Monday, August 30, 2010

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை!!



திரைப்படம்:வேட்டைக்காரன்
பாடலாசிரியர்:கபிலன்
இசை:விஜய் அந்தோனி
பாடியவர்கள்:சுசித்திரா,சங்கீதா ராஜேஸ்வரன்

நம்ம அனைவரையும் "கவர்ந்த" இளைய தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் திரைப்படத்தில் கபிலன் அவர்கள் மிக அருமையாக உவமானம்,உவமேயம் போன்றவற்றை கையாண்டு இந்த பாடலை எழுதி இருப்பார்.இன்றைய காலத்தில் வெளிவரும் பாடல்களில் உவமான,உவமேயங்களை பூதக்கண்ணாடி வைத்து தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் இந்தப்பாடல் ஒரு சிறப்பு வாய்ந்த இடத்தை பெறுகிறது என்பது வெட்ட வெளிச்சம்!
என்ன அனுஷ்காவின் இடையை பார்த்து சுருக்குப்பை என்று பாடி விட்டாரே கபிலன் என்று தான் சற்றுக் கோபம் எனக்கு!!

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பாதை வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்

ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கண்ணம்
கண்ணம் இல்ல கண்ணம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்

மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்

மாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை
சோலை இல்ல சோலை இல்ல ஜல்லிக்கட்டு காளை

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

கண்ட உடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜீன்னு

பத்த வெச்ச மத்தாப்பு போல மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைர கல்லு

சுறுக்கு பைய போல இருக்கு இடுப்பு
இடுப்புல இடுப்பு இல்ல எந்திர மடிப்பு

கண்ணு பட போகுதுன்னு கண்ணத்துல மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்

கரிகாலன் கால போல கறுத்திருக்குது குழலு
குழல் இல்ல குழல் இல்ல தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டை போல செவந்திருக்குது உதடு
உதடு இல்ல உதடு இல்ல மந்திருச்ச தகடு

ஏய் பருத்தி பூவ போல பதியுது உன் பாதம்
பாதம் இல்ல பாதம் இல்ல பச்சரிசி சாதம்

ஏய் வலம்புரி சங்க போல வழுக்குது உன் கழுத்து
கழுத்து இல்ல கழுத்து இல்ல கண்ணதாசன் எழுத்து

எங்கடா பாடலின் ஆரம்பத்தில வாற ஆங்கில வரிகளை காணேல எண்டு தானே தேடுறீங்க ...சும்மா ஒரு கிக்' இருக்கட்டுமே எண்டு இங்க கொண்டு வந்து போட்டன்..உங்களுக்கு இந்த கிக் எல்லாம் எம்மாத்திரம்!விஜய் எண்டு ஒரு சொல் போட்டாலே அதுவே பெரிய கிக்கு தானே சகோதரங்களே!!

Hey come on and get me with your loving machan
Undress me and then caress me aththan
And I’m feeling the sikkal and show me your love
Nananana......



பிடிச்சா ஓட்டு போடுங்க..சுறா,வேட்டைக்காரன் மீதான கோபத்தை இதிலே காட்டாதீங்க நண்பர்களே!!
ஆமா சொல்லிப்புட்டன்!ஏனென்டா ரொம்ப பாவம் வலிக்கும்...!!யாருக்கோ!!!


Post Comment

Sunday, August 29, 2010

யாதும் ஊரே யாவரும் கேளிர்!!

என்ன பண்ண நண்பர்களே..
சிறிய விடுமுறை ஆகிவிட்டது
எனக்கு பதிவிடுவதில் இருந்து.
காரணம் எனது சொந்த செலவில்
சூனியம் வைத்த எனது கணணி
(சொன்னாலும் நம்ப முடியவில்லை அது கணணி தானா என்று!)
கடந்த ஒரு வாரமாக
நான் விட்டது என்னமோ
பெரு மூச்சு தான்!
விட்டதுகள் எனைத்தையும் விரைவில்
பதிவிட முனைகிறேன்.
நன்றிகள்!!

டிஸ்கி:ஒரு வாரமாக காணவில்லை என்று விருந்துண்டு கொண்டாடிய அனைவருக்கும்
விரைவில் மரண தண்டனை அறிவிக்கக்கோரி நேற்று தான் நீதிமன்றில் மனுத்தாக்கல்
செய்துள்ளேன்..!!
சனாதிபதி அதனை பரிசீலிப்பதாக கூறியுள்ளார்!



Post Comment

Wednesday, August 18, 2010

வைரமுத்து-தெரிந்தவை தெரியாதவை!


பெயர்:கவிப்பேரரசு வைரமுத்து

பிறந்த இடம்:வடுகப்பட்டி கிராமம்,தேனீ மாவட்டம் தமிழ்நாடு,இந்தியா.

பிறந்த தேதி:ஜூலை 13 ,1953 .

தகப்பனார்:ராமஸ்வாமி தேவர்.

தாயார்:திருமதி அங்கம்மாள்

மனைவி:பொன்மணி

மகன்:கார்க்கி ,கபிலன்

எழுத ஆரம்பித்தது:7'வது வயதில்

  • 12 வயதில் பாடல்கள் எழுத முடிந்தது
  • 14 வயதில் யாப்பு வடிவிலான வெண்பா கவிதை எழுத முடிந்தது.
  • பாடசாலை இறுதி ஆண்டு பரீட்சையில் மதுரை மாவட்டத்திலேயே முதலாவதாக தேர்வு பெற்றார்.
  • உயர் கல்வியை சென்னை பச்சையப்பா கல்லூரியில் மேற்கொண்டார்.
  • பத்தொன்பதாவது வயதில் முதல் கவிதை தொகுப்பான "வைகரை மேகங்கள் "வெளியிட்டார்.
  • உயர் கல்வி: M.A. தமிழ் இலக்கியம்(தங்கப்பதக்கம்)
  • திரைப்பட அறிமுகம்:பாரதிராஜாவின் "நிழல்கள்"திரைப்படத்தில் "பொன்மாலைப்பொழுது"என்ற பாடல்.
  • முதல் வசனமெழுதிய படம்-நட்பு.

பெற்ற விருதுகளில் சில :

  1. தமிழ் நாடு அரசின் மாநில விருது-1981
  2. தேசிய விருது-1986 (முதல் மரியாதை )
  3. M.G ராமச்சந்திரன் விருது-1989
  4. கலைமாமணி விருது-1990
  5. தேசிய விருது-1993 (ரோஜா)
  6. தேசிய விருது-1995 (கருத்தம்மா)
  7. தேசிய விருது-1995 (பவித்திரா)
  8. தேசிய விருது-2000 (சங்கமம்)
  9. தேசிய விருது-2003 (கன்னத்தில் முத்தமிட்டால்)
  10. பத்மஸ்ரீ விருது -2003.
  11. சாகித்திய அக்கடமி விருது-2003 (கள்ளிக்காட்டு இதிகாசம்)
வைரமுத்துவின் முதலாவது திரைப்பட பாடலாகிய பொன் மாலை பொழுது பாடல் உங்களுக்காக.முதல் பாடலே மிகப்பெரிய வெற்றி பெற்ற பாடலாகும்.அன்று தொடங்கிய வைரமுத்துவின் பயணம் இன்னும் ஓயாமல் இந்திரன் வரை ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது :



பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள் மற்றவர்களையும் பதிவு சென்றடைவதற்காக..

Post Comment

Tuesday, August 17, 2010

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ?


பாடல்களுக்காக நான் படம் பார்த்த காலமுண்டு..அதுவும் முக்கியமாக இசைப்புயலின் பாடல்களுக்காக..அந்த வரிசையில் எனக்கு பிடித்த ஒரு படம் தான் தாளம்.தமிழிலும்,ஹிந்தியிலும் வெளியான இத் இத்திரைப்படம் ரஹ்மானுக்கு பெரும் புகழை ஈட்டி தந்தது என்றால் மிகையாகாது.ரஹ்மானின் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகளில் தாளம் திரைப்பட பாடல்கள் அடிக்கடி பாடப்படுவதை அவதானித்திருக்கலாம்..தமிழில் அத்தனை பாடல்களும் வைரமுத்துவின் கவித்துவ வரிகளாலும் ரஹ்மானின் மனம் வருடும் இசையாலும் என்னை மிகவும் கவர்ந்தன.உங்களையும் கவர்ந்திருக்கும் என நினைக்கின்றேன் ..

பாடலாசிரியர்:கவிப்பேரரசு வைரமுத்து

பாடியவர்கள்:SP பாலசுப்ரமணியம்,ஷோபா

இசை:இசைப்புயல் A .R .ரஹ்மான்

வெளியாகிய தேதி:30-Aug-1999

எங்கே என் புன்னகை
எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய்
என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

[எங்கே என் புன்னகை ...]

மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
மழை நீரில் மேகமோ
தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில்
வெட்கம் ஏன் கரைந்தது
என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முகிலாயில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ
ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ
கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ
தாளத்தில் நீ சேரவா ஓ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை)

எங்கே என் புன்னகை பாடலுடன் உங்களை இணைத்து உங்கள் ஞாபகங்களை மீட்டுங்கள்!.



பதிவு பிடித்திருந்தால் உங்கள் பின்னூட்டல்களும் ஓட்டுகளும் விழட்டுமே!


Post Comment

Monday, August 16, 2010

வாங்க பீர் குடிக்கலாம்!



முதல்ல என்ன நம்பி வந்த "குடி"மக்களிடம் மன்னிப்பு கேக்குறேனுங்கோ!இது உங்களுக்கான பதிவு இல்ல!உங்க அடுத்த சந்ததியினரின் ஆரம்ப பாடசாலை ஆங்கில வகுப்பில் படிப்பிக்கப்படவுள்ள ஒரு பாடல் உங்களுக்காக முன்கூட்டியே தருகிறேன்.நீங்கள் இப்போதே படித்து வைத்துக்கொண்டால் உங்கள் பிள்ளைகளுக்கு இலகுவாக படிப்பிக்க முடியுமல்லவா!!(என்ன ஒரு பொது நோக்கு என்று கேட்பது புரிகிறது)..
அதன் சுவை மாறாமலிருக்க ஆங்கிலத்திலேயே தருகிறேன் உங்கள் அனைவருக்கும் புரியும் என்ற எண்ணத்தோடு!(ஆமா நீ மட்டும் தான் இங்கிலீசு'ல MA முடிச்சனி!மற்றவங்களெல்லாம் மங்குனி மக்கள் தானே)

Drinking drinking

Little Beer

How I wonder

What a Bar!

Quater Rates are

Up so High

Drink a peg

With chicken Fry!!



ஒருத்தன காலங்காத்தால
தட்டி எழுப்பலாம்
மிஸ்டு கால் போட்டு எழுப்பலாம்
கதவ தட்டி எழுப்பலாம்
தண்ணி ஊத்தியாதல் எழுப்பலாம்
ஆனா எனக்கு
காலங்காத்தால ஒருத்தன்
இந்த" Drinking டிரிங்கிங் Little பீர்"
மெசேஜ் போட்டு எழுப்புரானுங்க...எங்க விடியப்போகுது!!


டிஸ்கி :
இந்த பதிவு பிடித்து போய் பின்னூட்டம் போடுறவங்களுக்கு ஒரு quater 'உம்,ஒட்டு போடுறவங்களுக்கு ஒரு புல்'லும் கிடைப்பது உறுதி!!(கடைசில அரசியல்வாதி ஆக்கிடீங்களே!இண்டைக்கு விடிய தான் பேப்பர்'ல படிச்சன் அம்மா சொல்லி இருக்காங்க இந்த தடவையும் 1000 ரூபாக்கு ஓட்டுகளை விக்காதீங்க எண்டு!!

Post Comment

Friday, August 13, 2010

தபு ஷங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ??



தபு ஷங்கரை இளையோர் மத்தியில் பிரபலமாக்கியது அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற கவிதை தொகுப்பாகும்..அதிலே உள்ள அத்தனை கவிதைகளும் இளசுகள் உள்ளத்தை வருடுவன!அந்த வகையில் என்னுள்ளத்தை வருடிய சில கவிதைகளை உங்களுக்காக காட்ச்சிப்படுத்துகிறேன் அந்த கவிதை தொகுப்பிலிருந்து!

முதலாவது கவிதையை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள்..

அழகான பொருட்ட்கள் எல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துகின்ற எல்லாமே
அழகாக தான் இருக்கின்றன!

நான் எது கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்?

உன்னை இருட்டில் நிற்க வைத்து
என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள
வேண்டும்.வெளிச்சம் என்பது
உன்னிடமிருந்து தான் வீசிக்கொண்டிருக்கிறதா
ஆனால் உன்னை அருகில் வைத்துக்கொண்டு நான்
இருட்டை எங்கு தேடுவேன்!

உன் கண்களின் பார்வையிலிருந்து
விரல்களின் அசைவிலிருந்து..கொலுசின்
ஓசையிலிருந்து தான் நான் காதலை கற்றுக்
கொண்டேன் ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலை எல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்!

இந்த பரந்த புல் வெளியில்
நடக்க விட்டு வேடிக்கை பார்க்கலாம்
பூக்களிடையே நிற்க வைத்து அழகு பார்க்கலாம்
வேறு என்ன செய்ய முடியும்
உன்னை!

தபு ஷங்கரின் கவிதைகள் டவுன்லோடு செய்து முழுமையாக பார்க்கவேண்டுமெனில் கீழே தரப்பட்ட லிங்கில் கிளிக்குங்கள்!
TABU SANKAR's VETKATHAI KETAL ENNA THARUVAI - Tamil Kavithaigal

தபு ஷங்கரின் கவிதைகள் காணொளி உங்களுக்காக..




பின்னூட்டல்கள் மற்றும் உங்கள் ஓட்டுகளை எதிர்பார்த்து..

Post Comment

ஐயோ இது ஐம்பதாவது பதிவல்ல!!

thank you Pictures, Images and Photos

ஐம்பதாவது பதிவல்ல இது
ஐம்பது நெஞ்சங்களின் இணைவு!
இப்பூங்கொத்தில் ஒவ்வொரு மலரும்
என் கிறுக்கலுக்கு
மதிப்பளித்த
உள்ளங்களின் இணைவு!
எந்தன் புனைவுகளுக்கு
உங்கள் இணைவுகள் தான்
அங்கீகாரங்கள்..
நீற்று பட்டைக்கு
பொட்டு வைத்த உன்னத
விரல்கள் நீங்கள்!

எலெக்ஷன்'னுக்கு கூட
ஒட்டு போடாமல்
எந்தன் பதிவுகளுக்கு ஒட்டு போட்ட
ஜனநாயக செம்மல்கள்!
(சத்தியமா உண்மை இல்லைங்க..ஒரு கிக்'ஆ இருக்கட்டுமேன்னு தாங்க!)
நான் உண்ணாமல் இருப்பேன்
என அறிந்து மறக்காமல்
பின்னூட்டல் தந்த வள்ளல்கள் நீங்கள்!!
(நாளுக்கு 5 வேளை உண்பது
நம்ம பப்ளிக்'கு தெரியாதே!)
thankyou Pictures, Images and Photos
எப்போதும் உங்கள் உறவு
கேட்டிடும் எந்தன் மனது
நீங்காமல் எந்தன் ப்ளாக் இல்
தினசரி நீ வந்து தான் உலாவு!

ஐம்பது பொலோவர் தானே
பார்ட்டி ஒன்னு போடு நீயே
அப்பிடீன்னு கேட்டு நீங்கள்
ஏமாந்திட வேண்டாம் தானே!!

டிஸ்கி:இன்றிலிருந்து ஒரு வாரத்துக்கு என் தொலை(தொல்லை)பேசி இயக்கத்திலிருக்காது என்பதை மிகவும் மன வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே!!!

என்ன செய்யுற,பயபுள்ள சிக்குறான் இல்லையே,சிக்கட்டும் எப்படியும் ஒரு நாள் மாட்டுவான் தானே என்ன சொல்றீங்க!!!
வாற கோபத்தை எல்லாம் இன்ட்லிலையும் தமிழ்மணத்திலும் குத்தி தீர்த்துக்கொள்ளுங்கள்!

Post Comment

Thursday, August 12, 2010

எந்திரன் எப்ப ரிலீசாம்னே ??


பரீட்சைக்கு கூட
இவ்வளவு ஜோசித்ததில்லை
ரூம் போட்டு
ஜோசிக்கிறேன்
வலையுலகில் பதிவெழுத!!


தோல்வியடைந்தவன்
தோல்வியை
நியாயப்படுத்திக்கொள்ளும்
தாரக மந்திரம்..
விதி!


நீயின்றி நானுமில்லை
நீயன்றேல் நாளும் இல்லை
நீயல்லவோ என்
உற்ற தோழன்
கைத்தொலைபேசி!


வெள்ளப்பெருக்கு...
கவலையில்லை
எண்ணைக்கசிவு...
கவலையே இல்லை!
அன்டேர்சன் கைது??
Who cares??
எந்திரன் எப்ப ரிலீசாம்னே ??

ஒட்டு போடாம இவங்கட காலுக்க சிக்கி சின்னாபின்னமாகாம மரியாதையா ஒட்டு போட்டிடுங்க ஆமா சொல்லிப்புட்டன்!!

Post Comment

Wednesday, August 11, 2010

மெல்லினமே மெல்லினமே!

இந்தப்பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது..அந்தளவுக்கு மென்மையான இசையும் கவித்துவமான வரிகளுமாய் ஷாஜகான் திரைப்படத்தில் அமைந்தது இந்தப்பாடல்.ஹரிஷ் ராகவேந்திராவின் குரலில் மணி ஷர்மாவின் இசையில் மக்கள் மனங்களை வருடிச்சென்ற மெல்லினமே மெல்லினமே பாடல் மீண்டும் உங்கள் ஞாபகங்களை மீட்டிப்பார்ப்பதற்காக..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...
நான் தூரத் தெரியும் வானம்
நீ துப்பட்டாவில் இழுத்தாய்
என் இருபத்தைந்து வயசை
ஒரு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..

மெல்லினமே மெல்லினமே நெஞ்சில்
மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

வீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை
ஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி
எந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்
நீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி
மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
கனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.
எந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.
ஹோ..ஹோ...

மெல்லினமே மெல்லினமே
நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
அதை வானம் அண்ணந்து பார்க்கும்...

மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி
உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..
வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்
பூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...
பகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை
காதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..
(மெல்லினமே மெல்லினமே)

மீண்டும் ஒரு முறை பாருங்கள்..நிச்சயம் உங்களை மறப்பது உறுதி!!


நெஞ்சங்களே நெஞ்சங்களே
கொஞ்சம் ஓட்டினை போட்டு செல்லுங்கள்
உங்கள் எண்ணங்களை ஒரு பின்னூட்டலாய்
அங்கங்கே விட்டு செல்லுங்கள்..!

Post Comment

Tuesday, August 10, 2010

புலிக்கு பிறந்தது பூனையாகுமா?இல்லை புலியாகுமா??


ஆஸ்திரேலியாவில் படித்து பட்டம் பெற்று தற்பொழுது இந்தியா அண்ணா பல்கலைக்கழகத்தின் கணணித்துறையில் இணைப்பேராசிரியராக பணியாற்றும் வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி வெளிவர இருக்கும் ரஜனியின் எந்திரன் திரைப்படத்தில் தனது அறிமுகத்தை பாடலாசிரியராகவும்,வசனம்,காட்சி அமைப்புகள் போன்றவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.

தான் பாடலாசிரியரானதட்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர் தான் என்று கூறிய கார்க்கி தன் பாடல் எழுதும் ஆசையை ஷங்கரிடம் தெரிவித்து எந்திரன் பாடல் situation'க்கு ஏற்ப சில வரிகளை எழுதிக்காட்ட,அது ஷங்கருக்கு பிடித்துப்போய் ரஹ்மானின் மெட்டை கையில் கொடுத்து பாடலை நீங்களே எழுதுங்கள் என்று கொடுத்துவிட்டாராம் ஷங்கர்.அவ்வாறு எழுதப்பட்ட பாடல் தான்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ

மெமரியில் குமரியை
தனிச் சிறை பிடித்தேன்
shutdown-ஏ செய்யாமல்
இரவினில் துடித்தேன்
என்ற ரஹ்மான் பாடிய பாடலாகும்.

இந்த பாடலை பார்த்த ஷங்கர் இன்னொரு ராப் பாடலை எழுதி தருமாறு கார்கியிடம் கேட்டாராம்.அவ்வாறு ரஜனியின் புகழ் பாடும் பாடலாக எழுதப்பெற்றதே
’பூம் பூம் ரோபோடா...’ பாடலாகும்.

அதிலே
சிட்டிச் சிட்டி ரோபோ
சுட்டிச் சுட்டி ரோபோ
பட்டித் தொட்டியெல்லாம்
நீ பட்டுக்குட்டியோ!

ஆட்டோ ஆட்டோ காரா
ஆட்டோமேட்டிக் காரா
கூட்டம் கூட்டம் பாரு
உன் ஆட்டோகிராஃபுக்கு!

என்று சூப்பர் ஸ்டார் பற்றி அருமையாக எழுதி இருக்கிறார் கார்க்கி..

கார்கியின் முதல் வெளிவந்த பாடல் 'கண்டேன் காதலை" திரைப்படத்திலமைந்த "ஓடோ ஓடோ ஓடோடிப்போறேன்"என்ற பாடலாகும்.
எந்திரனுக்கு பிறகு கே.வி ஆனந்த் இயக்கிக்கொண்டிருக்கும் "கோ"படத்திலும்,பிரபுதேவா இயக்கும் "இச்"படத்தில் ஹரிஸ் ஜெயராஜ்ஜின் இசையில் பாடல் எழுதுகிறார் கார்க்கி.சித்தார்த் தமிழில் நடிக்கும் "புத்தம் புது காலை"படத்தில் அத்தனை பாடல்களையும் கார்க்கியே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்திரனில் தனக்கு அப்பா எழுதிய அரிமா அரிமா பாடலும்,காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை பாடலும் தான் மிகவும் பிடித்தவை என்று கூறியுள்ள மதன் கார்க்கி,தான் அப்பாவுக்கு போட்டியா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.
என்ன தான் இருந்தாலும் அப்பா வைரமுத்துக்கு இருக்கின்ற கவியாற்றலும்,மொழி வல்லமையும்,அனுபவமும் கார்க்கியிடம் கிடைக்குமா என்பது சந்தேகமே!!

இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
முதல்முறை காதல் அழைக்குதோ

பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
மின்மீன்கள் விண்னோடு
மின்னல்கள் கண்னோடு

கூகுல்கள் காணாத
தேடல்கள் என்னோடு
காலங்கள் காணா காதல்
பெண் பூவே உன்னோடு

iRobo உன் காதில்
ஐ லவ் யூ சொல்லட்டா?

>I am a super girl
>உன் காதல் rapper girl

என்னுள்ளே எண்ணெல்லாம்
நீதானே நீதானே
உன் நீலக் கண்ணோரம்
மின்சாரம் பறிப்பேன்
என் நீலப் பல்லாலே
உன்னோடு சிரிப்பேன்

என் engine நெஞ்சோடு
உன் நெஞ்சை அணைப்பேன்
நீ தூங்கும் நேரத்தில்
நான் என்னை அணைப்பேன்
என்று செல்கிறது அந்தப்பாடல்..!!


அதான் வந்தது தான் வந்திடீங்க..அப்பிடியே ஓட்ட போட்டிட்டு போங்களேன்..

Post Comment

Monday, August 9, 2010

திரை இசை கலைஞர்கள் பார்வை-1 "L.R.ஈஸ்வரி"


L.R.ஈஸ்வரி ...தனது கணீரென்ற வசீகரிக்கும் குரலால் தமிழ் திரையுலகின் ஆரம்ப கால கட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த,தற்போதும் வைத்துக்கொண்டிருக்கும் பாடகி ஆவார்.1960 ,70 காலப்பகுதியில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அத்தனை மொழிகளிலும் தனது வசீகர குரலால் கட்டிப்போட்டிருந்தார் L.R.ஈஸ்வரி.தமிழ் திரையுலகின் முதலாம் தலைமுறை பாடகிகளில் இவரும் ஒருவராவார்.

MSV யின் இசையில் அந்தக்காலத்தில் இவர் பாடிய பாடல்கள் இவரை புகளின் உச்சிக்கே கொண்டு சென்றது.MSV 'யே மனம் திறந்தது ஈஸ்வரியை பாராட்டியுள்ளார்.அதில் அவர் அடிக்கடி குறிப்பிடும் பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "சிவந்த மண்" படத்தில் ஈஸ்வரி பாடிய "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்".

அந்த பாடலில் ஈஸ்வரி கொடுத்த expressions ஆனது,முக்கியமாக சிவாஜி நடிகையை சாட்டையால் அடிக்கும் போது அதற்கு ஈஸ்வரி கொடுத்த expressions அதே பாடலை ஹிந்தியில் பாடிய பாடகியால் கொடுக்க முடியாமல் போனதை MSV சுட்டிக்காட்டி இருந்தார்.

பட்டத்து ராணி பாடல் பார்க்கதவர்களுக்காக..

ஈஸ்வரிக்கு அதிகமான பாடல் பாட சந்தர்ப்பம் கிடைக்க காரணமாக அமைந்தது MSV 'க்கும் T.கே.ராமமூர்த்திக்குமிடையேயான பிரிவாகும்.அதுவரையில் ராஜேஸ்வரி,சுசீலா,ஜானகி,ஜமுனா ராணி,LRE ,சீர்காழி,TMS ,A .m .ராஜா ஆகியோருக்கு சுழற்ச்சி முறையிலேயே வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அந்த முறிவுக்கு பிறகு விஸ்வநாதன் TMS ,p .சுசீலா மற்றும் LRE ஆகியோருக்கே வாய்ப்புகள் வழங்கினார்.

இவர் பாடிய முதல் தமிழ் பாடல் "வாராயோ தோழி" என்று பாசமலர் திரைப்படத்திலமைந்த பாடலாகும்.
இவரது முதல் தெலுங்கு பாடல் "நா பேரு செலயேறு..நன்நீவரோ ஆபலேறு" என்ற பாடலாகும்.கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த பரீட்சியம் இல்லாத போதும் இவர் பாடிய பாடல்கள் சிகரத்தை தொட்டன!அதற்கு இவருக்கு கிடைத்த தேசிய விருதும் நந்தி விருதுமே சான்று பகர்கின்றன!S .P .பாலசுப்ரமணித்தின் முதலாவது தமிழ் திரை இசைப்பாடல் "ஹோட்டல் ரம்பா" படத்துக்காக பாடிய "அத்தானுக்கு எப்படி இருக்கு மனசுக்குள்ளே"என்ற பாடலாகும்.இப்பாடலை L.R.ஈஸ்வரியுடன் இணைந்தே பாலு பாடினார்.ஆனால் துரதிஷ்டவசமாக பாடலும் படமும் வெளிவரவில்லை.
L.R.ஈஸ்வரியின் குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்பட பாடல்களில் சில..

முத்துக்குளிக்க வாரீகளா-அனுபவி ராஜா அனுபவி
ஆடவரெல்லாம் ஆடவரலாம்-கருப்பு பணம்
நானொரு காதல்-தவப்புதல்வன்
அடி என்னடி-அவள் ஒரு தொடர்கதை
துள்ளுவதோ-குடியிருந்த கோயில்

அத்துடன் ஈழத்தின் புகழ்பூத்த கலைஞரான A .E .மனோகரனுடன் இணைந்து "பட்டு மாமியே "என்ற பொப் பாடலையும் பாடியவர் ஈஸ்வரி அவர்களே!!இன்றும் இசை போட்டிகளிலும் மேடைகளிலும் பலர் L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடிக்கொண்டிருக்கின்றனர்.அத்துணை பிரபலமானவை அவருடைய பாடல்கள்.அண்மையில் முடிவடைந்த Airtel சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 'இல் சிறுமி நித்தியஸ்ரீ L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடி அசத்தியது ஞாபகமிருக்கலாம்!


இப்பதிவு மற்றவர்களையும் சென்றடைய மறக்காமல் ஓட்டு போடுங்கள்.tamil10 "இல் ஓட்டு போட கணக்கு அவசியமில்லை.ஒட்டு போடுவது பற்றி தமிழ் மனம்,இன்ட்லியில் விரிவாக கூறி இருக்கிறார்கள்.

Post Comment

Sunday, August 8, 2010

என் சந்தேகத்த தீர்த்து வைச்சு ஓட்டு போடுடி..


நேற்று எனக்கு கிடைக்கப்பெற்ற ஒரு குறுஞ்செய்தி.அண்மையில் வெளிவந்த ராவணன் படத்தின் புகழ் பெற்ற பாடலான உசிரே போகுதே உசிரே போகுதே பாடலின் முன் நான்கு வரிகளை மட்டும் மாற்றி அனுப்பி இருந்தனர்.முழுமையாக முடித்தால் இன்னும் நன்றாக இருக்குமென நினைத்து மாற்றிப்பார்த்தேன்..ம்ம்ம் பரவாயில்லை போல் தான் தெரிகிறது...கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
உசிரே போகுதே சந்தத்துடன் படித்து பாருங்கள்..எக்ஸாம் எக்ஸாம் என்று தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்!!

exam பேப்பர் பெருசுதான்
ஒரு பேனா உசரம் சிறுசுதான்..
இங்கே பேனா மைய சிந்துதடி
எக்ஸாம் பேப்பர் நனையுதடி...
உசிரே போகுதே உசிரே போகுதே
எக்ஸாம் பேப்பர நினைக்கையிலே
மாமன் தவிக்குரன் பிட் பேப்பர் கேக்குறான்
விடைய காட்டடி மணிக்குயிலே
பக்கத்தி பெஞ்ச்சில நீ இருந்ததா
எட்டி பார்த்திட நினைக்குதடி
ஒண்ணுமே தெரியான்னு தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி பேனா கிறுக்குதடி...

question 'னும் answer 'உம் தூரம் தூரம்
நினைக்க நினைக்க ஆகல
படிக்க சொன்ன அம்மா சொல்ல
கிறுக்கு பய நான் கேக்கல
தவியா தவிச்சு இங்க
வேர்த்து தான் கொட்டுதடி
எக்ஸாம் பேப்பர் என்ன
நக்கலா சிரிக்குதடி..

இந்த எக்ஸாமு தொல்ல தீருமா
படிக்க சொல்லி போட்ட சத்தம் மாறுமா
என் சந்தேகத்த தீர்த்து வைச்சு
ஓட்டு போடுடி..
அட எக்ஸாமும் கிரிக்கெட்டும்
ஒரே நாளில் வருகுதே
டிவி'யா கொப்பியா
இப்ப தல சுத்தி கிடக்குதே.....(உசிரே போகுதே)



இப்படி தலையை பிய்த்துக்கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா??அப்ப மறக்காம ஓட்டு போடுங்கப்பா!!எக்ஸாம்ல answer மறக்கலாம் ஆனா ஓட்டு போடா மறக்காதீங்கப்பா!அப்ப தான் உங்கள மாறி பலருக்கும் இப்பதிவு சென்றடையும்!

Post Comment

Saturday, August 7, 2010

வாலியும் வைரமுத்துவும் தான் கவிஞர்களா??


முத்தெடுக்க ஆர்வலர் இல்லை
கவித்தேன் பருக
பசியுடன் யாருமில்லை
வாலியும் முத்துவும் தான்
கவிஞரெனில்
மற்றோர்கள் ஏது செய்ய?
புலமை வாய்ந்த பலருக்கு
புகழ் தான் வைக்கவில்லை
ஏன்
அடையாளமே கிடைக்கவில்லை
ஆள் மனமே நீ யோசி!

பதிவுலகில் கூட கண்டேன்
ஆயிரமாம் கவிதை பூண்ட
ஆணித்தர கருத்து தந்த
ஒரு சில பாரதியார்கள்
சில பல கண்ணதாசன்
பின்னூட்டல் யாதுமின்றி
பின்தொடர ஆட்களின்றி
கவிதைக்கு மதிப்பு இன்றி
ஆளுக்கே அடையாளமின்றி...
அப்பப்பா.
ஏன் இந்த பாகுபாடு?
ஏன் இல்லை ஈடுபாடு?
ஆள் மனமே நீ யோசி!

கல் கூட கை பட்டால் தான்
முத்தாக வெளிப்படுமே
இவர்களுக்கேங்கே வெளிப்பாடு?
யாரில் நான் குறை தான் சொல்ல??

விடியாத இவர்கள்
வாழ்வில்
விடியல் தான் எப்போது??
விடையில்லா
வினாவோடு
விளக்கமில்லாமலே என் பேனா!!

Post Comment

Friday, August 6, 2010

எங்கே என் சானியா மிர்சா??


சானியா மிர்சா..
ஏன்??
ஏன் நீ திருமணம்
செய்தாய்?
எங்கள் ஆசைகளை
நிராசை ஆக்கினாய்??
கண்ட கனவுகள்
கண்ணீரில் கரைந்ததே!
கல்யாணம் என்று சொல்லி நீ
கண்ணை விட்டு மறைந்ததேன்??

சானியா சானியா
சொக்க வைத்தாய் சானியா!
சொக்கி சொக்கி வந்திச்சே
பலருக்கு நியுமோனியா!!

பத்தாவது படிக்கும் போது
எப்போதும் உன் நினைப்பு!
உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு
பத்தி எரியும் அடுப்பு!!
கிறங்க என்னை வைத்தது
உன் சிவந்த மேனி சிரிப்பு..
அடித்த ஷொட்டுகள் பிழைக்கும் போது
பிழைத்து போன நடிப்பு!

நீ குனிந்து சர்வீஸ் போடும் போது
பார்ப்பாங்களே விடுப்பு!
உனை பார்க்காதே எண்டு சொல்ல
இப்போ மாலிக் தானே தடுப்பு!!

முதன் முதலாய்
டென்னிஸ் பார்த்ததுவும்
உன்னாலே!
தூங்காமல் தவித்ததுவும்
உன்னாலே!


டென்னிஸ் பார்த்தேன்
காணவில்லை
நியூஸ் பார்த்தேன்
அதிலும் இல்லை!
கண் பார்க்க நீ
அருகிலில்லை
வங்கக்கடலருகில்
நீ இல்லை!!

எத்தனை இரவுகள்
எத்தனை கனவுகள்
உந்தன் நினைவோடு....
எத்தனை எண்ணங்கள்
எத்தனை தவிப்புகள்
எந்தன் மனதோடு...எல்லாம் உன்னாலே!!

மாலிக்குடன் நீ...
தாலிக் கயிறுடன் நான்..
போலி ஆசை என்று
பீத்துகின்றேன் இப்போது...!!

உன் படங்களை கூகிள்'லில்
தேடிய படி..
"சானியா வெறியன்..."


சானியா மிர்சா மீது "பற்றுக்கொண்ட" நீங்கள் கீழே குத்துவதன் மூலம்...!!!!

Post Comment

Thursday, August 5, 2010

தமிழ் திரையுலகின் இன்றைய டாப் கவிஞர்கள்!

தமிழ் திரையுலகை ஆட்டிப்படைக்கின்ற கவிஞர்களில் சிலரின் புகைப்படங்கள்....
கண்ணதாசன்,வைரமுத்து,வாலி போய் விடின் தூய தமிழ்க்கவிதைகள் யாரிடமிருந்து வரக்கூடும்??


கவி மார்க்கண்டேயர் வாலி

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் நா.முத்துக்குமார்

கவிதாயினி தாமரை

பா.விஜய்

கபிலன்

யுகபாரதி

Post Comment

Wednesday, August 4, 2010

தனிமையில் உன்னுடன் நான்!



கண்களுக்குள் காதல்
வைத்தால்..
கண்ணுக்குள் வருத்தமடி..
மனதுக்குள் காதல்
வைத்தால் ...
மனதுக்குள் வருத்தமடி..
மனங்கள் இரண்டும் சந்திக்கட்டும்
அரவமற்ற இராப்பொழுதில்.. !!!

தாய்மையின் தூய்மை..
மழலையின் மனது..
வாலிபனின் முதல் காதல்..
முதுமையின் அமைதி..
அத்தனையும் புனிதமானவை
வாழ்விலே.. !!

மற்றவர்களை
உன்னோடு
ஒப்பிடும் அளவிற்கு
நீ
அழகின் நியமம்
ஆகிவிட்டாய் எனக்கு!!

தனிமை
வடிக்கும்
கவிதைகளுக்கு
ஆழம் அதிகம்.. உனை
தனிமையில் காணும்
நிமிடங்களின்
நீளம் கொஞ்சம்..!!

உங்கள் பின்னூட்டல்கள் தான் எனக்கு ஊக்கமருந்தாகுமாதலால்...
மறக்காமல் உங்கள் பதிவுகளை விட்டுச்செல்லுங்கள் பின்னூடல்களாய்!


Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...