருக்கல.ஆஷிஷ் வித்தியார்த்தி ஒன்னு இரண்டு ஸீன்ல மட்டும் வாறார்.அருமையான வில்லனை வீணாக்கிவிட்டார் பேரரசு.அட நம்ம பாண்டியராஜன் கூட இருக்காருங்க.மொத்தத்தில,என்னைய மாதிரி "என்ஜாய்" பண்ணி பார்க்க பிடிச்சவங்க படத்த பாருங்க பாஸ்..நிச்சயம் ரசிப்பீங்க..!
விருதகிரி விமர்சனம் படிக்காதவர்களுக்காக:"விருதகிரி வெற்றிக்கொடி"

பேரரசுவோட  அடுத்த படத்துக்காக "Im Waiting...!!!"


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...