Friday, January 28, 2011

ஏனுங்க எனக்கு மட்டும் இப்பிடி??Plz Ans??



இலங்கை அவுஸ்திரேலியா மேட்ச் எண்டு அடுத்த மாசம் அந்தரப்பட்டு அவசரப்பட்டு மிச்ச வேலை எல்லாம் முடிச்சு நொறுக்குத் தீனி,தாகத்துக்கு எதாச்சுமேண்டு கொண்டு வந்து டி வி'க்கு முன்னால உக்கார்ந்தா டில்ஷான் அந்தரப்பட்டு ரெண்டாவது போல்'லையே தூக்கி குடுத்திட்டு போவார்...
அப்புறம் சர சர எண்டு விக்கட் போயி ஒரு கட்டத்தில 65 /4 எண்டு நிக்கும் ஸ்கோர் போர்ட் பாருங்க..
ஏன் நமக்கு மட்டும் இப்பிடி நடக்குது?

எங்காச்சும் ரோடு'ல அங்க இங்க எண்டு ஒண்டு ரெண்டு சூப்பர் பிகருகள் தான் வருங்க ஒரு நாளைக்கு ..அதுகள சைட் அடிக்கலாம்னு நின்னாக்கா அந்த நேரம் பார்த்து நம்மட மொக்க பிரண்டு யாராச்சும் வந்து இவளையாடா சைட் அடிக்கிறாய் இவள் ஒரு சப்ப பிகருடா எண்டு காரியத்த கெடுப்பான் பாருங்க..
ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?

எவனாச்சும் வந்து நம்கிட்ட அட்வைஸ் கேட்டுகிட்டு நிப்பான் நம்மளையும் பெரிய மனுஷனாட்டம் மதிச்சு..அந்த நேரத்தில ஒரு கொரங்கு பய வந்து அடே ஒரு தம் இருந்தா குடுடா எண்டுவான் பாருங்க..ஏன்டா இவனுக்கெல்லாம் ப்ரெண்டா இருக்கம்னு தொணும்க..

அப்ப தான் ஏதாச்சும் பதிவு போடுவமே..நாலஞ்சு நாளாச்சு பதிவு போட்டு ஒரு ஈ காக்கா வருதில்ல நம்ம ப்ளாக்'குக்கு எண்டு கம்பியூட்டர் முன்னாடி உக்கார்ந்தா அந்த நேரம் பார்த்து அம்மா ரூமுக்க வந்து வெட்டிப்பயலே ஒவ்வொரு நாளும் இதே தொழிலாப் போச்சு எண்டு பரவை முனியம்மா ரேஞ்'க்கு அறிக்கை விடுவா பாருங்க.. ஏன்டா மனுசனா பிறந்தோம்னு இருக்கும்க எனக்கு..



நாமளும் ஊர்ல ரொம்ப பவுசான ஆளுன்னு காட்டுறதுக்காக வெள்ளை வேளேர்ன்னு சட்டை போட்டுக்கிட்டு போவம்..அன்னைக்குன்னு சும்மா இருந்த காக்கா வடை கிடைக்காத கடுப்பில என் மேல வேலைய காட்டும் பாருங்க..பவுசுக்காக இதுகளோட பண்ணுற ரவுசு போதும்னு ஆகிடும் எனக்கு.ஏன் எனக்கு மட்டும் இப்பிடி?

சூடு சூடா பேஸ் புக்கில ஏதாச்சும் ஸ்டேடஸ் போடுவம் நல்லா கமெண்டு வரட்டுமே எண்டு போட்டா ..அன்னிக்கிண்டு எல்லா பய புள்ளைகளும் எங்க போவாங்கன்னே தெரியாது ஒரு பய வரமாட்டான் கமெண்டு பண்ண..
ஒரு ஸ்டேடஸ்'ஸ போட நாம எம்புட்டு பாடு படுவம்ன்னு ஜோசிக்காமலே போய்டுவாங்க பயலுக..ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?


இது எனக்கு மட்டும் தானா இல்ல உங்களுக்குமா??


Post Comment

16 comments:

Harini Resh said...

Ha ha ha ha
ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி ?? :P

// ஏதாச்சும் பதிவு போடுவமே..நாலஞ்சு நாளாச்சு பதிவு போட்டு ஒரு ஈ காக்கா வருதில்ல நம்ம ப்ளாக்'குக்கு எண்டு கம்பியூட்டர் முன்னாடி உக்கார்ந்தா அந்த நேரம் பார்த்து அம்மா ரூமுக்க வந்து வெட்டிப்பயலே ஒவ்வொரு நாளும் இதே தொழிலாப் போச்சு எண்டு பரவை முனியம்மா ரேஞ்'க்கு அறிக்கை விடுவா பாருங்க.. ஏன்டா மனுசனா பிறந்தோம்னு இருக்கும்க எனக்கு..//

அங்கயும் அதுதான் நடக்குதா? :P

suthan said...

இந்த மாதிரி பதிவெல்லாம் வாசிக்கணும் எங்க தலயில எழுதிருக்கு ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?

Harini Resh said...

//suthan said...
இந்த மாதிரி பதிவெல்லாம் வாசிக்கணும் எங்க தலயில எழுதிருக்கு ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?//

இது நாள் இருக்கே :p

YOGA.S.Fr said...

ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்..................................................!

AROORAN KRISH said...

இந்த மாதிரி பதிவெல்லாம் வாசிக்கணும் எங்க தலயில எழுதிருக்கு ஏனுங்க நமக்கு மட்டும் இப்பிடி?//

இது நாள் இருக்கே :p

Niraj said...

இவருக்கு ஆஸ்கார் குடுக்கலாம். ஹாஹஹஹ்....

Jana said...

ஏனுங்க உங்களுக்கு மட்டும் இப்படி??? புரியலைப்பா....

கன்கொன் || Kangon said...

Awwww.... ;-)

varathan said...

இவனுகளை எல்லாம் வண்டலூருக்கு அனுப்பனும்யா

lavan said...

hahahha!!!!!!!!!!!

தர்ஷன் said...

உங்களுக்குமா?

k.r vijaya said...

unagalal mattum eppdi ippdi yosikkamudiyith?bro.........

ravi said...

mokka mokka...........pathivu

Anonymous said...

Da mokka mokkada

Vathees Varunan said...

எலே வரவர ஓவராத்தான் போய்கிட்டிருக்கிறாய் இது சரியில்லை சொல்லிப்புட்டன்

ஷஹன்ஷா said...

அதே அதே....நடக்குது..

Related Posts Plugin for WordPress, Blogger...