Thursday, June 24, 2010

My-koo..

உண்மைக்காதல்
உயர்ந்து நிக்கிறது
உலக அதிசயமாய்...
தாஜ்மஹால்!!



ஓங்கி ஒலிக்கும்
கெட்டி மேளத்தில்
அடங்கிப்போகிறது
யாரோ ஒருத்தனின்
விம்மல் சத்தம் எப்போதுமே!!



தண்ணீரில் மீன்
அழுதால்
கண்ணீரை யார் அறிவார்..
தனிமையிலே நான் அழுதால்
என் மனதை
யாரறிவார்!!





ஏழைக்கு புல்லும் ஆயுதம்..
நிறுத்தி வைக்கப்பட்ட
கார் கண்ணாடியில்
தலை சீவும்
..."கூலி"யின் மகள்!



கடல் கரையில் உன்
பெயர் எழுதுகிறேன்..

நண்பனே...
உன் பெயராவது ஒரு தடவை
குளிக்கட்டும் என்பதற்காக!

Post Comment

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...