Tuesday, July 20, 2010

என்செய்வேனோ??

மனதிலோர் வெறுமை..

வேற்று கிரகத்தில் இருப்பது போல்

கண்களுக்கு பிரம்மை!

தனிமையில் இருந்தாலும்

தோல்வியின் துன்பம்!

கூட்டத்தில் இருக்கும்போது

தனிமையின் பிம்பம்!

தோல்வி தான்..

தோல்வியை அனுசரிக்க தெரியாத

என் மனதுக்கு தோல்வி தான்!

ஆறுதல் படுத்துவோர் சொற்கள்

செவிக்கு இனிமையாக இல்லை..

தோல்வியின் நினைவுகளால்

தினசரி தொல்லை!

நிற்கதியாக நானும் மனதும்...என்செய்வேனோ??

Post Comment

2 comments:

PRATHEEP SELVAKUMARAN said...

;wahhhhhhhhhh wahhhhh :P

Unknown said...

wat r u tryng 2 tell pratheep??

Related Posts Plugin for WordPress, Blogger...