Wednesday, September 15, 2010

விளையாட ஜோடி தேவை !!

1997 ஆம் ஆண்டு வெளி வந்த மின்சாரகனவு திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் ரஹ்மான் இன்னொரு தேசிய விருதுக்கு சொந்தக்காரர் ஆனார்.அத்துடன் flimfare விருதும்,தமிழ்நாடு அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருதும் கிடைத்தன.அத்திரைப்படத்தில் இடம்பெற்ற வெண்ணிலவே வெண்ணிலவே பாடல் ரஹ்மானின் இசையிலும்,ஹரிஹரனின் இனிமையான குரலிலும்,வைரமுத்துவின் வரிகளாலும் அனைவர் மனதையும் கொள்ளையடித்தது..இன்று கூட பலரின் நெஞ்சங்களின் ரிங் டோன் ஆக வெண்ணிலவே இருக்கிறது என்றால் அந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.. இந்த பாடலுக்கு நடனமாடிய படத்தின் நாயகன் பிரபுதேவாக்கு டன அமைப்புக்கு தேசிய விருது கிடைத்தது ஞாபகமிருக்கலாம்!!
பெரும்பாலானவர்களுக்கு முழுப்பாடல் வரிகளுமே மனப்பாடமாக இருக்கும் என்பது திண்ணம்!!
பாடல்: வெண்ணிலவே வெண்ணிலவே

குரல்: ஹரிஹரன், சாதனா சர்கம்

வரிகள்: வைரமுத்து

இசை:இசைப்புயல் AR .ரஹ்மான்

வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா

விளையாட ஜோடி தேவை
வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா
விளையாட ஜோடி தேவை

(வெண்ணிலவே)

இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்

(வெண்ணிலவே)

இது இருளலல்ல அது ஒளியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்
தலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும்
பெண்ணே...பெண்ணே...
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே
புல்லோடு பூமீது ஓசை கேட்கும் பெண்ணே
நாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு

(வெண்ணிலவே)

எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு
இதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு
பெண்ணே...பெண்ணே
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்
பூகூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்
அட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு

(வெண்ணிலவே)

ரஹ்மான் இசையில் அதே மெட்டில் கவலையான வெண்ணிலவே பாடலும் படத்தில் இடம்பெற்றிருக்கும்.

அதன் வரிகள் இதோ..

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

என் அழகு என்ன? என் தொழில் என்ன?
ஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு
நான் தண்ணீரில் மெல்ல கரைந்தேனே
அதில் மின்சாரம் எப்போது உண்டாச்சு
பெண்ணே பெண்ணே ராவொடும் பகலொடும்
உந்தன் ஞாபகம் தொல்லை
ரயில் பாதை பூவோடு வண்டுகள் தூங்குவதில்லை
இது சரியா? தவறா? என்பதை சொல்ல சாத்திரத்தில் வழியில்லை

வெண்ணிலவே வெண்ணிலவே
என்னை போல தேயாதே உன்னொடும் காதல் நோயா?
ஒரு பூங்காவை போல் எந்தன் உள்ளம் வைத்தேன்
அதில் புயல் வீசி குலைத்தது யார்?

பல தேசிய விருதுகளுக்கு சொந்தமாகிய அந்தப்பாடலை நீங்களும் இன்னொரு முறை பார்த்து ரசியுங்களேன்!!சரி சரி மெய்மறந்து இருந்தது போக ஒரு ஒட்டு போட்டு போங்கப்பா!!

Post Comment

10 comments:

Anonymous said...

கிளைமாக்ஸ் நேரத்தில் வரும் சோக பாடலையும் இணைத்துள்ளீர்கள்..எனக்கு பிடித்த அருமையான பாடல்...thankz

Anonymous said...

ஆமா என்ன கொஞ்ச நாளா பதிவ காணேல?

Anonymous said...

இனிமையான பாடல்..பதிவிட்டமைக்கு நன்றி

Unknown said...

jorge said...
கிளைமாக்ஸ் நேரத்தில் வரும் சோக பாடலையும் இணைத்துள்ளீர்கள்..எனக்கு பிடித்த அருமையான பாடல்...thankz//
வருகைக்கு நன்றி

Unknown said...

jorge said...
ஆமா என்ன கொஞ்ச நாளா பதிவ காணேல?//

ஆமா..தவிர்க்க முயல்கிறேன் நண்பரே

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரொம்ப நல்ல பாட்டு... எப்போதும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்று...

Unknown said...

வெறும்பய said...
ரொம்ப நல்ல பாட்டு... எப்போதும் கேட்கும் பாடல்களில் இதுவும் ஓன்று..//
ஆமாம்..

Unknown said...

அருமையான பாடல்...முக்கியமாக சோகப்பாடல் நெஞ்சை தொட்டது..!

Anonymous said...

இத்திரைப்படத்தில் பாடிய பாலு,சித்திரா ஆகியோருக்கும் தேசிய விருதுகள் கிடைத்ததையும் மறக்ககூடாது நண்பரே!

எஸ் சக்திவேல் said...

கட்டாயமாக!

(புரியாவிட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்)

Related Posts Plugin for WordPress, Blogger...