Saturday, July 16, 2011

சயிட் அடிக்கலாம் வாங்க:மனதை திற காதல் வரட்டும்-பாகம் 2

குறிப்பு:இது காதல் சம்பந்தமான எனது பார்வை மட்டுமே.சரியாகவும் இருக்கலாம்.ஏன் பிழையாகவும் கூட!!பிழைகளை சுட்டி காட்டுங்கள்.இது ஒரு தொடர் பதிவு.அதன் இரண்டாம் பாகம் இன்று.இதன் முதல் பாகமான "மனதை திற காதல் வரட்டும்-பாகம் 1 " இல் காதலின் ஆரம்பம் பெரும்பாலும் சயிட் அடிப்பதனாலே என்று கூறி இருந்தேன்.
அதனை படிக்காதவர்கள் இதை கிளிக்குங்கள்.


"The best and most beautiful things in the world cannot be seen or even touched- they must be felt with the heart." - Helen Keller

"Love isn't finding a perfect person. It's seeing an imperfect person perfectly." - Sam Keen

ன்றைய பதிவிலும் சயிட் அடித்தலை பற்றி சற்று விரிவாக ஆராயலாம் என்று நினைக்கிறேன்.
இந்த விடயத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடாத்தினால் அதை வைத்தே ஒரு புத்தகம் எழுதிவிடலாம் காரணம்,நாம் அனைவருமே ஒவ்வொரு நுட்பங்களை தெரிந்து வைத்திருப்போம் சயிட் அடிப்பதற்கு.ஐயோ எனக்கு ஒரு முறைகளும் தெரியாதே என்று முழிப்பவர்கள் நீங்கள் என்றால்,உங்களுக்கு கொஞ்சம் வழிமுறைகளை என்னால் தர முடியும் என நினைக்கிறேன்.

Romantic Couple Online Dating

ரோட்டில் நின்று காய்வதை மேலோட்டமாக அனைத்து பெண்களுமே கேவலமாய் தான் பேசுவார்கள்.உங்கள் நண்பிகள் உங்களை வீதியில் நின்று வெட்டி அரட்டை அடிப்பதை கண்டால் நக்கலாக ஏதும் கமென்ட் அடிப்பார்களே?அதை தான் கூறுகிறேன்.ஆனால் நீங்கள் வீதிகளில் நின்று செய்யும் காரியத்தை (அதுதாங்க சயிட் அடித்தல்)என்ன தான் நக்கல் அடித்தாலும்,பொண்ணுங்க அதனை தான் விரும்புகிறார்கள் உள்ளே மனதிலே!

ன்னை ஒரு ஆண் பார்க்கிறான் என்றால் தான் பெண்களுக்கே தங்களை பிடித்து போகிறது.அடடா ஒருத்தன் பார்க்கும் அளவுக்காவது தாங்கள் அழகா இருக்கமே என்று நினைக்க தோன்றுகிறது.திரைப்படங்களில் நக்கலடிப்பது போல,அவர்கள் ஆடை அலங்கரித்து வீட்டால் வெளிக்கிட்டு திரும்பி வீடு சேரும்போது ஆகக் குறைந்தது ஒரு கமென்ட் ஆவது கிடைத்திருந்தால் தான் அவர்கள் மனசு குளிர்கிறது.நாங்க அப்பிடி இல்லை என்று கூறும் பெண்கள் மன்னிச்சு..நான் பொதுவாக கூறுகிறேன்.

கவே,வெளிப்படையாக திட்டினாலும் நீங்கள் சயிட் அடிப்பதை விரும்பாத பொண்ணுங்க யாருமே இருக்கமுடியாது என்பது எனது கணிப்பு.நீங்கள் சயிட் அடிப்பதோடு மட்டும் நிறுத்தி விட்டால்!!நீங்கள் அதை தாண்டி வேறு ஏதும் தகாத நடத்தையில் இறங்கினால் அதனை எந்தப் பொண்ணுமே ரசிக்க மாட்டாள் என்பது நிதர்சனம்!ஆகவே நீங்கள் உங்களையும் நல்லவனாக காட்டிக்கொள்ளுதல் இந்த இடத்தில் அவசியமாகிறது!


முதல் சயிட்டிங்கிலேயே முட்டாளாகி விட்டால் அப்புறம் குறிப்பிட்ட பொண்ணிடம் நீங்கள் நல்ல பெயர் வாங்குவது குதிரைக்கொம்பு தான் நண்பர்களே!நீங்கள் திறமையான ஒரு ஆணாக(அது தாங்க சகலகலா வல்லவன்)ஒரு சில சயிட்டிங்கிலேயே நீங்கள் விரும்பும் பெண்ணை உங்கள் பக்கம் காதலிக்க வைக்க முடியும்.அனைவராலும் இது சாத்தியமானதன்று.அனால் முயற்சி செய்து பாருங்கள்.முடியாதது எதுவுமல்ல நண்பர்களே!அப்படியும் முடியாவிட்டால் என்ன அவசரம் ஒரு கிழமையில் லவ் பண்ணி அடுத்த கிழமை கல்யாணம் கட்டும் அவசரமா??மெல்ல நிதானித்து உங்கள் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் திட்டமிடுங்கள்!எதையுமே ப்ளான் பண்ணி பண்ணனும் என்று வரும் வடிவேல் காமெடி..அது காமெடி மட்டுமல்ல உண்மையும் கூட..காதலிலும் இந்த "பிளானிங்"என்பது மிக மிக முக்கியமானது நண்பர்களே.இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்!

ரி ஆண்கள் பக்கம் மட்டும் எழுதினால் பெண்கள் கோபித்துக்கொள்ள மாட்டார்களா?(ஹிஹி எதோ பெண் ரசிகைகள் கோடிப்பேர் இருக்கிற மாதிரி!).பெண்களும் ஆண்களை விட சயிட் அடித்தலில் சளைத்தவர்கள் இல்லை என்று முன்னைய பதிவில் கூறி இருந்தேன்.ஆனால் அவர்கள் கொஞ்சம் புத்திசாலிகள்.தாங்கள் சயிட் அடிக்கிறோம் என்பதை வெளியில் காட்டிக்க மாட்டார்கள்...குறிப்பாக ஆண்களுக்கு. பெரும்பாலான ஆண்கள் தங்களை யாரும் பெண்கள் சயிட் அடித்தால் அவர்கள் பின்னாலேயே போவார்கள் என்று நன்றாகவே தெரிந்து வைத்திருக்கின்றனர் பெண்கள்.அதனாலேயோ என்னமோ பெண்கள் தாங்கள் சயிட் அடிப்பதை மறைக்கின்றனர்.

லரும் கூறுவதை போல,காதலில் ஆண்கள் முதலில் தேடிப்போவதே நல்லது.பெண்கள் எதாவது சாதகமான சைகைகளை ஆணை விட முதலில் காட்டுவாளேயானால்,அந்த பெண்ணை குறிப்பிட்ட ஆண் சற்று இளக்காரமாக பார்க்கும் நிலையே எங்கும் காணப்படுகிறது,(மறுபடியும் "பெரும்பாலான சந்தர்ப்பங்களில்")அல்லது ஆண் தனது குறுகிய கால தேவைக்காக பயன்படுத்த கூட முனையக்கூடும்.ஆகவே எதுவாக இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஆறுதலாக நிதானித்து இரண்டாவது நகர்வாக தங்கள் நகர்வை மேற்கொள்வது சிறந்தது என்பது கண்கூடு!


பெண்கள் போகிறபோக்கில் சயிட் அடித்துவிட்டு சென்றுவிடுகின்றனர்.ஆண்களை போல "ஆவென்று காஞ்ச மாடு கம்பில........."மாதிரி சயிட் அடித்து நாங்களும் சயிட் அடிக்கிறோம் என்று வெளிப்படையாக வெளிப்படுத்தமாட்டார்கள்.ஆனால் அவர்களும் சயிட் அடிப்பார்கள்..நீங்கள் திறமையானவராக இருந்தால் அதனையும் இலகுவில் கண்டு பிடிக்கலாம்!

பெரும்பாலும் சயிட் அடிக்கும் நுட்பங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கும்..எனக்கு தெரிந்த ஒரு சில நுட்பங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்(ஹிஹி இதெல்லாம் நீ ட்ரை பண்ணினதான்னு கேக்கப்பிடாது கேட்ட கோபம் வரும் ஆமா!)

பெரும்பாலும் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு போற அம்மாக்கள்,வீதியில் பொடிப்பசங்க நின்றால் அவங்களையே பாத்திட்டு வருவாங்க எங்க நம்மட மகளை சயிட் அடிக்க போறாங்களோன்னு(அப்பிடி என்ன பயமோ!).அப்பிடி அம்மாக்கள் பார்க்கும் போதே மகளை நீங்க சயிட் அடிச்சா அவங்கட மனசு எவ்வளவு வருத்தப்படும்.ஆகவே முதலில நீங்க செய்யவேண்டியது,அம்மாக்களின் கவனத்தை திருப்பணும்..எப்படி??அம்மாக்கள் உங்களை பார்க்கும் போது நீங்க மகளை பார்க்காமல் அம்மாக்களை பாருங்கள்..அவர்கள் வெட்கத்தில் வேறு பக்கம் பார்ப்பார்கள் உடனே!அப்புறம் என்ன நீங்க மகளை சயிட் அடிக்கலாம் ஒரு பிரச்சனையும் இல்லை!!


ப்பவுமே நண்பர்கள் தானே ஊறுகாய் நமக்கு...(நண்பேண்டா!)பொண்ணு ஒரு பக்கம் வாராங்க என்றால்,நீங்க அவங்களை பார்க்கும் வகையில் நின்றுகொண்டு நண்பரை பொண்ணு வரும் பக்கம் முதுகை காட்டியவாறு நிக்க வைத்து கதையுங்கள்(பாவ்லா தான்)..அப்போது பொண்ணு ஜோசிக்கும்,அட அவன் வேலையாதான் நிக்கிறான்..நான் வரேக்க சயிட் அடிக்கிறான் எண்டு..அத விட்டிட்டு,நீங்களும் நண்பர்களும் சேர்ந்து சயிட் அடித்தால்,அப்புறம் பிடிச்சு பாருங்கோவன் அந்த பொண்ணை!இவன் நான் வர்றத பாத்திட்டு தான் இப்பிடி பாவ்லா பண்றான் எண்டு கண்டுபிடிச்சிடுவாங்க சில ப்ரில்லியன்ட் பொண்ணுங்க..அப்புறம் உங்க பாடு சிரிப்பு தான் ஹிஹி !!

cute love pictures with quotes. cute love pics and quotes

ன்னொரு வகை இருக்கு,பொண்ணுங்களை சயிட் அடிக்கிறமென்று காட்டிக்காமலே சயிட் அடித்தல்..அதுக்கு பொண்ணுங்களோட அதீத நம்பிக்கையை பெற்றிருத்தல் அவசியம் நீங்க.பல பொண்ணுங்களை நெருங்கி பழகிக்கொண்டே சயிட் அடிக்கலாம்.சில வேளை அவர்களும் உங்களை உங்களுக்கு தெரியாமலே சயிட் அடிக்கக்கூடும்!!!பொண்ணுங்களை சாதாரணமாக எடை போடாதீங்க நண்பர்களே!!

"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!

ஹிஹி என்ன சொல்றீங்க??பாகம் இரண்டு பிடித்திருக்கிறதா??
தொடரும்.........
இதெல்லாம் நமக்கு ஒரு மேட்டர்னு சொல்றான் என்று நினைத்தால்,உங்கள் கமென்ட் இந்த பதிவுக்கு தேவையற்றது நண்பர்களே!

Post Comment

51 comments:

007 said...

பாஸ் இது அவ்வளவு சுவாரசியமா இல்லேயே!!!!!!
இருந்தாலும் வரவேற்க தக்கது..............:)

சி.பி.செந்தில்குமார் said...

sசைட் சிவா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MANO நாஞ்சில் மனோ said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சைட் [[வடை]] போச்சே.....

Unknown said...

//007 said...
பாஸ் இது அவ்வளவு சுவாரசியமா இல்லேயே!!!!!!
இருந்தாலும் வரவேற்க தக்கது..............:)

/கொஞ்சம் ஓவரா எதிர்பாக்கிரீன்களோ???

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

//சி.பி.செந்தில்குமார் said...
sசைட் சிவா.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///

அவ்வ்வ்வ் கொஞ்சம் நீளுதே????

Unknown said...

This comment has been removed by the author.

Unknown said...

This comment has been removed by the author.

Mathuran said...

சைட் அடிக்கிறதுக்கும் பதிவா?/

வாழ்க மைந்தன்!!!!!!!!!!!!!!!
வளர்க அவர் கொற்றம்!!!!!!!!

பாலா said...

//ஐயோ எனக்கு ஒரு முறைகளும் தெரியாதே என்று முழிப்பவர்கள் நீங்கள் என்றால்,உங்களுக்கு கொஞ்சம் வழிமுறைகளை என்னால் தர முடியும்

என்னே உங்கள் பொதுநலம். நீ இல்லைனா இந்த சமூகம் என்ன ஆகுறது?

Unknown said...

அவ்வ்வ்வவ்வ்வ்வவ் அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் !

Unknown said...

எவ்ளோ விஷயம் மைந்தன்!
இதெல்லாம் தெரிஞ்சுக்காம....வாழ்ந்திருக்கேனேன்னு நினைக்கும்போது.....என்னால முடியல!

Unknown said...

ஒத்துக்கிடுறேன்....நீங்க பெரிய சைட் 'அப்பாட்டாக்கர்'தான்!
உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு! :-)

தனிமரம் said...

அதிகமாகத்தான் ஆராட்சி செய்திருக்கிறீங்க நமக்குத்தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல!

கார்த்தி said...

/* இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்! */

நீங்க ஜெயிச்ச மாதிரியெல்ல கதை போகுது!!

கூடல் பாலா said...

அடடே சைக்காலஜி மாதிரி சைட்டாலாஜி ......கரெஸ்ல பண்றீங்களா மைந்தன்

Yoga.s.FR said...

ஆழ்ந்த அனுதாபங்கள்!(.......... அளவானோர் போட்டுக் கொள்ளவும்.)

Yoga.s.FR said...

ஜீ...said...
ஒத்துக்கிடுறேன்....நீங்க பெரிய சைட் 'அப்பாட்டாக்கர்'தான்!
உங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு!//////?!?!?!?!?!?!?!?!?!?!?

Unknown said...

//MANO நாஞ்சில் மனோ said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் சைட் [[வடை]] போச்சே...///

எங்க சார்??போயிட்டாங்களா??அட மிஸ் பண்ணிட்டனே!

Unknown said...

This comment has been removed by the author.

Yoga.s.FR said...

ஜீ...said...
எவ்ளோ விஷயம் மைந்தன்!
இதெல்லாம் தெரிஞ்சுக்காம....வாழ்ந்திருக்கேனேன்னு நினைக்கும்போது.....என்னால முடியல!/////உங்கள் "தியாகம்" வீண் போகாது!

Yoga.s.FR said...

Nesan said...
அதிகமாகத்தான் ஆராட்சி செய்திருக்கிறீங்க நமக்குத்தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல!///த்சொ!த்சொ!என்ன ஒரு மடமை?"அந்தப்" பல்கலைக் கழகத்துக்குப் போயிருக்கலாமோ?

Yoga.s.FR said...

கார்த்திsaid...
/* இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்! */
நீங்க ஜெயிச்ச மாதிரியெல்ல கதை போகுது!!/////ஜெயிச்சுட்டுலாலும்????????????

Yoga.s.FR said...

koodal bala said...
அடடே சைக்காலஜி மாதிரி சைட்டாலாஜி ......கரெஸ்ல பண்றீங்களா மைந்தன்?////நோ,நோ!!அதுக்கெல்லாம் டைம் வேணுமே?பிராக்டிக்கல் தான்;"ஆர்பிகோ"வுக்கு அந்தாண்டை நிப்பாரு!போனீங்கன்னா(கொழும்புக்கு)பாக்கலாம்!இன்னும் கொஞ்சம் தள்ளிப் போனீங்கன்னா மார்க்கட்(MARKET) வரும்!அப்பப்ப அங்கயும் நிப்பாரு!இல்லியா,பம்பலப்பிட்டி பக்கம் கோயில்ல நிப்பாரு!

காட்டான் said...

மாப்பிள இப்படி பட்ட ஒரு அழகான பதிவ காட்டான் பத்து வருசத்துக்கு முன்னால பாத்திருந்தா..! இப்பிடி அடிவாங்கி செத்துக்கொண்டிருக்கமாட்டான்..  

ஆமாயா ஒரு வெள்ளக்கார பெண் காட்டானுட்ட ஒரு சிவப்பு ரோசாவ தந்து je tame எண்டு சொல்லேக்க இந்த காட்டான் கவணிக்காம விட்டு அத காதில வாங்கி வைச்சிட்டு  இப்ப கவலப்பட்டு என்ன செய்ய..!? 

ஊரில அம்மாவும் பொண்னும் நடந்து வரேக்க அம்மாவ பாத்து அவா பத்து வயசில எப்பூடி இருந்திருபா இருவதில எப்படி இருப்பான்னு கற்பனைபன்னியே குஞ்ச தவற விட்டிட்டான்..!? 

இப்ப என்ர கத பல்லு போனாப் பிறகு பவோடா சாப்பிட ஆசைப்பட்டவன் மாதிரி போச்சு..!? அது சரி நானும் அடிக்கடி உன்ர வீட்டிற்கு வந்து குல வைச்சிட்டு போறன் நீ எப்ப எனர வீட்டிற்கு வருவ...!? காத்திருக்கிறான் காட்டான்...!?

shanmugavel said...

siva,excellent.

சென்னை பித்தன் said...

இப்படி ஒரு ஆராய்ச்சியா?

நிகழ்வுகள் said...

///தன்னை ஒரு ஆண் பார்க்கிறான் என்றால் தான் பெண்களுக்கே தங்களை பிடித்து போகிறது.அடடா ஒருத்தன் பார்க்கும் அளவுக்காவது தாங்கள் அழகா இருக்கமே என்று நினைக்க தோன்றுகிறது/// ஆகா ,இப்பிடி வேற இருக்கா...

நிகழ்வுகள் said...

இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச அறிவுரை (அனுபவ உரை), பெண்கள் கூட்டமாய் இருக்கும் ஏரியா பக்கம் ஒருபோது தனிமையாய் போயிடாதேங்கோ :-)

நிரூபன் said...

மனதை திற காதல் வரட்டும்//

ஆகா..இவ்ளோ நாளும் நமக்கு இது தெரியாமல் போச்சே;-))

நிரூபன் said...

இது காதல் சம்பந்தமான எனது பார்வை மட்டுமே.சரியாகவும் இருக்கலாம்.ஏன் பிழையாகவும் கூட!!பிழைகளை சுட்டி காட்டுங்கள்.இது ஒரு தொடர் பதிவு.//

மகா ஜனங்களே, இது ரொம்ப அநியாயம். பிழையாக இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் என்று சொல்லி, இவன் அடுத்த பிகரையும் கரெக்ட் பண்ண வழி தேடுறான்;-))

இது தான் சின்ன மீனைப் போட்டு, பெரிய மீனைப் பிடிக்கிற விளையாட்டு என்பது.

அவ்..................

நிரூபன் said...

"The best and most beautiful things in the world cannot be seen or even touched- they must be felt with the heart." - Helen Keller//

ஆகா...ஹெலெனே சொல்லிட்டாரே, அப்ப நான் இன்றைக்கு இதை நம்பி பக்கத்து வீட்டுப் பொட்டையப் பார்த்து, நாளைக்கு லவ் பண்ண ஆரம்பிக்கலாமே?

நிரூபன் said...

அதை தான் கூறுகிறேன்.ஆனால் நீங்கள் வீதிகளில் நின்று செய்யும் காரியத்தை (அதுதாங்க சயிட் அடித்தல்)என்ன தான் நக்கல் அடித்தாலும்,பொண்ணுங்க அதனை தான் விரும்புகிறார்கள் உள்ளே மனதிலே!//

அடடா...அப்போ இன்னைக்கே ரோட்டுக்கு இறங்கிட வேண்டியது தான்.

நிரூபன் said...

தன்னை ஒரு ஆண் பார்க்கிறான் என்றால் தான் பெண்களுக்கே தங்களை பிடித்து போகிறது.//

ஒருத்தனா பார்க்கிறான். ரோட்டில் போகும் போது பலரல்லவா பார்க்கிறார்கள். அப்படீன்னா எல்லோரையுமல்லவா பிடிச்சிருக்கனும் பொண்ணுங்களுக்கு. இந்த லாஜிக் உதைக்குதே.

ஹா...ஹா...

நிரூபன் said...

அவர்கள் ஆடை அலங்கரித்து வீட்டால் வெளிக்கிட்டு திரும்பி வீடு சேரும்போது ஆகக் குறைந்தது ஒரு கமென்ட் ஆவது கிடைத்திருந்தால் தான் அவர்கள் மனசு குளிர்கிறது.//

அது சரி, ஆனால் நாம கமெண்ட் பண்ணி விட்டால், செருப்பு பிய்யும் என்றல்லவா ஏசுகிறார்கள்((((((:

நிரூபன் said...

அல்லது ஆண் தனது குறுகிய கால தேவைக்காக பயன்படுத்த கூட முனையக்கூடும்.ஆகவே எதுவாக இருந்தாலும் பெண்கள் கொஞ்சம் ஆறுதலாக நிதானித்து இரண்டாவது நகர்வாக தங்கள் நகர்வை மேற்கொள்வது சிறந்தது என்பது கண்கூடு!//

மச்சி, தத்துவம் வேறு சொல்லுறாரு, நோட் பண்ணி வைக்கிறேன், எனக்கு அடுத்த காதலி தேடும் போது யூஸ் ஆகுமில்லே.

நிரூபன் said...

"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!//

அவ்...என்னம்மா கவிதையெல்லாம் போடுறான் மச்சான்,
உண்மையிலே நீங்க இப்ப காதலில் விழுந்திட்டீங்க என்பது கன்போர்ம் ஆகிடுச்சு.

நிரூபன் said...

எப்பவுமே நண்பர்கள் தானே ஊறுகாய் நமக்கு...(நண்பேண்டா!)பொண்ணு ஒரு பக்கம் வாராங்க என்றால்,நீங்க அவங்களை பார்க்கும் வகையில் நின்றுகொண்டு நண்பரை பொண்ணு வரும் பக்கம் முதுகை காட்டியவாறு நிக்க வைத்து கதையுங்கள்(பாவ்லா தான்)..அப்போது பொண்ணு ஜோசிக்கும்,அட அவன் வேலையாதான் நிக்கிறான்.//

ஆகா...இந்த ஐடியா சூப்பரா இருக்கே, மச்சி, நாளைக்கே நாம MC க்கு போவோம் வா.

நிரூபன் said...

கார்த்தி said...
/* இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்! */

நீங்க ஜெயிச்ச மாதிரியெல்ல கதை போகுது!!//

அதானே மச்சான், இப்ப கூட நம்ம மைந்தன் பிகரு கிடைக்காமல் பக்கத்து வீட்டு பருவதம் ஆச்சியை லுக்கு விடுவதாக யாரோ சொன்னாங்க. அது உண்மையாகிடுமோ என்று பயமாக இருக்கு மச்சி.

நிரூபன் said...

Yoga.s.FR said...
Nesan said...
அதிகமாகத்தான் ஆராட்சி செய்திருக்கிறீங்க நமக்குத்தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல!///த்சொ!த்சொ!என்ன ஒரு மடமை?"அந்தப்" பல்கலைக் கழகத்துக்குப் போயிருக்கலாமோ?//

ஐயா....இப்பவெல்லாம் பல்கலைக் கழக்கத்திற்குப் போக வேண்டிய தேவையே இல்லை, கோயில் திருவிழாவிற்குப் போய், நல்ல பெரிய சங்கிலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு, சாமி தூக்குவதற்கு முன்னுக்குப் போய், நெஞ்சு மயிர் தெரிய நின்றாலே நிறையப் பொண்ணுங்க மாட்டுதாம்;-)))

Yoga.s.FR said...

நிரூபன் said...

Yoga.s.FR said...
Nesan said...
அதிகமாகத்தான் ஆராட்சி செய்திருக்கிறீங்க நமக்குத்தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கல!///த்சொ!த்சொ!என்ன ஒரு மடமை?"அந்தப்" பல்கலைக் கழகத்துக்குப் போயிருக்கலாமோ?//
ஐயா....இப்பவெல்லாம் பல்கலைக் கழக்கத்திற்குப் போக வேண்டிய தேவையே இல்லை, கோயில் திருவிழாவிற்குப் போய், நல்ல பெரிய சங்கிலியைக் கழுத்தில் போட்டுக் கொண்டு, சாமி தூக்குவதற்கு முன்னுக்குப் போய், நெஞ்சு மயிர் தெரிய நின்றாலே நிறையப் பொண்ணுங்க மாட்டுதாம்;-)))நெஞ்சு மயிர் தெரிஞ்சா போதுமா???????அதிலயும் வில்லங்கம் இருக்கிறவங்க?

Yoga.s.FR said...

////பொண்ணுங்களை சாதாரணமாக எடை போடாதீங்க நண்பர்களே!!///ஆமாமா,பட்டாத் தானே தெரியும்!(முந்திப் பிந்தி செத்தாத் தானே சுடலை தெரியுமெண்டு ஊரில சொல்லுவினம்!)

Yoga.s.FR said...

"எப்பவுமே நண்பர்கள் தானே ஊறுகாய் நமக்கு?"////உள்ளதை சொல்லியிருக்கிறியள்!நானும் (அடி) வாங்கியிருக்கிறன்,கச்சேரியடி தண்டவாளக் கடவைக்குப் பக்கத்தில!

Yoga.s.FR said...

அம்மாக்கள் உங்களை பார்க்கும் போது நீங்க அம்மாக்களை பாருங்கள்..அவர்கள் வெட்கத்தில் வேறு பக்கம் பார்ப்பார்கள்.////தம்பி இது சரியில்ல!

Yoga.s.FR said...

ஹி!ஹி!!இதெல்லாம் நீ ட்ரை பண்ணினதான்னு கேக்கப்பிடாது,கெட்ட கோபம் வரும் ஆமா!////சீச்சீ,அப்பிடியெல்லாம் கேப்பமா?அதான் முசல்(முயல்)புடிக்கிற நாய மூஞ்சயில பாத்தா தெரியுமெண்டு தெரியாமையே சொல்லுறவை?????????

Yoga.s.FR said...

இப்ப என்ர கத பல்லு போனாப் பிறகு பவோடா சாப்பிட ஆசைப்பட்டவன் மாதிரி போச்சு..!? அது சரி நானும் அடிக்கடி உன்ர வீட்டிற்கு வந்து குல வைச்சிட்டு போறன் நீ எப்ப எனர வீட்டிற்கு வருவ...!? காத்திருக்கிறான் காட்டான்...!?///பல்லுப் போனவயின்ர வீட்ட வந்து இளங்குருத்து என்ன சுகத்தக் காணப்போகுது?புசத்தாம இருங்கோ!!!!!!!!!!!!

நிருஜன் said...

அனுபவம் நல்லாதான் பேசுது போல, இப்பிடியே போன PhD முடிக்கலாம்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

சைட் அடி.... நல்ல பிகரா பார்த்து சைட் அடி....

சுதா SJ said...

உங்கள் சேவை எமக்கு தேவை பாஸ்
தொடருங்கள் நாங்களும் தொடருகிறோம்

ஆகுலன் said...

"இந்த பிளானிங் இல்லாமல் சொதப்பிய பல நண்பர்களை நான் பார்த்திருக்கிறேன்!"

பாஸ் பிளான் பண்ணி பிசகின கேசை என்ன செய்வது.......

(http://akulan1.blogspot.com/2011/07/blog-post.html)

உணவு உலகம் said...

டாகுடர் பட்டம் கொடுக்கலாம்!

Related Posts Plugin for WordPress, Blogger...