Tuesday, November 16, 2010

என் காதலை பிடித்தால் என்னையும் பிடிக்கும்..!!


நினைவுகள் உன்னை
காதலிக்கின்றன..
உணர்வுகள் ஒன்றித்து
உறவாடுகின்றன..
மனம் மட்டும் மறுக்கிறதே
நான் உன்னை காதலிப்பதை!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!



விடிவெள்ளி உன்
கண்ணில்
உறங்குவதாலோ கண்ணே..
நாள் முழுதும் உன் முன்னே
விழித்திருக்கிறேன்..!!


காதல் பிடித்த
எனக்கு
உன்னையும் பிடித்தது...
உனக்கு-என்
காதலை பிடித்தால்
என்னையும் பிடிக்கும்..!!

உங்கள் விருப்பங்கள் ஓட்டுகளாக..
விமர்சனங்கள் பின்னூட்டல்கலாக..!!

Post Comment

3 comments:

ம.தி.சுதா said...

////விடிவெள்ளி உன்
கண்ணில்
உறங்குவதாலோ கண்ணே..
நாள் முழுதும் உன் முன்னே
விழித்திருக்கிறேன்..!!////
அருமையான வரிகள் சகோதரா.. வாழ்த்துக்கள்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku nanpaa..

எஸ் சக்திவேல் said...

ம்ம்ம்ம், காதல் கவிதை எழுதிற வயதுதான் :-)

Related Posts Plugin for WordPress, Blogger...