Thursday, September 30, 2010

இது பதிவர் ஏரியா!!


திக்கு திசை தெரியாம ஓடிட்டிருந்த நம்ம பதிவர்களுக்கு இப்பிடி இவங்க ஓடுவாங்க எண்டு தெரிஞ்சே 3000௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னரே திருவள்ளுவர் பத்து குறளை வழங்கி விட்டு போய் இருக்கிறார்..அவற்றை அத்தனை பதிவரும் பின்பற்றினால் பல ஆயிரம் ஹிட்ஸ்'சுகள் பெற்று பல்லாண்டு காலம் வாழலாமாம்!!
அப்பிடி என்ன தான் சொல்லி இருக்கார் எண்டு பாப்பமே!

1)எந்திரன் தலைப்பில் பதிவொன்று போட்டால்
ஹிட்ஸ்'கள் வழங்கும் வாரி!!

2)பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மற்றோர்
ஈகலைப்பார் ப்ளாக்'இல் இருந்து!

3)கவிதைகள் போடாத பதிவர்கள் யாரும்
பிரபல பதிவராக "தடா"!

4)ஹிட்ஸ் கொடுப்பதெப்படீன்னு பதிவொன்று இட்டாலே
தானாக கிடைக்கும் ஹிட்ஸ்'சு !

5)கிளுகிளு படங்கள் விமர்சனம் பார்க்க
ஜாக்கிஅண்ணன் ப்ளாக்'கே சிறப்பு!

6)பதிவராயின் பயனென் சொல் நானறிவேன்
வெட்டிப்பயல்க்கு இருக்கா நேரம்!

7)இன்ட்லி தமிழ்மணம் இல்லாது போனால்
சிரித்திருப்போம் தனிரூம் போட்டு!!

8)சப்புன்னு தலைப்பு ஒத்தேல வைச்சா
ஒருநாய் எட்டிப் பார்க்கா!!

9)உறைக்க உறைக்க பதிவொன்று போட்டா
பின்னூட்டம் வேலி பிச்சிக்கும்!!

10)அடிக்கடி பதிவுகள் போடாதோர் ப்ளாக்'இற்கு
பின்னூட்டம் கம்பிநீட்டக் கடவு!!

நல்லாத்தான் சொல்லி இருக்கார் என வள்ளுவர்!!ஹிஹி ஓகே ஓகே ஏதுவ இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கணும் !!
ஓட்ட போட்டிட்டு next 'டு டே மீட் பண்ணுவம்!

Post Comment

5 comments:

ம.தி.சுதா said...

///...பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மற்றோர்
ஈகலைப்பார் ப்ளாக்'இல் இருந்து!...///
வாங்கையா திருவள்ளுவரே வாசுகி நலமா..?
ஆனால் இந்தக் குறளில் எனக்கு உடன் பாடில்லை. பெயரிற்க பின்னால் ஒரு பட்டம் இரந்தால் எம்மவரில் வால்கட்டவென ஒரு கூட்டம் கிளம்பி விடுமே...

கவி அழகன் said...

நல்ல அருமையான திருக்குறள்
நகைச்சுவையுடன் சில கருத்துக்களும்

Unknown said...

ம.தி.சுதா said...
///...பின்னூட்டம் போட்டாரே வாழ்வார் மற்றோர்
ஈகலைப்பார் ப்ளாக்'இல் இருந்து!...///
வாங்கையா திருவள்ளுவரே வாசுகி நலமா..?
ஆனால் இந்தக் குறளில் எனக்கு உடன் பாடில்லை. பெயரிற்க பின்னால் ஒரு பட்டம் இரந்தால் எம்மவரில் வால்கட்டவென ஒரு கூட்டம் கிளம்பி விடுமே..
வாசுகிக்கு கொஞ்சம் சரி இல்லை ...உடம்பு..
ஹஹா ஆமாம் ஆமாம் கிளம்பி விடும் !!

Unknown said...

யாதவன் said...
நல்ல அருமையான திருக்குறள்
நகைச்சுவையுடன் சில கருத்துக்களும்//
thankz

AnushangR said...

சி(ற)ரிப்பா இருக்கு...
வள்ளுவருக்கு பாராட்டாக எந்திரன் திரைப்பட டிக்கெட் ஒன்று தரலாம் என முடிவு செய்துள்ளேன்...ha ha......எப்பூடீ????
நாங்களும் மாஸ்-ஆ யோசிப்போமில்ல!!!

Related Posts Plugin for WordPress, Blogger...