Monday, September 5, 2011

எனது நண்பியும் பிடல் காஸ்ட்ரோவும்!!




பொது அறிவு என்பது அஞ்சு ரூபாய்க்கு கடையில கிடைக்கிற ஐட்டம் கிடையாது..பொது அறிவை வளர்க்க நாமெல்லாம் ஒரு நாளைக்கு பத்து பதினைஞ்சு நியூஸ் பாக்கிறம்,பத்திரிகைகள் வாசிக்கிறம்,முக்கியமா நண்பர்களின் ப்ளாக்'குகள் வாசிக்கிறம்..அப்பிடி இருந்தும் இன்னமும் பல ஏரியா'க்களில நாம வீக்கு தான்..
இப்போ நான் உங்களோட பகிர்ந்துக்க போறது ஒரு உண்மையான சம்பவம்.

நான் வேலை பாக்கிற கம்பெனியில மதிய உணவு சாப்பிட கொஞ்ச பசங்க பொண்ணுங்க சகிதமா லஞ்ச் ரூம் போனாங்க..அந்த பசங்களில நானும் ஒருத்தன்.
கல கலன்னு சாப்பிட்டு முடிச்சு வெறுமனே வெட்டிப்பேச்சு பேசுவமே லஞ்ச் டயிம்'ல..அப்பிடி ஒரு நேரம்.அப்போ எங்க கூட வேலை பண்ணுற பொண்ணு ஒன்னு டூத் ஸ்டிக்'னு சொல்லுவாங்களே பற்களுக்கிடையே உணவு சிக்கிக்கிட்டா எடுக்க பயன்படுத்துவமே,அத வைச்சு வாயில லாவகமா சுழட்டிக்கிட்டிருந்திச்சு.சும்மா இருக்கமுடியாம நான் கேட்டேன் 'என்ன சிகரட் ஊதி நல்ல பழக்கம் போல'எண்டு.
அவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் தெரியாதேன்னு.



பிடல் காஸ்ட்ரோ'வை தெரியுமா அவர் தான் சுருட்டோட பேமஸ் எண்டன்.என்னது பிடல் காஸ்ட்ரோவா அவர் யார்னு அப்பாவியா கேட்டாள் அந்த நண்பி.இவள் சும்மா நடிக்கிறாள் இந்த பிடல் காஸ்ட்ரோவ தெரியாம யாராச்சும் இருப்பாங்களான்னு நெனைச்சுகிட்டே மீண்டும் ஒருக்கால் கேட்டேன் உண்மையாவே தெரியாதான்னு.ம்ம்ஹும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..அவளோட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க...அவங்ககிட்டே கேட்டேன் உங்களுக்கு தெரியுமான்னு..
கொடுமை..அவங்களுக்கும் தெரியாதாம்...என்கூட வந்த ரெண்டு பசங்களுக்கும் தெரிந்திருந்தது.

யார் யார்ன்னு நச்சரிக்க,அவர் தான் கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி கிட்டத்தட்ட அம்பது வருடங்கள் ஆட்சியிலிருந்தவர்னு சொன்னேன்..அப்புறமா எனக்கொரு டவுட்டு வந்திரிச்சு..கேட்டிடுவமோ?சரி பரவால கேட்டிடுவம்னு கேட்டேவிட்டேன்."கியூபான்னு ஒரு நாடு இருக்குன்னு தெரியுமா??"
நான் தற்கொலை செய்யாத குறை..அந்த மூணு பொண்ணுங்களுக்கு அது கூட தெரியவில்லை!!இவன் பொய் சொல்றான் எண்டு தானே நீங்க நினைப்பீங்க??அப்பிடித்தான் நானும் நினைச்சேன்.சும்மா பொய் சொல்றாங்கள்னு.அதுக்குள்ளே ஒரு நண்பி சொன்னாள்,எது அந்த பிலிப்பைன்ஸ் பக்கம் எக்கச்சக்க தீவுகள் இருக்கே அங்க தானே இருக்கு அப்பிடின்னு.

அதுக்கு மேல பேசி வேலை இல்லைன்னு கைய கழுவிட்டு கிளம்பிட்டன்..எனக்கு கடைசி மட்டும் நம்பவே முடியல இப்பிடியும் இந்தக்காலத்தில இருக்காங்களான்னு.அல்லது பொண்ணுங்க தான் பெரும்பாலும் பொது அறிவுன்னு வந்திட்டா வீக்கா இருக்காங்களோன்னும் எனக்கு டவுட்டு.பெரும்பாலான பொண்ணுங்க இப்பிடித்தான் இருக்காங்க.முன்னேறுங்க மக்களே..உலகம் எங்கேயோ வேகமாக போயிக்கிட்டிருக்கு.நீங்க இன்னும் அப்பிடியே இருங்க!!

சேகுவேரா யார்னு கேப்பம்னு தான் பாத்தேன்...இன்னொரு பதிவு எழுத வைச்சிடுவாங்கள்னு தெரிஞ்சு போச்சு ஆணி பிடுங்க கெளம்பிட்டேன்!!
அந்த படம் கூகிள் சேர்ச் மூலம் பெறப்பட்டது.

Post Comment

43 comments:

சென்னை பித்தன் said...

அதுனாலதான் அவங்க வீக்கர் செக்ஸ்னு சொல்றாங்களோ!

Unknown said...

இன்ட்லி இணைக்கப்பட்டுள்ளது.கிளிக்கினால் வரும் பாருங்கள்

K said...

வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நலமா இருக்கீங்களா?

K said...

என்ன சார், இதுகூடவா தெரியாம அந்தப் பொண்ணு இருந்திச்சு? ரொம்ப ஆச்சரியமா இருக்கே!

ஆகுலன் said...

என்ன கொடுமை இது..........

Unknown said...

//ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...
வணக்கம் சார்! கும்புடுறேனுங்க!நலமா இருக்கீங்களா?///
இருக்கோம் மொக்கையரசரே!!நீங்க??

kobiraj said...

neenka arivin sikaram boss . suruddu super

Anonymous said...

ஹிஹி இப்புடி தான் ஒருமுறை ஒரு பட்டதாரி ஆசிரியர் (பலவருசதுக்கு முன்னாடி அவ புலம்பெயர்ந்துவிட்டா ) இங்க என்னை பிடிச்சு கேட்டா "தம்பி நாசா விண்வெளி நிலையம் எண்டா என்ன" எண்டு ......நாசமா போச்சு..)))

செங்கோவி said...

என்னய்யா இது..இப்படியுமா இருக்காங்க..நல்லது.

Tharini said...
This comment has been removed by a blog administrator.
Prem S said...

கியூபா தெரியாத பொண்ணுகளா காலம் தான் அன்பரே

maruthamooran said...

ஹஹஹஹஹ:-)

shanmugavel said...

நல்ல உலக அறிவு.ஹாஹாஹா

தனிமரம் said...

பொண்ணுங்கள் உங்களைக் கடாச்சிருக்கும் ஏன் ரெளத்திரம் பாடலைப் போட்டு கேட்டிருக்கலாமே மாப்பூ!
ஒரு வேளை பெண்கள் தேவையான உலகறிவு என்பது யாருக்கு எத்தனை கள்ளக்காதலன் ,சீரியலில் யார் ஓவராக கிளிசரின் போடுவது என்று ஜோசிப்பாங்களோ! குலப்பி விடுவம் இல்ல!

M.R said...

உண்மை தான் நண்பரே சில சமயங்களில் எல்லோருக்கும் எல்லாம் தெரிந்திருப்பதில்லை.

தமிழ் மணம் எட்டு

காட்டான் said...

பொது அறிவா..? அப்பிடின்னா என்ன மாப்பிள...? ஹி ஹி இத போய் பொண்ணுங்ககிட்ட கேட்டிருக்கீங்க அவங்களுக்கு எவ்வளவு சோலி இருக்கும்.. யோசிச்சு பார் மாப்பிள..

மாய உலகம் said...

நம்ம டீக்கடை முனியாண்டிய தெரியுமா?அவ்வ்வ்வ்வ்வ்வ்

சுதா SJ said...

அப்படி இருந்தாதான் அது பொண்ணுங்க பாஸ், ஹீ ஹீ ஜோக் பா ( அப்புறம் யாரு அடி வாங்குறதாம்)

சுதா SJ said...

ஆனா ஒண்ணு பாஸ்,
நீங்க பார்த்த பொண்ணு மாதிரித்தான் நிறைய பொண்ணுங்க இருக்காங்க,
அல்லது மக்கு மாதிரி தங்களை காட்டிக்குறான்களோ தெரியவில்லை.
எது எப்படியோ
புத்திசாலி பொண்ணுங்களை விட
மக்கு பொண்ணுங்களை அதிகமான ஆண்களுக்கு புடிக்குது என்பதுதான் உண்மை.

KANA VARO said...

பொண்ணுங்களோட லூட்டி அடிச்சிட்டு இங்க வந்து பதிவா போடுறா ராஸ்கல்! பிச்சு புடுவன் பிச்சு...

Anonymous said...

CUBA..Fidel..தெரியாத ஒருவர் உங்களுக்கு வாழ்க்கை துணைவியாக கடவதாக..


To their defence...
எல்லாருக்கும் எல்லாம் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை நண்பரே...-:)

பின் குறிப்பு: அந்த பெண்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை சிவா...

K.s.s.Rajh said...

யோவ் பாஸ் இதே பிடல் கஸ்ரோவை வச்சு கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு சம்பவம் எனக்கும்(சும்மா கமண்ட்க்காக சொல்லவில்லை உண்மையாவே நடந்துச்சி) உயர்தரம் படிக்கும் போது நடந்துச்சு...எனக்கு பிடித்த மனிதர்களின் பட்டியலை வகைப்படுத்தினால் அதில் பிடல் கஸ்ரோவின் பெயர் 2 வதாக இருக்கும்(அப்ப முதலாவது யார் என்று கேட்கப்படாது அதை சொன்னால் எனக்கு ஆப்பாகிடும் நீங்களே புரிஞ்சுக்கோங்க)

வகுப்பில் சமயம் கிடைக்கும் போதல்லாம் பிடஸ்கஸ்ரோவைப்பத்தி நம்ம நண்பர்களுடம் கதைச்சு கொண்டு இருப்பேன்.அப்ப நம்ம வகுப்பில் படிச்ச பொண்ணு ஒன்று கேட்டுச்சி ஏன் ராஜ் பிடல் கஸ்ரோ புகழ் பெற்ற சுருட்டுக்கம்பனி ஓனரா என்று.இது எப்படி.இதனால் சகலருக்கும் சொல்லவது என்னான்னா.பொது அறிவு விடயத்தில் பொண்ணுங்களுக்கு பசங்களை விட கொஞ்சம் நொலேஜ் கம்மிதான்.

அப்பறம் பதிவில் போட்டு இருக்கும் பிகர் படம் சூப்பர்.

கூடல் பாலா said...

பொண்ணுங்ககிட்ட கடலை போட கிடைச்ச அருமையான வாய்ப்ப அநியாயாமா மிஸ் பண்றீங்களே பாவிகளா ...

கவி அழகன் said...

யாற்ற கைய கலுவிநிங்க எண்டு சொல்லலையே கடசில

அம்பலத்தார் said...

பெண்களில் மட்டுமில்லை இவர்களைபோல ஆண்களிலும் எத்தனையோபேர் இருக்காங்க. பாவம் விட்டிடுங்க

Yoga.s.FR said...

சேகுவேரா யாரென்று கேட்டிருந்தால்,ரோகண விஜயவீர தானே என்று சொல்லியிருப்பார்!(அந்தக் காலத்தில் அந்தப் பெண் பிறந்திருப்பாரோ என்னமோ?)

Yoga.s.FR said...

செங்கோவி said...

என்னய்யா இது..இப்படியுமா இருக்காங்க..நல்லது!///என்ன நல்லது,சுருட்டு பிடிக்கிறதா?

Yoga.s.FR said...

காட்டான் said...

பொது அறிவா..? அப்பிடின்னா என்ன மாப்பிள...? ஹி ஹி இத போய் பொண்ணுங்ககிட்ட கேட்டிருக்கீங்க அவங்களுக்கு எவ்வளவு சோலி இருக்கும்.. யோசிச்சு பார் மாப்பிள..////தங்கமணி கிட்ட போட்டுக் குடுத்துடுவேன்,ஜாக்கிரதை!

Yoga.s.FR said...

KANA VARO said...

பொண்ணுங்களோட லூட்டி அடிச்சிட்டு இங்க வந்து பதிவா போடுறா ராஸ்கல்! பிச்சு புடுவன் பிச்சு...//CORRECT!!!!!

Unknown said...

"திரும்ப திரும்ப கேக்கற நீ"....இப்படி சொல்லலையா மாப்ள...ஹிஹி!

சி.பி.செந்தில்குமார் said...

ஜஸ்ட் மிஸ்ஸா?

Unknown said...

முக்கியமான விஷயத்த சொல்லலயே...அதுங்க எல்லாம் சிங்களப் பொண்ணுங்கதானே பாஸ்?

பாலா said...

எதுக்கு வம்பு?

கப் சிப்..

நிரூபன் said...

அப்புறமா எனக்கொரு டவுட்டு வந்திரிச்சு..கேட்டிடுவமோ//

உனக்கு எப்ப பார்த்தாலும் இப்படி ஓர் டவுட்டு வருமே மச்சி...

அவ்.........

நிரூபன் said...

அவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் தெரியாதேன்னு.//

ஏன் மச்சி,
வேண்ணா அவளுக்கு என்னோட பெயரைச் சொல்லிக் கொடுத்திருக்கலாமே...

நிரூபன் said...

அவள் சொன்னாள் சிகரட் இல்ல சுருட்டு தான் எப்பவுமே எண்டு நக்கலா.நாம அறிவு ஜீவிகள் தானே அவள்கிட்ட சுருட்டு வைச்சு புகைக்கிற ஒரு பெரிய ஆள் ஒருத்தர் சொல்லு பாப்பம்னு கேட்டேன்..முழிக்கிறாள் முழிச்சிட்டு சொன்னாள் //

நல்ல நண்பிகளைத் தான் உங்க கூட்டாளிங்களா வைச்சிருக்கிறீங்க.

நிரூபன் said...

மூனு பேரையும் என் கிட்ட அனுப்பு மச்சி,
நான் பொது அறிவு சொல்லிக் கொடுக்கிறேன்.

sarujan said...

(மூனு பேரையும் என் கிட்ட அனுப்பு மச்சி,
நான் பொது அறிவு சொல்லிக் கொடுக்கிறேன்.)நிரூபன் ம்ம்ம் நடக்கட்டும் நடக்கட்டும்

அம்பாளடியாள் said...

பிடல் காஸ்ட்ரோ'வை தெரியுமா அவர் தான் சுருட்டோட பேமஸ் எண்டன்.என்னது பிடல் காஸ்ட்ரோவா அவர் யார்னு அப்பாவியா கேட்டாள் அந்த நண்பி.இவள் சும்மா நடிக்கிறாள் இந்த பிடல் காஸ்ட்ரோவ தெரியாம யாராச்சும் இருப்பாங்களான்னு நெனைச்சுகிட்டே மீண்டும் ஒருக்கால் கேட்டேன் உண்மையாவே தெரியாதான்னு.ம்ம்ஹும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை..அவளோட இன்னும் ரெண்டு பொண்ணுங்க வந்திருந்தாங்க...அவங்ககிட்டே கேட்டேன் உங்களுக்கு தெரியுமான்னு..
கொடுமை..அவங்களுக்கும் தெரியாதாம்...என்கூட வந்த ரெண்டு பசங்களுக்கும் தெரிந்திருந்தது.

அப்பாடா தபிச்சண்டா சாமி நல்லவேளை அண்ணிக்கு நான்மட்டும் அந்த இடத்துக்கு வரயில்ல.
சத்தியமா எனக்கும் இப்பதான் இவரைத் தெரியும்.ஹி...ஹி ...ஹி ....
மிக்க நன்றி சகோ .அருமையான விசயத்தை முன்வைத்தீர்கள் .பொது அறிவு என்பது கட்டாயம்
நாம் தேடி அடையவேண்டிய ஒன்று .நன்றி பகிர்வுக்கு .உங்களுக்காக ஒரு பாட்டுக் காத்திருக்கின்றது
என் தளத்தில். வாருங்கள் மறக்காமல் உங்கள் ஓட்டுகளைப் போட்டுவிடுங்கள் சகோ.

ம.தி.சுதா said...

/////நான் தற்கொலை செய்யாத குறை..அந்த மூணு பொண்ணுங்களுக்கு அது கூட தெரியவில்லை!////

யோவ் உம்மட முழு பதிவும் வாசிச்சா அவங்க தற்கொலை பண்ணுவாங்கப்பா.. ஹ..ஹ..

எஸ் சக்திவேல் said...

"சள்" அடிக்க இதெல்லாம் முக்கியமே? ஒரு "" கிடைச்சுது எண்டு விட்ட இடத்தில் இருந்து தொடரவேண்டியதுதானே :-)?
(சள் அடிப்பது = கடலை போடுவது)

எஸ் சக்திவேல் said...

"சள்" அடிக்க இதெல்லாம் முக்கியமே? ஒரு "topic" கிடைச்சுது எண்டு விட்ட இடத்தில் இருந்து தொடரவேண்டியதுதானே :-)?
(சள் அடிப்பது = கடலை போடுவது)

தமிழ்விருது said...

வணக்கம் மைந்தன் சிவா எங்கள் தளத்தின் முதலாவது விருது வழங்கும் வைபோகத்தில் உங்களின் பதிவான
அஜித் விஜய் படத்தில் ஹன்சிகா என்ற பதிவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது
http://tamilviruthu.blogspot.com/2011/09/by.html
வாழ்த்துக்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...