Thursday, May 30, 2013

"குட்டிப்புலி"-சசிக்குமாருக்கு முதல் தோல்வி...?


            


சிங்கம் பார்ட் 2 தொலைக்காட்சிகளில் கொடுக்கும் அலப்பரை விளம்பரங்களுக்கு சற்றும் குறையாமல் சசிக்குமாரின் 'குட்டிப்புலி'க்கும் விளம்பரங்கள் சீறிப்பாய்ந்தன.காரணம் சன் பிக்சர்ஸ்.படம் வெளிவரமுன்னதாகவே அவர்கள் வெளியிடும் ஏராளமான முன்னோட்ட காட்சிகளை வைத்தே படத்தின் கதை இது தான்,படத்தின் சுவாரசியங்கள் இவை தான் என்று பட்டியல்போட்டு காட்டுவது சன் பிக்சர்ஸ்க்கு கைவந்த கலை!'என் மகன் சிங்கம் மாதிரி..ஆனா பெயர் தான் புலி'அப்பிடின்னு சரண்யா பொன்வண்னன் வேறு மணிக்கொருமுறை உருவேற்றிக்கொண்டிருந்தார்.


சுப்பிரமணியபுரம்-நாடோடிகள்-போராளி-சுந்தரபாண்டியன்னு வெற்றிகளை மட்டுமே தந்துகொண்டிருந்த சசிக்குமாரின் ஐந்தாவது தமிழ்படம் குட்டிப்புலி.இயக்கம் அறிமுக இயக்குனர் முத்தையா.இவர் இயக்குனர் பூபதி பாண்டியனின் அசிஸ்டண்ட்டாக கொஞ்சகாலம் வேலைபார்த்தவர்.இசை ஜிப்ரான்.ஏற்கனவே 'வாகை சூடவா' மற்றும் 'வத்திக்குச்சி'யில் தன்னை நிரூபித்தவர்.'சர சர சாரைக்காத்து வீசும் போது' புகழ் ஜிப்ரான்.ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி.'வில்லேஜ் தியேட்டர்ஸ்' தயாரிக்க,சன் பிக்சர்ஸ் வழங்க,ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டிருக்கிறது.

தனது ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் முத்தையா தெருவில் பார்த்து வளர்ந்த ஒரு உண்மை கதாபாத்திரத்தை சசிக்குமார் வாயிலாக திரையில் காட்டியிருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் இயக்குனர் முத்தையா கூறியிருந்தார்.சரி படம் எப்படி வந்திருக்கிறது என்று பார்ப்போம்.



சண்டியருக்கு மகனாய் பிறந்த சசிக்குமார் தானும் சண்டியராக ஊரில் வலம்வருகிறார்.பிறந்து சின்னவயதிலேயே தந்தை இறந்துவிட தாய் சரண்யா பொன்வண்ணன் தான் பாசத்துடன் வளர்த்துவருகிறார்.மகனும் அம்மா மீது நல்ல பாசம்.சண்டித்தனத்தால் அங்காங்கே விதைத்து வைத்திருந்த விதை எப்போது வெட்ட வரும் என்கின்ற பயத்தால்,திருமணமே செய்யக்கூடாதென்று பெண்ணை பார்த்தால் மண்ணை பார்த்து நடக்கிறார். இப்படியான தருணத்தில் வரும் வம்புகளும்-சண்டைகளும்-பழிவாங்கல்களுக்கும் மத்தியில் லக்ஷ்மிமேனன் மீது வரும் காதலும்-அம்மா பாசமும் என்று படம் செல்கிறது.


சன் பிக்சர்ஸ் கொடுத்த அலப்பரை,ஒரே போர்முலாவுக்குள் சுற்றும் சசிக்குமார் என்று இந்தப்படம் மீது இருந்த பயத்தை படம் நிரூபித்திருக்கிறது.சசிக்குமாரின் முதல் நாங்கு படங்களும் ஒரே மாதிரியானவையாக இருந்தாலும் அதற்குள் ஒரு சுவாரசியம், விறுவிறுப்பு,காட்சிகளின் ஒருங்கிணைப்பு படங்களை வெற்றிபெற வைத்தன.குட்டிப்புலியில் அவை எல்லாமே மிஸ்சிங்.சசிக்குமார், சரண்யா, லக்ஷ்மிமேனன்,ஆடுகளம் முருகதாஸின் நடிப்பு அருமை.ஆனால் அதனை உரியமுறையில் பயன்படுத்திக்க அறிமுக இயக்குனர் தவறிவிட்டார்.

தாட்டியரே தாட்டியரே என்று சசிக்குமார் அறிமுகமாகும் காட்சியிலும் சரி,'பெருசாட்டம் பாத்தாய்..சிறுசாட்டம் பாத்தாய்..புலியாட்டம் பாக்றியா' என்று பஞ்ச் அடித்து சிலம்பில் ஆடும்போதும்,அடடான்னு நம்மளுக்குள் ரத்தம் பாயும் வேகத்தை அடுத்தடுத்த காட்சிகளில் கட்டாயமாக சிதைத்து விட்டிருக்கிறார்கள்.இடையில் ஒரு காபி குடித்துவிட்டு வரலாம்னு பலதடவை தோன்றவைத்த முதல் சசி படம் இது தான்.அந்தளவு இழுவை.படம் முழுவதுமாய் 'கனா காணும் காலங்கள்' செட் ஒண்ணு வந்து படத்துக்கு இன்னமும் வெறுத்தனமாய் இழுவை வைத்துவிட்டு போகிறார்கள்.காதல்,காதல் ஆட்வைஸ்,காமெடி என்கின்ற பெயரில் அவர்கள் பண்ணும் அலம்பல் தாங்கமுடியவில்லை.

இடைவேளைக்கு முன்பு சாகும்படி வெட்டுப்பட்டு விழும் சசிக்குமார் இரண்டாம்பாதியில் உடனடியாகவே 'ரிக்கவர்' ஆகி 'பைட்' பண்ணுகிறார். முதல் பாதி தான் கொஞ்சம் ஆவரேஜ்,இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திவிடுவார்கள்(விடுங்கடான்னு வேண்டிக்கிட்டேன்)என்கின்ற எதிர்பார்ப்பை, இதனைவிட முதல் பாதி பரவாயில்லை என்கின்ற அளவுக்கு இரண்டாம்பாதி மழுங்கடித்துவிடுகிறது.இறுதியில் ஒரு சின்ன டுவிஸ்ட் வைத்து 'பெண்மைக்கு அழகு வீரம்' அப்பிடின்னு முடித்திருக்கிறார்கள். இதைவிட சொல்ல வேறேதுமில்லை படத்தில்.!So Sad...

படத்தில் மொத்தமாக நான்கு பாடல்கள்.வைரமுத்துவும்,முனைவர் முத்துக்குமாரும் எழுதியிருக்கிறார்கள்.பத்மலதா-சக்ரவர்த்தி இணைந்து பாடிய 'அருவாக்காரன்' பாடலும்,கோல்ட் தேவராஜ் பாடிய 'காத்து காத்து' மற்றும்,'தாட்டியரே தாட்டியரே' பாடல்களும் லேசாக மனதில் நிக்கின்றன.இவற்றை தவிர்த்து அங்காங்கே பழைய பாடல்களையும்,'அக்காமக அக்காமக' ரீமிக்ஸ் பாடலையும் பயன்படுத்தி ஒருமாதிரியாக ஒப்பேற்றியிருக்கிறார்கள்.இசை வாகை சூடவா 'ஜிப்ரானா' என்று கேட்கவைக்கிறார்.இயக்குனர் புதிதாய் இருக்கையில்,ஒரு நல்ல இசையமைப்பாளரை பயன்படுத்தியிருக்கலாம்! இடையிடையே 'ஆடுகளம்' படத்தின் பின்னணி இசையை காப்பி பண்ணியிருக்காரோ என்றும் எண்ணவைக்கிறது!

சண்டிக்கட்டில் திரியும் சசிக்குமார் ஒரு சமயம் பான்ட்-சர்ட்-கூலிங் க்ளாஸ்-ஷூ சகிதமாய் கெட் அப் கொடுக்கும்போது அம்மாவிடம் கேட்கிறார் 'ஏம்மா,மக்கள் இதை ஏத்துக்கொள்வாங்களா?" அப்பிடின்னு.ஏன் இல்லை!! எந்த கெட் அப்'பாக இருந்தாலும் சசிக்குமாரின் பலமான கதையும் அவர் நடிப்பும் இருந்தால் நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் தான்!கிராமத்து கதைகளும்,கிராமத்து 'கெட் அப்'புகளும்,கிராமத்து குத்தும், தாடி, மீசை,அரிவா,சாதி போன்றவற்றை விட்டு சசிக்குமார் வெளியில் வரவேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.இனியாவது சுதாகரித்துக்கொண்டால் ஒரு நல்ல நடிகன்-இயக்குனரை தமிழ் சினிமா இழக்கவேண்டி ஏற்படாது.

குட்டிப்புலி-சசிக்குமார் ரசிகர்கள் வேண்டுமானால் பார்க்கலாம்.அதைவிட பெஸ்ட் ஆப்சன்,சசிக்குமாரின் பழைய நான்கு பட டிவிடிகளை வாங்கி பார்ப்பது..!என்னோட மார்க் 55/100.

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...