Monday, January 31, 2011

பெண்கள் கவிதையா உங்களுக்கு?


கவிதையாம் பெண்!!
கவிதையாய் சிரிக்கிறாய் நீ..
பாடசாலையில் ஒருவன்..
கவிதையாய் இருக்கிறாய் ..
சீரியசாய் திரிந்த ஒருவன்..
கவிதைக்கு இலக்கணம் நீயடி..
உரிமையோடு இவன்..
கவிதையே நீ தான் என்றார்கள்..
உங்களில் சிலர்..

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

என்னை பிடித்திருந்தது
பலருக்கு..
எனக்கு என்ன பிடிக்குமென்று
தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!
கவிதையே நீயடி எனில்..
என்ன தான் புரியும் எனக்கு?

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

என் நடையிலே கவிதையாம்..
கால்கள் என்ன ஏந்துகை மோனையா?
என் கூந்தலே கவிதையாம்..
கூந்தல் என்ன குறளோவியமா?
என் வதனமே கவிதையாம்..
வதனமென்ன வளர்மதியா?
உதடுகள் ஹைக்கூ கவிதையாம்..
உங்கள் ஹைக்கூ போலே கேவலமாயா?

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!

ஆண்களுக்கு பெண்ணென்றால்
கவிதை தானா?
பின்னர் எதற்கு கவிஞர்கள் தான்
பின்னெதற்கு கவிதைகள் தாம்!!
கவிதையாம் பெண்..!

டிஸ்கி:ஒரு பெண்ணின் கேள்வி...எனதல்ல!
என்னடா இவன் இப்பிடி எழுதுறானே எண்டு ஜோசிக்க கூடாது பாருங்க!

Post Comment

9 comments:

Jana said...

அது சரி...
பெண்ணியம்போற்றும் மலர்மனப்பதிவர் மைந்தன் சிவா வாழ்க!!!

MANO நாஞ்சில் மனோ said...

//சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு..!!//



கிளம்பிட்டாங்கய்யா...............
[கவிதை சூப்பர்]

Anonymous said...

adoi mokka blog mynthan.;p neyuum un mokka blog gum

Anonymous said...

இது சுட்ட கவிதையா சுடாத கவிதையா.......................

கவி அழகன் said...

சத்தியமாக,
கவிதை தெரியாது எனக்கு

niraj said...

என்னை பிடித்திருந்தது
பலருக்கு..
எனக்கு என்ன பிடிக்குமென்று
தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை!
சத்தியமாக.நல்ல சொன்னிங்க.....

suthan said...

ஒரு பெண்ணின் கேள்வி...எனதல்ல whoz that lady?

நல்ல கவிதை................


ஆமா இது கவித தானே....................

Anonymous said...

ஒரு பெண்ணின் கேள்வி...எனதல்ல?


கவித தெரியாட்டி பேசாம இருக்க வேண்டியது தானே................. கவித எனும் பெயரில் இத போட்டவர் மட்டும் என் கைல கிடைச்சார்
?.......................

KANA VARO said...

சத்தியமாக விடை தெரியாது எனக்கு.

Related Posts Plugin for WordPress, Blogger...