Wednesday, December 29, 2010

மண்டியிட்டது மறுபடியும் அவுஸ்திரேலியா!


அவுஸ்திரேலிய ரசிகர்களின் சத்தம் கேட்கவில்லையாம்!!

கடந்த வாரம் நடைபெற்றதை மறப்பதே ஆஷஸ்'இல் வெற்றி பெறுவதற்கான ரகசியம் என மெல்போர்ன் போட்டி தொடங்குவதற்கு முன்னரேயே கெவின் பீட்டர்சன் கூறியிருந்தார்.அதற்க்கேற்றவகையில் அடிலெயிட் தோல்வியை மறந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது.
இருபத்தி நான்கு வருடங்களுக்கு பிறகு அவுஸ்திரேலியாவில் இங்கிலாந்து ஆஷஸ்'ஐ தக்கவைத்துக்கொண்டுள்ளது!1956 'ஆம் ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பெற்ற மாபெரும் வெற்றி!!இன்னிங்க்ஸ் மற்றும் 157 ஓட்டங்களால் அபார வெற்றி!!2010 /2011 ஆஷஸ்'இல் இரண்டாவது இன்னிங்க்ஸ் தோல்வி அவுஸ்திரேலியாவுக்கு..ஆஷஸ்'இல் அதிகம் அடிபட்ட தலைவராக பாண்டிங்..!!

மெல்போர்ன்'இல் கடந்த பத்துப் போட்டிகளில் ஒன்பதில் வெற்றி,மூன்றாவது ஆஷஸ் போட்டியில் 267 என்ற மாபெரும் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி என்ற சாதகமான சூழ்நிலையில் போக்ஸ்சிங் டே (Boxing Day )போட்டி ஆரம்பமானது.
மெல்போர்ன்'இல் கடந்த 12 போட்டிகளும் வெற்றி,தோல்வி முடிவை தந்திருந்தமையால் இந்தப் போட்டியிலும் ஏதாவது முடிவு கிடைக்குமென நம்பப்பட்டது.

போர்ம் இன்றி தவித்து வரும் பாண்டிங்'கு இந்த மைதானத்தில் சராசரி 62 .42 ,எனவே இந்தப் போட்டியிலாவது பாண்டிங் போர்ம்'கு திரும்புவார் என எதிர்பார்த்தேன்.
கடந்த போட்டியில் காயமடைந்த பாண்டிங் விளையாடாவிட்டால் உஸ்மான் காவஜா விளையாடக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் காயத்தில் பாண்டிங் குணமடைந்தமையால் காவஜா'க்கு விளையாட வாய்ப்புக் கிடைக்கவில்லை.கிளார்க் அல்லது பாண்டிங்'கு பதிலாக காவஜாவை முயற்சி செய்து பார்த்திருக்கலாம்.

இங்கிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றமாக களைப்படைந்த பின்'னுக்காக(Finn ) டிம் ப்ரெஸ்னன் களமிறக்கப்பட்டார்.காயத்தால் அவதிப்பட்ட அன்டர்சன் மீண்டு வந்து விளையாடினார்.
டாஸ்'சில் வென்ற ஸ்ட்ராஸ் அவுஸ்திரேலியாவை துடுப்பாட பணித்தார்.அதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலியா முதல் ஓவர்'ரிலேயே தடுமாறத்தொடங்கி 98 ஓட்டங்களுக்கு முற்றாக ஆட்டமிழந்தது.
தடுமாறிய வாட்சன் அன்டேர்சனின் பந்துக்கு இருமுறை வாய்ப்பு வழங்கி பீட்டர்சன்,கொலிங்க்வூத் தவறவிட இறுதியாக 5 ஓட்டங்களுக்கு ற்றேம்லேட்'இன் பந்துக்கு ஆட்டமிழந்து விழாவைத் தொடக்கி வைத்தார்.

அடுத்து வந்த பாண்டிங் ஆரம்பத்தில் மிக அவதானமாக 33 பந்துகளில் 2 ஓட்டங்களை பெற்றார்..என்றாலும் ற்றேம்லேட் விட்டுவைக்கவில்லை.பத்து ஓட்டங்களுடன் ஸ்லிப்'இல் சுவானிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து போர்ம் இல்லாமல் தவிக்கும் ஹியூக்ஸ்'ம் செல்ல அவுஸ்திரேலியாவின் நம்பிக்கைத் தூண் ஹஸ்ஸி இறங்கினார்.(இம்முறை ஹஸ்ஸி அவுஸ்திரேலியாவை காப்பாற்றக் கூடாது என Fb 'இல் ஸ்டேடஸ் போட்டேன்).
வேண்டுகோள் பலித்து.அன்டர்சன் தனது முதலாவது விக்கட்'டாக ஹசியை அனுப்பிவைத்தார்.முதல் நாளில்
மழை வந்து வந்து குறுக்கிட முன்னர் அன்டேர்சனின் சுவிங்க்ஸ் பந்துக்கு இரையானார் ஹசி.
58 /4 என்று இருந்த போது மழை வந்து குழப்பியது.

ஆடுகளம் எதிர்பார்த்ததை விட அதிக பௌன்ஸ்'ஆனது.
நம்பிக்கையாக ஆடிக்கொண்டிருந்த கிளார்க்,ஸ்மித்,ஹாடின் என மூன்று பேரும் அடுத்தடுத்த மூன்று ஓவர்களில் ஆட்டமிழக்க(34 ,35 ,36 ) 98 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது அவுஸ்திரேலியா.இது மெல்போர்ன்'இல் அவுஸ்திரேலியாவின் இரண்டாவது குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.(இதற்க்கு முன்னர் இந்தியாவுக்கு எதிராக 1981 ' ஆம் ஆண்டு 81 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது).அத்துடன் கடந்த 74 வருடங்களில் ஆஷஸ் போட்டியொன்றில் சொந்த மைதானத்தில் பெற்ற குறைந்த ஓட்டங்களாகும்.
அனைத்து விக்கெட்டுகளும் இங்கிலாந்து seemers 'ஆலேயே வீழ்த்தப்பட்டன.அன்டர்சன் நான்கு,ற்றேமேலேட் நான்கு,ப்ரெஸ்னன் இரண்டு என கைப்பற்றியது போக ஆறு விக்கெட்டுகள் விக்கெட் காப்பாளர் மட் ப்ரயொர்'இடம் பிடி கொடுத்தும்,இரண்டு விக்கெட்டுகள் ஸ்லிப்பில் பிடி கொடுத்தும்,மிகுதி இரண்டும் கலி(gully ) பிரதேசத்தில் பிடி கொடுத்தும் ஆட்டமிழப்பு செய்யப்பட்டது.(ற்றேம்லட் பரோட்'டுக்கான பதிலீட்டு வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.)

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவின் போது விக்கட் இழப்பின்றி 157 ஓட்டங்களை பெற்றது.குக்,ஸ்ட்ராஸ் ஆரம்ப இணை பத்தாவது தடவையாக 100 கடந்தது.ஸ்ட்ராஸ் 46 ஓட்டங்களை பெற்ற வேளையில் டெஸ்ட் போட்டிகளில் 6000 என்ற ஓட்ட இலக்கை அடைந்த 52 'ஆவது வீரராக பதிவானார்.(11 'வது இங்கிலாந்து வீரர்).

அடுத்த போட்டியிலாவது..??

இரண்டாவது நாள் ஆரம்பிக்க,முதல் மணித்தியாலத்திலேயே ஆரம்ப ஜோடியை அரங்கிற்கு அனுப்பி வைத்தார் சிடில்.
கொஞ்சமாவது மிரட்டக்கூடிய ஒரே பந்துவீச்சாளர் சிடில்'ஆகத் தான் காணப்பட்டார்.தகுந்த உதவி மறுபக்கத்திலிருந்து ஜோன்சனாலேயோ,ஹரிஸ்,ஹில்பென்ஹாஸ்'ஆலேயோ வழங்கமுடியவில்லை.அரைச்சதம் கடந்த பீட்டர்சனையும் சிடில் களையெடுக்க,போர்ம் இல்லாத கோல்லிங்க்வூத் மற்றும் பெல் ஜோன்சன்'நின் பந்தில் சிடில்'லிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தனர்.
இடையிலே பாண்டிங்'இன் திருவிளையாடலும் நடைபெற்றது..ரொம்பவே சூடாக காணப்பட்டார் தலைவர் பாண்டிங்.(வீட்டே அனுப்பப்போகிறார்கள் என்று யாராச்சும் காதில் ஊதிவிட்டிருந்தார்களோ?).நடுவர்களுடன் வாக்குவாதப்பட்டார்..



அதன் காணொளியை இங்கே பாருங்கள்!!

பின்னர் வந்த ப்ரயொர்'ம் ற்றோட்'டும் அருமையான இணைப்பாட்டம் ஒன்றைப் புரிந்து இங்கிலாந்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றனர்.இருவருமாக 173 ஓட்ட இணைப்பாட்டத்தை பெற்ற வேளையில் மூன்றாம் நாள் ஆட்டத்தின் போது சிடில் ப்ரயொர்'ஐ அனுப்பி வைத்தார்.பின்னர் ஸ்வான் கொஞ்சம் தாக்குபிடித்து செல்ல இறுதி மூன்று விக்கெட்டுகளும் ற்றோட் 168 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் வீழ்த்தப்பட்டன.
ஸ்வானை ஆட்டமிழக்க ஹடின் பிடித்த பிடி இன்னும் என்னால் நம்பமுடியவில்லை.இரு கைகளையும் ஒன்று சேரப் பிடித்தார் பாருங்கள்..நான் நினைத்தேன் அவருக்கு மேலால் போய் பந்து எல்லைக் கோட்டைக் கடந்தது என்று!!
சிடில் சிறப்பாக ஆறு விக்கட்டுகளை வீழ்த்தினார்.

இறுதியாக 513 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது இங்கிலாந்து.முதல் இன்னிங்க்ஸ்'இல் அவுஸ்திரேலியாவை விட இங்கிலாந்து 415 ஓட்டங்களைப் பெற்றமையானது ஆஷஸ் வரலாற்றில் அதிகப்படியான ஓட்ட முன்னிலையாகும்.(அதிகப்படியானது இலங்கை அணியால் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக கொழும்பில் பெற்ற 587 ஓட்டங்களே காணப்படுகிறது.அத்துடன் முதல் இன்னிங்க்ஸ் அனைத்து அணிகளாலும் பெறப்பட்ட அதி கூடிய 6 ஓட்ட முன்னிலைகளில் 4 சந்தர்ப்பங்கள் இலங்கை அணியாலேயே பெறப்பட்டன என்பது சிறப்பு!)

மூன்றாம் நாள் மதிய போசனத்துக்கு பின்னர் களமிறங்கிய அவுஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 98 /1 என்று இருந்தது.வட்சன் 54 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மூன்றாம் நாள் முடிவின் போது ஆறு விக்கட்டுகளை இழந்து வெறுமனே 169 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்திரேலியா.(கடந்த பதினோரு இன்னிங்க்ஸ்'களில் வட்சன் 50'களில் ஆட்டமிழக்கும் ஐந்தாவது சந்தர்ப்பம் இது!)
பாண்டிங் 20 ௦,கிளார்க் 13 என்று போக,அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஹசி பூச்சியத்துடன் அரங்கு திரும்பினார்.
வாட்சன்,பாண்டிங்,ஹசி என முக்கிய விக்கட்டுகளை ப்ரெஸ்னன் வீழ்த்தினார்.

ரயன் ஹரிஸ் அடுத்த போட்டியில் விளையாடப்போவதில்லை.சத்திரசிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.அவருக்கு பதிலாக யார் விளையாடப் போகிறார்கள் என்பது கஷ்டமான கேள்வி.ஜோன்சன்,சிடில்,ஹில்பென்ஹாஸ் தான் இப்போது மிஞ்சியுள்ள கூட்டணி.அதிலும் ஹில்பென்ஹாஸ் மூன்று போட்டிகளில் நான்கு விக்கட்டுகள்,73 .5 என்ற சராசரியுடன் காணப்படுகிறார்.அடுத்த போட்டியில் இவரை சேர்ப்பார்களா என்பதும் சந்தேகம்.ஸ்டீபென் ஸ்மித் பாண்டிங்,கிளார்க்'ஐ விட கொஞ்சம் பரவாயில்லை துடுப்பாட்டத்தில்!!பந்துவீச்சு பரிதாபம்.ஹோரிட்ஸ்'ஐ அடுத்த போட்டியில் கட்டாயம் களமிறக்குவார்கள்.(கடந்த இரண்டு ஸ்டேட் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை அடித்திருக்கிறார்.பந்துவீச்சாளராக இல்லாவிடிலும்,துடுப்பாட்டவீரராக களமிறக்கலாம்..ஹிஹி).
அல்லது ஸ்டீவ் o 'கீபி(steve o 'keefe ),ஜாசன் க்றேசா'வை பரீட்சிக்கலாம்..

துடுப்பாட்டம் பாண்டிங்,கிளார்க்,ஹியூக்ஸ் சொதப்புகின்றனர்.பாண்டிங் 16 ,கிளார்க் 21 என்று சராசரியை வித்துக்கொண்டிருக்கின்றனர். பில் ஜாக்ஸ்,காவஜாவை அடுத்த போட்டியிலாவது களமிறக்கலாம்.பாண்டிங் அடுத்த போட்டியில் விளையாடமாட்டார் என நம்பப்படுகிறது.அவரது விரல் காயத்தை காரணம் காட்டி விளையாடாமல் இருக்கப்போகிறார்.அதை தான் அனைவரும் விரும்புகிறனர்.ஹிஹிபாண்டிங்'இன் எதிர்காலம் கேள்விக்குறி.துடுப்பாட்டம் சொதப்பல்..மைதானத்தில் நடத்தை சொதப்பல்.இயன் சப்பல் பாண்டிங்'கு போட்டித் தடை விதித்திருக்க வேண்டும் என்று கூறியதிலிருந்தே எவளவு கடுப்பாக இருக்கிறார்கள் என்று புலனாகும்.

இங்கிலாந்தில் பெரிதாக மாற்றங்கள் இருக்கப்போவதில்லை.கோல்லிங்க்வூத் தான் மாற்றம் தேவையெனில் மாற்றப்படவேண்டிய ஆள்.குக்,ஸ்ட்ராஸ்,பெல்,பீட்டர்சன்,ப்ரயொர் என்று அனைவரும் வெளுத்துக்கட்ட தயாராகவே உள்ளனர் சிட்னியில். ஆனால் வெற்றி பெற்ற அணியையே அடுத்த போட்டியில் களமிறக்க அண்டி பிளவர் விரும்பக்கூடும்.நானும் அதையே விரும்புகிறேன்.கடைசிப் போட்டியிலாவது கோல்லிங்க்வூத் போர்ம்'க்கு வரமாட்டாரா என்ற நப்பாசை தான்!!அடுத்த போட்டியிலும் குக் ஒரு அரைச்சதம் ஆவது அடித்தால் நான் முதலே கூறியது போலே தொடர் நாயகன் விருதை தட்டிச் செல்லலாம்.அல்லது அண்டேர்சனுக்கும் வாய்ப்பு இருக்கிறது.
காயத்திலிருந்து மீண்டு வந்து இந்தப் போட்டியில் அன்டர்சன் முதல் இன்னிங்க்ஸ்'இல் வீழ்த்திய நான்கு விக்கெட்டுகள் அபாரம்!!சுழலுக்கு சாதகமான சிட்னியில் ஸ்வான் சாதிப்பார் என நம்பலாம் ..ஆனால் அவுஸ்திரேலியாவின் சார்பாக யார் சாதிக்கப்போகின்றார் என்பதே கேள்வி.சிடில் இரு இன்னிங்க்ஸ்'களில் தலா ஆறு விக்கட்டுகள் வீழ்த்தினாலும்,மற்றைய இன்னிங்க்ஸ்'களில் சொதப்பல் தான்.
பதிலீட்டு வீரர்களான ற்றேம்லேட்,ப்ரெஸ்னன் ஆகியோர் இங்கிலாந்து வெற்றிக்கு சிடப்பாக பங்களிக்கின்றனர்.ஆனால் அவுஸ்திரேலியாவுக்கு அவர்களது முக்கிய வீரர்களே(key players ) தடுமாறுகிறனர்.
சிடில் நாற்பது ஓட்டங்களை எடுத்தார் இறுதியில் ஹடினோடு சேர்ந்து..அவ்வாறு கூட ஆட முடியவில்லை பாண்டிங்,கிளார்க்,ஹியூக்ஸ்'ஆல்!!இம்முறை படு அவமானமாக போனதற்கு காரணம் ஹசி ஒரு அரைச்சதமாவது அடிக்காததே காரணம்.
வெற்றிக்களிப்பு!!இங்கிலாந்து ரசிகரான எனக்கு உணர்ச்சி பொங்குகிறது!!

மூன்றாவது டெஸ்டில் அவுஸ்திரேலியா வெல்ல முக்கிய காரணம் ஜோன்சனின் எழுச்சியே என்று முன்னர் கூறியிருந்தேன்..இந்த போட்டியில் தோற்றதற்கு காரணம் யாருமே எழுச்சி பெறவில்லை!!நித்திரை போலும் அனைவரும்!
பெரும்பாலும் இங்கிலாந்து இந்த ஆஷஸ் தொடரை வென்றுவிட்டது என்றே கூற முனைப்பு வருகிறது..ஆனால் மீண்டும் அவுஸ்திரேலியா எழுச்சி கொள்ளுமா?சிட்னி வரை பொறுத்திருப்போம்!!
அவுஸ்திரேலிய அணியினரின் பலம் பலவீனங்களை லோஷன் அண்ணாவும்,அனலிஸ்ட் கன்கொனும் நன்றாக விளக்குவார்கள் என எதிர்பார்க்கிறேன்!!(பாவம் இருவரும்..விடிய விடிய ஒரே அழுகையாம்!!)
அடுத்த ஆஷஸ்...கட்டாயமாக நீங்கவரமாட்டீங்க கை குலுக்க பாண்டிங்!!

Post Comment

Monday, December 27, 2010

2011 Hot நடிக,நடிகையர் படங்கள்!!


சினிமா போட்டோகிராபர் வெங்கட்ராம், தமிழ் திரையுலக நட்சத்திரங்களை படமாக்கி, 2011&ம் வருட காலண்டரை உருவாக்கியுள்ளார். இதில் விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி, ஸ்ருதிஹாசன், சிலம்பரசன், தமன்னா, நாகார்ஜூனா, ஜெனிலியா, நயன்தாரா, த்ரிஷா, ஸ்ரேயா போஸ் கொடுத்துள்ளனர். இந்த காலண்டரின் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. உதயநிதி ஸ்டாலின், ராதிகா சரத்குமார் முன்னிலையில் மணிரத்னம் வெளியிட்டார். முதல் பிரதியை த்ரிஷா பெற்றார். எம்.எஸ்.குகன், சுரேஷ் பாலாஜி, சுரேஷ் மேனன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை உமா பத்மநாபன் தொகுத்து வழங்கினார்.-நன்றி தினகரன்.

படங்களை பார்த்தவுடனேயே எனக்கு பிடித்துவிட்டது.நீங்களும் பார்க்கட்டுமே என்று எனது வலைத்தளத்தில் பகிர்வுசெய்கிறேன்.
கண்டிப்பான வேண்டுகோள்:யாராவது படங்களை பார்த்துவிட்டு கடுப்பானால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.



சிம்பு ரொம்பவே அழகாக இருக்கிறார்..
ஆர்யா முடியை வெட்டாமல் இருந்திருக்கலாம்..
ஸ்ருதி-ம்ம் ஹாட்
திரிஷா-நம்பவே முடியவில்லை..
நயன்தாரா-இனிமேல் வேண்டாம் நமக்கு..
நாகர்ஜூனா-வயசு தெரிகிறது..
சூர்யா-அழகு..கொஞ்சம் வளர்ந்திருக்கலாம்..
கார்த்தி-அப்படியே இருக்கிறார்..
தமன்னா-ம்ம் கோடிகள் தான்!!
விக்ரம்-பீல்ட்'இல் இருக்காரா??

பார்க்கிற நமக்கே....என்றால்,
படமெடுத்த வெங்கட்ராமுக்கு எப்படி இருந்திருக்கும் ??
குறிப்பு:ஒட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை,தினகரனிடம் போட்டு மட்டும் கொடுக்காதீர்கள்!!ஹிஹி



Post Comment

Saturday, December 25, 2010

புரிதல் இல்லா புனைவுகள்!!



ஏமாற்றல்களும் ஏமாறல்களுமாய்
இனம்புரியாத நபர்களுடன்
இனம்புரியாத வாழ்க்கை-புரியும் மட்டும்!!
பழையன கழிதல் போலே
ஞாபகங்கள்..
உறவுகள்..
ஞாபகமின்றியே புதைக்கப்படும்-வேளையில்
புதிய உறவுக்கான அத்திபாரம்
உறுதியாய் அல்லாமல் உறுத்தலாக!
நாம் நல்லவர்கள் தாம்..
இருவரினதும் வாதம்..
பின்புலம் தெரியாதவரை-பிரதிவாதம் இல்லை!

சொந்த மனதுக்காய்-ஓர் உறவு
பெற்ற மனதுக்காய்-புரியாத உறவு!
தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு
வரும் புதியவன்/புதியவளையும்
ஏமாற்றிக்கொண்டு..
முகமூடி அணிந்த கொள்ளையர்கள்...
ஆமாம் வாழ்க்கையை கொள்ளை
கொள்பவர்கள்...
என்ன சொன்னால் தகும்?
நடிப்புத்தான் வாழ்க்கையா?
வாழ்க்கை ஒரு நாடக மேடை
சரிதான் போலும்!!

காதல் தான் வேண்டுமென்றால்
காதலித்திருந்து
உண்மைக் காதலெனில்
பெற்றோர் சொல் வார்த்தை
அமுதமா?
பின்விளைவுகள் தீர்மானிக்காமல்
முன் விழைந்து காதல் கொள்ளல்
முற்றிலும் தவறே!

வாழ்க்கை பல புரிதல்களுக்கான
சந்தர்ப்பம்..
பல விஷயங்கள் புரிகின்றன..
சில புரியாமலே கழிகின்றன..
எதுவுமே புரியவில்லை
சிலர் மனது மட்டும்!!

Post Comment

Thursday, December 23, 2010

தடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் !!

<
இரண்டு தசாப்த காலமாக எதிர்க்கட்சி வரிசையில்(ஒரு இரண்டு ஆண்டுகள் தவிர்த்து) ஐக்கிய தேசியக் கட்சி,ரணில் விக்கிரமசிங்க தலைமையில்!!
பலமான எதிர்க்கட்சியாக சில காலம் இருந்தது உண்மை தான்..ஆனால் தற்போது கட்சிக்குள் குத்தல்கள்,பிளவுகள்,விரிசல்கள் என்று ஏராளம் பிரச்சனைகள்.வெளியில் ஒன்றுமில்லை என்று காட்டிக்கொண்டாலும் உள்ளே அதிகமாகப் புகையும் பொது விஷயங்கள் வெளி உலகுக்கு தெரியவருவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து நான்கு ஜனாதிபதி தேர்தல்களில் தோல்வி..எத்தனை பொதுத் தேர்தல்கள் என்று ஞாபகம் இல்லை..அத்தனை நடந்து விட்டன..

மாபெரும் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பங்களுக்கான காரணங்கள் என்ன?பல காரணங்கள் கூறப்படுகின்ற போதிலும்,பின்வரும் சில காரணங்கள் முக்கியமானவை.
-சரியான தலைமைத்துவம் இல்லாமை..
-கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை
-இளையோருக்கு கட்சிக்குள் மதிப்பில்லை
-கிராமிய மட்டத்தில் கட்சிக்கு அக்கறையின்மை
போன்ற காரணங்களைக் காட்டி கட்சியின் பல முக்கிய புள்ளிகள் அரசின் பக்கம் சென்றுவிட்டனர்.எஸ் பி திசாநாயக்க,ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ என்று எத்தனையோ பேர்.(ஜி.எல்.பீரிஸ் விதிவிலக்கு.எந்த அரசாங்கம் வந்தாலும் அவரை தங்கள் பக்கம் இழுத்துவிடும்)..இப்படியே போனால் அரசாங்கம் ஐ தே க'வை விழுங்கிவிடும்,கட்சியே அழிந்து விடும் என்ற பயம் கட்சி ஆதரவாளர்களுக்கு வந்திருந்தது..(இவ்வாறே பலமாக இருந்த ஜே.வி.பி சிதைந்து சின்னாபின்னமாகிவிடிருக்கிறது!!).

இதனால் கட்சியை புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு போராடி வந்த கட்சியின் உறுப்பினர்கள்(முக்கியமாக சஜித் பிரேமதாச அணி) பல சவால்களுக்கு பின்னர் கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி கட்சி மறுசீரமைப்புக்கான மாநாட்டை நடாத்தி முடித்துள்ளனர்.தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் ஐ தே க'வை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதே அந்த மறுசீரமைப்பு மாநாட்டின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது..அந்த மாநாட்டை சட்ட ரீதியாக தடுக்க பல முயற்சிகள் நடைபெற்றபோதிலும்,தயாசிறி ஜெயசேகர,சஜித் போன்றோர் அந்த சிக்கல்களை வென்று மாநாட்டை திறம்பட நடாத்தினர்,.

உண்மையான ஒற்றுமை??

அன்று திரண்டிருந்த மக்களையும்,அரங்கிலே சஜித் மற்றும் ரணில் இருவரையும் ஒன்று சேரப் பார்த்த போது நிச்சயமாக துவண்டு போயிருந்த கட்சி ஆதரவாளர்களுக்கு புத்துயிர் கிடைத்திருக்குமென்பதில் சந்தேகமில்லை.
ஐ தே க'வின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதில் முக்கிய அம்சங்களாவன,
-கட்சியின் தலைமை ரணிலிடமே இருக்கும்
-கட்சிக்குள் ஜனநாயகம் பேணப்படும்
-இளைஞர்களுக்கான இடம் உறுதிப்படுத்தப்படும்
-கட்சியின் தீர்மானங்கள்,நிர்வாக தெரிவுகளுக்கு இரகசிய வாக்கெடுப்பை அமுல்ப்படுத்துதல்.
-வடக்கு,கிழக்கில் தமிழ்க்கட்சிகளுடன் கூட்டணி இன்றி,தமிழ் முஸ்லிம் தலைவர்களை ஐ.தே.க'வுள்ளேயே உருவாக்கல்.
போன்றனவாகும்.

இதிலிருந்து பல விஷயங்கள் புலனாகக்கூடும்.
முக்கியமாக கட்சி சீர்திருத்த மாநாட்டில் விளக்கங்கள் யாவும் சிங்கள மொழியிலேயே காணப்பட்டன என்றும் தமிழ் மொழி மூல விளக்கங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது.அடிப்படையிலேயே பிழை.திருமதி மகேஸ்வரனை பற்றி குறிப்பிடத் தெரிந்த தலைவர்களுக்கு தமிழ் மொழி மூல விளக்கங்களோ,எழுத்து மூலமான சீர்திருத்தங்களை தமிழ் மூலமாக வழங்க வேண்டும் என்றோ தோன்றியிருக்கவில்லை.அவ்வாறெனில் ஐ.தே.க தனக்கு தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளதா?
தமிழ் மக்கள் வாக்களிப்பது குறைவு என்றாலும் வாக்களித்த நேரங்களில் அதிக ஒட்டு வாங்கிய பெரும்பான்மை கட்சி ஐ தே க என்பதை தலைவர்கள் மறந்துவிட்டனர் போலும்.

கடந்த காலங்களில் தமிழ் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்ட ஐ தே க இனிவரும் காலங்களில் அந்த கூட்டணிகளுக்கு பாய் பாய் காட்டியுள்ளது.இதற்கு முக்கிய காரணம் முஸ்லிம் காங்கிரஸ்(ரவூப் ஹக்கீம்'இன்) பொதுத் தேர்தலில் ஐ தே கவுடன் போட்டியிட்டு விட்டு தற்பொழுது அரசாங்கத்துடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை ஏற்று இயங்கி வருகிறதே ஆகும் எனக் கூறப்பட்டாலும்,கடந்த காலங்களில் பெரும்பான்மையான சிங்கள வாக்குகள் ஐ.தே.கவுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் அக்கட்சி சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருக்கிறது என்ற ஆளுந்தரப்பின் குற்றச்சாட்டாகும்.(வெளியில் ஆதரவு.உள்ளுக்குள்?).
அத்துடன் சிறுபான்மைக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்தால் அவற்றின் கோரிக்கைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றவேண்டிய தேவை,கடைப்பாடு ஐ தே கவுக்கு நேரலாம் அதனால் பெரும்பான்மையினரின் ஆதரவு கிடைக்காமல் பொய் விடலாம் என்ற நிலைப்பாடே ஆகும்.இது அரசாங்கம் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அதே கொள்கையே ஆகும்.

இனப்பிரச்சனைக்கு தீர்வு சம்பந்தமாக மாநாட்டில் வாய் திறக்காத ஐ தே க,இனிவரும் காலங்களின் பாரம்பரிய இனவாதக் கட்சியாக உருவாகக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாவே உள்ளன.அதன் மூலம் பெரும்பானமையினரோரின் வாக்குகள் மூலம் ஆட்சியை மீளக் கைப்பெற்றுவது நோக்கமாகும்.எனவே பிரதான இரு கட்சிகளிடையே வரும் காலங்களில் எந்தவித வேறுபாடும் காணப்படப்போவதில்லை.ஒரே நோக்கம் ஆனால் இரு கட்சி என்ற நிலைப்பாடே இருக்கப்போகின்றது.இனவாத செயற்பாடுகள் கொடி கட்டிப் பறக்கப் போகின்றன.கேட்பதற்கு தமிழ் மக்களுக்கு நாதி இருக்காது.சிங்கள மொழி மூலம் மட்டுமே தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று பிரச்சனை நடந்த போது எதிர்க்கட்சி மௌனத்தையே கடைப்பிடித்தது.இனி வரும் காலங்களில் இதை விட மோசமான நடவடிக்கைகள் தொடரும்.

ரணில் மீதான நம்பிக்கை கட்சி ஆதரவாளர்களிடையே கூட இல்லாமல் போய் விட்டது.அனைவரும் சஜித்'தையே தலைவராக்க முயல்கின்றனர்.ஆனால் கட்சி மாநாட்டில் ரணிலையே தொடர்ந்து தலைவராக வைத்திருக்க முடிவு செய்துள்ளனர்.அவரும் கட்சியை விட்டுப் போவதாக இல்லை.சஜித் 'தும் வெளிப்படையாக எதுவும் பேசுவதாக இல்லை.ரணில் கட்சியின் சொத்தென்று கூறி வரும் அவர்,உண்மையாக தலைமைத்துவத்தை கொண்டிருப்பின் எப்போதோ தடைகளை உடைத்து தலைவராகி இருப்பார்.
எதிர்காலம் இவர்கள் கைகளில்!!

அடுத்த மூன்று மாதங்களுக்குள் கட்சியில் மறுசீரமைப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது,.(பதினோரு நாட்கள் கடந்துவிட்டன.)
ரணிலையே தலைவராக வைத்திருந்தால் இவ்வளவு ஆர்ப்பாட்டம்,மாநாடு நடத்தி எந்தப் பயனும் இல்லை.அதை கட்சியும் நன்கறியும்.
பல இளைய இரத்தம் கட்சிக்குள் உள்ளது..சஜித்,கயந்த,தயாசிறி என புதியவர்களை ஆனால் செல்வாக்கு மிக்கவர்களை கட்சியின் முக்கிய பதவிகளில் கொண்டுவருவதன் மூலம் கட்சிக்கு புத்துயிர் அளிக்கமுடியும்.அதே சமயம் கட்சியின் சொத்தென வர்ணிக்கப்படும் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சியில் கௌரவ பதவி ஒன்றை வழங்கலாம்.
ரணிலை விட சஜித்துக்கே தற்பொழுது ஆதரவு,மக்கள் சக்தி அதிகமாக உள்ளது.புதிதாக இப்போது சில நாட்களாக ரணில் வீதியில் இறங்கி துண்டுப் பிரசுரம் வழங்குவதை பார்த்தால் அதிசயமாக உள்ளது.பதவியை தக்கவைக்க முயல்கிறாரோ?
கௌரவப் பதவி நிச்சயம் வேண்டும்!!

தானாக தலைமைத்துவத்தை விட்டுக் கொடுத்தால் கட்சிக்கும்,ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கும் நல்லது.ஒரு உறையில் இரு கத்திகள் இருக்கமுடியாது.கட்சி மறுசீரமைப்பு கூட்டத்திலேயே தன்னை விட சஜித்துக்கு மக்கள் சக்தி,ஆதரவு அதிகம் என்பதை ரணில் உணர்ந்திருப்பார்.உணராவிடில் அவர் தலையெழுத்தை அவரே தீர்மானிக்கட்டும்.

இன்னும் 109 நாட்களுக்குள் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் யாவும் நிறைவுக்கு வரும்.அப்போது தெரியும் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகின்றன என்று.ஐ தே க உருப்படுவதட்கு இதை விட்டால் இனி வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்.அல்லாவிடில் மாபெரும் கட்சியான ஐ தே க கண் முன் அழிவடைவதை யாராலும் தடுக்கமுடியாது என்பது கண்கூடு!!

அரசியல் குசும்பு;பிரபல தனியார் தொலைக் காட்சி ஒன்று தனது செய்திகளில் கட்டாயமான செய்தியாக(பிரச்சாரமாக??) ஒரு புதிய தமிழ் எம்.பி'யின் செய்திகளையே ஒளிபரப்பி வருகிறதே..தொலைக்காட்சியே தனிநபர் பிரச்சாரப் பீரங்கியோ??

டிஸ்கி:அம்மா அப்பாவும் சொன்னவா அரசியல் வேணாம் வேணாம் என்று..இந்த தம்பிக்கு...

Post Comment

Sunday, December 19, 2010

குடை கவிழ்ந்த இங்கிலாந்து!!


என்னத்த சொல்ல..
இது தான் என்னுடைய பதிலாக இருந்தது இன்று முழுவதும்..துவண்டு போயிருந்த அவுஸ்திரேலியாவின் ரசிகர்களின் வெற்றிக்களிப்பின் வெளிப்பாடான அன்புத்தொல்லையால்(?) திக்குமுக்காடிவிட்டேன்.

இங்கிலாந்து வென்றால் தொடர் சப்பென்று போகும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஷஸ் தற்போது மறுபடி உயிர்த்திருக்கிறது என்றால் அது பேர்த் டெஸ்ட் போட்டி மாற்றிய விதம் தான்!
இருநூற்றி அறுபத்தேழு ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றி என்பது நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்..ஆறு மாதங்களின் பின்னர் முதல் வெற்றி.முதலிரண்டு போட்டிகளின் பின்னர் விடிவில்லை அவுஸ்திரேலியாவுக்கு என்றிருக்க பாண்டிங்'இன் நம்பிக்கைக்கு நன்றி செலுத்தியிருக்கிறார் மிட்செல் ஜோன்சன்..பழைய ஜோன்சனை எப்போது பார்க்கலாம் என்று ஆவலாயிருந்த ரசிகர்களுக்கு விருந்தானது மூன்றாவது ஆஷஸ் போட்டி.வழமை போல தனது பந்தின் மூலமும் துடுப்பின் மூலமாகவும் தான் போர்ம்'க்கு வந்தது மட்டுமன்றி அவுஸ்திரேலியாவையும் வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்று விட்டார்.தனியாளாக என்று கூற மாட்டேன் ஆனால் அவரின் எழுச்சி தான் ஏனையோரின் எழுச்சிக்கு காரணமென்றால் மறுக்க இயலாது.
போடு மச்சான் அஞ்சு..
உண்ட போலு நஞ்சு!!

முதல் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 62 ஓட்டங்கள் தான் போட்டியை அவுஸ்திரேலியாவின் பக்கம் திருப்பிய முக்கிய காரணி..அத்துடன் 32 ஓட்டங்களுக்கு ஆறு விக்கட்டுகள் என்ற சிறந்த பெறுதியும்,இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல்
ஹரிஸ்'இற்கு பக்கபலமாக பெற்ற 3 விக்கட்டுகளும் அடிலெயிட் அவருக்கு மிக ராசியான மைதானம் என பெயரைக் கொடுத்திருக்கிறது,.நான்கு டெஸ்ட்'டில் மொத்தமாக 30 விக்கெட்'டுகளை 18 .33 என்ற சராசரியில் சாதித்திருக்கிறார் ஜோன்சன்.

கிட்டத்தட்ட பார்த்தால் அவுஸ்திரேலியாவுக்கு இன்னிங்க்ஸ் வெற்றி மாதிரித் தான்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 309 ஓட்டங்களை விட ஒரு ஓட்டம் அதிகமாக எனது இங்கிலாந்து அணி இருந் இன்னிங்க்ஸ்'இலும் சேர்த்துப் பெற்றிருக்கிறது.முதல் இன்னிங்க்ஸ்'இல் ஜோன்சனும் இரண்டாவது இன்னிங்க்ஸ்'இல் ஹரிஸ்'சும் போட்டுப் புரட்டியிருக்கிறார்கள்.ஹரிஸ்'இற்கு இரண்டாம் இன்னிங்க்ஸ் பந்துவீச்சுப் பெறுதி அவரின் சிறந்த டெஸ்ட் பெறுதி(6 /47 ).
எழுச்சி!!

அவுஸ்திரேலிய அணியின் சொத்தான ஹசி விளையாடிய ஆறு இன்னிங்க்ஸ்'இலும் ஐம்பது ஓட்டங்களுக்கு மேல்!!
மனுஷன் அந்தமாதிரி போர்ம்'இல் இருக்கிறார்.மொத்தமாக 517 ஓட்டங்களை 103 .4 ௦ என்னும் சராசரியுடன் அதிக ஓட்டம் குவித்த வீரர்கள் பட்டியலில் குக்'ஐ பின் தள்ளி முதலிடத்தில் உள்ளார்.ஹசி,ஹாடின் இருவரும் அவுஸ்திரேலியா தடுமாறும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கை கொடுத்திருக்கின்றனர்.பாண்டிங் மோசமாக ஆறு இன்னிங்க்ஸ்'களிலும் சேர்த்து 83 ஓட்டங்கள்.சராசரி 16 !!கிளார்க் 115 ஓட்டங்கள்.இதில் பாண்டிங்'கு இப்போது கையில் காயம் வேறு..ஏழரைச் சனி உச்சத்தில் நடனம்!

இங்கிலாந்தில் நான் எதிர்பார்த்த கொலிங்க்வூட் ,பெல் இருவரும் சோபிக்கவில்லை.மொத்தமாக 62 ஓட்டங்களை 15 .5 என்னும் சராசரியுடன் கொண்டிருக்கிறார் கொலிங்க்வூட்.அடுத்த போட்டியிலாவது போர்ம்'க்கு வருவார் என நம்புகிறேன்.ப்ரயர்'ம் பெரிதாக சோபிக்கவில்லை பயிற்சி ஆட்டத்தை தவிர்த்து.மூன்று போட்டிகளிலும்(4 இன்னிங்க்ஸ்) மொத்தமாக 49 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருக்கிறார்.
சொதப்பல்..தொடருமா?

பரோட்'கு பதிலாக அணியில் வந்த த்ரேம்லேட் எட்டு விக்கட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை தந்திருக்கிறார்.இரண்டாம் இன்னிங்க்ஸ்'இல் பெற்ற 5 /87 டெஸ்டில் அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி. பின்(finn )5 விக்கட்டுகள் ,அன்டர்சன் நான்கு விக்கட்டுகள் எடுத்திருந்தாலும் ஸ்வான் தடுமாறுகிறார்.பிட்ச் பௌன்ஸ் என்றதால் சுழலுக்கு பெரிதாக சாதகமான சூழல் இருந்திருக்காது.ஷேன் வார்ன் கூட பெரிதாக சாதிக்கவில்லை இந்த பேர்த் மைதானத்தில்.பார்ப்போம் அடுத்த டெஸ்ட்'டில்.

முப்பத்தியாறாவது பிறந்த தின பரிசாக பாண்டிங்'கு பேர்த் வெற்றி அமைந்திருக்கிறது.முதல் டெஸ்ட்'டில் சிடிலுக்கு ஹாட்ரிக் கிடைத்தது பிறந்தநாளுக்கு.நம்ம இங்கிலாந்துக்காரருக்கு பிறந்த நாள் ஏதும் இல்லையோ??
அய்யா நம்மள வாழவைச்சிட்டாங்க!!

மெல்போர்ன்'இல் தொடங்கும் நான்காவது டெஸ்ட்'டில்(பொக்சிங் டே)
அவுஸ்திரேலியா அதே அணியுடன் களமிறங்குகிறது,பிளஸ் நம்பிக்கையுடன்!
தற்பொழுது ஜோசனை எல்லாம் இங்கிலாந்து தரப்பு மீதே.நிச்சயமாக ஸ்டுவேர்ட் பரோட்'ஐ இங்கிலாந்து அணி ரொம்பவே மிஸ் பண்ணுகிறது.என்றாலும் தோல்விக்கு முக்கிய காரணம் துடுப்பாட்டமே.எனவே துடுப்பாட்டத்தில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.பெல்'ஐ பீட்டர்சனுக்கு முன்னர் களமிறக்கினால் அவரின் துடுப்பிட்கு வேலை வைக்கலாம் என நினைக்கிறேன்.
கடந்த நான்கு டெஸ்ட்' போட்டிகளிலும் பேர்த்'தில் முன்னூறு ஓட்டங்களால் தாண்டி பெறப்பட்டிருக்கின்றமையால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் நன்கு விளையாடி இருந்தால் வெற்றி இடம் மாறி இருக்கும்.அவ்வாறு நடந்திருந்தால் அடுத்த இரண்டு டெஸ்ட்'டும் இங்கிலாந்தே வென்றிருக்கும் காரணம் அவுஸ்திரேலியர்களின் மனநிலை முற்றாக குழம்பி இருந்திருக்கும்.ஆனால் நடந்தது வேறு...
இரண்டு இன்னிங்க்ஸ்'இலும் இருநூறுக்கு குறைவான ஓட்டங்கள்..பலம் வாய்ந்த துடுப்பாட்ட வரிசைக்கு சோதனை!யாரும் நிதானமானவர்களாக காணப்படவில்லை.வந்தார்கள் போனார்கள்.நின்று துடுப்பாட மறந்துவிட்டார்கள்.

இப்போது முக்கிய விடயம் என்னவெனில் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் மனநிலையை திடமாக வைத்திருப்பதே.அல்லாவிடில் மெல்போர்ன் டெஸ்ட்'டும் அவர்கள் வசம் இல்லாமல் போய்விட வாய்ப்புள்ளது.
திறமையில் எந்தக்குறையும் இல்லை.மெல்போர்ன் நம் வசமே....(நம்பிக்கை தாங்க வாழ்க்கை)!!


டிஸ்கி:பாண்டிங் ஏதும் சூதாட்டம் பண்ணி இருப்பாரோ இங்கிலாந்து துடுப்பாட்டவீரர்களோடு??ஹிஹி

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...