Wednesday, April 6, 2011

நான் யாரையும் காதலிக்கவில்லை-இலியானா


ஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழில் நடிப்பதென்பது அனைத்து நடிகைகளுக்கும் வாய்க்காத ஒன்று.

அந்த வகையில் உள்ளடங்கும் ஷங்கரின் நண்பன் படத்தின் ஹீரோயின் தான் இலியானா!


கேடி என்ற மொக்கை படத்தில் நடித்த இலியானாவுக்கு நண்பன் படம் கிடைத்ததற்கு காரணம் சில பதிவுலக மொக்கை பதிவர்கள் தான் என

ஒரு கதை கொலிவூடில் உலாவருகிறது.

மொக்கை பிகராய் இருந்தாலும் சுப்பர் பிகர்னு சொல்லி ஒரு பதிவை தேத்துறதுக்கு எந்தவகையிலும் நம்ம பதிவர்கள் பின் நின்றதில்லை.


அவ்வாறு இருந்த இவர்கள் இப்போது ஒரு படி மேலே போயி இலியானாவுக்கும் எனக்கும் காதல் அப்பிடீன்னு தங்களையும் இலியானாவையும் சேர்த்து பதிவை போட்டு வந்தது எப்படியோ இலியானாவின் காதுகளுக்கு எட்டி இருக்கிறது.

இதனால் நண்பன் ஷூட்டிங்'இல் இருந்த இலியானா குடித்துக்கொண்டிருந்த ஆரேஞ் ஜூசை தூக்கி எறிந்து தனது கடுப்பை காட்டி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டிய இலியானா ,


"நான் காலையில் பாலும்,மதியம் இரண்டு சப்பாத்தியும் சாப்பிடுவது உண்மைதான்..நேற்று கூட இரண்டு ஆப்பிள் பழம் சாப்பிட்டேன்.

நாளைக்கு வாழைப்பழம் கூட சாப்பிடலாம்னு இருக்கேன்..என்ன சாப்பிடுறதுன்னு நான் முடிவு பண்ணேக்க,

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு எப்படிப்பட்ட நபர் வேண்டும்,அவர் என்னுடைய சொல்லுக்கு கட்டுப்படனுமா இல்லையா என்று நான் தான் முடிவு பண்ண வேண்டும்!!

ஆனால் இந்த மொக்கை பதிவர்கள் என தங்களை தாமே அழைத்துக்கொள்ளும் பதிவர்கள் தங்களின் மொக்கைக்கு ஊறுகாயாக என்னை பயன்படுத்திக்கொள்வது எந்த வகையில் நியாயம்??




இப்படி தான் கடந்த மாதம் தப்சியை மட்டுமே வைத்து ஒரு பதிவர் ஐந்து பதிவுகளை போட்டிருந்தார்..

இம்மாதம் நானா???


அவங்களுக்கு ஒரு மூடு வந்தா தப்சினு அலைவானுக...அவங்க அலுத்திச்சுதுன்னு சொன்னா இலியானா என்று இளிப்பார்கள்..

நாளை ஹன்சிகா மொத்வானி என்று போனாலும் போவார்கள்...



இப்படிப்பட்ட பிழைப்பு பிழைக்கும் இவர்களை எந்த வகையிலும் நான் காதலிக்கமாட்டேன் என்று ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்..

இப்போது இவ்வளவு தான் கூற முடியும்,எனக்கு சூட்டிங்'கு டைம் ஆச்சு"


என்று கோபமாக கூறிவிட்டு வெளியேறிவிட்டார் இலியானா!!





அப்புறம் உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்னு கேக்கிறீங்களா??
பத்திரிகையாளர் சந்திப்பு முடிஞ்ச கையோட பக்கத்தில ஒரு கரவேனுக்கு போயிருந்தோம் நானும் இலியானாவும்.
அங்க தான் இம்புட்டையும் என்கிட்டே கொட்டிச்சு அந்த புள்ளை.. இத வெளிய சொல்லதைன்னு கேட்டிச்சு..எண்டாலும் சொல்லாம இருக்க மனம் வருதில்லை...
உங்களோட கூட பகிர்ந்துக்கேலைன்னு சொன்னா...அப்புறம் என்னுடைய ப்ளாக்'கு நீக வர்ரதில என்ன பயன் சொல்லுங்க பார்ப்போம்!!

குறிப்பு :போலோவேர்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றி ஐம்பதை நோக்கி நடை போடுகிறது..பார்க்கலாம் எப்போது தொடுகிறதென்று!!

தப்சி பத்தி சில பதிவுகள் பாருங்க:




Post Comment

15 comments:

ம.தி.சுதா said...

சுடு சோறு கிடைக்குமா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஆணுறை பாவிப்போரே பெரும் ஆபத்து காத்திருக்கிறது (18+) condom

ம.தி.சுதா said...

ஃஃஃஇதனை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பை கூட்டிய இலியானாஃஃஃஃ

மவனே நீ மட்டும் தானே போயிருப்பே...

ம.தி.சுதா said...

ஃஃஃஃபோலோவேர்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றி ஐம்பதை நோக்கி நடை போடுகிறது..பார்க்கலாம் எப்போது தொடுகிறதென்று!!ஃஃஃ

நெல்சன் கடந்த சரி மகனே அப்பறம் சீறும்...

நிரூபன் said...

நான் யாரையும் காதலிக்கவில்லை//

வணக்கம் சகோ, தலைப்பைப் பார்த்தால் நீங்கள் ஏதோ வலை விடு தூது விடுவது போன்று இருக்கிறது என்று ஓடி வந்தால், நம்ம இலிசானா சொல்லுறாவாம்...

நிரூபன் said...

கேடி என்ற மொக்கை படத்தில் நடித்த இலியானாவுக்கு நண்பன் படம் கிடைத்ததற்கு காரணம் சில பதிவுலக மொக்கை பதிவர்கள் தான் என

ஒரு கதை கொலிவூடில் உலாவருகிறது.//

அப்ப நம்ம பதிவுலகம் கொலிவூட்டிலையும் ரொம்ப பேமசாகிட்டென்று சொல்லுறீங்க...

நல்லாத் தானய்யா பயபுள்ள றீலு விடுறாரு

நிரூபன் said...

மொக்கை பிகராய் இருந்தாலும் சுப்பர் பிகர்னு சொல்லி ஒரு பதிவை தேத்துறதுக்கு எந்தவகையிலும் நம்ம பதிவர்கள் பின் நின்றதில்லை.//

உங்களையும் இந்த லிஸ்ட்டிலை சேர்த்தா பாஸ்...

நிரூபன் said...

இதனால் நண்பன் ஷூட்டிங்'இல் இருந்த இலியானா குடித்துக்கொண்டிருந்த ஆரேஞ் ஜூசை தூக்கி எறிந்து தனது கடுப்பை காட்டி இருக்கிறார்//

ஹா...ஹா....ஐயோ ஐயோ... இதெல்லாம் எப்பிடிங்க சார் உங்களாலை மட்டும் முடியுது?

நிரூபன் said...

இப்படி தான் கடந்த மாதம் தப்சியை மட்டுமே வைத்து ஒரு பதிவர் ஐந்து பதிவுகளை போட்டிருந்தார்..///

தப்சியைத் தவற விட்டு விட்டு, இலியானா பற்றிப் பதிவு போடுவதும் ஒரே நபர் என்று வதந்திகள் உலவுகிறது. நெசமாவா சகோதரம்?

நிரூபன் said...

உங்களோட கூட பகிர்ந்துக்கேலைன்னு சொன்னா...அப்புறம் என்னுடைய ப்ளாக்'கு நீக வர்ரதில என்ன பயன் சொல்லுங்க பார்ப்போம்!!//

அது சரிதான் பாஸ், நிலவுக்கு நீங்க விண்கலத்தை அனுப்புற செய்தியை பகிர்ந்து கொள்ளத் தானே வேணும்:))))

நிரூபன் said...

போலோவேர்ஸ் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக நூற்றி ஐம்பதை நோக்கி நடை போடுகிறது..பார்க்கலாம் எப்போது தொடுகிறதென்று!!//

இலியானாவின் இடையழகு என்று ஒரு பதிவு போட்டால் நாளைக்கே பிச்சுக்கிட்டு உதறும் பாஸ்.....செம காமெடி...

அதுவும் தப்ஸியைப் பற்றிப் பதிவு போடும் ஒரு பதிவரை வைத்து செமையாக அறு, அறு என்று அறுத்திருக்கிறீர்கள்.

தப்ஸி ரசிகர் மன்றம், தங்கொட்டுவ.. said...

தப்ஸி ரசிகர் மன்றம், தங்கொட்டுவ..

என்னையை மீறி, நீயு எப்புடி இலியானாகிட்ட பேசுறாய் என்பதை பாக்கத்தான் போறன்...

இனிமே இலியானா புராணம் பாடினீங்க. நான் வடிவேலு கிட்ட ஜோடி சேர்ந்து மொக்கை கதாநாயகி ஆகிடுவேன்.

சி.பி.செந்தில்குமார் said...

>>அவங்களுக்கு ஒரு மூடு வந்தா தப்சினு அலைவானுக.


நண்பேண்டா.

கவி அழகன் said...

நல்லா போகுது போல வியாபாரம்

Unknown said...

ஆமா மாப்ள எப்ப இந்த கனவ விட்டு வருவே ஹிஹி!

Jana said...

ஆமா..நான் அப்படித்தான் சொல்ல சொல்லியிருக்கேன்;... :)

Related Posts Plugin for WordPress, Blogger...