Friday, October 28, 2011

விஜய் ஏன் இப்படி?விஜய்க்கு வில்லத்தனம் எதற்கு!!


காட்சி ஒன்று:
முன்னொரு காலம்...இற்றைக்கு இருபது முப்பது வருடத்துக்கு முன்னர்,எம் ஜி ஆர் என்கிற மாபெரும் சக்தி தமிழ் சினிமாவை மட்டுமல்லாமல் தமிழ்மக்களையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது.அதே காலத்தில் தான் சிவாஜி எனும் நடிப்பு திலகம் மறுபக்கம் ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கிக்கொண்டிருந்தது.ரசிகர்கள் ,தமிழர்கள் சிவாஜியின் நடிப்பை போற்றினார்கள்.புகழ்ந்தனர்.ஆனால் எம் ஜி ஆரை தூக்கி வைத்து கொண்டாடினர்.காரணம் என்ன?சிவாஜி சீரியசான,காத்திரமிக்க கதைகளில் நடித்துக்கொண்டிருந்தார்.எம் ஜி ஆர் தியேட்டர் செல்லும் மக்களை குஷிப்படுத்தும் வகையிலான படங்களில் நடித்தார்.மக்கள் நடிப்பை(சிவாஜியை) பார்த்தனர்.எம் ஜி ஆரை கொண்டாடினர்.முதல்வராக்கினார்.

காட்சி ரெண்டு:
அதற்க்கு பிந்திய காலம்...ஒரு பத்து இருபது வருடத்துக்கு முன்னர் தொடங்கி இன்று மட்டும்,ரஜனி என்ற மந்திரம் தமிழர்களையும் தமிழ்சினிமாவையையும் கட்டி போட்டு வைத்திருக்கிறது.இதே காலகட்டத்தில் பெருத்த ஆர்ப்பாட்டமில்லாமல் வேறுபட்ட நடிப்பை வழங்கி உலகநாயகன் என்ற அந்தஸ்தோடு அங்கீகரிக்கப்பட்டவர் தான் கமல் ஹாசன்.கமலின் நடிப்பை புகழ்ந்தனர்.அடுத்த சிவாஜி என்றனர்.ஒஸ்கார் நாயகன் என்றனர்.ஒஸ்காரை தாண்டிய நடிப்பு என்றனர்.ஆனால் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை வழங்கவில்லை அவர் படங்கள்.நடிப்புக்காக போற்றப்பட்டது.ஆனால் ரஜனியோ,மசாலா படங்கள்,ஹீரோயிச படங்கள் போன்றவற்றில் நடித்தார்.சூப்பர் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டார்.வசூல் நாயகன் ஆனார்.அனைத்து தலைமுறை மக்களுக்கும் சிறுவர் முதல் பெரியோர் வரை பிடித்த நாயகன் ஆனார்.

முதல் காட்சிக்கும் இரண்டாம் காட்சிக்கும் ஒற்றுமைகள் பல இருப்பதை அவதானித்திருப்பீர்கள்!நடிப்பு,வித்தியாசமான நடிப்பு என்று இருந்த நடிகர்களின் நடிப்பு மக்களால் அங்கீகரிக்கப்பட்டது,போற்றப்பட்டது.இவர்கள் ரசிகர்கள் பெருமளவான ஆர்ப்பாட்டாமில்லாத,சத்தம் இல்லாத வகையில் படங்களை ரசித்தனர்.மசாலா கதைகள் ,மாஸ் ஹீரோ திரைப்படங்கள் நடித்தவர்கள் படங்கள் வசூல் ரீதியாக சாதனைகள் படைத்தன.மக்கள் மனதில் கொள்ளை இடம் பிடித்தவர்களும் இவர்கள் தான்.இவர்கள் ரசிகர்கள் என்றாலே ஆர்ப்பாட்டம் சரவெடி தான்!

இதை கூற காரணம்:இளைய தளபதி விஜய் எப்பவுமே மசாலா திரைப்படங்களில் தான் நடிக்கிறார்.இதை விட வேறுபட்ட கதைகளை எதிர்பார்த்தோம் என்று படம் பார்த்துவிட்டு கருத்து கூறுபவர்களை கண்டால் சிரிப்பு தான் வருகிறது.விஜய்க்கு என்று ஒரு "way " இருக்கிறது.அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.அது தான் மசாலா திரைப்படங்கள்.மசாலா திரைப்படம் என்றால் சின்ன குழந்தையும் சொல்லும் அது விஜய் படம் தான் என்று.மசாலா திரைப்படங்கள் தோற்றிருக்கலாம்.காரணம் இருக்கிறது.


மசாலா திரைப்படம் என்பது இயக்குவது மிக கடினம்.மிகுந்த அவதானம் தேவை.ரசிகர்கள் ஆட்டம்,பாடல்,சண்டை,காமெடி,செண்டிமெண்ட் என்று அத்தனையையும் எதிர்பார்ப்பார்கள்.ஒன்று குறைந்தால் கூட படத்தை குப்பையில் போட்டுவிடுவார்கள்.சாதாரண ஒரு கதை கொண்ட உதாரணத்துக்கு:நாணயம்,மங்காத்தா போன்ற படங்களில் அடி நாதம் ஒன்றாக இருக்கும்.அதாவது அந்த மிஷன்'ஐ முடிப்பது.அதனால் அந்த மாதிரியான கதைகளில் அதிகம் பரந்து பட்டு ஜோசிக்க வேண்டிய தேவையும் இருக்காது.ரசிகர்களும் பரந்துபட்டு எதிர்ப்பார்க்கமாட்டார்கள்.விஜய் அடுத்து கவ்தம் மேனனோடு நடிக்கும் "யோகன்" படமும் இதே வகையறாவுக்குள் தான் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசாலா நாயகர்களின் படங்களில் போய் லாஜிக் பார்ப்பவர்களை என்ன சொல்வது?அன்றிலிருந்து இன்று வரை மசாலா படங்களில் லாஜிக் இருக்கவே இருக்காது.எம் ஜி ஆர் படங்களோ அல்லது ரஜனி படங்களோ லாஜிக் மீறல்கள் இருக்கும்,ஆனால் அவை கண்டும் கண்டுக்காமல் விடப்பட்டது காரணம் அவர்கள் மசாலா நாயகர்கள்..மாஸ் ஹீரோக்கள்.அதே மசாலா நாயகன்,மாஸ் ஹீரோ விஜய் படத்தில் சிறிதாக ஒரு லாஜிக் மீறல் வந்தாலே ஊத்தி பெருப்பித்துவிடுவார்கள்.உதாரணமாக ரஜனியின் என்திரனில்,ஒரு ரயில் சண்டை வரும்.சிட்டி ரோபோ தான் அடிபடும்.ரோபோ இரும்பில் செய்யப்பட்டது.ஒவ்வொரு அடியும் இடியென இறங்கியும் கூட அடிவாங்கி விழுந்த வில்லன்கள் அடுத்த கணம் எழும்பி மீண்டும் சண்டை பிடிப்பார்கள்.எந்தவகையில் லாஜிக் இது?அது அப்படித்தான்.!!மசாலா படங்களில்,மாஸ் ஹீரோ கரெக்டர் படங்களில் லாஜிக் மீறல்களை பெருதுபடுத்தி கதைப்பது உங்களின் இயலாமை அல்லது வில்லத்தனம்.

விஜய் என்றால் அவர் என்ன என்ன விடயங்களை முன்னிலைப்படுத்துவார் அவரின் படங்களில் என்று அனைவருக்குமே தெரியும்.அந்தந்த விடயங்கள் பிடிக்காதவர்கள் எதற்கு விஜய் படம் பார்க்க போகிறீர்கள்?அதுவும் அடித்துபிடித்து முதல் நாள்,இரண்டாம் நாள் ஷோ?உங்களுக்குள்ளும் ஒரு விஜய் ரசிகன் இருக்கான் அல்லது படத்தை பார்த்து அதிலுள்ள ஓட்டைகளை ஊதிப்பெருதாக்கி விமர்சனம் செய்து ஆதாயம் தேடத்தானே?இந்த புளைப்புக்கு போயி உங்கட சொந்த பிழைப்பை பார்க்கலாமே!

விஜய் என்றால் இளக்காரம்.அவரின் ரசிகர்கள் என்றால் இளக்காரம்.எந்த ஒரு நடிகருக்கும் இத்தனை பரந்துபட்ட எதிர்பார்ப்பு இல்லையென்றே தோணுகிறது.காரணம் விட்டில் பூச்சிகளை போல விஜய் படம் வெளிவரும் போது தான் சிலர் கும்பகர்ண தூக்கத்திலிருந்து எழும்புகிறார்கள் போலும்!அதிகமாக விமர்சிக்கப்படும் ஒரே தமிழ்சினிமா நாயகன் விஜய் தான்.காரணம்?பொறாமை?என்ன இழவோ,பலருக்கு விஜய் தூக்கத்தை கெடுக்கிறார் என்பது உண்மை தான்.அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.:


இத்தனை நாட்களாக விஜய் படங்கள் பார்த்திருப்பீர்கள்.பிடிக்கவில்லையா?பார்க்காதீர்கள்.மசாலா நாயகன் என்று தெரியும் தானே.ஏன் அதற்க்கு அப்பால் எதிர்பார்க்கிறீர்கள்?நீங்கள் விமர்சிப்பதற்கு பிழை செய்தவர் விஜய் அல்ல.நீங்கள் தான்!!!

எல்லா நடிகர்களுக்கும் பிளாப் வரத்தான் செய்யும் ஒரு காலத்தில்.விஜய்யின் அந்த காலம் சுறா திரைப்படத்துடன் முடிந்துவிட்டது.
காவலனில் தொடங்கிய வெற்றிப்பயணம் வேலாயுதம் நண்பன் யோகன் என்று அதற்க்கு அடுத்த முருகதாஸ் படம் வரைக்கும் தொடரத்தான் போகிறது.

பிடித்தால் விஜய் படம் பாருங்கள்.இல்லை பிடிக்கவில்லை என்றால் உங்கள் வேலையை பாருங்கள்..ரத்தத்தின் ரத்தங்களே எங்கள் உடன் பிறப்புகளே!!!

Post Comment

Wednesday, October 26, 2011

வேலாயுதம்-விஜய்-தி மாஸ்!!




வேலாயுதம் வேலாயுதம்.
தீபாவளிக்கு ஊரெங்கும் இதே பேச்சு தான்.காவலன் கொடுத்த அவரேஜ் வெற்றியை தக்க வைக்குமா இல்லை மீண்டும் விஜய்யின் பழைய ப்ளாப் படங்களுடன் சேர்ந்துவிடுமா என்று பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படம்.அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்திருக்கிறதா?

படத்தின் கதையை பலர் சொல்லி இருப்பார்கள்..கதை சொல்லி உங்கள் ஆர்வத்தை கெடுக்கவில்லை.ஆசாத் தழுவல் தான்.ஆனால் முழுமையான தழுவல் இல்லாமல்,ஜெயம் ராஜா முன்னரே கூறியது போல பல மாற்றங்களை செய்து தான் வேலாயுதத்தை உருவாக்கி இருக்கிறார்..கதைக்கு தேவையானது ஒரு மாஸ் ஹீரோ.அதற்க்கு தமிழ் சினிமாவில் மிகப் பொருத்தமானவர்,இந்த வேடத்துக்கு பொருந்த கூடியவர் விஜய் தான் என்பது வேலாயுதம் படத்தை பார்க்கும் போது தெரியவரும்!இதே கதாபாத்திரத்தில் ரஜனியையோ,அஜித்,கமல்,சூர்யா அல்லது வேறு யாரேனையும் பொருத்தி பார்க்க மனம் மறுக்கிறது.

படம் முழுவதும் அவ்வளவு வேகம்.ஆக்சன்,டான்ஸ் என அனைத்திலுமே!முதல் பாதியில் விஜய்யின் அறிமுகம் பலத்த சிரிப்பொலிகளை அள்ளி வீசியது!ஒரு கதாநாயகனால் இந்தளவுக்கு சிரிக்க வைக்க முடியுமென்பது...அது விஜய்'யால் மட்டுமே முடிந்த விடயம் இந்த காலத்தில்முதல் பாதி முழுவதுமே ஒவ்வொரு காட்சியிலும் கட்டாயம் ஒரு சிரிப்பாவது வரவைக்குமளவுக்கு இயக்குனர் மினக்கிட்டிருக்கிறார்!சந்தானத்துக்கு படம் தொடங்கி ஒரு மணி நேரத்துக்கு பின்னரே அறிமுகமே கிடைக்கிறது!!அவரும் தனக்கு கிடைத்த நேரத்தை காமெடியாக மாற்றி இருக்கிறார்!!சூட்கேஸ் ஒன்றை ஆட்டைய போட போயி வேஷ்டிக்குள் ஒழிக்கும் போது பார்க்கும் பெண் ஒருவர் "காம பிசாசு"என்று பேசிவிட்டு போவது "A " ரகம்! வழமை போலவே,வழமையிலும் விட மிக இளமையாக தெரிகிறார்.அடுத்த படமான நண்பனுக்கான ஆயத்தமோ என்னமோ,செம கியூட்!!

மாஸ் ஹீரோ,சூப்பர் ஹீரோ பாத்திரம் என்று ஜெயம் ராஜா கூறியபோது,குருவி மாதிரி நம்ப முடியாத விசயங்களை செய்து மீண்டும் வாங்கிகட்டப் போகிறாரோ என்று என் மனம் முதலே ஆதங்கப்பட்டாலும்,ஜெயம் ராஜாவுக்கு தெரிந்திருக்கிறது எதனை எப்படி செய்தால் ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று!

படத்தில் 95 %நம்பும்படியான விடயங்கள் தான்,சில விடயங்கள் சினிமாக்காக ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்,நாங்கள் பார்க்க போவது சினிமா,நிஜ வாழ்க்கை அல்ல,அந்த வகையில் வேலாயுதம் ஏமாற்றவில்லை..காட்சிகள் ஒவ்வொன்றினதும் கோர்வைகள் அழகு!!எதிலும் ப்ரேக் வரவில்லை!


பாடல் காட்சிகள்...முக்கியமாக "முளைச்சு மூணு'பாடல் படமாக்க பட்ட விதம் எக்சலன்ட்!!superb என்று பாராட்டினால் தகும்!ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வரைட்டி!நடனங்கள் கலக்கல்!!ஆனால் விசேடமாக பேச முடியாது நடனங்கள் சூப்பர் தான் ஆனால் வழமையான விஜய்யின் குத்து ஏனோ மிஸ்ஸிங்!சில்லாக்ஸ் பாடலில் இன்னமும் கொஞ்சம் நடனத்தை மெருகேற்றி இருக்கலாம்!!

இடைவேளையின் பின்னர் தான் பெரிதும் பேசப்பட்ட ரெயில் சண்டை!!தமிழ்பட வரலாற்றில் இவ்வளவு ஸ்பீடான ரெயில் சண்டையை நீங்கள் பார்த்திருக்க முடியாது!அதில் வில்லன் இறக்கிற மாதிரியான ஸீன்.சரி படம் முடிந்தா என்று பார்த்தால் இல்லை..அப்புறமா தான் தங்கையின் கல்யாணத்துக்கு ஊருக்கு வருகின்றனர்.மீண்டும் காமெடி கலக்கல் என்று படு சுவாரசியம்!!எதிர்பாராத ட்விஸ்ட் க்ளைமாக்சில்!!(ஆசாத் படத்தை பார்த்துவிட்டு ஒப்பிடாதீர்கள்).இரண்டு ஹீரோயின் படத்தில்.ஹன்சிகா ஜெனீலியா என்று இரு கதாநாயகிகளோடு விஜய்யை பார்க்கும் போது வித்தியாசமாய் ஒரு உணர்வு!!

ஜெனீலியாவை கண்டு பொறாமைப்பட்டு மந்திரித்த முட்டை வைக்கும் ஹன்சிகா வழமை போல கோதுமை குழையல் தான்!!அடிக்கடி ஹன்சிகாவின் இடுப்பும் தொப்புளும் தான் திரையை வியாபித்திருந்தது!!இன்னமும் வெளியில் வரவே இல்லை!!:)

அருகில் உள்ள நண்பன் ஒருவன்(விஜய் ரசிகன் அல்ல,படம் வெளியிடமுன்னரே படம் சொதப்பலமே என்று சொந்த காசில் கோல் பண்ணி கேட்டவன்)படம் சொதப்பல் மச்சான் என்றான்.ஏன் என்ன காரணம் என்று கேட்டேன்.இல்ல மச்சான் பிடிக்கல.ஏன்டா பிடிக்கல?என்ன காரணம்?படத்தில் குறைஎன்று கூற ஒரு காரணம் அவனுக்கு பிடிபடவில்லை.


வெறுமனே விஜய் படம் என்றால் சொதப்பல்,ஊத்திக்கும் என்று கதைப்பதால் தாங்கள் எதோ பெரிய பிலிம் டைரக்டேர்ஸ் என்று சிலரின் நினைப்பு!அவ்வாறு சொல்வதால் உங்களுக்கு யாராச்சும் மார்க்ஸ் கூட்டி போடப்போறாங்களா என்ன!தீவிர தல ரசிகன் ஒருவன்,என்ன மச்சான் படத்தில எத்தின பேரை விஜய் அடித்தவன் சொல்லு பார்ப்போம் என்றான்.பில்லா படத்தில் எத்தனை பேர் கோர்ட் சூட் போட்டார்கள் சொல் என்றேன்.பதிலில்லை.அந்தந்த படத்துக்கு தேவையானதை தானே செய்யமுடியும்!பில்லா படத்தில் கோர்ட் சூட் போடாமல் படம் எடுக்க முடியுமா?எடுத்தால் நன்றாக இருக்குமா?அதே போல மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றில் ஒருத்தன் இருவரை மட்டும் அடி வாங்க வைத்தால்....இதை ஒரு சாதாரண மனிதனால் கூட செய்ய முடியுமே!!அப்புறம் எதற்கு மாஸ் ஹீரோ படம்!!

வேலாயுதம் எப்படி என்றால் என்ன சொல்வது?அது பிழை இது பிழை என்று சுட்டி காட்ட பெரிதாக பிழைகள் இல்லை.ஒரு கில்லி மாதிரியோ,அல்லது சிவகாசி மாதிரியோ,போக்கிரி மாதிரியோ இல்லாமல்,அனைத்தையும் சேர்த்துக்கட்டி அடித்தால் எவ்வாறு இருக்கும்??மொத்தத்தில் விஜய்க்கு மீண்டும் ஒரு ஹிட்டு!!நண்பன் படத்துக்கான எதிர்பார்ப்புகளை இன்னமும் எகிறவைத்துள்ளது வேலாயுதம்!!

குறிப்பு:வேலாயுதம் நேற்றே வெளியாகி இருந்தாலும்,இப்போது தான் விமர்சனங்கள் வர ஆரம்பித்துள்ளன.பலர் பார்த்துவிட்டு மற்றவர்களின் விமர்சனங்களை பார்த்து அதன் சார்பாக வெளியிடலாமா என்று வெயிட்டிங் போல!வழமை போல ஒருத்தன் கேவலமாக எழுதினால் மற்றவர்களும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்து எழுதுவது பதிவுலகில் சொல்லி தெரிய தேவை இல்லை.அதுவும் விஜய் படம் என்றால்...ஹிஹி!




Post Comment

Tuesday, October 11, 2011

பவர் ஸ்டார் பட்டையை கிளப்புறாரு!

கொஞ்ச நேரம் சிரிக்கணுமா?அதுவும் மனம் விட்டு??அப்போ மேல படிங்க..


தமிழ் நாட்டுக்கு ஒரு சூப்பர் காமெடியன் கிடைச்சுட்டன் எல்லாம் காமெடியனும் சிரிக்க வைபங்க இவரு அழ வைப்பாறு,...என்ஜாய் தமிழ் மக்களே.........

என்ன பண்றது பணம் இருந்தா பண்ணியும் ஹீரோதான்

உங்க வளர்ச்சி மக்களுக்கு பிடிக்கலைனா அதனால நீங்க.........எனக்கு அழுகையா வருது ன்ன.

"படத்துக்குகே இப்படி செலவு பண்ணி இருக்காரே.. அப்பா DR பட்டத்துக்கு எவளவு பண்ணி இருப்பாரு!....பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான்........"

"என்ன கொடுமை சார்"

"அல்டிமேட் ஸ்டார்க்கு போட்டியா பவர் ஸ்டார் இது தான் ஈக்குவலான போட்டி"

"இவங்களுக்கு எல்லாம் அப்பா பணத்தை என்ன பண்றதுன்னு தெரியல ....அவங்க கஷ்டப்பட்டு சம்பாரிச்ச கஷ்டம் தெரியும் . இந்த மாத்ரி வேஸ்ட் செலவு பண்றதுக்கு நாலு ஏழை க்கு சாப்பாடு போட்ட நல்ல இருபங்க........"

"வருங்கால முதல்வர் ! வருங்கால பிரதம மந்திரி ! வருங்கால ஜனாதி பதி ! அப்புறம் ..... ..............( தெரியலையே !)"

"மேக்கப் போடாம ரஜினியை இவர் பக்கத்தில வச்சு பாருங்க! இவரு நடிக்கலாமா வேண்டாமான்னு உங்களுக்கே புரியும். குறிப்பிட்ட சில பேர் மட்டும்தான் நடிக்கணுமா?"

"சினிமா யார் வேணும் வரலாம் பப்ளிக் முடிவு எடுக்கணுஎம் ஹீரோவா காமெடியன் வில்லன நல்லவேளை அரசியல் குடும்பா சப்போர்ட் எல்லை ஈவர் ஒரு ஹீரோவா நம்பா பார்க்க வேண்டி ஏற்றுக்கும் ஆட்சி மாற்றம் எல்லனிய என்றைய ப்ரோடுசெர் நேர்த்ரிய ஹீரோ ஆயி இருப்பாரு ஒரு கல் ஒரு கண்ணாடி"

"இதே போலா "அந்தகாலம் " தொட்டு பண்ரைங்க !!!! 'தமக்கு தாமே ..வள்ளல் , செம்மல், தர்மத்தின் ..தலைவன் என்னனமோ ....பினாத்தி கிறங்க ....அப்புறம் "விசில் குஞ்சுகள் பூரா சேர்ந்து "இதய தெய்வம் " என்று தமிழ் நாட்டையே ......... அறிவு வளர்ச்சில் "பின்னோக்கி இழுத்திடு போய்டாங்க ...

"பக்கத்துக்கு கேரளா காரனுக சிரியாய்....சிரிக்கிறங்கி .....'

"who is that dog?"

"வீட்டில இருந்தா தன் மனைவி மட்டும்தான். சினிமாவில், தினம் ஒரு பெண்ண தொடலாமலா...பணத்தை வேசிகிட்டு என்ன பண்றது.'"

"இது எல்லாம் ஒரு கொடுமையா சார் டிவில இந்தியத்தொலைகட்சிகளில் முதல் முரயாகனு படம் போடுறதுதான் கொடுமைலயும் கொடுமை'

"ஐயோ!!! என்னால சிரிப்பு தாங்க முடியலே...எங்க தலைவர் சாம் அன்டர்சன் அவர்களை இவர் மிஞ்சிடுவார் போல."

"பவர் ஸ்டார் படத்துக்கு உன்னமையான வெற்றி தான் சார்.உங்களுக்கு ஏன் பொறாமையா இருக்கு?."

"இவங்கள எல்லாம் ஆள வெச்சு அடிக்கணும்.'

'பல்லு இருகிறவன் பக்கோடா சாப்பிடறான் !!!!!!!'

இதெல்லாம் என்னத்துக்குன்னு ஜோசிக்கிரீங்களா மக்களே?இத கொஞ்சம் பாருங்க,













இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?


மிழ் சினிமாவின் வரலாற்று புத்தகத்தில் வெள்ளிவிழாப்படங்களின் பட்டியலில் பவர் ஸ்டார்(?) டாக்டர் சீனிவாசனின் லத்திகா படமும் இணைந்துவிடும். நாளைய தலைமுறை, வெள்ளிவிழாப்படம் என்று லத்திகாவை தேடிப்பிடித்து, திரும்ப திரும்ப பார்த்தும் வெற்றிக்கான காரணத்தை கடைசிவரை அறியமுடியாமல் கிறுகிறுத்துப்போகும். இதுதான் தமிழ்சினிமாவின் தலையெழுத்து.
வெள்ளிவிழா நாயகன் பவர் ஸ்டாரின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு (முதல் பிரம்மாண்ட படைப்பு எதுங்ணா) ‘ஆனந்த தொல்லை’ என்று சுவர் விளம்பரங்கள் கண்ணை கூசுகின்றன. நிஜ வெள்ளிவிழா நாயகன் ‘மைக்’மோகன் இதைப்பார்த்து எப்படியெல்லாம் ரத்தக்கண்ணீர் வடித்திருப்பார்?

ஒருவர் படம் எடுப்பதோடு மட்டுமல்லாமல், அவரே தியேட்டர் வாடகை பிடித்து, அவரே தினக்கூலியில் ஆட்களை நியமித்து தியேட்டருக்குள் அமரவைத்து, அவரே 150வது நாள், 175 வது நாள், 200வது நாள், 365வது நாள் என்று தான் விரும்பும் நாட்களுக்கு ஓட்டி, அவரே மகத்தான வெற்றி(?), ஆர்ப்பாட்டமான வெற்றி என்றெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டுவது மக்களுக்கும் தெரியும்.

இதெல்லாம் மக்களுக்கு தெரியும் என்பது தெரிந்தும் அவர் அப்படி செய்கிறார் என்பதுதான் தமிழ்சினிமாவின் மிகப்பெரும் ஆச்சரியம்.

பவர் ஸ்டாரின் ‘லத்திகா’ படத்தின் 200 நாள் விளம்பரமும் இப்படித்தான் என்கிறார்கள். கடைக்கோடியில் இருக்கும் பவர் ஸ்டார் (தனக்கு 5 லட்சம் தீவிர ரசிகர்கள் இருப்பதாக சொல்லிக்கொண்டிருக்கிறார் சீனிவாசன்) போன்ற நடிகர்கள் மட்டுமல்லாமல், முன்னணியில் இருக்கும் நடிகர்களே இப்படி தங்களது படங்களை ஓட்டிக்கொண்டிருப்பதால், உண்மையானவெற்றிவிழா படங்களுக்கு உண்மையான வெற்றி என்று விளம்பரம் செய்யவேண்டிய நிலை இருக்கிறது.

ஆனால், பவர் ஸ்டாரே ‘உண்மையான வெற்றி’ என்று விளம்பரம் செய்திருக்கிறார். என்ன கொடுமை சார் இது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு எஸ்.ஏ. சந்திரசேகரன், கேயார் போட்டியிடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அதிரடி அணிகளுக்கு மத்தியில் பவர் ஸ்டார் சீனிவாசனும் தனி அணியாக ஒன்றை அமைத்துக் கொண்டு தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுகிறார்.தமிழ் திரைப்பட வரலாற்றில் 175 நாட்களை தாண்டி ஒடுகிறது ஒரு படம். அது “லத்திகா”. ஒரே நாளில் பத்து படங்களில் நடிப்பதாக விளம்பரம் வேறு செய்கிறார்.இப்படி மனசாட்சியே இல்லாமல் மங்காத்தா ஆட்டம் போடும் சீனிவாசன்.எனக்கு ஜோடியாக ஐஸ்வர்யராய் நடிப்பாங்களா என்று அடுத்த கல்லை துக்கி போடும்போதெல்லாம் ஏதோ காமெடி பீஸ் என்று தான் நினைத்திருந்தது கோடம்பாக்கம்.

இப்போது தேர்தலிலும் குதித்து தினந்தோறும் கேன்வாசிங்கும் செய்து கொண்டிருப்பதை பார்த்து அழுவதா சிரிப்பதா என்பதே புரியாமல் அதிர்ந்து போயிருக்கிறார்கள் ஏரியாவில்.

இதுக்கேல்லாம் ஒரு முடிவு வராமலா போய்விடும்!


சில விசயங்கள பகிர்ந்துக்கனும்னு தோணும் பாருங்க..அதே மாதிரி இத நக்கீரன்ல பார்த்தோன எனக்கும் அது தான் தோணிச்சு..என்ன பவர் ஸ்டார் ரசிகர் ஐடியா மணி தான் கடுப்பாக போறார்..ஹிஹி

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...