Tuesday, July 5, 2011

கார்த்திகாவுக்காய் ஒரு பாடல்!!

"கோ' படத்தை அனைவருக்கும் பிடித்திருந்தாலும்,படம் வெளிவர முதலே வெளிவந்த கோ பட பாடல்களில் ம்முதலில் மனதை கவர்ந்த பாடல் 'என்னமோ எதோ"பாடலாகும்..இப்போ கூட பலரின் தொலைபேசிகளின் ரிங் டோன்'னாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப்பாடல்,கேட்கும் பொது மனதுக்கு இதமான ஒரு சுகமான இசையாகும்...ஹரிஸ் ஜெயராஜின் கைவண்ணத்தில் "கோ"படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட,இந்தப் பாடல் ஒன்றே போதும் அந்தக் கதையை முழுங்க!!


ஆலாப் ராஜு,எம்சீஜெஸ்,பிரஷாந்தினி மற்றும் ஸ்ரீச்சரனின் குரலில் மின்னி மறையுது மனதில் இந்த பாடல்!!ஜீவாவின் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பும்,பியாவின் குசும்புகளும்,கார்த்திகாவின் அழுத்தமான பார்வையுமாக பாடல் அப்படியே கவர்ந்துவிட்டது என்னை!!


என்னமோ ஏதோ … எண்ணம் திரளுது கனவில் . .
வண்ணம் திரளுது நினைவில் . .கண்கள் இருளுது நனவில் .
என்னமோ ஏதோ … முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு கட்சி பேடை ..
ஒ ஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை ,
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ அரைமனதை விடியிது என் காலை .
என்னமோ ஏதோ .. மின்னி மறையுது விழியில் ..
அந்தி அகலுது வழியில் .. சிந்தி சிதறுது விழியில் ..
என்னமோ ஏதோ ..சிக்கி தவிக்குது மனதில்
ரெக்கை விரிக்குது கனவில் ..விட்டு பறக்குது தொலைவில் ..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை ,எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒ ஒ அரை மனதை விடியிது நாளை ..
நீயும் நானும் எந்திரமா , யாரோ செய்யும் மந்திரமா , பூவே ..

(humming)

முத்தமிட்ட மூச்சு காற்றில் , பட்டு பட்டு கெட்டு போனேன் , பக்கம் வந்து
நிற்கும் பொது , திட்டமிட்டு எட்டி போனேன் ..
நெருங்காதே பெண்ணே எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும் ,
அழைக்காதே பெண்ணே எந்தன் அச்சங்கள் பஞ்சாகும்
சிரிப்பால் என்னை நீ சிதைத்தாய் போதும் …

ஏதோ … எண்ணம் திரளுது கனவில் ..
வண்ணம் திரளுது நினைவில் கண்கள் இருளுது நனவில் .
என்னமோ ஏதோ … முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் ..

நீயும் நானும் எந்திரமா , யாரோ செய்யும் மந்திரமா , பூவே
Let’s go.. wow.. wow..உங்களின் தமிழச்சி ..
என்னமோ ஏதோ you’re looking too black, மறக்க முடியலையே என் மனம் அன்று ..
உன் மனசோ lovely, இப்படியே இப்போ உன் அருகில் நானும் வந்து சேரவா இன்று .
lady looking like a cindrella cindrella, naughty look-u விட தென்றல் -ஆ ..
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..
lady looking like a cindrella cindrella, naughty look-u vita தென்றல் -ஆ ..
lady looking like a cindrella cindrella, என்னை வட்டம் இடும் வெண்ணிலா ..

சுத்தி சுத்தி உன்னை தேடி விழிகள் அலையும் அவசரம் ஏனோ ..
சத்த சத்த நெரிசலில் உன் சொல் செவிகள் அறியும் அதிசயம் ஏனோ ..
கணக்கான தானே பெண்ணே கண் கொண்டு வந்தேனோ …
வினா காண விடையும் காண கண்ணீரும் கொண்டேனோ ..
நிழலை திருடும் மழலை நானோ ...எதோ
எண்ணம் திரளுது கனவில் .. வண்ணம்
திரளுது நினைவில் ..கண்கள் இருளுது நனவில் .
ஒ ஒ எதோ முட்டி முளைக்குது மனதில் ..
வெட்டி எறிந்திடும் நொடியில் ..மொட்டு அவிழுது கொடியில் .

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ .உருவமில்லா உருவமில்லா நாளை ,எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ அரைமனதை விடியிது என் காலை .எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ ..உருவமில்லா உருவமில்லா நாளை , எதோ
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சி பேடை ..
ஒஒ அரை மனதாய் விடியிது என் காலை .எதோ

(humming) ...எதோ


என்ன தான் இருந்தாலும் பேட்டின்னு வந்திட்டா இங்கிலீசில மட்டும் கதைக்கிறது...பேசிக்கலி ஐ டோன்ட் லைக்..அப்புறம்,சில இடங்களில் வயது முதிர்ந்த பெண் போல தெரிகிறார் அன்டி மாதிரி..அப்புறம் மேக் அப் இவருக்கு எட்டாப்பொருத்தம்!!மேக் அப் போட்டால் அப்பிடியே தெரிகிறது மேக் அப் தனியாக!!!
எம்புட்டு காலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்ட போகிறார் எண்டு பார்ப்போம்..
அவங்க லோகல் டாக்சி பேட்டியை பாருங்க!



Post Comment

23 comments:

தனிமரம் said...

Palkoopi soolunga.

Unknown said...

ok thanks maapla hehe!

தனிமரம் said...

உண்மையில் அழகான பாடல் எனக்குப்பிடித்தது இதன் பிறகு புதிய பாடல் ஏதும் மனதை தொடவில்லை .
இப்பாடலில் ஒரு விசேசம் ஹரிச்சரன் பாடகர் தாண்டி இப்பாடலில் வரும் rap எழுதியது படம் பார்க்கப்போக சினிசிட்டிக்கு ஜோசிக்கிறன் பாடலை கவிதையாக தந்ததற்கு நன்றி.

கவி அழகன் said...

சிறப்பான அழகான பாடல்

காட்டான் said...

மாப்பிள கார்திகாவுக்காக பாட்ட போட்டிருக்கீங்கன்னு நினைக்கிறேன்..! நானும் அவங்க அம்மா நடிச்ச படங்களை பார்து ஒரு காலத்தில ஜொல்லு விட்டவந்தான்...!!கவனம்மாப்பிள என்ற நிலமை உனக்கும் வரக்கூடாது..?அது சரி அவங்க அம்மா நடித்த முதல் படம் கார்த்திக்கோட அலைகள் ஓய்வதில்லை என நினைக்கிறேன் யாராவது கார்திகாவென்று ஏன் பெயர்வைதா உன்னாத்தாவெண்டு கேட்டால் டென்சனாகிறாங்களாம் உங்க கார்திகா   இதைப்பற்றி நீ ஒரு பதிவு போடு மாப்பிள அதில் அவங்க அம்மாவிற்கும் இரண்டு பந்தி ஒதுக்குவாய் என காத்திருக்கிறான் இந்த காட்டான்...!!(இததான் சொல்லுவார் என்ற அப்புச்சி பக்கத்து இலைக்கு பருப்பு வேண்டுமெண்டு..!?)

Anonymous said...

//எம்புட்டு காலம் தமிழ் சினிமாவில் குப்பை கொட்ட போகிறார் எண்டு பார்ப்போம்.///மேக் அப் காப்பாற்றும் பாஸ் ஹிஹிஹி

பாலா said...

எனக்கு என்னமோ இந்த பாடலை விட அமளி துமளி பாடல் தான் பிடித்திருக்கிறது.

Jana said...

வழமாக மாட்னார் மச்சான்ஸ்...

இந்தப்பாடல் பற்றி யாராவது எழுதுவார் அவரிடம் கேட்கவேண்டும் என்று நினைத்த விடையம் இது.
இது குறித்து நீங்கள் எழுதியுள்ளதால் கேட்டே விடுவது என்று தீர்மானித்துள்ளேன்.
சில விடயங்களை பப்ளிக்கில கேட்டால் சரியான விடை கிடைக்கும் என்ற நம்பிக்கையில்...

**என்னடா இப்படி எழுதிவிட்டு இவனும் ஏதும் கேனைத்தனமா எழுதப்போறானா என்று யோசித்துவிட்டீங்களா மைந்தன்.
இல்லை...
குவியமில்லா காட்சிப்பேழை அப்பிடீன்னா என்ன? கவிஞர் என்னத்தை சொல்லவாறார்?

ஷஹன்ஷா said...

சூப்பர்.. எனக்கும் பிடித்த பாடல் கூட... சட்டென்று எங்கு கேட்டாலும் மனதை பறிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று...


@Jana அண்ணா... குவியமில்லா காட்சிப்பேழை என்றால் out of focus.. கதாநாயகன் ஒரு புகைப்படபிடிப்பாளர் என்பதால் அவ் வரிகளை பயன்படுத்தியதாக மதன் கார்க்கி பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார்..

சுதா SJ said...

அழகான பாடல் பாஸ்
கார்த்திகாவை விட அவங்க அம்மா ரெம்ப அழகு பாஸ்

காட்டான் said...

துஷ்யந்தா 90ன் ராதா கார்த்திகாவை விட கொள்ளை அழகுதான் ஆனால் உங்களைபோல பச்சபுள்ளங்க எல்லாம் ரசித்திருப்பது ஆச்சரியம் தருகிறது...?ஒருகாலத்தில் இந்த காட்டானை..!! வேண்டாம் மணைவி வரும் சத்தம் கேக்கு இத்தோட விட்டு விடுகிறேன்..கொஞ்ச காலமா காட்டானுக்கு அடி வாங்கும் சக்தி குறைந்து கொண்டு வருகிறது....!!?

shanmugavel said...

@Jana said...

குவியமில்லா காட்சிப்பேழை அப்பிடீன்னா என்ன? கவிஞர் என்னத்தை சொல்லவாறார்

ஆமா சிவா அப்படீன்னா என்ன?

Unknown said...

கார்த்திகாவை விட அவங்க அம்மா அழகு என்பதை வழிமொழிகிறேன்.மறக்க முடியாத நடிகை,என் போல above 30 year old guys.

Yoga.s.FR said...

ரெண்டு மூண்டு நாளா காணயில்லையெண்டு நினைச்சன்!பொடி "அந்த"ப் பாட்டிலை மதிமயங்கி எல்லாத்தயும் "மறந்து" போய் இருந்துட்டுது போல!ஓட்டவடயின்ர சிலவனையும் காணேல்ல!நாட்டை விட்டுப் போட்டுதோ என்னவோ தெரியேல்ல!வெயில் வேற கொழுத்துது!

Yoga.s.FR said...

பதிவொண்டு தேத்தியாச்சு!சூப்பர்,கண்ணா சூப்பர்!!!!!!!!!!!!!!

Yoga.s.FR said...

உண்மை தான்!அவுக ஆத்தா நடிச்ச முதல் படத்தப் பாத்து கை............................தட்டினோர்?! ஏராளம்!

Yoga.s.FR said...

R.Elan. said...
கார்த்திகாவை விட அவங்க அம்மா அழகு என்பதை வழிமொழிகிறேன்.மறக்க முடியாத நடிகை,என் போல above 30 year old guys./////உண்மை தான்.அவுக மாதிரியே இவுகளுக்கும் மொழு,மொழு கன்னம்!

Unknown said...

சரீங்கோ! :-)

உணவு உலகம் said...

பாடல் பகிர்வு அருமை.

ஹேமா said...

சிவா...புதுப்பாடல்கள் வரிசையில் மிகவும் பிடித்த பாடல்.
பாடல்வரி...காட்சிப் பேடை இல்லை.காட்சிப் பிழை.அவதானமாக வரிகளோடு சேர்த்துக் கேட்டுப் பாருங்களேன்.

கார்த்திகாவைவிட ராதாதான் கொள்ளை அழகு !

Mahan.Thamesh said...

எனக்கு மிகவும் பிடித்த பாடல் சகோ
இந்த பாடல் தான் கார்த்திகா மேல உங்களுக்கு இது வர காரணமோ? கவனம் சகோ

vidivelli said...

nalla padal
pidichchirukku.
valththukkal............

நிரூபன் said...

மச்சி, இப்ப ஹன்சிகா போய், கார்த்திகாவா...

பாடல் பகிர்வும், காட்சி அமைப்பும், நடனமும், பாடல் வரிகளும் கலக்கல்.

Related Posts Plugin for WordPress, Blogger...