Wednesday, July 31, 2013

'தல'அஜித் சென்றுகொண்டிருக்கும் பாதை சரி தானா?



அஜித்தினதோ,விஜய்யினதோ,சூர்யாவினதோ சரி,தியேட்டரில் ஒரு படம் ஓடுகிறதென்றால்,முக்கிய காரணம் குறிப்பிட்ட ஹீரோக்களின் ரசிகர்கள் தான். ஆனால் ஒரு படம் அதிக விலை கொடுத்து தொலைக்காட்சிகளினால் வாங்கப்படுகிறதாயின் அதற்கு மிக முக்கிய காரணம் 'பேமிலி ஆடியன்ஸ்'தான்.சனி ஞாயிறுகளில் குடும்பமாக இருந்து பார்த்து மகிழ்பவர்களை டார்கட் பண்ணி,எந்தப்படத்தை,யார்படத்தை போட்டால் வேறு சேனல்களுக்கு மாற்றாமல் மக்கள் பார்ப்பார்கள் என்று அறிந்து, தெரிந்து தான் சில படங்களின் தொலைக்காட்சி உரிமங்களுக்காக சேனல்கள் அதிக விலை தருகின்றன.அந்த உரிமங்களுக்கு செலுத்தப்பட்ட விலையை விளம்பரங்கள் மூலமாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருத்தல் வேண்டும்.கூடவே தொலைக்காட்சி ரேட்டிங்கும் கருத்தில் கொள்ளப்படும்.

சனி ஞாயிறு தினங்களாக இருக்கட்டும்,அல்லது முக்கிய பண்டிகை தினங்களாக இருக்கட்டும், குறைந்தது ஏதாவது ஒரு சேனலில் கண்டிப்பாக விஜய் படம் ஒன்று ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும்.விஜய் படங்களின் உரிமங்களை வாங்குவதற்கு கொடுக்கப்படும் விலையிலிருந்தே, ரசிகர்களை தாண்டி விஜய் மீதான மக்கள் விருப்பு எத்தகையது என்பது தெரிந்துவிடும். சிறுவயது குழந்தைகள் தொடக்கம் வயதானவர்கள் வரை 'எண்டர்டெய்னர்' என்கின்ற ரீதியில் விஜய் கவர்ந்திருக்கின்ற காரணத்தினால் தான் தொலைக்காட்சி உரிமங்கள் இந்தளவு விலை கொடுத்து வாங்கப்படுகின்றன.

விஜய்யின் நண்பன் 12கோடிக்கும்,துப்பாக்கி 14கோடிக்கும்,தலைவா 15 கோடிக்கும், ஜில்லா 18 கோடிக்கும்(சன் டிவி)டிவிக்களால் வாங்கப்பட்டிருக்கிறது (மாற்றான் &பில்லா2 போன்றவை 10கோடிக்கும் குறைவான தொகைக்கு தான் விலை போனது இங்கு குறிப்பிடத்தக்கது.) முருகதாஸுடன் விஜய் இணையும் அடுத்த படம் (எஸ்.ஏ.சியின் வாய் மூடப்பட்டிருக்கும் பட்சத்தில்) 20கோடிக்கு விலை போனாலும் வியப்பேதுமில்லை..!பில்லாவை விட மாற்றான் சற்று அதிக தொகைக்கு விலை போயிருக்கிறது.அஜித்தை விட தன் ரசிகர்களை தாண்டி பிறராலும் சூர்யா ரசிக்கப்படுகிறார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை தான்.சூர்யாவின் அண்மைக்கால பேச்சுக்களை கேட்டிருந்தால் புரிந்திருக்கும்,'குழந்தைகள் விரும்பி என்னை ரசிக்கிறார்கள்" என்பதை முன்னிலைப்படுத்தி பேசியிருப்பார்.விஜய்க்கு எஸ்.ஏ.சி விளம்பரதாரர் என்றால் சூர்யாவுக்கு சூர்யாவே தான் விளம்பரதாரர்.என்னதான் வெறுக்கப்பட்ட ஹீரோவாக காட்டிக்கொள்ளப்பட்டாலும்,வயது வேறுபாடின்றி,ரசிகர்களையும் தாண்டி, பலராலும் விரும்பப்படுகின்ற ஹீரோவாக விஜய் இருக்கிறார் என்பது இதன்மூலம் தெளிவு.அப்படி பலருக்கு பிடித்தமானதாக இருப்பதனாலேயே விஜய் சிலருக்கு பிடிக்காமல் போயிருக்கின்றார்.

அஜித்தின் கடந்த பதினைந்து படங்களிளான வில்லன்,ஆஞ்சனேயா, ஜனா,அட்டகாசம்,ஜீ, பரமசிவன், திருப்பதி, வரலாறு, ஆழ்வார்,கிரீடம்,பில்லா,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா2 ஆகிய படங்களில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் எஞ்சுவது என்னமோ பில்லா, மங்காத்தா,வரலாறு என்று வெறும் மூன்று-நாங்கு படங்கள் தான்.நண்பனில் விஜய் எந்தளவு அண்டர்ப்ளே பண்ணினாரோ,அது போல கிரீடத்தில் அஜித் பண்ணியிருந்தார்.அஜித் ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அது பிடிக்கவில்லை.(அழகிய தமிழ் மகனில் விஜய் நெகட்டிவ் ரோல் பண்ணியிருந்தது விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை,ஆனால் மங்காத்தா அஜித் ரசிகர்களுக்கு பிடித்திருந்தது!)அதற்கு பிறகு வந்த படங்களை பார்த்தால்,பில்லா கொடுத்த பிரமாண்ட வெற்றியால் ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா 2 என கடந்த ஐந்து படங்களுமே அஜித்தை ஒரே போர்முலாவுக்குள் சிக்க வைத்து எடுக்கப்பட்ட படங்கள் தான்.அடுத்து வரும் 'ஆரம்பம்'கூட அதே மாதிரியான போர்முலா என்று தான் ஸ்டில்களை பார்க்கையில் தெரிய வருகிறது.

எத்தனை தோல்வி என்றாலும்,அது ஒரே போர்முலா என்றாலும் கூட நாங்கள் 'தல'யை ரசிப்போம் என்பது அஜித் ரசிகர்களின் குரலாக இருந்தாலும்,அதே நீலம்,கறுப்பு,வெள்ளை படங்களையும்,அதே கோர்ட்,பைக், க்ளாஸ்,நரைத்த முடி கதாபாத்திரங்காளையும் அவர் ரசிகர் தாண்டி எத்தனை பேர் ரசிக்கிறார்கள் என்று கேட்டால் மிக மிக குறைந்த அளவினராக தான் இருப்பார்கள்.அஜித் படங்களுக்கான தொலைக்காட்சி உரிமங்கள் விலை போகின்ற அளவை வைத்தே அதனை கணித்துவிடலாம்.அஜித் இயல்பாக இருக்கிறேன் பேர்வழி என்று தன்னுடைய கேரியரை பாழாக்கிக்கொள்கிறார்.42 வயது ஆனால் பார்த்தால் 50 வயது மதிக்கலாம்.நான்கு ஐந்து வயது குறைந்த விஜய்-சூர்யாவை பாருங்கள் என்ன மாதிரி உடம்பை மெயிண்டெய்ன் செய்கிறார்கள் என்பதை!இன்னமும் அவர்கள் இருவரும் 30 வருடங்கள் கூட இண்டஸ்ரியில் இருந்துவிட முடியும்.ஆனால் அஜித்தின் உடம்புக்கும்,அவரின் அக்கறை யீன்மைக்கும் இன்னமும் எத்தனை வருடங்கள் அவரால் தாக்குப்பிடிக்க முடியும்?

விஜய்-அஜித் என்று இருந்த போட்டி இப்போது மெல்ல மெல்ல மாறிக்கொண்டு வருகிறது விஜய்-சூர்யா என்பதாக.காரணம்?சூர்யா அடுத்தடுத்து கொடுத்து வரும் வெற்றிப்படங்கள். ஹாரி,கவுதம் மேனன்,முருகதாஸ் என்று திறமையான இயக்குனர்களுடன் சேர்ந்து இயங்குவது மட்டுமல்லாமல்,சிறந்த படங்களையே தெரிவு செய்து நடிக்கிறார் சூர்யா.இது அஜித் விஜய் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.பேரழகன் தொடக்கம் சிங்கம்2 வரையிலான 15 படங்களில் வாரணம் ஆயிரம்,அயன்,சிங்கம்,கஜினி என்று ஒன்பது-பத்து படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய் நடித்த கடந்த 16 படங்களில் (கில்லி தொடக்கம் துப்பாக்கி வரை),திருப்பாச்சி, போக்கிரி,நண்பன்,கில்லி,துப்பாக்கி என்று எட்டு-ஒன்பது படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.விஜய்யும் சூர்யாவும் 8 தொடக்கம் 10 படங்கள் வெற்றியை கொடுக்க குறித்த காலப்பகுதியில் வெறும் 4 ஹிட் படங்களை கொடுத்து இருக்கும் அஜித்தை சூர்யா மெல்ல மெல்ல ஓவர்டேக் செய்வது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை.அஜித் ரசிகர்கள் அப்படியே தான் இருப்பார்கள்.ஆனால் தெரிந்தோ தெரியாமலோ அஜித் மெல்ல மெல்ல தமிழ் இண்டஸ்ரியை விட்டு ஓரம்கட்டப்படுகிறாரோ என்று தோன்றுகிறது.!

நரைத்த முடிக்கும்,தாடிக்கும் டை அடிக்காமல்,இயல்பாக நடிக்கிறேன் பேர்வழி என்று அஜித் இப்போது நடிப்பதை அஜித் ரசிகர்கள் வேண்டுமானால் விரும்பலாம்..அஜித் ரசிகைகள் விரும்பலாம்.திரைத்துறையில் நிலைத்திருக்க வேண்டுமானால்(ஹீரோவாக!)அந்த இயல்பை மறைத்துத்தான் ஆகவேண்டும்.ரஜனிக்காந்த்க்கு கூட அது பொருந்தித்தான் ஆகிறது! கூடவே உடம்பிலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும்.கமல்-ரஜனிக்கு பின்னாடி இருக்கும் அஜித்-விஜய் என்ற இருக்கும் போட்டியை உடைப்பதன் மூலம்தான் தானும் முன்ணனி நாயகனாகலாம் என்பது சூர்யா எப்போதோ போட்டுவிட்ட கணக்கு.அதற்கு பலியாகிக் கொண்டிருப்பது அஜித் தான்! ஒரு கால கட்டத்தில் அது விஜய்யாக இருந்தது.ஆதி-குருவி-வில்லு-சுறா என்று தொடர்ச்சியான காவியங்கள் விஜய் கொடுத்துக்கொண்டிருந்த சமயத்தில் விஜய் தான் ஓரம்கட்டப்படுவார் என்று நினைத்திருந்தேன்.காரணம் இணைய எதிர்ப்பும் விஜய்க்கே எப்போதும் அதிகமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் காவலன்'னில் தன்னை மாற்றிக்கொண்ட விஜய் வேலாயுதம்-நண்பன்-துப்பாக்கி என்று வேறுபட்ட ஹிட் படங்களை கொடுத்து அந்த ஆபத்திலிருந்து வெளியேறிக்கொண்டார்.தலைவா-ஜில்லா சொதப்பினாலும் அதற்கடுத்து முருகதாஸ் கூட படம் பண்ணுகிறார் விஜய்.அது நிச்சயம் ஹிட் அடிக்கும்.

2008-2013 வரையிலான ஆறு வருட காலப்பகுதியில் (ஆரம்பம் அடுத்த பொங்கல் தான்)வெறும் நான்கு படங்களில் மட்டுமே அஜித்தினால் நடிக்க முடிந்திருக்கிறது!இத்தனைக்கும் வருடக் கணக்கில் படம் பண்ணும் ஷங்கர்,பாலாவுடன் கூட இணைந்திருக்கவில்லை!அதில் ஒரு ஹிட் மூன்று தோல்வி!இதே காலப்பகுதியில் சூர்யா ஏழு படங்களில் நடித்திருக்கிறார்,அதில் ஆதவன் மட்டும் தான் சரியாக கல்லா கட்டவில்லை.மாற்றான் தோல்வி கிடையாது.இதே ஆறு வருட காலப் பகுதியில் விஜய் 8 படங்களில் நடித்திருக்கிறார்,அதில் வில்லு&சுறா தோல்விப்படம். காவலனில் இருந்து துப்பாக்கி வரை தொடர்ச்சியான ஹிட் படங்கள்.எட்டாவது படம் தலைவா அடுத்த 9 ஆம்தேதி ரிலீஸ் ஆகிறது.ஆக கடந்த ஆறு வருடங்களில் வெறும் ஒரே ஒரு ஹிட் படத்தை மட்டுமே கொடுத்திருக்கும் அஜித் ஏதோ ஒரு தப்பான வழியில் சென்று கொண்டிருக்கிறார் என்பதை சிற்றறிவு உள்ள யாராலும் புரிந்துகொள்ள முடியும்!இல்லை தல எப்படி இருந்தாலும் ரசிப்போம் என்கிறீர்களா?நீங்கள் தான் 'தலை'க்கு கூடவே இருந்து ஆப்பு செருகுகின்றீர்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்!

பாஸ் என்கின்ற பாஸ்கரனில் 'அந்த கூலிங் க்ளாசை கழற்றி எறியடா"என்று ஆர்யாவுக்கு சந்தானம் சொல்வதை போல அஜித்க்கு இப்போது யாராவது அந்தவேலையை செய்தாகவேண்டும்.ஏகன்-பில்லா டைப் படங்களிலிருந்தும் அந்த காஸ்டியூம்களில் இருந்தும் வெளியே வந்து வேறுபட்ட படங்கள் பண்ண வேண்டும்.முதலில் விஷ்ணுவரதனுடன் எனிமேல் எந்த படங்களிலும் அஜித் ஒப்பந்தம் ஆகிவிடாத மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதில் முன்ணனியில் இருப்பது விஜய் தான்.அஜித் கூட அங்காங்கே கொடுத்து வருகிறார்.ஆனால் சூர்யா எந்த புது இயக்குனர்களுக்குமே வாய்ப்பு கொடுக்காது தங்களை வெற்றிகரமான இயக்குனர்கள் என்று நிரூபித்த இயக்குனர்களிடம் மட்டுமே படம் பண்ணுகிறார்.இத்தனை ஹிட் கொடுத்த பின்பும் ஒரு Safe Zone'இல் இருந்துகொண்டு படம் பண்ணும் சூர்யாவை அஜித் சிறிது காலம் பொலோ செய்யலாம். முன்ணனி இயக்குனர்களுடன் கை கோர்க்கலாம்.அது வித்தியாசமான படங்களை அஜித் தருவதற்கும்,மீண்டு வருவதற்கும் வழிவகுக்கும்.

இன்னமும் டீப்பாக சொல்வதானால்,அஜித் தொப்பையை குறைக்கலாம்.உப்பிப்போயிருக்கும் முகத்தை சரி பண்ணலாம்,ஊதிப் போயிருக்கும் உடம்பை நினைத்தால் குறைக்கலாம்.பாடல்களிலும் சரி,படத்திலும் சரி தேவை இல்லாமல் நடப்பதை விடுத்து,பாடல்களில் ஹீரோயினையும்,க்ரூப் டான்சர்களையுமே எப்போதும் ஆடவிடாது,தலை கொஞ்சமாவது மூமெண்ட்ஸ் போடலாம்.ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடிக்கிறார் ,ஹெலிகாப்டரில் பறக்கிறார் என்றெல்லாம் செய்தி வரும்போது இது ஒரு மேட்டரே கிடையாது.நினைத்தால் அதை கூட செய்யலாம்.அக்கறை எடுத்து ஒரு வருடத்தில் ஒரு படமேனும் ரிலீஸ் பண்ணலாம். வித்தியாசமான படங்களை தெரிவு செய்யலாம்.'தல' கேட்டால் எந்த முன்ணனி இயக்குனர் தான் முடியாது என்று சொல்லப்போகிறார்கள்?

ஒரு முன்ணனி நாயகனான அஜித்,கடந்த ஆறு வருடங்களில் ஒரே ஒரு வெற்றி படம் மட்டுமே கொடுத்திருக்கிறார் என்பதை கேட்கும்போது, அஜித்துக்கு 'Something is wrong Some where" என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா?அந்த 'சம்திங்' என்பதற்குள் பில்லா டைப் படங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களாகளோ அல்லது அத்தகைய கதைகளையே அஜித்திடம் கொண்டு செல்லும் இயக்குனர்களோ இல்லை அத்தகைய கதைகளினையே தேர்ந்தெடுத்து நடிக்கும் அஜித் கூட உள்ளடங்கி இருக்கலாம்!ஏன் இவர்கள் அனைவருமாக கூட இருக்கலாம். எது எப்படியோ,தன் தலை மேல் கத்தி தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதனை எவ்வளவு சீக்கிரம் உணர்ந்து கொள்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் அது அஜித் மீண்டுவர வழிசமைக்கும்.அஜித் இன்னமும் எத்தனை வருடங்கள் தமிழ் இண்டஸ்ரியில் இருப்பார் என்கின்ற தலைவிதியை தீர்மானிப்பதாக கூட அது அமையலாம்..!


Post Comment

Saturday, July 27, 2013

"பட்டத்து யானை"-ஒலக சினிமாவுக்கான உந்துதல்..!


"படம் படு மொக்கை.தியேட்டர் பக்கம் போயிராதிங்க பட்டத்து யானை ஏறி மிதிச்சிக்கிட்டிருக்கு..அது நம்மள நோக்கித்தான் வருது"அப்பிடின்னு சமூக நலன்விரும்பிகள் பலர் பேஸ்புக்,ட்விட்டர் என்று கூவிக்கூவி தியேட்டர் பக்கம் ஒதுங்குபவர்களை தடுத்துக்கொண்டிருந்தனர்.'ஹஹா அந்தப் பெரிய அலெக்ஸ் பாண்டியனையே பார்த்த நமக்கு இது எம்மாத்திரம் என்று தியேட்டர்பக்கம் ஒதுங்கினேன்.

ஆரம்பமே அதகளம்!முன்னாடி நடிக நடிகையர் பெயர்கள் ஓடிக்கொண்டிருக்க பின்னாடி ஒரு இருபது பைக்ல ரவுடீஸ் யாரையோ தேடிக்கிட்டு கொலை வெறியோட பறந்துகிட்டிருந்தாங்க.அடடே எதிர்பார்க்காத ஆரம்பமிது என்று ஆரம்பத்திலேயே க்ளாப்ஸ் வாங்கினார் இயக்குனர் பூபதி பாண்டியன்.

ஹீரோ சந்தானத்த பெரிய ஓட்டல் முதலாளியா ஆக்கி அவருக்கு கல்யாணம் செஞ்சு அவர் பிள்ளையை தூக்கி கொஞ்சனும் என்கின்ற மாபெரும் குறிக்கோளோட செக்கண்ட் ஹீரோ விஷாலும் அவரோட நான்கு நண்பர்களும் சமையல் வேலைக்கு சேர்றாங்க.முன்னாடியே சொன்ன பைக் ரவுடீஸ் கூட தகறாரு ஏற்பட,மூட்டை முடிச்சுகளோட ஆறு பேரும் திருச்சி கெளம்பி போய்டறாங்க.

சமயத்தில டீக்கடைல டீ குடிச்சிட்டு விஷால் நீட்டின 500 ரூபாய்க்கு சில்லறை இல்லைனு டீ மாஸ்டர் சொல்ல,ஒரு பூக்கடை அம்மாகிட்ட போயி சில்லறை கேட்கிறார்.அதுக்கு அந்த அம்மா,பூ வாங்கிகிங்க மாத்தி தர்றேன்னு சொல்ல 'எனக்கெதுக்கம்மா பூ..யாராச்சும் அழகான பொண்ணுவந்தா மாட்டிவிடுங்க' ன்னு சொல்லிட்டு போயிடறார் நம்ம ஹீரோ.என்ன என்ன?ஆமா நீங்க நெனைச்சதே தான்! அந்த பூவ மாட்டிக்கிட்டு வர்றது நம்ம அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா தான்!அத பாத்து இவர் பொங்கிறார்..அடடே!!

ஹீரோ சந்தானத்துக்கு நீளமான ரோலு படத்தில.பேசுறார் பேசுறார் பேசிக்கிட்டே இருக்கார்..அரிவா வைச்சு உர்ர்னு பார்க்கும் வில்லங்கமான வில்லன்ககிட்ட,ஏன் மெயின் வில்லன்கிட்டயே கேப்பு விடாம பேசி கழுத்தறுக்கிறார்.இது தான் இப்போதய ட்ரெண்டாம்..காமெடியாம்..! அடடே..!!

அவசரத்துக்கு ப்ளட்டு தேவைன்னா கூட இவங்ககிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.தொடப்பங்கட்டைய விட கொஞ்சம் பருத்த உடம்பு நம்ம அடச்சா (அந்த கழுத எனக்கு எதுக்கு!)...உங்க ஐஸ்வர்யாவுக்கு!நாலு பாட்டு சீனு, அரைப்பக்க வசனம்,ஒரு கிளிசரின் அழுகை அவ்ளோதான் அவங்க ஸ்கோப்பு படத்தில!கடைசி பாட்டில தொடப்பங்கட்டைக்கு துண்டு மாட்டினது போல ஒரு ஜான் ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு ஆடுறாங்க...சகிக்கல.சத்தியமா கூட ஆடின பொண்ணுகள தான் நான் பாத்தேன்..!

                          

சிவனேன்னு தன்னோட தொழிலை பாக்கிற இந்த வில்லனுக எல்லாம் ஏன் டாட்டா சுமோல ரோடில போகும்போது,அதுவும் யெல்லோ க்ராசிங்க்ல க்ராஸ் பண்ற பொண்ணோட இடுப்ப பாத்து மூட் கெளம்பி ஹீரோவ வாண்டட்டா தங்களோட லைப்க்குள்ள இழுக்கிறானுகன்னு இன்னமும் தான் எனக்கு புரியல.அவனுக கண்ணுவைக்கும் பொண்ணுக எல்லாம் ஏதோ ஒரு ஹீரோக்கு தெரிஞ்ச பொண்ணுன்னு இன்னுமாடா உங்களுக்கு தெரியல??

சந்தானத்த கூட்டு சேர்த்து மொக்கையா ஒரு அரை மணி நேரத்த ஓட்டிட்டு,அப்புறம் ஊர்ல இருக்கிற ரெண்டு மூணு மெயின் வில்லனுகள ஹீரோவோட கோர்த்து விட்டிட்டு,நாலு பாட்டு மூணு காமெடி ரெண்டு பைட்டுன்னு படத்த முடிச்சிட்டா இப்போ இருக்கிற கேனை ரசிகருக,மசாலா மொக்கையனுக,சந்தானம் வெறியனுக எல்லாம் தியேட்டர் வந்து பார்த்து படத்தை ஹிட் ஆக்கிடுவானுகன்னு தான் ஒவ்வொரு ஹீரோவும்,ஒவ்வொரு டைரெக்டரும் கணக்குப்போட்டு வைச்சிருக்கானுக.

விஷாலோட பைட்ட பத்தி சொல்லியே ஆகணும்.இடைவேளைக்கு முன்னாடி ஒரு கட்டி முடிக்காத பாலத்தோட எண்டிங்க்ல வில்லன் கூட்டத்த சந்திக்கிறார் ஹீரோ.கூடவே பொண்ணு ஐஸ்வர்யாவும் இருக்காங்க.ஏகப்பட்ட வில்லனுக வேற.கொஞ்சம் தள்ளி பெரிய பள்ளம்.அந்த பக்கம் ட்ரெய்ன் வேற ஓடிக்கிட்டிருக்க,அடடா ஹீரோ ஜம்ப் பண்ணி பாலத்தோட அந்தப்பக்கம் போய்டுவாரோ இல்லை அதையும் தாண்டி ஓடிக்கிட்டிருக்கிற ட்ரெய்ன் மேல தாவிடுவாரோன்னு என்னோட மாஸ் மசால மைண்டு கற்பனை பண்ணிக்கிட்டிருக்க,ஹீரோ அசால்ட்டா கையில இருந்த ரெண்டு அலுமினிய அகப்பையால அத்தனை வில்லனுகளையும் அடிச்சு சாச்சாப்லே!மெரண்டு போயி உக்காந்தவனுக தான்..ஒரு பய இண்டர்வல் விட்டபோது உச்சா பண்ணவே போகலைன்னா பாருங்களேன்..!ஆமாங்க ஆல்ரெடி போயிட்டானுவ இருந்த இடத்திலயே..!!

மனோபாலாவை தவிர கோடம்பாக்கத்தில் இருக்கிற அத்தனை காமெடியனுகளையும் ஒவ்வொரு பிட்டு பிட்டு சீன்ல வரவைச்சு தூள் பரத்தி இருக்கிறார் பூபதி பாண்டியன்.அவ்ளோ பேரை வைச்சும் காமெடி கிச்சு கிச்சு அளவு தான்!சந்தானம் அடிக்கடி வேஷ்டிய தூக்கி கட்டும்போது அண்ட்ராயர் தெரியும் சமயத்ல எல்லாம் பொண்ணுக விட்டத்த பாக்கிறாளுவ.

ஏம்பா நீங்கள்லாம் படத்தை எடுக்கிறது மட்டும் தான் பண்ணுவீங்களா?அதுக்கு முன்னாடி கதை கேக்கிறது,திரைக்கதை எழுதுறது,படம் எடுத்த பின்னாடி நல்லா வந்திருக்கான்னு நீங்களே போட்டு பாக்கிறதுன்னு கொஞ்ச வேலைகள பண்ணாமலே படத்த ரிலீஸு பண்ணினா நாம என்னடா பண்றது?

ஆனா ஒண்ணு,இவனுக விருதகிரி,அலெக்ஸ் பாண்டியன் என்று வரிசையா எடுக்கிறதால ஒரே ஒண்ணு மட்டும் நடக்குது.படம் எவ்ளோ மொக்கையா இருந்தாலும்,அத ஒரு எண்டர்டெய்ன்மெண்ட்டா எடுத்துகிட்டு விசிலடிச்சு கைதட்டி ரசிச்சு பொழுதுபோக்க ஒரு கூட்டம் அவங்களுக்கு தெரியாமலே உருவாகிக்கிட்டிருக்கு!அன்பிலீவெபிள் பைட் சீன் வரும்போதெல்லாம் 'வாவ்'ன்னு எந்திரிச்சு நின்னு கைதட்டுறாங்கப்பா..!தமிழ் சினிமா எங்கயோ போய்க்கிட்டிருக்குப்பா!தமன் இசையாம்.ஒரே ஒரு பாட்டு தான் கொஞ்சம் ரசிக்க முடிஞ்சது.டி எஸ் பிய போட்டிருந்தா இந்த கொம்போவுக்கு செமயா இருந்திருக்கும் கூட்டணி.ஜஸ்ட்டு மிஸ்ஸு!பூபதி பாண்டியனே இப்பிடின்னா,இவருக்கு ஆசிஸ்டெண்டா இருக்கிரவனுக எல்லாம் படம் பண்ண வந்தானுகன்னா ஒலக சினிமாவ ஒரே ஷாட்ல தாண்டிருவாங்க போல இருக்கே..!

மார்க்: 38/100



பைனல் கிக்கு: தியேட்டர் காரனுகளுக்கே மேட்டர் புரிஞ்சிடிச்சு போல.. இன்னிக்கே பட்டத்து யானை போஸ்டர்களுக்கு மேல 'தலைவா" போஸ்டர் அடிச்சு ஒட்டுறானுக.ஏம்பா இன்னிக்கு படம் வந்து ரெண்டாவது நாளப்பா..!!

Post Comment

Thursday, July 18, 2013

'மரியான்'பட ஹீரோ தனுஷ்ன்னு இன்னிக்கு தானா தெரியும் உனக்கு?



இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள்  அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..!எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..!விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :)

பேஸ்புக் சாட்டில் இருக்கும் சுவாரசியம் எங்கும் இருக்காது..!உதாரணமா சில:


"நீ பேஸ்புக்கில அதிகமா அரசியல் பேசுறே..!"
"சரி குறைச்சுக்கிறேன்..!"

"நீ ஸ்டேடஸ்ல அசிங்கமா பேசுறே"
"சரி திருத்திக்கிறேன்"

"நீ பதினஞ்சு வரில ஓவரா அலட்டுறே.."
'சரி மூடிக்கிறேன்.."

'ட்விட்டர் மாதிரி ஒரு வரில போடுறே நீயி!"
'சரி நீட்டிக்கிறேன்.."

"என்ன நீ போடவே இல்ல இன்னிக்கு?"
'சரி இருங்க போடுறேன்.."

"திரும்ப திரும்ப அசிங்கமா பேசுறே நீயி..!"
நான்: 'ஙே..........  ???'

--------------------

'டேய்,நாலு லைக் விழுதுன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவியாடா?"
'ஏன் பாஸ் என்னாச்சு?

'எங்கட சனம் படுற பாட்டுக்கு உனக்கு சமந்தா-நஸ்ரியா கிளுகிளுப்பு கேக்குதோ?'
"அது வந்து..."

"அவனவன் படாத பாடு படுறான்..நீங்க எடுக்கிறீங்க எனடா?உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா"
'இல்ல பாஸ்..அதில என்ன தப்பு......."

'என்ன தப்பா?என்னவாச்சும் பண்ணி தொலைங்கடா...!"
"வெண்பனியே வெண்பனியே...."
"என்னடா பாட்டு படிக்கிறே?"

" I am watching அலெக்ஸ் பாண்டியன் @ ****** Cinema..!"
"நான் என்னவோ சொல்லிக்கிட்டிருக்கேன்..நீ படம் பாக்கிறியாடா?'

"Big weekend..Going for a Party..Lets Rock guys with ******,*****&****!!"
"பார்ட்டி போப்போறியா?"

"இல்லை பாஸ்,இவ்ளோவும் உங்க Wall'ல நீங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி பகிர்ந்திருந்தது..உங்களுக்கு பிடிக்குமேன்னு....."
---------------------------------------

'ஏங்க இவ்ளோ நாளா சொல்லவே..இல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிரிச்சா?'
(எப்பிடி கண்டுபிடிச்சிருப்பா?எந்த தடையமும் இல்லாம தானே மெயிண்டெயின் பண்ணிக்கிட்டிருக்கேன் பேஸ்புக்கில..)
'இல்லையே,யார் சொன்னது உனக்கு?'

'இப்பிடி அப்பட்டமா பொய் சொல்லாதீங்க..உங்கள எல்லாம் நம்பி பழகினேன் பாரு..என்ன சொல்லனும்.."
"ஏய் லூசா உனக்கு? என்னாச்சு இப்போ? ஏன் இப்பிடி கத்துறே?"
"இப்ப தான் உங்க கவர் போட்டோ பாத்தேன்..உங்க கல்யாணப்படம் போட்டிருந்திச்சு.."

"ஹெஹெ..அடி சிறுக்கி மவளே..அது இன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஜீ.வி,சைந்தவி போட்டோடி..நான்லாம் ஆன்லைன்ல ஆயிரம் பொண்ணுக இருந்தாலும்,உன்கூட மட்டும் தான் கடலை போடுவேன் தெரியுமாடி..என்னப்போயி..."

'சாரிங்க..நீங்க நல்லவர்னு எனக்கு எப்பவோ தெரியும்..நான் சும்மா கலாய்ச்சு பாத்தேன்..ஹிஹி"

-----------------------------------------
'நீங்க யாரு?உங்கள பத்தி சொல்லுங்களேன்?"
'அது தான் ப்ரொபைல்ல போட்டிருக்கேனே!?"

'சரி சும்மா சொல்லுங்களேன்..?"
'நான் தான் மரியான் பட ஹீரோ"

'அப்பிடியா??
'ஆமா..ஏன்?"

"நம்பவே முடியலைங்க..எவ்ளோ பெரிய படம்.."
'ஆமா.."

'ரஹ்மான் வேற மியூசிக்.."
'ஆமா ஆமா.."

"நான் தனுஷ் தானே ஹீரோன்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்..நீங்களா ஹீரோ???'
"அட ஆமாங்க நான் தான்..!"

'எப்பிடிங்க படிச்சிக்கிட்டே நடிக்கவும் செய்யுறீங்க??'
'இப்போ கூட நீயி ஒரிஜினல் எக்கவுண்ட்ல வந்து மொக்கை போட்டுகிட்டு பேக் ஐடிலயும் வந்து மொக்கை போடுறாய்ன்னா..உன் ப்ரெண்ட்'க்கு இதொண்ணும் பெரிய விசயமே இல்லைங்க..!"

'ஹிஹி மச்சான் கண்டுபிடிச்சிட்டியா :P ?" 
--------------------------------------



என்னோட கடந்த இருவார பேஸ்புக் நிலைத்தகவல்கள் சில: @மைந்தன் சிவா

'போன மாசம் 25ஆம் தேதி வந்திச்சுடா..இந்த மாசம் தான் மூணு நாளு லேட்டு 28ஆம் தேதி தான் வந்திருக்கு..!'வீதியால் செல்லும் அனைவருக்கும் கேட்க்கும் தொனியில் போனில் யாருக்கோ சொல்லிக் கொண்டு சென்றாள்.ஒரு 28வயது இருக்கும்.ஒரு பொறுப்பு வேண்டாம்?

என்ன கொடுமையடா இது என்று பார்த்தால்,அவள் எனக்கு முன்னாடியே சென்றுகொண்டிருந்ததால் அவளின் கதை தொடர்ச்சி கேட்டுக்கொண்டே இருந்தது..!

'டேட் பிந்தி வர்றது சரி இல்லைடா..வீட்டு வாடகை கூட 24 ஆம் தேதி கட்டணும்..சம்பளம்னா 25ஆம் தேதிக்கு கரெக்ட்டா வந்திடணுமா இல்லையா சொல்லு?"
-----------------------------------------------
'ஒருபக்கம் பற்றீஸ்'க்கும் கொழுக்கட்டைக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிக்கொண்டிருக்க,மறுபக்கம்கொழுக்கட்டைக்கும் மோதகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உருவமில்லா ஒரு உருண்டையை செய்து படைக்கும் அம்மாமார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர்.!

எப்படியிருந்தாலும் அது திங்கிற ஐட்டம் தானே என்று 'தின்பவர்கள் கூட்டம்"மட்டும் என்றுமே மாறாமல் 
‪#‎ஆடிப்பிறப்பு‬ '
----------------------------------------------
'இன்றைய "சுடர்விடும்" பத்திரிகை ஒன்றில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி இருக்கும் தலைப்புகள் இவை:

-'விக்கினேஸ்வரனை நியமித்தால் தமிழரசு கட்சி தனி அணியாக குதிக்க முடிவு"
-"தமிழரசுக்கட்சி யாழ்கிளை விக்கி-ன்க்கு எதிர்ப்பு"
-"மாவையே முதலமைச்சர் வேட்பாளர்-திருமலையில் தமிழரசுக்கட்சி அதிரடி"
-"அரசியல் அனுபவம் என்னிடமில்லை-மாவையிடம் அது நிறையவே உண்டு--ஒப்புக்கொண்டார் விக்கினேஸ்வரன்"
-"மாவை தான் வேண்டும்-மக்கள் குரல்"

'மாவையை முதலமைச்சர் வேட்பாளராக நீ நிறுத்துகிறாய்.Dot"என்கின்ற அதிகார தோரணையில் 'மாவை தான் முழுத்தகுதியானவர்-விக்கி எவ்விதத்திலும் தகுதியற்றவர்"என்று அந்த பத்திரிகை கூட்டமைப்பை வற்புறுத்தியிருப்பது போல்தான் தெரிகிறது.பெரும்பாலான மக்களின் குரலாக அது இருக்கலாம்.இன்று விக்கினேஸ்வரன் தான் முதன்மை வேட்பாளர் என்று கூட்டமைப்பு அறிவித்திருக்கும் இந்த தருணத்தில் நாளையில் இருந்து இப்பத்திரிகையின் செய்திகள் எப்படியாக இருக்கும் என்று நினைக்கையில் உண்மையிலேயே மிகக்கவலையாக இருக்கிறது!வரலாற்றுக் கடமை என்பது எம்தலை மீது எழுதப்பட்டது.எப்போதும் கூடவே இருந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கும்.

முடிவு யார் எடுத்தது,பின்ணணியில் யார் இருந்தனர்,இதன் மறைமுக நோக்கம் என்ன என்று விவாதிக்கலாம்,எதிர்த்து நிற்கலாம்,ஆனால் எனி அது சல்லிக்காசுக்கு உதவப்போவதில்லை.எடுத்த முடிவை வெற்றியாக்குவது தான் இப்போது அனைவரினதும் கடமை.அதிலும், அடிமட்டம் வரை செய்தியை கொண்டு சேர்ப்பதில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது.இதில்,தமிழரசு கட்சி சார்பில் யாழில் சுயேட்சை வேறு களம் இறங்குகிறதாம்.உறுதியானவன் பிரிந்தால் உதிரிக் கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்..! ‪#‎வடமாகாணசபைதேர்தல்‬'

----------------------------------------------------------
சிறுவயதில்,மின்சாரம் இல்லாமல் ஊரே இருண்டு கிடக்கையில் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு ஓடும் நிலாவையும், நட்சத்திரங்களையும்,எப்போதாவது மிக தொலைவில் சிவப்பு நிறத்தில் மின்னி மின்னிச்செல்லும் வானூர்திகளையும் பார்த்துக்கொண்டு 'ஒரு நாட்டிலே..ஒரு ஊரிலே...ஒரு வீட்டிலே.."என்று தினசரி ஒரே கதையை பதினெட்டு விதமாக அப்பா சொல்லக் கேட்டுக்கொண்டு இருந்த நாட்களை எண்ணிக்கொண்டு ஏக்கத்தில் வெளியே எட்டிப் பார்க்கிறேன்..ஆறுதலுக்கு கூட ஒரு நட்சத்திரத்தை காணமுடியவில்லை.இரவு மழை வரும் போல் தெரிகிறது..!
-------------------------------------------------------------
விகடனில் '16வயதினிலே'தான் இதுவரைஅதிக மதிப்பெண் வாங்கிய திரைப்படம்...என்று ஏதோ கேள்வியில் 'கோடம்பாக்கத்தில் முடங்கியிருந்த சினிமாவை கிராமத்தை நோக்கி அழைத்து சென்றது நான் தான்..அதற்காக தான் அத்தனை மார்க் கிடைத்தது.அதனை யாரும் புது இயக்குனர்கள் முறியடித்தால்,மீண்டும் படம் எடுத்து அதனை நான் முறியடிப்பேன்" என்று தனக்கேயுரிய பாணியில் பாரதிராஜா கூறியிருந்தார்.

இதை கூறியது அன்று"16 வயதினிலே,முதல் மரியாதை"போன்ற படங்களை எடுத்த பாரதிராஜா கிடையாது",இன்று "அன்னக்கொடியும் கொடிவீரனும்"எடுத்த பாரதிராஜா தான்.அதிகபட்சமாக கார்த்திகாவை மேலாடை இன்றி ஓடவைத்தது தான் இவரின் சமீபத்திய சாதனை..!வெறும் வீம்புகளை விட்டுவிட்டு இருக்கின்ற புகழுடன் ஓய்வுபெற்றாலே பெரிய விசயம் இவர்களெல்லாம்!
------------------------------------------------------------
முன்னமெல்லாம் வீட்டு மரத்திலயே பழுத்த பெரிய சைஸ் பலாப்பழத்தை பெரிய கத்தியால் ஒரே போடாய் போட்டு,பிளந்து (பிதாமகனில் விக்ரம்-சூர்யா பிளப்பார்களே அப்பிடி!)கையில் எண்ணையை தடவிக்கொண்டு ஒவ்வொரு பக்கமாய் பிரிச்சு மேயுறதில இருக்கிற இன்பம் 'யாழ்ப்பாணத்து பலாப்பழம்"ன்னு சொல்லி அயல்வீட்டுக்காரர் கொடுக்கும் அஞ்சு சுளை கொண்ட பீசில்(ரெண்டு அழுகிவேறு கிடைக்கும் சிலசமயம்) கிடைப்பதில்லை..!!— feeling lost.
--------------------------------------------------
முடி வெட்டும்போது நம்ம தலைய அந்தப்பக்கம் இந்தப்பக்கம் மேல கீழேன்னு திருப்பும் அழுத்தம்,வேகத்திலிருந்து முடிவெட்டுபவர் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்..!

சில சமயங்களில் ஒரு பக்கம் கோணலாக தலையை திருப்பிவிட்டு,தன் வேலையை பார்க்க போய்விடும் சில சலூன்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!எல்லாம் பய பாதியில் எந்திரிச்சு ஓடிடமாட்டாங்கிற தைரியம் தான்!சில பேரு வெட்டும்போது இடையில மூக்கு கடிச்சா கூட சொறிஞ்சிக்க விடமாட்டாங்கையா!ரோதனை..!!
------------------------------------------------------------------------------------------------------------------------------
======================================================================

            


ட்விட்டர் ட்வீட்ஸ் சில.. @மைந்தன் சிவா

+இணையத்தில் பேக் ஐடியில் பிரபலமாகிவிட்டு,வீதியால் நடந்து செல்கையில் யாராவது நம்மளை நோட்டமிடுகிறார்களான்னு கவனிப்பவன் தான் உண்மையான பிரபலம்!

+மழையின் போது டி.ஷர்ட் நனைந்து கிளுகிளுப்பாக தெரியவேண்டும் என்பதற்காகவே சில பெண்கள் குடையிருந்தும் நனைகிறார்கள்..!

+மணிரத்தினம் காலத்தால் முந்தியவர்..!டிவிட்டர் வருமுன்பே ஒரு சொல்,ஒரு வரியில் தான் தளபதியில் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்..!

+தேடிவரும் பிரச்சனைகளை நொடிப்பொழுதில் அகற்றிவிட ஒரு 'ஹிஹி'சிரிப்பே போதுமானது..!பைத்தியக்காரன்னு சொல்றானா?சொல்லட்டும்!யாருக்கு நஷ்டம்!

+எப்போது இன்னொரு தரப்பை கழுவி ஊற்ற தயாராகிவிட்டோமோ,அப்போதே எந்த கழுவி ஊற்றுதலையும் சகித்துக்கொள்ள நாம் தயாராகிவிடவேண்டும்!

+ஓவியம் என்பது எனக்குள் வளராத கலை ஒன்று! பத்துவயதில் கீறிய கடல்கரை காட்சியை தான் இன்னமும் கீறிக்கொண்டிருக்கிறேன்,அதைவிட கேவலமாக..!

+பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தபின் தங்கள் வயோதிக வாழ்க்கைக்கான பொருளாதார ஆதாரத்தை பல பெற்றோர்களால் கண்டுகொள்ளமுடிவதில்லை!

+விக்ரம் ஒரு படம் நடிக்கும்,பாலா&ஷங்கர் ஒரு படம் இயக்கும் காலத்தில்,அஜித் சூர்யா விஜய் முறையே 2,3,4 படங்களை ரிலீஸ் செய்துவிடுகிறார்கள்..!

+காதலியிடம் காரியம் சாதிக்கவேண்டுமெனில்“நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும்..!

+அரச அலுவலகங்களுக்கு போய் காரியம் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முதல்வனும் இந்தியனும் கட்டாயம் ஞாபகம் வந்துதொலைவார்கள்!

+சந்தோஷமா இருக்கையில் பேஸ்புக்கும் கோபமாய் இருக்கையில் ட்விட்டரும்!கோபத்தை இரண்டுவரிகளில் திட்டிமுடிக்கவும்,சந்தோஷத்தை நீடித்து பகிரவும்..!

+ஹிட் படத்தில் கூட 1009 ஓட்டைகளை கண்டுபிடித்து தாங்கள் பெரிய புடுங்கிகள் என நிரூபிக்க சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்!

+முதலிரவில் பால் எடுத்துச்செல்லும் மகத்துவம் என்ன என்பதை யோசிக்கிறேன்.ஒன்றும் பிடிபடுவதாக இல்லை!ஏன் ஒரு டீ,காபி கூடாது? :P

+ஒரு பொண்ணு வீதியில் குனிந்து தனது மார்பை,மாராப்பை பார்க்கிறாளாயின்,அவளை க்ராஸ் பண்ணி போனவன் அதை உற்றுபார்த்துவிட்டு சென்றிருக்கவேண்டும்!

+எப்போது ஒருவன்'நான் நன்றாக எழுதுகிறேன்'என்று இறுமாப்புடன் வாசிப்பை நிறுத்துகிறானோ,அன்றிலிருந்தே அவன் எழுத்தின் தரம் தேய ஆரம்பித்துவிடுகிறது!

+ப்ரியாமணிகுள்ளே ஒரு ஆம்பிளை கேரக்டரும்,ஷாருக் கானுக்குள்ளே ஒரு பொண்ணு கேரக்டரும் ஸ்லீப்பர் செல்லா இருக்காங்க..!

+படம் பார்க்கும்போதே நூறு ட்வீட்டு ட்வீட்டுபவர்கள் எப்படி முழுதாக உள்வாங்கி படத்தை பார்ப்பார்கள் என்று புரியவில்லை.மொக்கைபடங்கள் விதிவிலக்கு!

+மனிதர்களை சுதந்திரம் மிக்கவர்களாக உணரவைப்பதில் நைட்டிகளும் லுங்கிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன...!!

+உச்சகட்டத்தில் நயன்தாராவின் சம்பளம்-செய்தி #செய்தி எழுதியவர் நயன்தாரா பெயரைக்கேட்டாலே 'உச்சம்'அடைந்துவிடுகிறார் போலும்!

+தேங்காய் வீட்டின்மேலே விழாமல் இருக்க வலை போடுவது கேரளா! அதுவே பக்கத்திவீட்டுக்காரன் தலையில் விழ மரம் வளர்ப்பது நம்ம ஊரு! :P

+எப்படியும் நாங்கள் தெரிந்து கொடுக்கும் புடவையை ஏதும் காரணம் சொல்லி மனைவி மறுத்துவிடுவாள் என்பதால் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள் கணவர்கள்!

+எழுதனும்ன்னு வற்புறுத்தி வரவழைக்கப்படும் எந்த எழுத்தும் வாசகனை கவர்வதில்லை..!

+யோசிப்பு என்பதை ''ஜோ'சிப்பு என்று எழுதும் வழக்கம் எத்தனை பேரிடம்?'யோசியமா' இல்லை 'ஜோசியமா' என்ற குழப்பம் எத்தனை பேருக்குண்டு?இந்த குழப்பத்துக்கும் 'ஜோ'க்கும் என்ன சம்பந்தம்?'ஜோ' என்பது 'யோ'வை விட கொஞ்சம் கவர்ச்சியான எழுத்து என்று தோன்றுவது என்ன மாதிரியான நோய்க்கூறு?புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களின் எங்காவது 'ஷ்"/'ஷ" எழுத்து வருமாறு பார்த்துக்கொள்பவர்களுக்கும் இதற்கும் ஏதும் மரபணுத் தொடர்புகள் இருக்குமா??

ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது..இன்னும் சில வருடங்களின்,தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதத்தெரிந்தவனை எல்லாம் எழுத்தாளனாக மதிக்கத்தொடங்கிவிடுவார்கள்..!!- ட்விட்லோங்கர்

Post Comment

Tuesday, July 9, 2013

தனுஷின் "அம்பிகாபதி"-விமர்சனம் மட்டுமல்ல..!


'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சல்மான்கான்,ஹிர்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே நம்பி கால்வைத்திருக்கிறார் தனுஷ்.ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகரை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதற்க்கு பாக்ஸ்ஆபீஸ் நிலவரமே சான்று பகர்கிறது. சூர்யா,விக்ரம்,மாதவன் போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்று-அவரின் நடிப்பு..!

'பம்பாய்' போன்று எங்கே இன்னுமொரு இந்து-முஸ்லீம் கதையா என்று யோசித்திருந்த போதும், கதை ஒரு மாதிரியாக திசை மாறி வேறு இடம் நோக்கி செல்கிறது.புரோகிதர் மகன் தனுஷ்க்கும் முஸ்லிம் குடும்பத்து பெண் சோனம் கபூருக்கும் சிறுவயதிலேயே பிடித்துவிடுகிறது.ஆறு வயசா இருக்கும்போது முதன் முதலில் சோனம் கபூரை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனது பதினஞ்சு வயசில லவ்வ சொல்கிறார்.தனுஷ்க்கு ஏராளமான அடிகள் கொடுத்தபின் பின்னாடி சோனம் கபூருக்கு பிடித்துவிடுகிறது.ஆனால் அவன் இந்து என்று தெரிந்ததும் அதனை மறுக்கிறார் சோனம் கபூர்.பிரச்சனை பெரிதாக,சோனம்கபூரை வேறொரு ஊருக்கு படிக்க அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். இங்கு தனுஷ் இவள் நினைப்பில் வாட,அங்கு சென்ற சோனம் கபூர் காலேஜ் சேர்மென் மீது காதல் கொள்கிறார்.அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காணுங்கள்.

முதல் பாதி முழுவதும் காதல்&இசைன்னு கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி சீரியசாக மாறுகிறது.தனுஷ் தனக்கு தேசியவிருது கிடைத்தது சரி தான் என்கின்ற வகையில் நடிப்பை காட்டியிருக்கிறார்.தனுஷின் நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.தமிழில் அதனை தன்னுடைய நடிப்பில் கொண்டுவராத தனுஷ் இந்தியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சோனம் கபூர் கலங்கடிக்கிறார்.இங்கிருந்து தனுஷ் எல்லாம் இந்திக்கு செல்கையில்,அங்கிருந்து சோனம் கபூர் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது.தாடி மழித்த தனுஷ் மற்றும் சோனம்கபூர் இருவரினதும் பாடசாலை கால காட்சிகளை பார்க்கையில் தனுஷ் நடித்த '3'படத்தில் தனுஷ்-ஸ்ருதியை நினைவூட்டி செல்கின்றனர்.அழகான முதல் பாதி காதல் கதையையே படம் முழுவதுமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து (லாஜிக் கேள்விகளுக்கு இடம்கொடுத்து) முதல் பாதியின் அட்டகாசமான கொண்டாட்டத்தை இரண்டாம் பாதியில் சொதப்பிவிட்டது போன்று தான் தெரிந்தது.தனுஷ்-சோனம் கபூர் காதல் காட்சிகள் அருமை.! 

படம் வெளிவரமுன்னமே இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான்.பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்!வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்!பெரிதாக ஆஹா ஓஹோ படமும் இல்லை, மட்டமான படமும் இல்லை.நிச்சயம் பார்க்கக்கூடிய படம் தான் அம்பிகாபதி.முஸ்லிம் பெண் இந்து பையன் மீது காதல் கொள்வதாக படத்தில் காட்டியிருப்பதால் பாகிஸ்தானில் படம் தடை செய்யப்பட்டது மேலதிக கிக்கு.

சோனம் கபூர் நல்லவளா இல்லை கெட்டவளா சுயநலவாதியா என்று பல குழப்பங்கள். பெரும்பாலான கதாநாயகிகள் இலகுவில் ஏற்கத்தயங்கும் நெகட்டிவ் ரோல் போன்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பதாக.படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட,தனுஷ்க்கு இந்தியில் முதல்படத்துக்கு இது போன்ற  வெற்றியே பெரிய விஷயம் தான் என்று பாராட்டத்தோன்றுகிறது!இந்த வருடத்தில் படம்வெளி வந்து இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் 'ராஞ்சனா' நான்காம் இடத்திலிருக்கிறது.

1. Yeh jawaani hai Deewani - 44,87,00,000
2. Race 2 - 20,02,00,000
3. Special 26 - 17,99,00,000
4. Raanjhanaa - 17,75,00,000 approx
5. Aashiqui 2 - 17,35,00,000
6. Kai Po Che - 11,82,00,000
7. Fukrey - 10,51,00,000
8. ABCD - Any Body Can Dance - 10,17,00,000

மார்க் 62/100
--------------------------------------------------------------------------------------------

'தமிழருவி 2013'


பல்கலைக்கழகங்களின் ஏதாவது விழாக்கள் என்றால் சற்றே அலேர்ஜி எனக்கு.காரணம் நான் சென்ற பல்கலைக்கழகம் நடாத்திய எந்த விழாக்களும் அடிபிடி சண்டை,கட்சி மோதல்,பழிவாங்கும் நிகழ்வுகளாகவே முடிந்திருந்த ன.அது சமயம் சார்ந்த விழாவானாலும் சரி கலை இலக்கிய விழாக்களானாலும் சரி முடிவு ஒன்றாகத்தான் இருந்தது.கொழும்பிலே சிறப்பாக தமிழ் விழாக்களை நடாத்தும் பல்கலைக்கழகமாக நான் கணித்தது கொழும்பு பல்கலைக்கழகம் தான்.மொரட்டுவ,பேராதனிய பல்கலை கழகங்களும் பெரிய குறையில்லாமல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொரட்டுவ பல்கலைக் கழகம் நடாத்திய 'தமிழருவி 2013'என்கின்ற கலை இலக்கிய விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.


மூன்று மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும்,மங்கல விளக்கேறி,தமிழ் வாழ்த்து,வரவேற்புரைகள் முடிய ஒரு நான்கு மணி போல சென்றால் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.நிறைந்த கூட்டம் ராமகிருஷ்ண மண்டபத்தில்.பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள்.பின்வரிசைகளில் தான் இடம் கிடைத்து செட்டில் ஆனேன்.சரியான ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று ஒரு இழவும் புரிந்திருக்கவில்லை.காட்சிகளை தான் பார்க்க முடிந்தது.நடன நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன.நாட்டிய நாடகமும்,வரலாற்று நாடகமும் நன்றாக இருந்ததாக முன்வரிசையில் இருந்தவர்கள் கூறக்கேட்டேன்.ஹாரியின் திரைகக்தை வேகத்தை பார்த்தும்,அதன் சப்தத்தை காது கிழிய கேட்ட இந்த தலைமுறைக்கு ஒழுங்கான ஒலி,ஒளியமைப்பில்லாத,மேடையமைப்பு நெறியாள்கை இல்லாத,இதிகாச வரலாற்று விடயங்களை எடுத்துரைக்கும்,மெதுவாக நகரும் காட்சிகளை கொண்ட நாடகங்கள் மீதான மோகம்,விருப்பு முற்றாக இல்லாது போய்க்கொண்டிருப்பதை காணமுடிந்தது.

'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன/தோல்வியடைந்திருக்கின்றன' என்கின்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை பார்ப்பது தான் நிகழ்ச்சிக்கு சென்றதன் நோக்கமாக இருந்தாலும்,மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு ஏழு மணி தாண்டியும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் அறிகுறி தென்படாததால்,வீடு திரும்பிவிட்டேன்.இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துதல் பெரிய வரவேற்கத்தக்க விடயம்.அதையே அதிகபட்சமாக ஒரு நான்கு மணி நேரத்தில் நடாத்தி முடிப்பது இன்னமும் வரவேற்கத்தக்க விடயம்.நிகழ்வில் முகம் தெரியாமல் பழகிய ஏராளமான நண்பர்களை சந்திக்க முடிந்தது.இனிய ஞாயிறு!எப்படியும் பட்டிமன்றத்தின் முடிவு 'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று தான் அமைந்திருக்க வேண்டும். காரணம் கண் முன் தகுந்த தலைமைகள் எவருமே தெரிகிறார்களில்லை!
---------------------------------------------------------------------------------------

"விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி"




எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இருக்கும் பேஸ்புக் வாசகர்வட்டம் எந்தளவுக்கு பிரபலமோ,அதற்கு இணையாக பிரபலமாகியிருப்பது அவரின் விமர்சகர் வட்டம்.சகலவிதமான விடயங்களும் கிழித்து தொங்கப்போடும் சம்பவங்களும் அங்கு நடைபெறும்.இவ்வட்டத்தின் உருவாக்கத்துக்கு பின்னதாக சாருவின் எழுத்து,நடத்தையில் மட்டுமன்றி,வாசகர் வட்ட செயல்பாடுகள் அராஜகங்களில் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டதை இருசம்பவங்களையும் கூர்ந்து அவ்தானித்து வருபவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வாசகர் வட்ட அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல்,பயனுள்ள வேலைகளையும் செய்யலாமே என்கின்ற அடிப்படையில்,சிறுகதை போட்டியொன்றை நடாத்துகின்றனர் அவர்கள்.விருப்பமானோர் பங்குபற்றலாம். பரிசுகள் உண்டு.போட்டி சம்பந்தமான தகவல்கள் இவை:

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

நண்பர்களே,நமது வட்டம் சார்பாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

-----------------------------------------------------------------------------------------
ட்விட்டரில் நான்..!

ட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால்  பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா.."ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடா?ஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா?"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு  நல்லதுன்னா எதுவுமே......?!
என்னுடைய ட்விட்டர் ஐடி : "மைந்தன் சிவா"

இந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..!கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:

-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும்.! ஒன்னத்தையும் காணோம்!! வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்!#சிங்கம்2

-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோ!But'பாத்து சேத்து சீவிட போறீங்க"&"கப்பல் தரை தட்டுது" செம!#சிங்கம்2

-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..!#சிங்கம்2

-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க?#சிங்கம்2

-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்!இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல!#சிங்கம்2

-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம்! பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா?#சிங்கம்2

-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..!#சிங்கம்2

-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன்! செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3

-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க!#சிங்கம்2

-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!#சிங்கம்2

-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுக!சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்!#சிங்கம்2

-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா?#சிங்கம்2

-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது! #சிங்கம்2

-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்!#சிங்கம்2

-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது..! ஐ ஜஸ்ட் லவ் இட்!#சிங்கம்2

-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்!#சிங்கம்2

-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போல!சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்!#சிங்கம்2
-----------------------------------------------------------------------------------------

டிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...