Wednesday, June 16, 2010

காதலியே..


கார் காலம் கவிழும் வேளை..
கண்களிலோ காதல் விதை..
மொட்டவிழ்ந்த தாமரை போல்
புதுக்கவிதை பிறக்குதடி..!

கண்களால் உன்னை பார்க்க
காண கண் கோடி வேண்டும்..
பந்தத்தில் உன்னை சேர்க்க
கோடிகள் ஒரு பொருட்டே இல்லை..!!

கவிதையாக உன்னை வடிக்க
பாவல்கள் தவமிருப்பார்..
நான் வடிக்க முயன்று பார்த்தேன்..
தமிழுக்கு தான் பஞ்சமடி..!!

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...