Tuesday, February 4, 2014

நண்பிகளுடன் ஒரு கலாட்டா..! 16+

               
                     

'யாரையும் பார்த்தவுடனேயே சூப்பர் பிகரா அட்டுப்பீஸான்னு பார்ப்பது தான் உன்வேலையா?'என்று கடிந்தாள் நண்பி.

'கூடவே என்ன ஜிமிக்கி போட்டிருக்கிறாள்,என்ன கலர் கியூடெக்ஸ் அடிச்சிருக்கிறாள்,என்ன ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கிறாள்,'ஐ ப்ரோ' ஷேப் பண்ணியிருக்கிறாளா,கண்ணுக்கு மை அடித்திருக்கிறாளா,அவள் ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி என்பது பற்றி எல்லாம் கவனித்துவிடுவேன்..

என்ன,சூப்பர் பிகரா அட்டு பிகரான்னு ஒரு அவுட்லைன் சொன்னதுக்கே இப்பிடி திட்டுறியே,மிச்சம் எல்லாம் சொன்னா எவ்ளோ டீப்பா போறாய் நீயி? அப்பிடின்னு கடிச்சு வைச்சிடுவியேன்னு தான் சொல்றதில்லை' ன்னு சொன்னேன்..

ஒரு கணம் மயான அமைதி..
மேசையிலிருந்த பஞ்சர் எங்கோ எறியப்பட்டு நிலத்தில் விழுந்து கிடந்தது...
என் நெற்றியில் லேசாய் இரத்தம்..!

----------------

நண்பர்களுடன் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.நண்பி வீட்டிலிருந்து வடை செய்து கொண்டுவந்திருந்தாள்.

'உப்பு சற்று தூக்கல் தான்..இந்தாங்க எடுத்துக்கோங்க' என்று நீட்டினாள்.
நான் எடுத்துக்கவில்லை.

'ஏன் வடை பிடிக்காதோ?'

'இல்லை,உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லியிருக்காங்க.. உங்க உப்பு வடைய சாப்பிட்டிட்டு,நாள் முழுக்க உங்களையே நினைச்சிக்கிட்டிருக்க முடியாது பாருங்க..நான் சமந்தா கூட ஆல்ரெடி கமிட்டட்'ன்னேன்.

வடையிலிருந்த உப்பும் மிளகாயும் அவள் கோபத்தீ பட்டு வெடித்துச் சிதறின..அப்போது ஆயிரம் குறியீடுகள் ஒன்றுசேர உணர்ந்தேன்.ஆனால் அதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான்..;
..
....
.......

'வடை போச்சே..!

--------------------------------------

தட்டிப்பார்த்தேன்...எழும்பவில்லை.
உலுக்கினேன்..ம்ம்ஹும் எழும்புற மாதிரி தெரியல.

காலங்காத்தால எந்திரிக்கணுமே..என்னாச்சு?
மறுபடி தட்டு தட்டென தட்டி உலுக்கிப்பார்த்தேன்..
ம்ஹும்..ஒருவேளை.....?
ச்சே..அப்படியாய் இருக்காது.சிங்கக்குட்டிலே..!!

அப்புறம் ஏன் எந்திரிக்கல?வெளில தெரிஞ்சா அசிங்கமாயிருமே.. கட்டிக்கப்போற பொண்ணுக்கு தெரிஞ்சா?ம்ம்ஹும் இது சரிப்பட்டு வராது..

பாத்ரூம் போய் ஒரு பக்கட் தண்ணீர் எடுத்துவந்து மேலே ஊத்தினேன்.. 'எந்திரிடா பரதேசி..எட்டு மணியாச்சு..வேலைக்கு போகவேணாம்?'


------------------------------

எப்போதும் பெற்றார்,உறவினர்,அயலவர்களுடன் செல்லும் வைபவங்களில் சைட் அடிப்பதற்கும் சுதந்திரமாக கதைப்பதற்கும் வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவிடுகிறது.எங்கு கண்ணை திருப்பினாலும்,நம் கண்களுடன் சேர்ந்து கூடவே பல ஜோடிக்கண்கள் அந்த பக்கமாக திரும்பும்..!

கடந்த சில காலமாக மேற்கொண்டுவரும் ஆய்வுகளின் பிரகாரம்,இளம் பெண்களைவிட திருமணமாகி ஒரு சிறு குழந்தைக்கு தாயாக இருக்கும் பெண்கள் மிக அழகாக இருக்கின்றார்கள் என உள்மனது சொல்கிறது.

இல்லை,அழகான இளம் பெண்கள் அனைவருமே வெகு சீக்கிரம் திருமணம் முடித்து மிக அழகான அம்மாக்களாக மாறிவிடுகிறார்களா என்ன? பீலிங்க் கொன்பியூஸ்ட்...!


---------------------------------

விளக்கு அடித்திரியில் ஊசலாடி எரிந்துகொண்டிருந்தது..

அணைக்கவா..?நூக்கவா..? என்றேன்..

நூத்துவிடு என்றாள் நண்பி..;எதிர்பார்த்தது தான்!!அணைத்துவிடு என்றால்,எங்கே தன்னை அணைத்துவிடுவான் என்கின்ற பயமோ?

மைந்தன் கொடூரமானவன் தான்..ஆனா பொண்ணுகளுக்கு கிடையாது..!


----------------------------------

            Nazriya Nazim hd Photos
'அங்க கைய வைக்காதே..'என்றேன் கண்டிப்பாக.
அவள் வைத்தாள்...
'ம்ம்ம்ஹும் அப்பிடி வருடாதே...'என்றேன் கூச்சமாக..
வருடினாள்..!

'ஏய்ய்...ஏன் ஆலிவ் Oil தடவிக்கிறே?எனக்கு பிடிக்காது..!'என்றேன்.
'சும்மா இரு உனக்கொண்னுமே தெரியாது..Oil தடவினாத்தான் நல்லா வருடி விடலாம்..!'என்றாள்.வாய் தான் பேசிக்கொண்டிருந்ததே தவிர,கைகள் வருடிக்கொண்டிருந்தன.

'அடியே..இழுத்துவிடாதை..கையோட வந்திட போகுது..'நுள்ளினேன்.
ம்ம்ஹும்,அவள் வேண்டுமென்றே இழுத்துவிட்டாள்..வலித்தது..!

'பரதேசி..பாத்துடி...வலிக்குது..!'
இன்னும் வேகமாக இழுத்தாள்..
அவள் கையோடு வந்தேவிட்டது..!
எழுந்து கண்ணாடியில் பார்த்தேன்..
தலையில் இருந்த கால்வாசி முடியில் அரைவாசி காணாமல் போயிருந்தது..!


-----------------------------------

'போடா லூசு..'என்று நண்பிகள் திட்டும்போது அதில் ஒரு வெட்கமும்,அன்பும்,வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாத ஆயிரத்தெட்டு உணர்வுகளும் கலந்திருக்கும்..!
----------------------------------
ஆடை நீக்கி பருகவா எனக்கேட்டேன்...
ஆடையுடனேயே பருகு என்றாள்;பால்
பெண்பால்..!

-------------------------

                

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்..!
எனக்கு அசைவம் ரொம்ப பிடிக்கும்..

நீ சைவத்துக்கு மாறிவிடு..!
எனக்கு,அசைவதற்கு ரொம்ப பிடிக்கும்..அதனால் முடியாது..

எனக்கு அசைவம் பிடிக்காது..என்னைப்போல் பல பெண்கள் இருக்கிறார்கள்..அசைவம் பிடிக்காமலேயே..!
அசைவம் சாப்பிடாவிட்டாலும்,நீ அசைவம் பற்றி பேசுகின்றாய்.. அசைவம் தவிர்க்க முடியாதது சைவமே..!

நான் சைவம் இருக்கட்டும்..நீ வெறும் சவமே...!
சவத்தில் தான் உன் சைவம் இருக்கிறது பெண்ணே..

சவத்தில் இருந்தாலும் பரவாயில்லை..உன் வசத்தில் இருக்காத வரை.!
என் வசத்தில் நீ இல்லையெனிலும் உன் வாசத்தில் தான் நான் வாசம் செய்கிறேன் தினமும்..!

வாசம் பற்றி பேசாதே..அது நிச்சயம் பூ வாசம் கிடையாது..!
பூ வாசம் புறப்படும் பெண்ணே..அதற்கு 'நாம்'பூ வரைய வேண்டுமாமே?

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்........!


-------------------------------------

                Sugar Lips

'உன்கிட்ட வாய குடுக்கக்கூடாதுடா..நீ ரொம்ப மோசம்'என்றாள் நண்பி.

இது டபுள் மீனிங்கா சிங்கிள் மீனிங்கா என்று இன்னமும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன்..! 
கில்லாடிப் பெண்கள்...!!

----------------------------------

'கீழே பதிச்சு விடுங்கோ..'என்றாள்.

'போதும் போதும்,நேரா விடுங்கோ'என்றாள்.
'மேல கீழ மாறி மாறி விடுங்கோ..'என்றாள்.
'இடைக்க நிப்பாட்டி நிப்பாட்டி போடுங்கோ..'என்றாள்.

'உன்னோட ஏலாது..இந்தா பிடி ரிமோட்டை நீயே வைச்சிக்க'ன்னு சொல்லி ஏ/சி ரிமோட்டை அவள் கையில் திணித்துவிட்டு,விட்டத்தைப் பார்த்து வெறுமனே சிரித்துக்கொண்டான்..!


-------------------------------------
Nazriya Nazim hd Photos

அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள் தான்.

என்ன,80வீதமான பெண்களுக்கு தங்களுக்கு பொருத்தமான ஆடை அணிகலன்களை சரியாக தெரிவுசெய்யத் தெரியவில்லை..!

----------------------------------

'நாயே...குரங்கு..பன்னி..கழுதை'ன்னு ஒரு பொண்ணு என்னை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தாள்.

'பொண்ணுக திட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்..கோபத்தில் அவங்க முகம் கொடுக்கும் Expressions'ஐ ரசித்து,கவனித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் திட்டுவது என் காதில் விழுவதில்லை'என்றேன்.அவள் திட்டுவதை விட்டுவிட்டு என்னசெய்வதென்று முழுசினாள்.

நான் மறுபடி கண்ணடித்தேன்.இம்முறை திட்டு விழவே இல்லை,மாறாக ஒரு புன்னகை..! 


----***-----

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...