Tuesday, October 12, 2010

என் பொருட்டு நீ கண்ணடித்தால்..!!



உன் கண்கள்
வரைந்த
சுவரோவியத்தினுள்
சுவாசமாய் இருப்பவன்..

உன் கண்கள்
பேசிய
ஆயிரமாம் கவிதைளுக்கு
எதுகையாய் எடுபட்டவன் ..

உன் கண்கள்
திரும்பிய
திசையெங்கும்
திகட்டாமல் நோக்குபவன்..

உன் கண்கள்
அயர்ந்த
வேளைகளில்
இமையாக மாறியவன்..

உன் கண்கள்
நனைந்த
பொழுதுகளில்
கைக்குட்டையானவன்..!
உன் கண்கள்
கண்ட
பொருட்களை
பொக்கிசமாக்கியவன்..
உன் கண் கூடாய்
மௌன மொழி
சம்மதம் தான்
ஏங்குகிறேன்..
மொழி பேசும்
கண்கள் -மறு
மொழி பேச மறுப்பதேன்..?
என் பொருட்டு நீ
கண்ணடித்தால்......

Post Comment

13 comments:

Anonymous said...

உன் கண்கள்
வரைந்த
சுவரோவியத்தினுள்
சுவாசமாய் இருப்பவன//
அருமை வரிகள்..

Unknown said...

நல்ல இருக்கு...ஒரு கண்ணுக்கா இம்பூட்டு பண்ணிறீங்க??

கவி அழகன் said...

உன் கண்ணுக்குள் கண்னாய் இருப்பவன்
உன் காண்ணிலே கண்னாய் இருப்பவன்
சுவாரிசியமான கண்
வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

////உன் கண்கள்
திரும்பிய
திசையெங்கும்
திகட்டாமல் நோக்குபவன்..////
அருமையாக இருக்கிறது....

Unknown said...

அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பா..

Unknown said...

Anonymous said...
உன் கண்கள்
வரைந்த
சுவரோவியத்தினுள்
சுவாசமாய் இருப்பவன//
அருமை வரிகள்.//
நன்றிகள் நண்பா

Unknown said...

rasigan said...
நல்ல இருக்கு...ஒரு கண்ணுக்கா இம்பூட்டு பண்ணிறீங்க?//
ஆமாங்க..என்னங்க பண்ண சொல்றீங்க!!

Unknown said...

யாதவன் said...
உன் கண்ணுக்குள் கண்னாய் இருப்பவன்
உன் காண்ணிலே கண்னாய் இருப்பவன்
சுவாரிசியமான கண்
வாழ்த்துக்கள்//
ஹஹா நன்றி பாஸ்

Unknown said...

ம.தி.சுதா said...
////உன் கண்கள்
திரும்பிய
திசையெங்கும்
திகட்டாமல் நோக்குபவன்..////
அருமையாக இருக்கிறது..//
நன்றி மதி...

Unknown said...

jorge said...
அருமையான கவிதை...வாழ்த்துக்கள் நண்பா./
நன்றி ஜோர்ஜ்

Anonymous said...

அருமை...

ஜெயந்த் கிருஷ்ணா said...

நண்பா நீ கலக்கு...

Yazhini said...

//உன் கண்கள்
நனைந்த
பொழுதுகளில்
கைக்குட்டையானவன்..!//

மனதை தொடும் வரிகள் ! கவிஞருக்கு என் வாழ்த்துக்கள் ....

Related Posts Plugin for WordPress, Blogger...