Sunday, March 16, 2014

'Battle of the North' நடந்தது என்ன?



இந்த வருடத்துக்கான big matches அனைத்துமே ஏதோ ஒருவகையில் குழப்பத்திலேயே முடிவடைந்திருக்கின்றன.அதியுச்சமாக பற்றிக்ஸ் vs யாழ்ப்பாணக்கல்லூரிக்கிடையிலான போட்டியில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்.யாழ் பத்திரிகைகளில் முன்பக்கத்தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்திருந்தன இவை.சரி, 'வடக்கின் மாபெரும் துடுப்பாட்டம்' (Battle of the North)இல் நடந்தது என்ன?

 சம்பவம் நடைபெற்றதினம் மூன்றாம் நாள்.முதல் நாள் துடுப்பெடுத்தாடிய யாழ் மத்தியகல்லூரி அணி சகலவிக்கட்டுகளையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பாடிய சென் ஜோன்ஸ் கல்லூரி ஒரு கட்டத்தில் 68 ஓட்டங்களுக்கு 9விக்கட்டுகளை இழந்திருந்தாலும்,இறுதிவிக்கடில் நிலோஜன்,லோகதீஸ்வரின் நிதானமான துடுப்பாட்டத்தினால் இறுதியில் 122 ஓட்டங்களுக்கு இரண்டாம் நாள் ஆட்டமிழந்தது.தனது இரண்டாம் இனிங்க்ஸை ஆரம்பித்த மத்தியகல்லூரி அணி,இரண்டாம் நாள் முடிவின் போது 9 விக்கட்டுகளை இழந்து 94 ஓட்டங்களை பெற்றிருக்க,மூன்றாம் நாள் ஆட்டம் சூடுபிடிக்குமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கி முதல் ஓவரிலேயே இறுதிவிக்கட் சாய்க்கப்பட,134 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது சென் ஜோன்ஸ் அணிக்கு.ஒரு நாள் முழுதாக மிச்சமிருக்க,10 விக்கட்டுகள் கைவசமிருக்க மிக உற்சாகமாக சென் ஜோன்ஸ் இரண்டாம் இனிங்க்சை ஆரம்பித்தது.முதல் இரு விக்கட்டுகளும் எவ்வித ஓட்டமும் பெற்றிருக்காமலேயே வீழ்த்தப்பட, போட்டி இன்னமும் சுவாரசியமானது. சிந்துர்ஜனும் அணித்தலைவர் துவாரகசீலனும்(இவர் இப்பருவகால போட்டி ஒன்றில் 200 ஓட்டங்களை குவித்து பலராலும் அறியப்பட்ட வீரர்)ஆரம்பத்தில் சற்று நிதானமாக ஆரம்பித்து பின்னர் தொடர்ச்சியாக மூன்று ஓவர்களில் ஆறு பவுண்டரிகளை அடிக்க,சென் ஜோன்ஸ்,சென்றல் என இரு தரப்பும் ஆர்ப்பரித்தது.

இத்தருணத்தில் தான் அந்த சம்பவம் சம்பவம் என்கின்ற சம்பவம் நடைபெற்றது. மதூசனின் பந்தில் அணித்தலைவர் துவாரகசீலன் சற்றே முன்னோக்கிவந்து அடிக்க முற்பட்ட சமயத்தில் பந்து பட்டில் படாது கீப்பரின் கைகளுக்கு சென்றுவிட...ஸ்டம்பிங்க்...!! லெக் அம்பயர் ஆட்டமிழப்பு என்று அறிவித்ததன் தாமதம் ஏராளமான சென்றல் பழைய மாணவர்கள் மைதானத்துக்குள் நுழைந்து ஆட்டமிழப்பை பிட்ச் அருகாமையில் கொண்டாடினர்.சென் ஜோன்ஸ் பழைய மாணவர்கள் வெளியே நின்று வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தனர்,காரணம் அந்த விக்கட்டின் அருமை!!துவாரகசீலன் நின்றால் வெற்றி நிச்சயம் என்று சென் ஜோன்ஸும்,தோல்வி நிச்சயம் என்று சென்றல் தரப்பும் பலமாக நம்பினர்.

மைதானத்தில் கொண்டாடிக்கொண்டிருந்த சென்றலைட்ஸ் இப்போது கொண்டாட்ட மன நிலையிலிருந்து கோபமான மன நிலைக்கு மாறியதை வெளியிலிருந்து அவதானிக்க முடிந்தது.என்னவென்று பார்க்க ஒரு 10-15 ஜொனியன்ஸ் மைதானத்துக்குள் புகுந்து பார்த்தால், அந்த ஆட்டமிழப்பு வாபஸ் வாங்கப்பட்டதாகவும்,காரணம் ஸ்டம்பிங்க்கின் போது பெய்ல்ஸ் விழுந்திருக்கவில்லை,எனவே ஆட்டமிழப்பல்ல என்று நடுவர் துவாரகசீலனை மீண்டும் ஆட்டத்துக்கு அழைத்ததாகவும் தெரியவந்தது.இந்தச் செய்தி நம் காதுகளுக்கு எட்டும்முன்பதாகவே நடுவர் ஒருவருக்கு அடித்துவிட்டார்கள் என்றும்,நடுவர்கள் வெளி நடப்பு செய்கிறார்கள் என்றும் செய்தி வந்து சேர்ந்தது. அப்புறம் என்ன! சென் ஜோன்ஸ் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் மைதானத்தில் உட்கார,சென்றல் வீரர்கள் கூடாரத்துக்குள் உட்கார,விசயம் உயர்மட்டத்தினால் மூன்று மணி நேரம் ஆற அமர விசாரிக்கப்பட்டு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1.நடுவரில் தான் முதல் தவறு.சரியாக அவதானிக்காமல் உடனேயே ஆட்டமிழப்பை வழங்கியது.ஆனால் நடுவர் தவறை உணர்ந்து துடுப்பாட்ட வீரரை மீள அழைத்தால் அது தவறு என்று வாதிட்டு போட்டியை நிறுத்துவது எவ்வகையில் நியாயம்?நடுவரை தாக்கினால் போட்டி நிறுத்தபடும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு செய்யப்பட்டதா?

2.பெய்ல்ஸ் விழுந்திருக்கவில்லை என்று வீடியோ ஆதாரங்கள் காட்டப்பட்டும்,இல்லை,ஆட்டமிழப்பு தான் வழங்கவேண்டும் என்று ஒற்றைக் காலில்  நின்றவர்கள் கிரிக்கட்டின் கனவான் தன்மைக்கு பொருத்தமானவர்களா?

3.ஆட்டமிழப்புக்காக நடுவரை தாக்குவது எத்தகைய பழக்கவழக்கம்? ஆட்டமிழப்பு வழங்கிய சமயம் மைதானத்தில் நூற்றுக்கணக்கான சென்றலைட்ஸ் வீரர்கள் தான் உள் நுழைந்திருந்தார்கள்.ஒரு ஜொனியனும் ஆட்டமிழப்பு வழங்கிய சமயத்தில் மைதானத்துக்குள் புகுந்திருக்கவில்லை, புகவேண்டிய தேவையுமில்லை.

4.இறுதியாக 2004 இல் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் தான் பிட்சில் மட் எரிக்கப்பட்டது.அப்போது ஆளுமைமிக்க அதிபர்களாக மதிப்புக்குரிய,காலஞ்சென்ற தனபாலனும்,ராஜதுரையும் இருந்தமையால் கனவான் தன்மையாக வெற்றி சென் ஜோன்ஸ்க்கு வழங்கப்பட்டது.அதன்பின்னர் தொடர்ச்சியாக சென்றல் தான் வென்று வந்திருக்கிறது.அதன் பின் சென் ஜோன்ஸ் ஒரு போட்டிதானும் வெல்லவில்லை.அதற்கான வாய்ப்பு இம்முறை தான் கிடைத்தது.அதுவும் இத்தகைய சீர்கேட்டு செயலால் தடுக்கப்பட்டிருக்கிறது.அது ஏன் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் என எதிர்பார்க்கும் சமயங்களில் மட்டும் பிரச்சனைகள் நடக்கின்றன? கடந்த 5,6 வருடங்களாக சென்றல் வெற்றி பெற்ற போது ஒரு துன்பியல் சம்பவம் கூட நடைபெற்றிருக்கவில்லையே?எங்கு பிரச்சனை?

5.போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது என்று அறிவித்த சமயத்திலிருந்து சென்றல் தரப்பினர் அதனை மிக ஆர்ப்பாட்டமாக கொண்டாடி மகிழ்ந்துகொண்டிருக்க,ஒட்டுமொத்த சென் ஜோன்ஸ் தரப்பும் கப் சிப் என்று அமைதியாக இருந்தது.மைதானத்தில் இருந்து இதனை பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும் காரண காரியங்கள்.

6.முடிவெடுக்கும் நேரம் ஏறத்தாள 3-4 மணி நேரம்.எத்தகைய பரிந்துரைகளுக்கும் எதிராகவே சென்றல் தரப்பு வாதிட்டார்கள்.உயர்மட்ட கலந்துரையாடல்களின் போது கூட நிதானமற்ற விதத்தில் அநாகரிகமாக உரையாடிய சந்தர்ப்பங்களை பலர் அவதானித்திருக்கின்றனர்.எவ்வளவு நேரம் வீணாக்கப்படுகின்றதோ,அத்தனை தூரம் சென் ஜோன்ஸின் வெற்றி தாமதமாக்கப்படும் என்பது கிரிக்கட் தெரிந்த சிறுபிள்ளைக்கும் புரியக்கூடிய உண்மை.

7.நடுவர் ஸ்டம்பிங்க் செய்தது முறையில்லை,விக்கட் சாய்க்கப்படவில்லை என்று ஆட்டமிழப்பை வாபஸ் வாங்கியிருக்கிறார் என்றால்,ஆட்டமிழப்பு கோரிய விக்கட் கீப்பர்,வீரர்களின் கனவான் தன்மை எத்தகையது? அவர்களாவது பழைய மாணவர்களுக்கு கூறியிருக்கலாமே இது தங்களின் தவறு தான் என்று?Sportsmenship கிலோ என்ன விலை?

8.நடுவரின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளாது போட்டியை நிறுத்தியமை கிரிக்கட்டின் எதிர்காலத்துக்கு எவ்விதத்தில் ஆரோக்கியமானதாக அமையப்போகின்றது?இனிமேலும் சென் ஜோன்ஸ் வெற்றி பெறும் சந்தர்ப்பங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்?ஒவ்வொரு தடவையும் விட்டுக்கொடுக்கும் தரப்பாக சென் ஜோன்ஸ் இருக்கப்போகின்றதா என்ன? 

9.கிரிக்கட்டில் நடுவரின் முடிவு இறுதியானதா இல்லை அமைச்சர்களின் முடிவு இறுதியானதா? அப்படியாயின் எதற்கு கிரிக்கட்? 

10.பத்திரிகை செய்திகள் இப்படியாகத்தான் இருந்தன.
'நடுவரை தாக்கியதால் போட்டி நிறுத்தப்பட்டது'.
அப்படியாயின் யாரில் தவறு? நடுவரை அடிக்கவேண்டிய எவ்வித காரணமும் சென் ஜோன்ஸ் தரப்புக்கு இருந்திருக்கவில்லை.110 ஓட்டங்களுக்கு குறைவான ஓட்டங்களும் 8 விக்கட்டுகளும்,அன்றைய முழு நாளுமே மீதமாக இருந்தன.அத்துடன் இத்தகைய கேவலமான செயல்கள் எப்போதுமே சென் ஜோன்ஸ் மாணவர்களால் நிகழ்த்திக்காட்டப்பட்டிருக்கவில்லை.

11.வீடியோ ஆதாரம் ஏற்றுக்கொள்ளமுடியாதென்று வாதிட்டார்களாம் அமைச்...& வேறு சிலரும்.ஆமாம்,மைதானத்திலிருந்தே குறுகிய நேரகாலப்பகுதியில் அந்த காணொளியை எடிட் செய்து பெய்ல்ஸ் விழாதது போன்றும்,விக்கட் சாய்க்கப்படாதது போன்றும் மாற்றியிருப்பார்கள் சென் ஜோன்ஸ் மாணவர்கள்,..!!(வெகு சீக்கிரம் காணொளி பரவலாக வெளியிடப்படும்)

 போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கப்பட்டதன் தாமதம்,சென்றல் வீரர்கள் கொண்டாடினார்கள்.அமைச்சர் டக்ளஸ் வந்திருந்தார்.அவரை சுற்றி கொண்டாட்டம் நடந்தது.அவரின் பிரதிநிதி ஒருவர் சென் ஜோன்ஸ் மாணவர்களுடன் கலந்துரையாட வர,எவருமே அவ்விடத்தில் நிற்காமல் நகர்ந்துசென்றனர்.முடிவு அறிவித்து அடுத்த 10 நிமிட நேரத்தில் மைதானத்தில் சென் ஜோன்ஸ் மாணவர்கள் நின்ற அடையாளமே இருந்திருக்கவில்லை.இத்தனைக்கும் இரண்டு மூன்று பழைய மாணவர்கள் தான் 'சரி எதுவா இருந்தாலும் எங்கட ஸ்கூல்ல போய் பாத்துக்கலாம், பேசிக்கலாம்'என்று கூறி அனுப்ப,அதற்கு மதிப்பளித்து மாணவர்களும்,பழைய மாணவர்களும் மைதானத்தை விட்டு வெளியேறினர் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்புக்கொடுக்காமல்.இத்தனைக்கும் பாடசாலை அதிபரோ,ஆசிரியர்களோ அவ்விடத்தில் இல்லை.முழுக்க முழுக்க பழைய மாணவர்களால் ஒழுங்காக நிர்வகிக்கப்பட்டது நிலைமை.இந்த நிலைமை ஏற்படுவதற்க்கு முக்கிய காரணம் விக்கட் விழுந்த சமயத்தில் உள்ளே ஓடிய சென்றல் பழைய மாணவர்கள் தான் என்பது சொல்லித்தெரிய வேண்டிய உண்மை இல்லை.பொலீஸ் பாதுகாப்பு தேவையில்லை,எமது பழைய மாணவர்களே நிலைமையை கட்டுப்படுத்துவார்கள் என்கின்ற உறுதிமொழியின் அடிப்படையில் பழைய மாணவர்கள் தான் பாதுகாப்புக்கும், ஒழுங்கை கவனிக்கவும்(!!) நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது! 

 எது எப்படியோ,அதிபர்கள் தனபாலன்,ராஜதுரை அவர்களின் ஆளுமை இப்போதிருக்கும் அதிபர்களுக்கு கிடையாது என்பது அக்மார்க் உண்மை. அவர்களின் பின்னால் பழைய மாணவர்களும்,மாணவர்களும் நின்றனர். இப்போது நிலைமை வேறு. நேற்று இரவு கிடைத்த செய்திகளின் அடிப்படையில் நிகழ்வுகளுக்கு வருத்தம் தெரிவித்து சென்றல் அணியின் 'POG'(Prefect of Games) தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறாராம்.

குப்பைக்குள்ளும் ஒரு குண்டுமணி?

Post Comment

Tuesday, February 4, 2014

நண்பிகளுடன் ஒரு கலாட்டா..! 16+

               
                     

'யாரையும் பார்த்தவுடனேயே சூப்பர் பிகரா அட்டுப்பீஸான்னு பார்ப்பது தான் உன்வேலையா?'என்று கடிந்தாள் நண்பி.

'கூடவே என்ன ஜிமிக்கி போட்டிருக்கிறாள்,என்ன கலர் கியூடெக்ஸ் அடிச்சிருக்கிறாள்,என்ன ஹேர் ஸ்டைல் பண்ணியிருக்கிறாள்,'ஐ ப்ரோ' ஷேப் பண்ணியிருக்கிறாளா,கண்ணுக்கு மை அடித்திருக்கிறாளா,அவள் ட்ரெஸ்ஸிங்க் சென்ஸ் எப்படி என்பது பற்றி எல்லாம் கவனித்துவிடுவேன்..

என்ன,சூப்பர் பிகரா அட்டு பிகரான்னு ஒரு அவுட்லைன் சொன்னதுக்கே இப்பிடி திட்டுறியே,மிச்சம் எல்லாம் சொன்னா எவ்ளோ டீப்பா போறாய் நீயி? அப்பிடின்னு கடிச்சு வைச்சிடுவியேன்னு தான் சொல்றதில்லை' ன்னு சொன்னேன்..

ஒரு கணம் மயான அமைதி..
மேசையிலிருந்த பஞ்சர் எங்கோ எறியப்பட்டு நிலத்தில் விழுந்து கிடந்தது...
என் நெற்றியில் லேசாய் இரத்தம்..!

----------------

நண்பர்களுடன் இருந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.நண்பி வீட்டிலிருந்து வடை செய்து கொண்டுவந்திருந்தாள்.

'உப்பு சற்று தூக்கல் தான்..இந்தாங்க எடுத்துக்கோங்க' என்று நீட்டினாள்.
நான் எடுத்துக்கவில்லை.

'ஏன் வடை பிடிக்காதோ?'

'இல்லை,உப்பிட்டவரை உள்ளளவும் நினைன்னு சொல்லியிருக்காங்க.. உங்க உப்பு வடைய சாப்பிட்டிட்டு,நாள் முழுக்க உங்களையே நினைச்சிக்கிட்டிருக்க முடியாது பாருங்க..நான் சமந்தா கூட ஆல்ரெடி கமிட்டட்'ன்னேன்.

வடையிலிருந்த உப்பும் மிளகாயும் அவள் கோபத்தீ பட்டு வெடித்துச் சிதறின..அப்போது ஆயிரம் குறியீடுகள் ஒன்றுசேர உணர்ந்தேன்.ஆனால் அதற்கு எல்லாம் ஒரே அர்த்தம் தான்..;
..
....
.......

'வடை போச்சே..!

--------------------------------------

தட்டிப்பார்த்தேன்...எழும்பவில்லை.
உலுக்கினேன்..ம்ம்ஹும் எழும்புற மாதிரி தெரியல.

காலங்காத்தால எந்திரிக்கணுமே..என்னாச்சு?
மறுபடி தட்டு தட்டென தட்டி உலுக்கிப்பார்த்தேன்..
ம்ஹும்..ஒருவேளை.....?
ச்சே..அப்படியாய் இருக்காது.சிங்கக்குட்டிலே..!!

அப்புறம் ஏன் எந்திரிக்கல?வெளில தெரிஞ்சா அசிங்கமாயிருமே.. கட்டிக்கப்போற பொண்ணுக்கு தெரிஞ்சா?ம்ம்ஹும் இது சரிப்பட்டு வராது..

பாத்ரூம் போய் ஒரு பக்கட் தண்ணீர் எடுத்துவந்து மேலே ஊத்தினேன்.. 'எந்திரிடா பரதேசி..எட்டு மணியாச்சு..வேலைக்கு போகவேணாம்?'


------------------------------

எப்போதும் பெற்றார்,உறவினர்,அயலவர்களுடன் செல்லும் வைபவங்களில் சைட் அடிப்பதற்கும் சுதந்திரமாக கதைப்பதற்கும் வாய்ப்புகள் மிக அரிதாகவே கிடைத்துவிடுகிறது.எங்கு கண்ணை திருப்பினாலும்,நம் கண்களுடன் சேர்ந்து கூடவே பல ஜோடிக்கண்கள் அந்த பக்கமாக திரும்பும்..!

கடந்த சில காலமாக மேற்கொண்டுவரும் ஆய்வுகளின் பிரகாரம்,இளம் பெண்களைவிட திருமணமாகி ஒரு சிறு குழந்தைக்கு தாயாக இருக்கும் பெண்கள் மிக அழகாக இருக்கின்றார்கள் என உள்மனது சொல்கிறது.

இல்லை,அழகான இளம் பெண்கள் அனைவருமே வெகு சீக்கிரம் திருமணம் முடித்து மிக அழகான அம்மாக்களாக மாறிவிடுகிறார்களா என்ன? பீலிங்க் கொன்பியூஸ்ட்...!


---------------------------------

விளக்கு அடித்திரியில் ஊசலாடி எரிந்துகொண்டிருந்தது..

அணைக்கவா..?நூக்கவா..? என்றேன்..

நூத்துவிடு என்றாள் நண்பி..;எதிர்பார்த்தது தான்!!அணைத்துவிடு என்றால்,எங்கே தன்னை அணைத்துவிடுவான் என்கின்ற பயமோ?

மைந்தன் கொடூரமானவன் தான்..ஆனா பொண்ணுகளுக்கு கிடையாது..!


----------------------------------

            Nazriya Nazim hd Photos
'அங்க கைய வைக்காதே..'என்றேன் கண்டிப்பாக.
அவள் வைத்தாள்...
'ம்ம்ம்ஹும் அப்பிடி வருடாதே...'என்றேன் கூச்சமாக..
வருடினாள்..!

'ஏய்ய்...ஏன் ஆலிவ் Oil தடவிக்கிறே?எனக்கு பிடிக்காது..!'என்றேன்.
'சும்மா இரு உனக்கொண்னுமே தெரியாது..Oil தடவினாத்தான் நல்லா வருடி விடலாம்..!'என்றாள்.வாய் தான் பேசிக்கொண்டிருந்ததே தவிர,கைகள் வருடிக்கொண்டிருந்தன.

'அடியே..இழுத்துவிடாதை..கையோட வந்திட போகுது..'நுள்ளினேன்.
ம்ம்ஹும்,அவள் வேண்டுமென்றே இழுத்துவிட்டாள்..வலித்தது..!

'பரதேசி..பாத்துடி...வலிக்குது..!'
இன்னும் வேகமாக இழுத்தாள்..
அவள் கையோடு வந்தேவிட்டது..!
எழுந்து கண்ணாடியில் பார்த்தேன்..
தலையில் இருந்த கால்வாசி முடியில் அரைவாசி காணாமல் போயிருந்தது..!


-----------------------------------

'போடா லூசு..'என்று நண்பிகள் திட்டும்போது அதில் ஒரு வெட்கமும்,அன்பும்,வார்த்தைகளில் வெளிப்படுத்தமுடியாத ஆயிரத்தெட்டு உணர்வுகளும் கலந்திருக்கும்..!
----------------------------------
ஆடை நீக்கி பருகவா எனக்கேட்டேன்...
ஆடையுடனேயே பருகு என்றாள்;பால்
பெண்பால்..!

-------------------------

                

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்..!
எனக்கு அசைவம் ரொம்ப பிடிக்கும்..

நீ சைவத்துக்கு மாறிவிடு..!
எனக்கு,அசைவதற்கு ரொம்ப பிடிக்கும்..அதனால் முடியாது..

எனக்கு அசைவம் பிடிக்காது..என்னைப்போல் பல பெண்கள் இருக்கிறார்கள்..அசைவம் பிடிக்காமலேயே..!
அசைவம் சாப்பிடாவிட்டாலும்,நீ அசைவம் பற்றி பேசுகின்றாய்.. அசைவம் தவிர்க்க முடியாதது சைவமே..!

நான் சைவம் இருக்கட்டும்..நீ வெறும் சவமே...!
சவத்தில் தான் உன் சைவம் இருக்கிறது பெண்ணே..

சவத்தில் இருந்தாலும் பரவாயில்லை..உன் வசத்தில் இருக்காத வரை.!
என் வசத்தில் நீ இல்லையெனிலும் உன் வாசத்தில் தான் நான் வாசம் செய்கிறேன் தினமும்..!

வாசம் பற்றி பேசாதே..அது நிச்சயம் பூ வாசம் கிடையாது..!
பூ வாசம் புறப்படும் பெண்ணே..அதற்கு 'நாம்'பூ வரைய வேண்டுமாமே?

நீ அதிகம் அசைவம் பேசுகிறாய்........!


-------------------------------------

                Sugar Lips

'உன்கிட்ட வாய குடுக்கக்கூடாதுடா..நீ ரொம்ப மோசம்'என்றாள் நண்பி.

இது டபுள் மீனிங்கா சிங்கிள் மீனிங்கா என்று இன்னமும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறேன்..! 
கில்லாடிப் பெண்கள்...!!

----------------------------------

'கீழே பதிச்சு விடுங்கோ..'என்றாள்.

'போதும் போதும்,நேரா விடுங்கோ'என்றாள்.
'மேல கீழ மாறி மாறி விடுங்கோ..'என்றாள்.
'இடைக்க நிப்பாட்டி நிப்பாட்டி போடுங்கோ..'என்றாள்.

'உன்னோட ஏலாது..இந்தா பிடி ரிமோட்டை நீயே வைச்சிக்க'ன்னு சொல்லி ஏ/சி ரிமோட்டை அவள் கையில் திணித்துவிட்டு,விட்டத்தைப் பார்த்து வெறுமனே சிரித்துக்கொண்டான்..!


-------------------------------------
Nazriya Nazim hd Photos

அனைத்துப் பெண்களுமே அழகானவர்கள் தான்.

என்ன,80வீதமான பெண்களுக்கு தங்களுக்கு பொருத்தமான ஆடை அணிகலன்களை சரியாக தெரிவுசெய்யத் தெரியவில்லை..!

----------------------------------

'நாயே...குரங்கு..பன்னி..கழுதை'ன்னு ஒரு பொண்ணு என்னை ஓயாமல் திட்டிக்கொண்டிருந்தாள்.

'பொண்ணுக திட்டுறது எனக்கு ரொம்ப பிடிக்கும்..கோபத்தில் அவங்க முகம் கொடுக்கும் Expressions'ஐ ரசித்து,கவனித்துக்கொண்டிருப்பதால் அவர்கள் திட்டுவது என் காதில் விழுவதில்லை'என்றேன்.அவள் திட்டுவதை விட்டுவிட்டு என்னசெய்வதென்று முழுசினாள்.

நான் மறுபடி கண்ணடித்தேன்.இம்முறை திட்டு விழவே இல்லை,மாறாக ஒரு புன்னகை..! 


----***-----

Post Comment

Tuesday, October 8, 2013

'ராஜா ராணி'-மினி விமர்ஸ்ஸ்..!!

                 

ராஜா ராணி பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வந்தவுடன் மனதில் எழுந்த முதல் கேள்வி,'என்ன இழவுக்கு பெரும்பாலானோருக்கு 'மௌனராகம்' ஞாபகம் வந்தது?என்ன இழவுக்கு அதனுடன் இதனை ஒப்பிட்டார்கள்? என்பதே! எந்த சந்தர்ப்பத்திலும் எனக்கு மௌனராக நினைப்பே வரவில்லை.அப்படி பார்த்தால்,எனிமேல் எந்த படமுமே எடுக்கமுடியாது.மேக்சிமம் பொசிபிளான கதைகள் எல்லாமே ஆல்ரெடி எடுக்கப்பட்டுவிட்டன.ஏதேனும் ஒன்றின் சாயல் சிறிதளவு இருக்கலாம்.அதற்காக பார்க்கக்கூடிய ஒரு நல்ல படத்தை கண்டமேனிக்கு விமர்சிப்பது எந்தவகையில் அவசியம் என்று புரியவில்லை.

'விண்ணைத்தாண்டி வருவாயா'க்கு பின்னர்,தியேட்டரில் பெரும்பாலானோர் கண்கள் கலங்கியிருக்க கண்டது,இந்த படத்தின் போது தான்.சிலர் அழுதுவிட்டிருந்தனர்.இந்திக்காரனுக்கு தமிழ் படமோ,தெலுங்கருக்கு ஈரானிய படமோ தமிழனுக்கு சிங்கள படமோ பிடித்துவிடாது.அந்தந்த சமூகத்துக்கு எந்தெந்த படங்கள் 'சூட்'ஆகுதோ,அந்தந்த படங்களை தான் எடுக்கமுடியும். அதை தான் மக்கள் ரசிப்பார்கள்.மாறாக தமிழ் நாட்டில் ஈரானிய கொரிய படங்களை எடுத்துவிட்டு தியேட்டருக்கு ஒருவரும் வருகிறார்களில்லை என்று மீடியாவை கூட்டி ஒப்பாரி வைப்பதில் எந்த பயனும் கிடையாது.

எவ்வித காழ்ப்புணர்வுகள்,கட்டாயம் கலாய்த்தே ஆகவேண்டும்,அல்லது 'காமென் மேன்'கள் அதிகம் விரும்பும் படங்களை நாறடித்து தங்களுக்கு உயர் ரசனை என காட்டிக்க வேண்டும் என்கின்ற எந்த நிர்ப்பந்தங்களும் இல்லாமல் ராஜா ராணியை பார்க்க செல்பவர்கள்,கட்டாயம் படத்தை ரசித்திருப்பார்கள் எனலாம்.ஆர்யாவுக்காக சென்ற பெண்களுக்கும்,நயன்+நஸ்ரியாவுக்காக சென்ற ஆண்கள் கூட்டத்துக்கும் ஹீரோ-ஹீரோயினை தாண்டி படம் கவர்ந்திருக்கிறது.இயக்குனர் அட்லி நிச்சயம் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக மிளிர்வார்.ஒரு சில காட்சிகள் தவிர,பெரும்பாலான காட்சிகளில் தனித்துவம் காட்டுகிறார்.பாடல் காட்சிகள் அழகு.ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸும் காரணமாக இருக்கலாம்.

ஆர்யா,நயன்தாரா,ஜெய்,நஸ்ரியா என்று அனைவருக்கும் நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் இருக்கிற பாத்திரங்கள்.ஆனால் ஆர்யாவுக்கு நடிப்பு சுத்தம்!ஜெய்,நயன்தாரா இருவரையும் குறிப்பிட்டு சொல்லலாம்.அதிலும் நயன்தாரா சொல்லவே வேண்டாம்..!உண்மையிலுமே வியக்கவேண்டிய பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறார் நயன்..!இத்தனை பிரச்சனைகளுக்கு பின்னரும் இத்தனை அழகாக,கட்டுக்கோப்பாக மெய்ண்டெய்ன் செய்வதோடு மட்டுமல்லாது நடிப்பிலும் மெருகேறி இருக்கிறார்..!நயனின் இடத்தை நஸ்ரியாவால் பிடிக்கமுடியாது.ஒரு பதுமையாக பார்த்தால் நஸ்ரியா அழகாக இருக்கலாம்,குறும்புகளினால் சிலிர்க்க வைக்கலாம்.ஆனால் நடிப்பென்று வருகையில் நயனின் இடத்தை அடிச்சிக்க முடியாது நஸ்ரியா!சில இடங்களில் பாத்திரங்களை அழவைத்து பார்வையாளர்களை அழ வைக்க முயற்சித்திருக்கும் அட்லி,வேறு சில இடங்களில் நிஜமாகவே கண் கலங்க வைத்துவிடுகிறார்.

சத்தியராஜ் இது எத்தனையாவது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் இடையிடையே சில படங்களில்,முக்கிய பாத்திரங்களில் வந்துசெல்கிறார்.படத்தில் சந்தானம் இருக்கிறார்.ஆனால் கிச்சு கிச்சு பெரிதாக கிடைக்கவில்லை.படத்தை இன்னமும் கொஞ்சம் மினக்கெட்டு ட்ரிம் பண்ணியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.ஆனால் இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் குப்பைகளின் மத்தியில் இது கொஞ்சமேனும் ரசிக்கத்தக்க படைப்பு!பலருக்கு பிடித்திருக்கிறது..படம்வந்து ஒரு கிழமை தாண்டிவிட்ட பின்னரும் கூட தியேட்டருக்கு வரும் கூட்டம் அதற்கு சான்று.கட்டாயம் ஒரு தடவை பார்க்கலாம்.70/100..!

இன்றைய தமிழ் சினிமாவில்,மகேந்திரன்களும் மணிரத்தினங்களும் இல்லாத இடத்தை ஓரளவுக்கேனும் நிரப்ப அட்லி போன்றவர்கள் தேவைப்படுகிறார்கள். இல்லை,அவர்களும் வேண்டாமெனில்,'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்களை வரிசையில் வரவேற்றுத்தொலையுங்கள்.

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...