Sunday, December 9, 2012

ஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்?



வெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய வரும்.ஏன் எதற்கு என்று காரணமின்றியே பொதுவிலிருந்து ஒழித்து மறைக்கப்பட்ட விடயமாகிவிட்டன முன்னைய காலங்களில் காதலும்;இப்போ காமமும்.அதற்க்கு அடுத்ததாக சமூகத்தில் எம்மை சுற்றி பெரியளவில் பரவிவரும் "வருத்தம்"கூட இதே வகையறா தான்.ஆம் அது ஒருவகையான வருத்தம் என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு வீதமானோர் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றனர்.

புரியவில்லையா எதனை பற்றி கூறிக்கொண்டிருக்கிறேன் என்று? அண்மையில் கொழும்பு,பம்பலபிட்டி கடல்கரை ஓரமாய் ஒரு கார் ஒன்றினுள் ஒருவர் கழுத்து வெட்டப்பட்டு இறந்துகிடந்தார்.கொலை தான்.,ஆனால் பணத்துக்காகவா இல்லை வேறு ஏதும் வெட்டுக்குத்தா  கோணத்தில் அனைவரும் ஜோசித்துக்கொண்டிருந்த சமயம் தான் அந்த கொலைக்கான காரணம் தெரியவந்தது,அதுவே கடந்த சில நாட்களாக "டாக் ஒப் த டவுன்"ஆக மாறி இருந்தது.ஆமாங்க கொலைக்கான காரணம் ஆண்-ஆண் காதல்/தொடர்பு/உறவு தான் என்று தெரிந்த கணத்தில், அனைவரும் உண்மையில் அதிர்ந்துதான் போய்விட்டார்கள்.

ஒரு வர்த்தகரின் நண்பருக்கும், வர்த்தகரின் மகனுக்குமிடையிலான ஹோமோ உறவு பற்றி குறித்த வர்த்தகருக்கு தெரிய வந்து,அதனை நிறுத்துமாறு நண்பரை எச்சரித்திருக்கிறார் வர்த்தகர்.பெற்றோர் சொல்லி எத்தனை பிள்ளைகள் காதலை விட்டிருக்கின்றனர்?அது போல தான் இந்த உறவும் அவர்களால் கைவிட முடியாத உறவாகி தொடர,வேறு வழி தெரியாத குறிப்பிட்ட வர்த்தகர் கடல்கரை ஓரமாய் ஒரு காருக்குள் தனது நண்பரை கழுத்துவெட்டி கொலை செய்திருக்கின்றார்.போலீஸ் எப்படியோ மோப்பம் பிடித்து கொலையாளியை கைதுசெய்திருக்கிறது. 

                

ஒருசில மாதங்களுக்கு முன்னராக பேஸ்புக்கில் நான் கொழும்பில் ஒரு இடத்தில் இரு ஆண்கள் முத்தமிட்டுக்கொண்டிருப்பதை பார்த்தேன் என்று ஒரு நிலைத்தகவலை பகிர்ந்த போது,"இவன் சும்மா பேமசுக்காக கதை விடுறான்"என்கின்ற ரீதியில் தான் சிலர் பேசிக்கொண்டார்கள்,ஏன் என்னிடமே நீ பொய் தானே சொல்கிறார் என்று தான் கேட்டார்களே தவிர அதனை ஒரு விளிப்புணர்வாய் எத்தனை பேர் கருதியிருப்பார்கள் என்றால் மிக சொற்பமாகவே இருந்திருக்கும்.

இதைப்பற்றி மேலும் எனது நண்பர்களிடம் கிலாகித்த சமயத்தில் தெரிந்துகொண்டது என்னவெனில்,இப்படியான "ஓரினச்செயற்க்கையாளர்கள்" வருடாந்தம் ஒரு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை தலைநகரில் நடாத்தி வருகிறார்கள்,அதுவும் ஒவ்வொரு அதனில் வருடமும் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து செல்கிறது என்பது தான்.இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கொல்கத்தா,மும்பை,சென்னை என்று இத்தகைய பேரணிகள் கூட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. 



கடந்தவாரம் பொரளை செல்லும் பேரூந்தில் ஒருத்தனை நையப்புடைத்து பேரூந்தைவிட்டு வெளியே தள்ளிவிட்டான் ஒருத்தன்.என்ன காரணம் என்று கேட்டதற்கு பக்கத்தில் நின்ற ஒரு பெண்ணின் கூந்தலை முகர்ந்தானாம்.பிழை தான்;சரி என்று சொல்லவில்லை,ஆனால் இதைவிட பெரிய கொடுமைகள் வெளியில் தெரியாமலே நடந்தேறுகின்றன. பேரூந்துகளில் சில ஆண்களின் பெண்களை நோக்கி நீட்டிய "பீரங்கி"கள், பெண்கள் இல்லாத சந்தர்ப்பங்களில் ஆண்களின் பக்கம் கூட திரும்புகின்றனவோ என்கின்ற சந்தேகம் எனக்கு நீண்ட நாட்களாகவே தொடர்கிறது.

இதனாலேயே நான் சில சமயங்களில் பேரூந்தில் இருந்து வருவதை தவிர்த்து நின்ற நிலையில் பிரயாணம் செய்கின்றேன்.நான் மட்டுமல்ல பல நண்பர்கள் இதனை "அனுபவித்திருப்பார்கள்"உணர்ந்திருப்பார்கள்.இருக்கையில் இருக்கும் போது எமது தோள்களை இந்த பீரங்கிகள் எப்போதும் குறிவைக்க தவறுவதில்லை. இவர்கள் காமுகர்களா;அப்படியானால் எங்களுக்கே இப்படி என்றால் பெண்களின் நிலை? அல்லது இவர்கள் அவர்களா?ஓரின பால்கவர்ச்சி கொண்டவர்களா?

இந்த குழப்பத்துக்கு விடை கண்டுகொள்வது மிக கடினமானது.காமுகனாய் இருந்தால் அந்த இடத்திலேயே அவனை நாறடித்து விடலாம்.அதுஒன்றும் பெரியவிடயம் இல்லை.ஆனால் இவர்கள் அவர்களாக இருந்தால்?அதே தண்டனை இவர்களுக்கும் பொருந்துமா?அவ்வாறு செய்வதால் அவர்களின் உணர்சிகளை கேவலப்படுத்தி விடுவோமா என்கின்ற குழப்பம் பெரும்பாலான சமயங்களில் எனது வாயையும் கையையும் கட்டிப்போட்டுவிடுகின்றன.



சமூகத்தால் அடக்கப்படும் சில உணர்ச்சிகள் தான் ஒருசமயத்தில் போராட்டமாய் வெடிக்கின்றன.அது இவர்களுக்கும் பொருந்தும் தானே?அனைத்து தரப்பினர்களாலும் புரிந்துகொள்ளப்படாத அவர்களின் விருப்புவெறுப்புகள் ஒருகட்டத்தில் அவர்களை பாதித்து அதுவே அவர்களை வீரியமாக்கவும் செய்யும் என்பது தெரியாததல்ல.ஆனால் தனிப்பட்ட உணர்சிகளை மற்றையவர் சம்மதம் இல்லாமல்  பொது இடத்தில் பிரயோகிப்பது முற்றிலும் தவறானது அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மருத்துவத்துறை கூட ஓரினச்சேர்க்கை தவறானது என்று அறிக்கை விட்டவுடன்,இது ஒரு "நோய்" என்று கருதும் தோற்றப்பாடு இன்றுவரை தொடர்கிறது.பிள்ளை பிறக்க வாய்ப்பில்லாத எந்தவொரு உறவும் பாவம்.அது இயற்கைக்கு புறம்பானது என்று கிறீஸ்தவ சமயமும்  எதிர்த்ததால் இவர்களின் பாடு பெரும் பாவமாகிவிட்டது.

ஓரினச்செயர்க்கை என்பது பெரும்பாலானோருக்கு பிறவியிலேயே வந்துவிடுகிறது,கர்ப்பத்தின்போதான ஹோர்மோன்களின் குளறுபடியால் இது ஏற்படுகிறது என்று ஒரு கருத்து நிலவுகிறது.அப்படி என்றால் இது அவர்களின் தவறல்லவே.மாறாக குழுவாக செயல்படும்போதும்,சிறுவயதில் குழப்பமான சூழலில் வளரும்போதும் இத்தகைய தம்-பால் கவர்ச்சி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும் இதற்க்கான சரியான காரணம் இன்னமும் தெரியவராத நிலையில் ஒவ்வொருத்தரும் அவரவர் மனநிலைக்கு ஏற்றவகையில் பெரும்பாலானோர் எதிர்ப்பால் மீதான நாட்டமும் சிலர் தம்-பால் மீதான நாட்டத்தையும் கொண்டிருக்கின்றனர். 

குற்ற உணர்வுஎன்பது  ஓரினச்செயர்க்கையாளர்களுக்கு எந்தவொரு கணமும் ஏற்படக்கூடியது தான்.பெண் ஓரினச்சேர்க்கையாளர்களை விட ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெருமளவிலான குற்றவுணர்வால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.ஆண் ஓரின செயற்க்கையாளர்களில் ஒருவர் ஆணாகவும்,மற்றையவர்  தங்களை பாவனைப்படுத்தி கொள்வர்.இதில் பெண்ணாக தன்னை உருவகப்படுத்தும் ஆண் தான் சமூகத்தால் பெருமளவு மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகம்.காரணம் எமது சமூகம் ஒரு ஆண் பெண்ணாக நடப்பதை எத்தருணத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை.


      

ஆண்-பெண் உறவு என்கின்ற நல்ல கட்டமைப்புக்குள் இருக்கும் இந்த சமுதாயம்,கலாச்சாரம் எல்லாம் இவர்களை அனுமதிப்பதன் மூலம் குழப்பமடைந்து சிதைந்துவிடும் என்பது தான் பலரின் கருத்தாக இருக்கிறது.ஆனால் இந்த ஆண் பெண் உறவுகளுக்கு பின்னால் ஒளிந்து மறைந்திருக்கும் ஆயிரக்கணக்கான கள்ள உறவுகள்,முறையற்ற உறவுமுறைகள் ஏன் ஹோமோ உறவுகள் கூட இதுவரை காலமும் மழுங்கடிக்கப்பட்டும் மூடி மறைக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அல்லது தெரிந்தும் தெரியாமலும் இருக்கின்றோம் என்கின்ற ரீதியில் இருந்திருக்கின்றனர்.

சரி இவற்றை மறைத்து,இவர்களின் உணர்வுகளை அடக்கித்தான் வைத்திருப்போம் என சமூகத்தில் அனைவரும் கிளம்பினால் வெகு சீக்கிரம் ஒரு நாள் இவர்களது எதிர்கால சந்ததியில் ஒரு பிள்ளை வந்து தைரியமாக "அப்பா,நான் ஒரு gay" என்றோ இல்லை மகள் வந்து நான் ஒரு லெஸ்பியன் என்றோ வெளிப்படையாக துணிந்து கூறும் காலம் ஒன்றும் தொலைவில் இல்லை.இதை நான் கூறுவதற்கு காரணம், அந்தளவில் எம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாமலே இவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. 

ஒரு சில நாடுகளில் இவர்களின் செயல்பாடுகள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன,திருமணங்களும் நடந்தேறுகின்றன முறைப்படி.அதுபோல சில பிரபலங்கள் கூட தாங்கள் ஒரு ஹோமோ செக்சுவல் தான் என்று வெளிப்படையாக அறிவித்தவண்ணமிருக்கின்றனர். மறுபக்கம் பேரணி,ஆர்ப்பாட்டம் என்றும்,"லிவிங் டுகெதர்" என்றும் அவர்கள் படிப்படியாக சமூகத்தில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.இதன் வளர்ச்சி அடுத்த ஐந்து பத்து வருடங்களில் அபரிதமாக இருக்கலாம். 

இவர்களால் தான் எயிட்ஸ் நோய் கூட பெறுமளவில் பரவுகிறது என்கின்ற சமூகத்தின் பயத்தினால் இவர்கள் மீது ஒரு கேவலமான பார்வையே எப்போதும் சமூகத்திடமிருந்து இவர்களுக்கு பரிசாக கிடைக்கிறது.இன்றைய இளைய சமுதாயம் ஓரளவுக்கேனும் இவர்களை பற்றி புரிந்துகொள்ள ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்க விடயம்.ஆனால் இது போதாது.முழு சமுதாய அளவில் இவர்கள் பற்றியும்,இவர்களது உணர்வுகள் பற்றியும் ஒருவித விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.அவர்களை முதலில் சமூகம் அங்கீகரிக்கட்டும்;அதன்பின்னர் அவர்களால் ஏற்படும் பிரச்சனைகள் பற்றி பொதுப்படையாக பேசலாம்.

குறிப்பு: எந்த கருத்தாக இருந்தாலும் இங்கு பகிருங்கள்,இன்று இதனை பேஸ்புக்கில் பகிரவுமுள்ளேன்.மேலதிக கருத்துபரிமாற்றங்களுக்கு அங்கும் தொடரலாம்.
தொடர: மைந்தன் சிவா


Post Comment

3 comments:

Sri Lanka Tamil News said...

விபரீதமான ஒரு தகவலை சுவைபட எழுதி உள்ளீர்கள்.
மிக்க நன்றி.

துளிவானம் said...

hi
சிலர் தங்களுடைய உணர்வுகளை இலகுவாக வெளிப்படுத்துவார்கள் இருப்பினும் என்ன்னால் என் ஆசைகளை வெளியில் சொல்ல ம்டியால்ம் உள்ளே வைத்து புழுங்கி கொண்டிருக்கிறேன். காரணம் நான் வாழும் நாடு , சூலல் அவ்வாறு இல்ருக்கின்றது. என்னை யார் புரிந்துகொள்வர்? என்னுடைய face book id sada_sameer @yahoo .com

துளிவானம் said...

சிலர் தங்களுடைய உணர்வுகளை இலகுவாக வெளிப்படுத்துவார்கள் இருப்பினும் என்ன்னால் என் ஆசைகளை வெளியில் சொல்ல ம்டியால்ம் உள்ளே வைத்து புழுங்கி கொண்டிருக்கிறேன். காரணம் நான் வாழும் நாடு , சூலல் அவ்வாறு இல்ருக்கின்றது. என்னை யார் புரிந்துகொள்வர்? என்னுடைய face book id sada_sameer @yahoo .com

Related Posts Plugin for WordPress, Blogger...