Friday, September 26, 2014

பேஸ்புக் பெண்கள்..!


'அதென்ன உங்க ஸ்டேடஸ்ச,உங்க போட்டோவ மத்தவங்க லைக் பண்ணனும்னு எதிர்பாக்கிறீங்க ஆனா ஏன் மத்தவங்க போட்டோவ லைக் பண்றீங்க இல்ல?'ன்னு புதுசா சாட்க்கு வந்த பொண்ணு கேட்டிச்சு.

'எது அந்த பர்பி டோல் போட்டோவையா லைக் பண்ணல?'
'இல்லை.'ன்னிச்சு.

'அந்த ரோஜாப்பூ போட்டோவையா?'
'இல்லைங்க..'

'அந்த நாய்குட்டி போட்டோவ சொல்றீங்களா?'
'இல்லைப்பா...'

'ஓகே ஓகே புரிஞ்சிரிச்சு..போன வாரம் ஒரு பிள்ளையார் போட்டோவ ப்ரொபைல்ல போட்டிருந்தீங்களே அதத்தானே கேக்கிறீங்க?'
'இல்லைங்க..'

'அப்புறம் எதத்தான் நான் லைக் பண்ணல?'
'போன மாசம் போட்டிருந்தனே?'

'அந்த கார்ட்டூனா?'
'இல்லப்பா..'

'காஜலா?'
'இல்லப்பா..'

'அனுருத் போட்டோவா?'
'இல்லப்பா..'

'அப்போ எதத்தான்பா போட்டீங்க?'

'அதாங்க என்னோட சின்னி விரல்ல கலர் கலரா நெயில் பொலிஷ் டிசைன் பண்ணி போட்டிருந்தனே?என்னோட ப்ரெண்ட் பூஜா கூட வந்து கியூட்ன்னு சொல்லி ரெண்டு ரெட் ஆப்பிள்   கமெண்ட் வேற போட்டிருந்தாளே..நீங்க பாக்கல?


Post Comment

புத்தக வெளியீட்டு காமெடிகள்..!


நண்பர்,அதிகளவாக வாசிப்பு,புத்தகங்கள்,இலக்கியம் சம்பந்தமாய் அறவே ஆர்வமற்றவர் என்று அறியப்பட்டவர். நேற்று அதிசயமாய் நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார்.அடிக்கடி போனில் பேஸ்புக்கை நோண்டிக் கொண்டிருந்தார்.என்னவென்று கேட்டேன்.

'பொன்னியின் செல்வன்'வாசிச்சிருக்கீங்களா பாஸ்?போன வாரம்தான் வாசிச்சு முடிச்சேன்.செம புக்கு தல.அதபத்தி தான் விவாதிச்சிட்டிருக்கோம் பேஸ்புக்ல' என்றார்.எட்டிப் பார்த்தேன்.'its a great novel..very very interesting' அப்பிடின்னு ஆங்கிலத்தில் மிகத்தீவிரமாக விவாதம் போய்க்கொண்டிருந்தது.
'ம்ம்..வாசிச்சிருக்கேன்'என்றேன்.

'எப்போ?
'ஆறாம் ஆண்டு படிக்கும்போது முதல்தடவை'

'முழுசா வாசிச்சீங்களா?மொத்தமா அஞ்சு பாகம் இருக்கு பாஸ்!'
'ம்ம்..முழுசா வாசிச்சேன்..'

'செம இண்டெரெஸ்ட்டிங்க்லே?'
'ம்ம்ம் ஆமா ஆமா'

'டைட்டில் தான் சாட்டர் பாஸ்..சோழரின் வீர சாகசம்..சோழரின் பெருமை..அப்பிடின்னு ஏதும் டைட்டில் வைச்சிருந்தா நிறையப்பேர் வாங்கிவாசிச்சிருப்பாங்க'என்றார்.

'அப்பிடியா?நல்ல காலம் கல்கி செத்துப்போய்ட்டார்'என்று நினைத்துக்கொண்டேன்.
'அடுத்ததா சிவகாமியின் சபதம் வாசியுங்க பாஸ்'
'ம்ம்ம்..'

'கடல் புறா கூட வாசிக்கலாம் நீங்க..சாண்டில்யன்ன்னு ஒரு ரைட்டர்.செமயா எழுதியிருப்பார்!'
'ம்ம்..'
'கொஞ்சம் இருங்க பாஸ்..வெளில போய்ட்டு வர்றேன்..'என்று வராத கோலை அட்டெண்ட் பண்ணிக்கொண்டே திடீரென எழுந்து சென்றார்.

என்னவாய் இருக்குமென்று யோசித்தேன்.புத்தகம் விற்றுக்கொண்டு வந்தவர்கள் எனக்கு அருகே வந்துவிட்டிருந்தனர்.அடுத்த முறை அவரோடது..!

-------------------------------------------------------------------------------------------------------------------

சரி விசயத்திற்கு வருவோம்.

'திரை விலகும்போது..'என்கின்ற திருச்செந்தூரனின் வானொலி மேடை நாடகங்கள் நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தேன்.

குறைந்தது 250-300பேராவது வந்திருப்பார்கள்.சிறப்பாக ஒழுங்கமைத்து நிகழ்ச்சியை நடாத்தியிருந்தார்கள்.ஒரு 200 புத்தகங்களேனும் குறந்தபட்சம் நிகழ்ச்சியில் விற்று முடிந்திருக்கும்.விலை 500ரூபாய் என்றாலும் 400க்கே விழா மண்டபத்தில் பெற்றுக்கொள்ளமுடிந்தது.பலரை புத்தகம் வாசிக்க,வாங்கத் தூண்டவேண்டும் என்கின்ற காரணத்தினாலும்,பலரை சென்றடையவேண்டும் என்கின்ற எண்ணத்தினாலும் கழிவு விலையில் கொடுப்பதாக நூலாசிரியர் தெரிவித்திருந்தார்.

அப்துல் ஹமீதின் பேச்சை பலரும் தங்களது தொலைபேசிகளில் பதிவுசெய்துகொண்டிருந்தனர்.உலக அறிவிப்பாளர் என்று அழைத்தால்,எந்த விதத்தில் இவர் உலக அறிவிப்பாளர் என்று பலரும் பட்டிமன்றம் வைப்பதால் தன்னை அன்பு அறிவிப்பாளர் என்றே அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார் அப்துல் ஹமீட்.தங்கள் வானொலி/ ஊடகத்துறை சார்ந்த சாதனைகள்,முயற்சிகள் அனைத்தும் பதியப்படாமலே காலத்தினால் அழிந்துவிட்டன என்று கவலைப்பட்டார்.

ஊடகத்துறையினர் பலரும்,நாடகத்துடன் சம்பந்தமான பலரும் வந்திருந்தனர்.சரஸ்வதி மண்டபம் நிரம்பியதை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.சிறப்பான திட்டமிடலும் ஒழுங்கமைப்பும்,சமூக வலைத்தள ஆதரவும் இருந்தால்,புத்தக வெளியீட்டுக்கு கூட இலங்கையில் 500 பேரை திரட்டலாம் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு.

ஷண்முகாஸ் சிற்றுண்டி மற்றும் குளிர்பானத்துடன் உபசரிப்பு வேறு..!வாழ்த்துக்கள் Senthooran Thiruchchenthooran..!



Post Comment

பொருளியல் ஆசிரியர் வரதராஜன்..!


பொருளியலும் வரதரும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாகவே உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் படித்த மாணவர்கள் நினைத்திருப்பர்!வடக்கில் பொருளியல் என்றாலே கூடவே வரதரும் ஞாபகத்திற்கு வந்துவிடுவார் பலருக்கும்!

உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவுக்குள் காலடி எடுத்துவைத்த போது 'இதெல்லாம் ஒரு மேட்டரா'என்று எனக்கிருந்த இறுமாப்பு தகர்ந்தது வரதரின் முதலாவது வகுப்பில் தான்!

ஒவ்வொரு பொருளியல் எண்ணக்கருக்களையும் அதன் ஆதி முதல்கொண்டு முழுமையாக விளக்குவதில் வரதருக்கு நிகர் அவரே!


பொருளியல் அவர் இரத்தத்தில் ஊறிய ஒன்று!அதுவே பிடிக்காத பொருளியலையும் பலருக்கு பிடித்தமானதாக்கியது!தீவிர நாட்டுப்பற்றாளன்.இதனாலேயே இந்தியன் ஆர்மியாலும், பின்னர் அண்மையில் இனந்தெரியாதோராலும்(!) கடத்தப்பட்டார்.கல்விமான்.அரசியல்-பொருளாதார விமர்சகர். வகுப்புகளில் அரசியல்-பொருளாதார நுண் காமெடிக்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது.

ஒருசில ஆசிரியர்கள் தான்,ஆசிரியர் என்கின்ற ஸ்தானத்தையும் தாண்டி மனதில் ஒரு ஹீரோவாக,கடவுளாக உருவகப்படுத்தப்படுகின்றனர்.பொருளியலைப் பொறுத்த வரையில் பெரும்பாலானோருக்கு வரதர் அப்படித்தான்..!சிறந்த பொருளியல் ஆசானை தமிழ் மாணவர்களும் கல்விச் சமூகமும் இன்று இழந்து நிற்கின்றது!

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...