Saturday, August 7, 2010

வாலியும் வைரமுத்துவும் தான் கவிஞர்களா??


முத்தெடுக்க ஆர்வலர் இல்லை
கவித்தேன் பருக
பசியுடன் யாருமில்லை
வாலியும் முத்துவும் தான்
கவிஞரெனில்
மற்றோர்கள் ஏது செய்ய?
புலமை வாய்ந்த பலருக்கு
புகழ் தான் வைக்கவில்லை
ஏன்
அடையாளமே கிடைக்கவில்லை
ஆள் மனமே நீ யோசி!

பதிவுலகில் கூட கண்டேன்
ஆயிரமாம் கவிதை பூண்ட
ஆணித்தர கருத்து தந்த
ஒரு சில பாரதியார்கள்
சில பல கண்ணதாசன்
பின்னூட்டல் யாதுமின்றி
பின்தொடர ஆட்களின்றி
கவிதைக்கு மதிப்பு இன்றி
ஆளுக்கே அடையாளமின்றி...
அப்பப்பா.
ஏன் இந்த பாகுபாடு?
ஏன் இல்லை ஈடுபாடு?
ஆள் மனமே நீ யோசி!

கல் கூட கை பட்டால் தான்
முத்தாக வெளிப்படுமே
இவர்களுக்கேங்கே வெளிப்பாடு?
யாரில் நான் குறை தான் சொல்ல??

விடியாத இவர்கள்
வாழ்வில்
விடியல் தான் எப்போது??
விடையில்லா
வினாவோடு
விளக்கமில்லாமலே என் பேனா!!

Post Comment

11 comments:

Mohamed Faaique said...

நல்ல கருத்துகள்

Unknown said...

Anonymous said...
ம‌த‌ம்மாற்ற‌ம் செய்ய தில்லுமுல்லு மொள்ள‌மாரித்த‌ன‌ம்.//

வருகைக்கும் பகிர்விட்கும் நன்றி நண்பரே.

Unknown said...

Mohamed Faaique said...

நல்ல கருத்துகள் //

நன்றி faaique ..

AnushangR said...

ஆழ் மனக் குமுறல் ஏக்கத்துடன்...
சிறப்பு உங்கள் பதிவு தயக்கத்துடன்...
எழுதுங்கள் நீங்கள் ஊக்கத்துடன்...
தருவோம் ஆதரவு விருப்பத்துடன்...

Unknown said...

Ravendra said...

ஆழ் மனக் குமுறல் ஏக்கத்துடன்...
சிறப்பு உங்கள் பதிவு தயக்கத்துடன்...
எழுதுங்கள் நீங்கள் ஊக்கத்துடன்...
தருவோம் ஆதரவு விருப்பத்துடன்... //

நன்றி...நீங்களும் கொஞ்சம் முயட்சிக்கலமே??

Unknown said...

வழிப்போக்கன் said...

Nice //

நன்றி.

Anonymous said...

super and sensitive post!

AnushangR said...

ஐயோ சார்! ஆதரவுக்கு நன்றி...
நாங்கள் எல்லாம் எழுத ஆரம்பிச்சா உங்க பாடு? வேண்டாம் சார்...
நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் நமக்கேன் இந்த ஆசையெல்லாம்...

ம.தி.சுதா said...

நல்ல பதிவொன்று சகோதரா வாழ்த்துக்கள்

Unknown said...

ம.தி.சுதா said...

நல்ல பதிவொன்று சகோதரா வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றிகள் சகோதரி!

வித்யாஷ‌ங்கர் said...

plase try to understand they are all lyricist not poets.any one write song but not poem

Related Posts Plugin for WordPress, Blogger...