Wednesday, December 1, 2010

புள்ளிராஜாவுக்கு எயிட்ஸ் வருமா??




இன்று டிசம்பர் முதலாம் தேதி, உலக எயிட்ஸ் விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது..

மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் ஹெச்ஐவி தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது எயிட்ஸ் முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில்1981 இல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் ஹெச்ஐவி எனக் கண்டறியப்பட்டது.

எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். 2007 இல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது.இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சஹாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தை சிதைத்திருக்கிறது.எயிட்ஸின் உலகப்பரம்பல் கீழ்வரும் பட்டத்தின் மூலம் நீங்கள் அறியக்கூடியதாக இருக்கும்.



2007 இல் இந்தியாவில் அண்ணளவாக 2 .3 மில்லியன் எயிட்ஸ் தொற்றுநோயாளர்களும்,2010 இல் இலங்கையில் அண்ணளவாக 3000 பேரும் இனம்காணப்பட்டுள்ளனர்..
புள்ளிவிபரத்துக்குள் உள்ளடங்காமல் எத்தனை பேரோ!!

வெண்பாவின் கட்டுமானத்தை உயிர்கொல்லி எயிட்ஸின் எதிர் ஆயுதாமாக கொண்டு வைரமுத்து கவிப்பேரரசுவால் எழுதப்பட்ட கவிதையை விழிப்புணர்வுக்காக தருகிறேன்...உலக எயிட்ஸ் ஒழிப்பு நிறுவனங்கள்,மக்கள் இந்தக் கவிதையை எந்த வடிவத்திலும் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது..


ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே - பாரடா
வையத்தில் மானுடம் வாழுமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா!

போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதைக்
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்!

இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள் - மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு!

கண்ணுக்குத் தோன்றாத காமக் கிருமிகளோ
புண்ணுக்குள் சென்று புலன்கொல்லும் - கண்ணா
முறையோடு சேராத மோகம் பிறந்தால்
உறையோடு போர்செய்தே உய்!

கரைமீறிச் சேர்ந்தாடும் காமக் கலப்பில்
உறைமீறி நோய்சேர்வ துண்டே - உறைநம்பிக்
கம்மாக் கரையோ கடற்கரையோ தேடாமல்
சும்மா இருத்தல் சுகம்!

தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு!

கலவிக்குப் போய்வந்த காமத்து நோயைத்
தலைவிக்கும் ஈவான் தலைவன் - கலங்காதே
காவலனாய் வாய்த்தவனே கண்ணகிக்கு நோய்தந்தால்
கோவலனைக் கூசாமல் கொல்!

ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ!

தேன்குடிக்கப் போன திருவிடத்தில் உன்னுடைய
ஊன்குடிக்க ஒட்டும் உயிர்க்கொல்லி - ஆண்மகனே!
உல்லாச நோய்சிறிய ஓட்டையிலும் உட்புகுமே
சல்லாப வாசலைச் சாத்து!

மோகக் கிறுக்கில் முறைதவறிப் போனவர்கள்
தேகம் இளைத்தபடி தேய்கின்றார் - ஆகப்
பொறுப்பற்ற வாழ்வில் புகுந்தபலர் இங்கே
உறுப்பற்றுப் போவார் உணர்!

பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை - இன்றே
எரிêட்ட வேண்டும் இளைய குலம்வாழ
அறிவூட்ட வேண்டும் அறி!

துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த
மானுடத்தை வாழ்விப்போம் வா!



முக்கிய குறிப்பு :பாதுகாப்பான உடலுறவு பால்வினை நோய்களை தடுக்கும்..
DO SAFE:BE SAFE !!

Post Comment

4 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

nalla pathivu nanpaa

ம.தி.சுதா said...

நல்ல தகவலும் அருமையான வரிகளும் சகோதரா...

கவி அழகன் said...

அவசியமான பதிவு.
பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள் .

AnushangR said...

சமூக அக்கறையுடனான பதிவுக்கு ஒரு சபாஷ்... தொடரட்டும் உங்கள் பணி...

Related Posts Plugin for WordPress, Blogger...