Friday, August 6, 2010

எங்கே என் சானியா மிர்சா??


சானியா மிர்சா..
ஏன்??
ஏன் நீ திருமணம்
செய்தாய்?
எங்கள் ஆசைகளை
நிராசை ஆக்கினாய்??
கண்ட கனவுகள்
கண்ணீரில் கரைந்ததே!
கல்யாணம் என்று சொல்லி நீ
கண்ணை விட்டு மறைந்ததேன்??

சானியா சானியா
சொக்க வைத்தாய் சானியா!
சொக்கி சொக்கி வந்திச்சே
பலருக்கு நியுமோனியா!!

பத்தாவது படிக்கும் போது
எப்போதும் உன் நினைப்பு!
உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு
பத்தி எரியும் அடுப்பு!!
கிறங்க என்னை வைத்தது
உன் சிவந்த மேனி சிரிப்பு..
அடித்த ஷொட்டுகள் பிழைக்கும் போது
பிழைத்து போன நடிப்பு!

நீ குனிந்து சர்வீஸ் போடும் போது
பார்ப்பாங்களே விடுப்பு!
உனை பார்க்காதே எண்டு சொல்ல
இப்போ மாலிக் தானே தடுப்பு!!

முதன் முதலாய்
டென்னிஸ் பார்த்ததுவும்
உன்னாலே!
தூங்காமல் தவித்ததுவும்
உன்னாலே!


டென்னிஸ் பார்த்தேன்
காணவில்லை
நியூஸ் பார்த்தேன்
அதிலும் இல்லை!
கண் பார்க்க நீ
அருகிலில்லை
வங்கக்கடலருகில்
நீ இல்லை!!

எத்தனை இரவுகள்
எத்தனை கனவுகள்
உந்தன் நினைவோடு....
எத்தனை எண்ணங்கள்
எத்தனை தவிப்புகள்
எந்தன் மனதோடு...எல்லாம் உன்னாலே!!

மாலிக்குடன் நீ...
தாலிக் கயிறுடன் நான்..
போலி ஆசை என்று
பீத்துகின்றேன் இப்போது...!!

உன் படங்களை கூகிள்'லில்
தேடிய படி..
"சானியா வெறியன்..."


சானியா மிர்சா மீது "பற்றுக்கொண்ட" நீங்கள் கீழே குத்துவதன் மூலம்...!!!!

Post Comment

14 comments:

Anonymous said...

//மாலிக்குடன் நீ...
தாலிக் கயிறுடன் நான்..
போலி ஆசை என்று
பீத்துகின்றேன் இப்போது...!!/

என்ன ஒரு தவிப்பு உங்கள் மனதில்!

Anonymous said...

சானியாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்...அனைவர் மனதையும் திறமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்!!

Unknown said...

Anonymous said...

//மாலிக்குடன் நீ...
தாலிக் கயிறுடன் நான்..
போலி ஆசை என்று
பீத்துகின்றேன் இப்போது...!!/

என்ன ஒரு தவிப்பு உங்கள் மனதில்//

ஹிஹி ம்ம்ம் வருகைக்கு நன்றி!

Unknown said...

//Anonymous said...

சானியாவின் ரசிகர்களில் நானும் ஒருவன்...அனைவர் மனதையும் திறமையாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்!! //

பின்ன..நமக்கெல்லாம் சனியா என்ன புதுசா!!

PRATHEEP SELVAKUMARAN said...

hahaha nice mynthan :P

AnushangR said...

//பத்தாவது படிக்கும் போது
எப்போதும் உன் நினைப்பு!//

அப்பவே அம்மணி வந்திட்டாங்களா?
உங்க நினைப்புல இல்ல டென்னிஸ் விளையாட!!!

//உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு
பத்தி எரியும் அடுப்பு!! //

பார்த்து சார் ஏற்கனவே உங்களுக்கு அல்சர் சமாச்சாரம் வேற அடுப்பு நெருப்பு எண்டு சொல்லி அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடிடாதீங்க...
பாவம் சார் அந்த ஜீவன்...

Unknown said...

PRATHEEP SELVAKUMARAN said...

hahaha nice mynthan :P //

வருகைக்கு நன்றி பிரதீப்...

Unknown said...

//Ravendra said...

//பத்தாவது படிக்கும் போது
எப்போதும் உன் நினைப்பு!//

அப்பவே அம்மணி வந்திட்டாங்களா?
உங்க நினைப்புல இல்ல டென்னிஸ் விளையாட!!!///

ஹஹா அப்ப அவா விளாடிட்டு இருந்தா...நான் படிச்சீடிருந்தன்!!

Unknown said...

////Ravendra said...
உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு
பத்தி எரியும் அடுப்பு!! //

பார்த்து சார் ஏற்கனவே உங்களுக்கு அல்சர் சமாச்சாரம் வேற அடுப்பு நெருப்பு எண்டு சொல்லி அடுத்தவங்க வாழ்க்கைல விளையாடிடாதீங்க...
பாவம் சார் அந்த ஜீவன்... //

போங்க சார் உங்களுக்கு எப்பவுமே குசும்பு தான்!!

AnushangR said...

//ஹஹா அப்ப அவா விளாடிட்டு இருந்தா...நான் படிச்சீடிருந்தன்!//

ஏலே சொல்லவே இல்ல...

//போங்க சார் உங்களுக்கு எப்பவுமே குசும்பு தான்!//

நன்றி. நன்றி.. நன்றி...
அசத்த போவது யாரு ல இருந்து சுட்ட ஸ்டைல் பாருங்க....
எப்பூடி இருக்கு நம்ம ஸ்டைலு????????

வனம் said...

வணக்கம் மைந்தன்.

இங்க நமக்குத்தான் பெண் என்றால் உடனே உரித்து பார்க்க தொடங்கிவிடுகின்றோம்.

அவர்களை ஒரு விளையாட்டு வீராங்கணையாக பார்க்கும் பார்வை இல்லாமல் போய் விட்டது.

பிறகு எப்படி விளையாட்டு வளரும்.

நம்மின் இந்த நோய் மனப்பான்மை அவர்களை எவ்வளவு பாதித்து இருக்கும் என யோசித்து இருக்கின்றீர்களா. -- தெரிந்து கொள்ள வேண்டுமெனில் இரண்டு வருடங்களுக்கு முன் வந்த அவர்களின் பத்திரிக்கை பேட்டிகளை படித்துபாருங்கள்.

விளையாடுபவர்களை விளையாட்டு வீரர்களாக மட்டுமே பார்க்க பழகுவோமே -- கட்டில் கனவுகள்கான திரை நட்சத்திரங்கள் இருக்கின்றார்கள்

நன்றி

Unknown said...

//வனம் said...
விளையாடுபவர்களை விளையாட்டு வீரர்களாக மட்டுமே பார்க்க பழகுவோமே -- கட்டில் கனவுகள்கான திரை நட்சத்திரங்கள் இருக்கின்றார்கள்//

வனம் அவர்களே,அப்பிடி பார்ப்பதானால் திரை நட்சத்திரங்களையும் கட்டில் கனவுகளுக்காக காண முடியாது..அவர்களையும் நாங்கள் திரை நட்ச்சத்திரங்களாகவே பார்க்கவேண்டும்...விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு ஒரு தொழில் போலே,இவர்களுக்கு நடிப்பது ஒரு தொழில்..நண்பரே..

Lavan said...

வாழ்க !!!!!!!!!

FunScribbler said...

hahahaha boss!! semma comical sir! கிண்டல் செய்யவில்லை. ஆனால், உண்மையாகவே உங்க வலி புரியுது. என்ன செய்ய??

கார்த்தி கல்யாண ஆனபோது, எங்கள மாதிரி பெண்கள் எல்லாம் என்னமா வீல் பண்ணி இருப்பாங்க....அந்த மாதிரி தானே உங்களுக்கும் இருந்திருக்கும்! விடுங்க பாஸ்! காலம் தான் மருந்து:)))

Related Posts Plugin for WordPress, Blogger...