Sunday, May 1, 2011

இன்று பதிவு போடவில்லையோ?(பதிவர்களுக்கிடையே கலந்துரையாடல்)








hi..

ஹாய்

இன்று பதிவு போடவில்லையோ?

இன்னுமில்லை
பூமி எண்டு போடுவோமா
யோசிக்கிறேன் வானம் என்ற பதிவைப்பாத்துட்டு
hahahahaa

அடிங்

அது வெறும் மொக்கை பாஸ்..
நோ நோ அப்பிடி எல்லாம் கோபப்பட கூடாது
இந்திய தமிழை விடுத்து நம்மட தமிழில் எழுதினால் என்ன
அனேக இடங்களில் உங்களிடம் நான் பார்க்கிறேன்
அதான் கேட்டேன்
தப்பா நினைக்கவேண்டாம்
பேசிக்கொள்ள படத்தில வரும் வார்த்தைகளை
நாமும் பயன்படுத்தவேண்டுமா
சற்று யோசிக்க
பிடித்தால் மாற்றுக
இல்லை இல்லை..அதுவும் சரி தான்..
நானும் அதை விரும்புகிறேன்...
ஆனால் வாசகர்களில் அரைவாசிக்கும் மேல் இந்தியர்கள்.
ஆகவே அவர்கள் பாணியிலும் போவது தவிர்க்கமுடியாதது என்றாகிவிட்டது.
இல்லையேல்

மற்றம்படி ஓகே...

இல்லை இந்தியர்களோடு நீங்கள் உங்களது தமிழில் பேசிப்பாருங்க
இப்படி எழுதினால் என்ன எண்டு கேப்பாங்கள்
உத விட்டுப்போட்டு நீங்க அவங்களுக்காக மட்டும் எழுதுறது எண்டா
நாங்க பார்க்கக்கூடாதா
வாசிக்ககூடாதா
சும்மா கேட்டேன்
மனசுக்க வைச்சிருக்க விரும்பாமல் சொதப்பிட்டன்
மன்னிக்க
அது சரி தான் பாஸ்..
நானும் முயற்ச்சிக்கிறேன்..
ஆனால் எங்கள் வழமையான பேச்சு நடையில் எழுதும் போது அது இலகுவாக இருக்கிறது..
எழுத்து நடையை கவனிக்க வெளிக்கிடும் போது பதிவு ஒன்று போடவே நேரம் அதிகம் போய்விடும்..
அதோடு அவ்வாறும் போடப்படும் பதிவில் ஏதும் பிழை என்றால் அப்பட்டமாக தெரிந்துவிடும்..
பேச்சு வழக்கில் எழுதுவதில் அந்த குறை இல்லை...
சிலதுகளை எழுதலாம் எல்லாவற்றையும் மாத்தவேண்டாம்
இல்லையா
yaa

தோணிச்சு அவ்வளவு விடுங்கண்ணே
சொல்லிப்புட்டேன்
விடுங்கண்ணே
நன்றி நானும் முயற்ச்சிக்கிறேன்..
இலங்கை தமிழை காப்பாற்ற வேண்டிய கட்டாயப்பாடு எங்களுக்கும் இருக்கிறது
எழுதுங்க
இலங்கைத் தமிழிழ் தமிழ் உயிர் தெரியும்
இல்லன்னா நானும் பல தடவை ஜோசித்த விடயம் தான்..
முயற்ச்சிப்போம் வரும் காலங்களில்

முயற்சிக்க
நன்றி
குழப்பிட்டேன்
மன்னிக்க
இதில் என்ன இருக்குது...மன்னிப்பு கேக்க??

ok ok

thankzz

continue

u tooo

tc bye for now
இரவு வணக்கங்களோடு விடைபெறுகிறேன்
இனிய கனவுராத்திரிகளாகுக
அம்மா...கொன்னுட்டீங்கன்னே!!
நன்றி..இரவு வணக்கம்


இது நேற்று இரவு,எனக்கும்,இலங்கையில் இன்னொரு பதிவர் ரமேஷ் சிவா'க்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்.
பதிவுலகத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்காக:
யாராவது இவ்வாறு "சட்" பண்ணுவதுண்டா??
பதிவுலகில் இருப்பதால் நாங்கள் பண்ணுகிறோம்!!

தமிழ் திரைப்படங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தவை என்பதால் அவற்றின் தாக்கம்
எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை..
ஆனால் சிறந்த தமிழில் பதிவுகளை இடுவதற்கு நாம் முன்வருவதில் எனக்கு
தயக்கமில்லை..
என்ன,எனது பதிவுகள் பெரும்பாலும் மொக்கை பதிவுகள் என்பதால்,
அவற்றை எழுத்து நடையில் எழுத்துகையில் அந்த மொக்கைக்கான
தாக்கம் இல்லாமல் போய்விடும்...
பார்க்கலாம்..
உங்கள் ஆலோசனைகளையும் கூறுங்கள்..
ஆரோக்கியமான பதிவுகளுக்கு வழிவகுக்கும் நண்பர்களே!!

குறிப்பு:எனது வானம் விமர்சனம் பார்த்து நொந்தவர்களுக்கு ஆதரவாக வடிவேல் அரிவாளோடு!!
நான் எஸ்கேப்!!

22 comments:

  1. போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...

    ReplyDelete
  2. பார்ரா! எவ்வளவு பொறுப்பா இருக்கான் பயபுள்ள!

    ReplyDelete
  3. ரமேஷ் சிவா? சிதறல்கள் ரமேஷா?

    ReplyDelete
  4. //மொக்கை பதிவுகள் என்பதால்,
    அவற்றை எழுத்து நடையில் எழுத்துகையில் அந்த மொக்கைக்கான
    தாக்கம் இல்லாமல் போய்விடும்...//

    உண்மைதான் பாஸ்

    ReplyDelete
  5. ஆனாலும் சிறிதளவாவது முயற்சி செய்து பார்க்கலாமே?

    ReplyDelete
  6. டேய்.... அடங்கமாட்டிங்களா நீங்க...

    ReplyDelete
  7. புதிய முயற்ச்சி

    ReplyDelete
  8. பாஸ் நீங்க தொடருங்க நாங்க உங்க பின்னாலே தொடருறம்

    ReplyDelete
  9. எழுத எழுதவே எழுத்து வசமாகும். ஏதும் எழுதாமல் மற்றவர்களை வசை பாடுபவர்களை விட மொக்கை என்றாவது, ஏதேனும் எழுதுபவர்கள் சிறந்தவர்கள் தான்.
    யாரும் இங்கே வானத்திலிருந்து குதித்து விடவில்லை, முதல்முதல் எழுதும்போதே சாகித்திய அகடமி அளவில் எழுத, தொடர்ந்து எழுதுங்கள் சகோ உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்குங்கள்...
    மற்றபடி முதல் பின்னூட்டத்தில் றமேஷ் சொன்னது போல தான் போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...

    ReplyDelete
  10. ம்ம்ம்..நடத்துங்க..நடத்துங்க.. :)

    ReplyDelete
  11. நல்லா எழுதுங்க பாஸ்....

    ReplyDelete
  12. தமிழ்மணம் ஏழாவது ஓட்டு என்னுது ஹி ஹி ஹி ஹி....

    ReplyDelete
  13. என்னய்யா எல்லாரும் சிரிச்சிட்டே போறீங்க??
    என்னான்னு சொல்லிட்டு போங்கையா..
    கஷ்டப்பட்டு மொக்க பதிவு போட்டா சிரிக்கமாட்டானுகள்..
    சீரியஸா ஒரு பதிவு போட்டால் சிரிக்கிரானுகள்!

    ReplyDelete
  14. ஜீ... said...

    ரமேஷ் சிவா? சிதறல்கள் ரமேஷா? //

    ஆமா அவரே தான்!!

    ReplyDelete
  15. //பாரத்... பாரதி... said... எழுத எழுதவே எழுத்து வசமாகும். ஏதும் எழுதாமல் மற்றவர்களை வசை பாடுபவர்களை விட மொக்கை என்றாவது, ஏதேனும் எழுதுபவர்கள் சிறந்தவர்கள் தான்.
    யாரும் இங்கே வானத்திலிருந்து குதித்து விடவில்லை, முதல்முதல் எழுதும்போதே சாகித்திய அகடமி அளவில் எழுத, தொடர்ந்து எழுதுங்கள் சகோ உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்குங்கள்...
    மற்றபடி முதல் பின்னூட்டத்தில் றமேஷ் சொன்னது போல தான் போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...//
    ஊக்கங்களுக்கு நன்றிகள் நண்பரே!!

    ReplyDelete
  16. பதிவுலகத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்காக:
    யாராவது இவ்வாறு "சட்" பண்ணுவதுண்டா??
    பதிவுலகில் இருப்பதால் நாங்கள் பண்ணுகிறோம்!!//

    நல்லாத் தானே போய்கிட்டிருக்குது, ஏன் ஏன் இந்தக் கொல வெறி.

    ReplyDelete
  17. சகோ, நகைச்சுவைகளையோ, ஒரு சம்பவத்தையோ எழுத்து தமிழில்/ இலக்கணத் தமிழில் இலகுவாக சொல்ல முடியாது.

    இவற்றினை பேச்சுத் தமிழில், ஊர் வட்டார வழக்குடன் சொல்லும் போது தான் அந்தச் சம்பவங்களுடன் உள்ளார்ந்து நாமும் படிப்பது போன்ற உணர்வு ஏற்படும்,

    மொக்கைப் பதிவுகளுக்கோ, சம்பாஷணைகளுக்கோ, வட்டார வழக்கினையும், பேச்சுத் தமிழையும் பயன்ப்டுத்துவது தவறில்லை எனும் உங்கள் கருத்தினை நானும் ஏற்கிறேன்.

    ReplyDelete
  18. நீங்கள் எழுதுங்கள் நான் படிக்கிறேன் பிறகு பின்னுட்டம்  இடுகிறேன் எப்படி என்று மாப்பூ வைக்காதீங்க கடுப்பேத்தி வானம் வந்தாச்சு !

    ReplyDelete
  19. எடுத்துக்கொண்ட விடையத்தைப்பற்றி எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது அந்த வகையில் உங்கள் திறமைகளை பலபதிவுகள் நிருபித்துள்ளன நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள்.

    அத்தோடு விரைவில் உங்கள் தளத்துக்கு எனது தளத்தில் இணைப்புக்கொடுக்கவுள்ளேன் .

    வாழ்க வழமுடன்

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!