Wednesday, May 15, 2013

"சூது கவ்வும்"- விமர்சனம் என்பார்வையில்...!

   grey சூது கவ்வும் [2013]

சூது கவ்வும்.படம் வெளிவந்தது முதலே எங்கு பார்த்தாலும் சூப்பர்,கலக்கல் என்று தான் விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.விமர்சனங்களின் 'ஒன் லைன்' மட்டும் வாசித்தவண்ணமிருந்தேன்,காரணம் எப்படியாவது அதற்குமுதல் படத்தை பார்த்துவிடவேண்டும் என்கின்ற ஆவல்.படம் பார்த்து முடிந்த பின்னாடி என்னுடைய 'ஒன் லைன்'விமர்சனம் கூட அதே தான்..'கலக்கல்,தாறு மாறு'..!காரணம்?


+விஜய் சேதுபதியின் நடிப்பு.அவர் முக ராசி,தாடி என்று அனைத்துமே அந்த தாஸ் கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருக்கிறது.தாடி தான் சேதுபதிக்கு பெரிய ப்ளஸ் போலும்!பீட்ஸா,நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களை விட இப்படத்தில் நன்றாக நடித்திருப்பது தெரிகிறது.எந்த சினிமா விழாவுக்கோ,பேட்டிகோ விஜய் சேதுபதி சென்றால்,கட்டாயம் 'ப்ப்ப்ப்ப்ப்பாஆ என்ன பொண்ணுடா இவ..பேய் மாதிரி...'என்ற டயலாக்கை தான் மாறி மாறி சொல்ல கேட்கிறார்கள்.சூது கவ்வும் படம் விஜய்சேதுபதிக்கு இன்னும் பல வசனங்களை சொல்ல வைக்கும்..!ஸ்டைலிஷ் காதல் படங்கள்,மொக்கை மசாலா படங்கள் என்று செல்லாமல் இதுபோன்று சில படங்களை தெரிவு செய்து நடித்தால் விஜய் சேதுபதிக்கு நிச்சயம் 'சசிக்குமார்'க்கு கிடைத்த வரவேற்பு தமிழில் கிடைக்கும்.வங்கி மேனேஜர் மகளை கடத்தி அவர் ஆபீசுக்கு நேரே சென்று பணத்தை வாங்கிவிட்டு திரும்பிவரும் காட்சிக்கு விசில் பறக்கின்றது!

+படத்தின் இன்னொரு ப்ளஸ் அதன் நேர்த்தியான திரைக்கதை.90% குற்றமே சொல்லமுடியாத திரைக்கதை.அதுமட்டுமல்லாது படம் முழுவதும் ஏகப்பட்ட ட்விஸ்ட்கள்.அடுத்து இது தான் நடக்குமென்று எதிர்பார்ப்போம்.ஆனால் கடைசிவரைக்கும் அது நடக்கவே நடக்காது.எதிர்பார்க்காத ஒன்றில் கொண்டுபோய் முடிப்பார் இயக்குனர் நலன் குமாரசாமி.ஒவ்வொன்றுமே சிறிய சிறிய ட்விஸ்ட்கள் என்பதால் படத்தின் எந்த கணமும் அலுப்புத்தட்டவில்லை.உட்கார்ந்து மிக நேர்த்தியாக செதுக்கிய திரைக்கதை.இரண்டாம் பாதி நிற்கவேயில்லை..ஓடுகின்ற விறுவிறுப்பு! 

+இரண்டு மூன்று பாடல்கள் வருகின்றன.அவை கூட தேவை இல்லை என்று தான் தோன்றியது.'காசு பணம் துட்டு மணி மணி..' என்ற பாடலும் 'ட்ரவுசர் கழண்டிரிச்சே' என்கின்ற பாடலும் ரசிக்கக்கூடியன.இறுதியில் தேவையில்லாது ஒரு டூயட் ஒன்று.அதை கத்தரித்திருக்கலாம்.(கட்டாயம் மூன்று பாடல்கள் வந்தால் தான் காசு போடுவேன்னு தயாரிப்பாளர் சொன்னாரோ என்னமோ!).பின்னணி இசை என்று பெரிதாக சொல்லிக்கொள்ள ஏதுமில்லாவிட்டாலும்,படத்தின் 'திரில்லிங்'கை எவ்விடத்திலும் சந்தோஷ் நாராயணன் குழப்பிவிடவில்லை. 

+'தாஸ்' அண்ட் கோ'வுக்கு பிற்பாதியில் மிகப்பெரும் உதவிபுரியும் கதாபாத்திரமான மேட்டர் பட டைரெக்டர் 'டாக்டர் தாதா',சைக்கோ போலீஸ் 'பிரம்மா' ஆகியோருக்கான 'இன்ட்ரோ' முதல் பாதியிலேயே கொடுக்கப்படுவது சிறப்பு.கதையின் இடைவேளைக்கு பிந்திய பாகத்தில் வரும் முக்கிய இரு கேரக்டர்கள் இவர்கள் இருவரும்.ஆனால் முதல் பாதியில் அப்படி நினைத்திருக்கவில்லை.ஏதாவது ஒரு பிட்டு கேரெக்டர்க்கு வருவார்கள் என்று தான் எண்ணியிருந்தேன்.கதாபாத்திரங்களின் பின்னணி சொல்லப்பட்டிருக்கும் விதம்,ஒரு 'ப்ளோ'வில் வரும் காட்சிக்கோர்வை என்பன படத்துக்கு ப்ளஸ்.

+சீரியசான திரில்லிங் கதையா இல்லை காமெடி கதையா என்று ஜோசிக்க வைக்குமளவுக்கு ஒவ்வொரு சீனிலும் ஏதாவது ஒரு காமெடி இருக்கும்.இறுதியில் போலீஸ் துரத்தி வந்து பிடிக்கும் சமயத்தில் பின்னாடி இருந்து தாஸ் காங் ஆள் ஒருத்தன் துப்பாக்கியை பிரம்மாவை நோக்கி நீட்டுவான்.பிரம்மா அசட்டு சிரிப்பு சிரிக்க,அதே துப்பாக்கியால் பிரம்மாவின் மூக்கை உடைத்துவிட்டு 'துப்பாக்கி காட்டி மிரட்டிக்கிட்டிருக்றேன்..நீ சிரிக்கிறே?' அப்பிடின்னு மரண சீரியஸ் நேரத்திலும் 'கொல்' என்று ஒன் லைன் காமெடி!இப்படி ஏகப்பட்ட சீரியஸ் சீன்களுக்குள் காமெடியை நுழைத்து சிரிப்பை படம் முழுவதும் மெயின்டெயின் பண்ணியது படத்துக்கு இன்னொரு ப்ளஸ். 

+பெண் கதாபாத்திரம் என்று படத்தில் வருவது என்னமோ தாஸை மாமா மாமா என்று சுற்றிவரும் 'ஷாலு'என்கின்ற கற்பனை கதாபாத்திரம்.இந்த பெண் கதாபாத்திரம் தாஸுக்கு மட்டுமே புலப்படும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.படத்தில் இவர்களின் கடத்தல்கள் அனைத்திலும் தாஸுடன் ஒட்டிக்கொண்டு வருகிறாள்.இவளுடன் தனியாக தாஸ் பேசும் காமெடிகள் தனி.மற்றையது மினிஸ்டர் ஞானோதயமாக வரும் எம் எஸ் பாஸ்கரின் மனைவி.பாஸ்கரின் நடிப்பு,சைக்கோ போலீஸ் பிரம்மாவின் நடிப்பு என்று அவரவர் பாத்திரங்களில் ஒவ்வொருவரும் திறமையை வெளிக்காட்டியிருக்கின்றனர்.குறிப்பாக போலீஸ் பிரம்மா ஆட்டத்துக்குள் இறங்கிய பின்னர் தான் படம் களைகட்டுகிறது காரணம் பிரம்மாவின் பாத்திரம் படைக்கப்பட்ட விதம்,மற்றும் அவரது நடிப்பு.படத்தில் இவர் வாய்திறந்து பேசியதே மிக மிக குறைவு.ஆனால் ஆக்சன் பிரமாதம்!

-படத்தில் உறுத்திய விடயங்கள் இரண்டு.ஒன்று இடைவேளை வரும்போது இடம்பெறும் வாகன விபத்து.அது படமாக்கிய விதம் சொதப்பல்.அத்துடன் அந்த விபத்தில் கட்டாயம் மூன்று பேராவது இறந்திருப்பார்கள் என்று நினைக்கையில் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் மீண்டு வந்ததாக காட்டியது ஏனோ நியாயப்படுத்த முடியவில்லை.அதுபோன்று கடத்தலுக்கு பெற்ற பணத்தை விளையாட்டு ரக சிறிய ஹெலிகாப்டரில் வைத்து தூக்கி சென்றது நம்பவே முடியவில்லை.அந்தளவு பாரத்தை அது தாங்காது என்று சிறிய குழந்தை கூட சொல்லிவிடும்.குறும்பட இயக்குனர் ஒருவரின் முதல் படம் என்பதனால் என்னமோ பல காட்சிகளில் குறும்பட எபெக்ட்ஸ் தெரிகிறது.ஆனால் இவை எல்லாம் படத்தின் ஓட்டத்துடன் காணாமல் போய்விடுகின்றன!

**ஒரு புதிய முயற்சி அப்பிடி இப்பிடின்னு சொல்லமுடியாது.இது போல எகப்பட்ட படங்கள் வந்திருக்கின்றன.ஆனால் சூது கவ்வும் ஒரு சுவாரசியமான முயற்சினு சொல்லிக்கலாம்கட்டாயம் பார்க்கவேண்டிய படம். என்னோட மார்க்கு 73/100.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சரி பட விமர்சனம் ஒரு பக்கம் இருக்கட்டும்.படத்தில் கடத்தல் தொழில் செய்யும் தாஸ் அண்ட் கோ'வின் பிளான் பக்கா.அத்துடன்,வழமையான கடத்தல் போலல்லாது,சாதாரண அமவுண்ட் ஒன்றை பெற்றுக்கொண்டு கடத்தப்பட்டவர்களை விடுதலை செய்கின்றனர்.அப்படி என்றால் எந்த பிரச்சனையும் வராது என்பது அவர்கள் நம்பிக்கை.இதையும்,அவர்களது கடத்தல் தொழிலின் ஐந்து விதிமுறைகளையும் பார்க்கும்போது,எனக்கே அடடா இது போல நாமளும் பண்ணலாமே என்று தோன்றுகிறது.எத்தனை பேருக்கு அப்படி தோன்றியிருக்கும்?எத்தனை பேர் இப்படி செய்யலாம் என்று களத்தில் குதிக்க தயாராக இருக்கப்போகிறார்கள்?பயமாக இருக்கிறது.காரணம்,படங்கள் தான் நம்மவர்களுக்கு முக்கிய இன்ஸ்பிரேசன்.மட்டக்களப்பில் காதலியின் தாய் தந்தையை கொலை செய்தவர்கள் கூறியது சுறா போன்ற படங்களை பார்த்து தான் கொலைக்கான 'ப்ளான்' போட்டோம் என்று.படத்தை படமாக பார்த்தால் ஓகே.ஆனால் பெரும்பாலானோர் அப்படி பார்ப்பதில்லை.உள்வாங்கிவிடுகின்றனர்.அஞ்சு பத்துக்கு செயின் அறுப்பவர்கள்,எனி அம்பதாயிரம் ஒருலட்சம் என்று சின்ன அமவுண்ட்க்கு கடத்த தொடங்கிவிடுவார்களோ!!


Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...