Tuesday, November 22, 2011

மாமல்லன்(ன்னன்)தைமூர்-மன்னர்க்கெல்லாம் மன்னன்!

குறிப்பு:இந்த வீரனின்/கொடுங்கோலனின்(உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளுங்கள்) வரலாற்றை உங்களுக்கு பகிரத்தூண்டிய சக பதிவர் ஜனா அவர்களுக்கு தான் முதலில் நன்றிகள் சொல்ல வேண்டும்.பல மாதங்களாகிவிட்டது அவர் கேட்டு.நான் பெயரை கூட மறந்து கடந்த வாரம் தான் மீண்டும் கேடு தேடி அலசி கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு அப்திவாக்கி வைத்து உங்களுடன் பகிர்கிறேன்.வரலாறுகளை வாசிக்கும் போது என்ன ஒரு இன்பம்..பலருக்கு இதே விதமான ஆசை இருப்பதை கண்டிருக்கிறேன்..நீங்களும் ஒரு வரலாற்றுப் பிரியர் எனில் தொடர்ந்து செல்லுங்கள்!




தைமூர் (6 ஏப்ரல் 1336-19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய-மங்கோலியரான பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இப்பேரரசு, இந்தியாவில் முகலாயப் பேரரசாக 1857 ஆம் ஆண்டுவரை நீடித்தது.


மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.


தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்கவிளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.


வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.


முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா டில்லியை ஆண்டுகொண்டிருந்த போது தனது படைகளுடன் வந்த தைமூர் கோட்டை வாயிலில் முகம்ம்மது துக்ளக்கின் படையை தோற்கடித்து அரண்மனையினுள் புகுந்து சூறையாடி டெல்லி வீதிகளில் இரத்தம் ஓட செய்தது இரண்டு வாரங்களில் திரும்பி சென்றதாக வரலாறுகள் கூறுகிறன!


குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின்சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ளசமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள்உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது


இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும்,பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சுஎன்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.


உலகம் முழுவதையும் வென்று, தம் அதிகாரத்தின் கீழ்கொண்டு வரவேண்டும் என்று, வெறிபிடித்து அலைந்த மாவீரர்களுள் தைமூரும் ஒருவர். அவருக்கு ஒரே கால்தான் உண்டு. போரின்போது மற்றொரு காலை இழந்துவிட்டார்.


உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.


இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.


அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??


அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.


14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!


தைமூர்
தைமூரியப் பேரரசின் எமிர்
Amir TemurZoomed.jpg
உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசாப்ஸ் என்னும் இடத்தில் உள்ள தைமூரின் சிலை
ஆட்சிக்காலம்1370-1405
முடிசூட்டு விழா1370, பால்க்
முழுப்பெயர்தாமெட் சிங்கிசிட் கான்
பிறப்புஏப்ரல் 6, 1336
பிறப்பிடம்ஷாஹ்ரிசாப்ஸ்,திரான்சாக்சியானா
இறப்புபெப்ரவரி 19, 1405 (வயது 69)
இறந்த இடம்ஒட்ரார், சிர் தார்யா
புதைக்கப்பட்டதுகுர்-எ அமிர்,சமர்க்கண்ட்
முன்னிருந்தவர்அமிர் ஹுசைன்
பின்வந்தவர்காலில் சுல்தான்
அரச குடும்பம்தைமூரியர்
தந்தைமுக்ஹம்மத் தரகாய்
தாய்தெக்கீனா மொஹ்பேகிம்


THE TEXT FOR THE PARAGRAPH GOES HERE

Post Comment

Sunday, November 20, 2011

ஒஸ்தி மாமே!! பவர்ஸ்டார் டாப்பு!!



எனக்கொரு பழக்கம் இருக்கு..எதிலேயுமே ஒஸ்தியா இருக்கணும்னு.பதிவு போட்டால் தினசரி போடணும்னு நெனைப்பேன்.பதிவு போடாவிட்டால் கூட தினசரி போட கூடாதுன்னு நெனைப்பேன்.அதே மாதிரி தானுங்க சாப்பிடனும்னா டெய்லி சாப்பிடுவேன்.இல்லாவிட்டால் நாளுக்கு மூணு வேளை சாப்பிடுவேன்.எங்க இருந்து இந்த கெட்ட பழக்கம் வந்திச்சுன்னே தெரியல எனக்கு.

ஆனா இந்த பழக்கம் வேற யாருக்கும் உதாரணமா ஒரு தெலுங்கு பயலுக்கு இருந்திச்சின்னா நான் தொலைஞ்சேன்..பயலு ரீமேக் பண்ணி சாப்பிடாம இருக்கானு சொல்லுவாங்க.அதுதான் இல்ல ஒரு பீட்டர் பய இப்பிடி இருந்தான்'னாலும் எனக்கு தான் கஷ்டம்க.வெளிநாட்டுகாரன் habbit 'டை காப்பி பண்ணி ரீலு விடுரான்னு சொல்லுவாங்க.ஆந்திராகாரனுக்கு பசிச்சா எனக்கு பசிக்ககூடாதா பாஸ்?பசிச்சா அவனும் அம்மா பசிக்குதுன்னு தானே கத்துவான்?பீட்டரா இருந்தா மம்மி ஹங்ரி அப்பிடீன்னு ஷௌட்(shout ) பண்ணுவான்.
அத விடுங்க

இந்த கதையை உங்களுக்கு வழங்குவது ஒஸ்தி எலிப்பொறி கம்பனி ப்ரைவேட் லிமிட்டட்!!நமக்கு பாகிஸ்தானில் கிளைகள் கிடையாது!

ஒரு நாளு எனக்கு செம பசி வந்திரிச்சு.என்னடா இது அதிசயமா இருக்கே,(ஏன்'னா நமக்கு பசி வாறதின்னா அது ஒரு சம்பவம்'க)என்ன காரணம்னு தேடி பாத்தாக்க அதுக்கு காரணம் ஒரு எலி'ன்னு தெரிய வந்திச்சு.எலி எனக்கு பசிய தூண்டி விட்டிட்டு இந்தியா பாக்கிஸ்தான் பார்டர்க்கு ஓடி போயிரிச்சு.இது தான் சமயம்னு தமிழ்நாட்டு எலி ப்ளேக் நோயை பரப்ப பாக்கிஸ்தானுக்கு போயிரிச்சு தொலைச்சான் ஒசாமா பின்லாடன் அப்பிடீன்னு பத்திரிகை மீடியா எல்லாம் பரபரப்பு நியூஸ் விடுறாங்க.இந்த பரபரப்பில பால் விலை ஏற்றமோ கனிமொழி சிறை ஏற்றமோ ஜுஜுபி மேட்டராச்சுன்னா இந்த எலியோட பவர பாருங்க!


இப்போ உலக எலிப்படை சங்கத்தில அந்த எலி தான் மாஸ் ஹீரோ!!ஒஸ்தி மாமே ஒஸ்தி மாமே இது தான் இப்போ அவரு நடந்தாலும் சரி இருந்தாலும் சரி பேக் ரவுண்ட் மியூசிக்கு!

எதையுமே பாத்தீங்கன்னா சும்மா காய விட கூடாதுங்க.காய விட்ட அது பெருசாகி பழுத்து பழமாயிடும்.அப்புறம் எலி வந்து கடிச்சு நாசமாக்கிடும் பாருங்க.இதே மாதிரி தான் என் ப்ளாக்'க்கும்!கொஞ்ச நாள் காய விட்டதால என்னைய "இளைப்பாறிய பதிவர்" லிஸ்ட்டில சேர்த்திட்டாங்க.விட்டிடுவனா?போட்டேன் பாருங்க ஒரு பதிவு..

அது மட்டுமில்ல எதோ பாரிஸ் தமிழ் சிறந்த படைப்புகளுக்கு பல பரிசுக குடுக்க போறதா கேள்விப்பட்டேன்..நல்ல உள்ளங்கள் யாராச்சும் இந்த பதிவை ரெக்கமென்ட் பண்ணிவிடுங்க.எப்படியும் முதல் பரிசு எனக்குன்னு ஆல்ரெடி முடிவாயிரிச்சாம்.உங்களுக்கும் ஒரு பங்கு தாரேன்!
-----------------------------------------------------------------------------------

அழகிய தமிழ்மகன் இவரை பாரு
அதிரடி ஸ்டயிலில் பவர் ஸ்டார்'ரு!
கொடைகளில் இவனுக்கு சவால் யாரு?
படை பலம் நிரம்பிய பவர் ஸ்டார்'ரு!!
குழந்தையின் உள்ளம் சிறுத்தையின் கண்கள் பாரு...
தடைகளை எல்லாம் உடைப்பவரே ஸ்டாரு!!


நம்ம தலைவர் லத்திகா புகழ் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனின் லத்திகா பாடல் ஒன்று.அஜித் விஜய் எல்லாம் எந்த மூலைக்கு..தலைவர் மாஸ் தான் இனி நம்ம வேலைக்கு!!தலைவர் புகழ் நாளுக்கு நாள் நிச்சயமாக அதிகரிப்பதோடு மட்டுமல்லாது விசிறிகளும் அதிகரித்தே வருகிறார்கள் என்பதுடன் அடுத்த படமான 'ஆனந்த தொல்லை" படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறுகிறது!இதனால் அடுத்த படம் நிச்சயமாக ஐநூறு நாட்கள் ஒடுமேன்பதில் எந்த ஐயமுமில்லை!

------------------------------------------------------------------------------------


இது தான் சாரு நிவேதிதா'வின் புதிய நாவலான எக்சைல்'இன் அட்டை படம்!இந்த படத்தின் கருப்பொருள் கொஞ்சம் வில்லங்கமானது..விளங்கினவர்கள் புத்திசாலிகள்.ஒண்ணுமே புரியாவிடில் கமெண்ட்டில் கேளுங்க சொல்றேன்!

------------------------------------------------------------------------------------------------------------------
"அநாகரீகமாக எழுதுபவர்களும் இத்தகைய சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள். சுவற்றில், தியேட்டரில் கழிவறைகளில் இப்படிப்பட்ட கிறுக்கல்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அத்தகைய கிறுக்கல்களை இப்படிப்பட்ட சமூக வலைதளங்களில் போட அவர்கள் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட தகவல்களைப் பரப்புவதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம்."
பெருவாரியான மக்களைச் சென்றடையும் ஒரு சமூக வலைதளத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களைத் திட்டுவதாலோ, குறை சொல்வதாலோ அவர்களின் வெற்றியை நீங்கள் பறித்துவிட முடியாது அப்பிடீன்னு சூர்யா ஒரு பேட்டியில சொல்லி இருக்கார்.


இந்த சன்டிவி வேலாயுதத்தை ரா-ஒன்'க்கு பின்னால் வரிசைப்படுத்தி இருக்கிறது.ரா ஒன் இரண்டாம் இடத்திலும் முதலாம் இடம் சொல்ல தேவை இல்லை.ஜெயா டிவி ரேட்டிங் நான் பார்க்கவில்லை.அதில் வேலாயுதம் முதலாவதாய் வந்து இருக்கும் என்பது நிச்சயம்.எந்த மீடியா தான் இப்போது நடுநிலையாக இயங்குகிறது.அரசியலிலும் சரி வியாபாரத்திலும் சரி தங்களை "ஒஸ்தி"ப்படுத்துவதிலேயே குறியாய் இருக்கிறனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், சச்சின் தனது 100வது சதத்தை அடித்தால், மும்பை கிரிக்கெட் சங்கம் (எம்.சி.ஏ.,) சார்பில் 100 தங்க காசுகள் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.முதல் இரண்டு போட்டிகளிலும் சதம் அடிப்பார் அடிப்பார்னு எல்லாரும் எதிர்பார்க்க மறுபக்கம் திராவிட் தான் சதம் அடித்துக்கொண்டிருக்கிறார்.பதட்டம் காரணமாய் தான் சச்சினால் சதம் அடிக்க முடியவில்லை என்று கூறப்படும் சமயம் இவர்கள் வேறு தங்க காசு வெள்ளிக் கோப்பைன்னு கிளம்பிட்டாங்க...அடுத்த டெஸ்ட்டிலும் அம்போ தானா!!


மறுபக்கம் இந்திய முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி 1996 உலக கிண்ண அரையிறுதி போட்டியில் சூதாட்டம் நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக குண்டை தூக்கி போட்டிருக்கிறார்.போட்டியில் டாஸ்'இல் வென்றால் முதலில் பேட் செய்வதாக தான் முதலிலேயே முடிவெடுக்கப்பட்டிருந்ததெனவும் ஆனால் போட்டி தினமன்று டாஸ்'இல் வென்று களத்தடுப்பை தெரிவு செய்தது தனக்கு சந்தேகத்தை தருகிறதென்று கூறி இருக்கிறார்.அத்துடன் டாஸ்'க்கு முன்னரே ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நவ்ஜோத் சித்து துடுப்பாட தயாராக pads கட்டி இருந்ததை தான் அவதானித்ததாகவும் தெரிவித்துள்ளளார்.இந்த கருத்தை அப்போதைய கேப்டன் அசாருதீன் மற்றும் அணி முகாமையாளர் அஜித் வடேகர் மறுத்துள்ளனர்.அந்த அரை இறுதி போட்டி தான் காம்ளியின் கிரிக்கட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது!


Post Comment

Thursday, November 10, 2011

அஜித் விஜய்'யை மாஸ் படுத்தும் பாடு!!



தமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லை!மாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்'ல கூட வரைவிலக்கணம் காணப்படவில்லை.ஆனால் தற்போது அதிகப்படியானோரின் வாயில் உச்சரிக்கப்படும் மந்திரமாக மாறி இருக்கிறதென்றால் அதற்க்கு அஜித் விஜய் தான் முக்கிய காரணம்.

பலதரப்பட்ட படங்களில் நடித்து வந்த தல,தளபதி மாஸ் என்ற அந்த ஒற்றை சொல்லால் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல...அவர்களின் ரசிகர்கள் பாடு அதை விட அதிகம்!!நீயா மாஸ் நானா மாஸ் உன் தலையா மாஸ் தளபதியா மாஸ் என்று அடிபடும் சமயம் இந்த "மாஸ்" என்ற சொல்லு நமக்கு எதனை தந்திருக்கிறதென்று பார்ப்போம்.

துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை என்று காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்'ஜை திருப்பாச்சி என்ற ஒரு அதிரடியில் அறிமுகம் செய்தார் பேரரசு.விஜய்யின் புதிய அவதாரமான திருப்பாச்சி பெரிய வெற்றியை விஜய்க்கு தந்திருந்ததமை விஜய்யை அதே மாதிரியிலான கதைகளில் நடிக்க தூண்டியது.ஏன் இயக்குனர்கள் கூட விஜய்யை அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் அழகுபடுத்தவே விரும்பினர்.அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த சிவகாசி போக்கிரி என்பன மாபெரும் ப்ளாக் புஸ்டர் ஆகி வெற்றி பெற,மேலும் உந்துதலால் அதே வகையான கதைகளை தெரிவு செய்து நடித்தார் விஜய்.சில விடயங்கள் சரியாக அமையாததால் தொடர்ந்து சில படங்கள் குருவி சுறா என்று தோல்வியை தழுவியது.ஆனாலும் அந்த மாஸ் என்பதை விட விஜய்க்கும் விருப்பம் இல்லை.இயக்குனர்களுக்கும் விருப்பம் இல்லை.விஜய் ரசிகர்களுக்கும் விருப்பம் இல்லை..அதனால் விஜய்'யால் அந்த ட்ராக்'ஐ விட்டு வெளிவர முடியவில்லை.காவலனில் நடித்திருந்தாலும்,அது மாதிரியான சாப்ட்'டான பாத்திரங்களில் விஜய்'யை பார்ப்பதை விட அதிரடி பாத்திரங்களில் பார்ப்பதையே அவரது ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பது வேலாயுதம் வெற்றியிலிருந்து புலப்படும்.


முகவரி,வாலி என்று அழகிய கதைகளில் நடித்து பாராட்டுப் பெற்ற தல அஜித்,சிட்டிசன்,ரெட் போன்ற படங்களில் தனது மாஸ் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.அதற்க்கு அடுத்தபடியாக வந்த ஜீ,ஆஞ்சநேயா போன்ற சில படங்கள் தோல்வியை கொடுக்க கிரீடம் படத்தில் சாந்தமான பையனாக நடித்து பாராட்டு பெற்றார்.அதற்க்கு பின்னர் பில்லா ரீமேக்'இல் நடித்த அஜித்,அதன் மாபெரும் வெற்றியால் அது மாதிரியான கதைகளை தெரிவு செய்யதொடங்கினார் .தொடர்ச்சியாக ஸ்டைலிஷ்,அதிரடி போர்முலாவில் வெளிவந்த மங்காத்தாவும் மாபெரும் வெற்றி பெற்றது.அடுத்து பில்லா பாகம் இரண்டில் நடிக்கும் அஜித் கூட அதே வகையான படங்களுக்கு அடிமையாகி விட்டார் என்றே சொல்லலாம்.அவர் ரசிகர்களும் அந்த மாதிரியான படங்களையே அதிகம் விரும்புகிறனர்.இயக்குனர்களும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் தலை'யை நடிக்க வைக்கவே விரும்புகிறனர்.

விஜய்'யோ சரி அஜித்தோ சரி தெரிந்தோ தெரியாமலோ ஒரே வகையான போர்முலாவில் சிக்குப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாக புலப்படும்."மாஸ் ஹீரோ" என்பது அனைத்து நடிகர்களுக்கும் இலகுவில் கிடைத்துவிட கூடிய அந்தஸ்து அல்ல.அது விஜய்'க்கும் அஜித்துக்கும் கிடைத்திருக்கிறது.அதனை இழக்கவும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.அவர்களது ரசிகர்களும் விரும்பமாட்டார்கள்.தொடர்ச்சியான மசாலா படங்களே விஜய் என்ற அடையாளமாக இருக்கப்போவதும்,தொடர்ச்சியான கோர்ட் சூட் ஸ்டைலிஷ் இருமணிநேர படங்கள் தான் அஜித்தின் அடையாளமாக இருக்கப்போவதும் தவிர்க்கப்பட முடியாதது.

--------

நான்கு ஐந்து படங்கள் வெளிவரும் போது மேல் கூறிய போர்முலா தவிர்த்து ஒரு படம் வெளிவருவது என்பது அதிசயமாக தான் பார்க்கப்படும் காலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.பில்லா-1 ,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா-2 போன்ற இறுதி அஜித்தின் ஐந்து படங்களையும் பாருங்கள்.உண்மை புலப்படும்.அதே மாதிரி விஜய்யின் வில்லு,வேட்டைக்காரன்,சுறா,காவலன்,வேலாயுதம் போன்ற வரிசையும் அவ்வாறானதே!!

இந்த "மாஸ்"என்ற அடையாளத்தை விட்டு வேறு மாதிரியான படங்களை தல,தளபதி ரசிகர்கள் தவிர்த்த ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் அந்த "மாஸ்"அடையாளத்தை விட்டுக்கொடுக்க தல தளபதி விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை.


மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும்,பல தரப்பட்ட கதைகளில் வித்தியாசமாகவும் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தல தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...