Wednesday, March 23, 2011

அஞ்சு பேருக்கு ஒரு மனைவியா??

அடுத்தவன் ஆத்திலே
என்ன குளறுபடி??
விடுப்பு நோக்கியபடி இல்லறத்தி..
அடுப்பு ஊதுகிறான்
கணவன்!!


அரவம் கேட்டு
கண் முழித்தேன்
இராப்பொழுதில்..
உன் உருவம் வந்ததென்னவோ
கனவில் தானே??


அழகான பூக்களெல்லாம்
உனைக் கண்டதும்
உதிர்ந்து விடுகிறனவே..
தாழ்வு மனப்பான்மைக்கு
ஒரு அளவு இல்லையா??


காதல் கவிதைகளுக்கு
முடிவேன்பதேது..
இவ்வுலகில்
நம் போன்ற
காதலர்கள் வாழ்கின்ற போது!!

<

பத்தி ஐவர்
ரதி ஒருத்தி
இதிகாசம் சரியெனில்
பரிகாசம் எதற்கு
இன்று நம் கலாசாரம் மேல்!!

இது சும்மா லுல்லுலூ@!!

13 comments:

  1. மாப்ள படிச்சிட்டு வர்றேன்..

    ReplyDelete
  2. தலைபபபைபார்த்துட்டு என்மோ ஏதோன்னு வந்தா என்ன இது.. சின்ன புள்ளதனமா...

    ReplyDelete
  3. சரி வந்த வேளை முடிஞசது கிளம்புறேன்..

    ReplyDelete
  4. நானும் வந்துட்டேன்...

    ReplyDelete
  5. nice mynthan boss............

    ReplyDelete
  6. நல்லா இருக்கு பாஸ் ..

    ReplyDelete
  7. அடுத்தவன் ஆத்திலே
    என்ன குளறுபடி??
    விடுப்பு நோக்கியபடி இல்லறத்தி..
    அடுப்பு ஊதுகிறான்
    கணவன்!!//

    வணக்கம் சகோ, இது தற்கால யதார்த்தக் கவிதை. நகைச்சுவையாக இருக்கிறது.

    ReplyDelete
  8. அரவம் கேட்டு
    கண் முழித்தேன்
    இராப்பொழுதில்..
    உன் உருவம் வந்ததென்னவோ
    கனவில் தானே??//

    எல்லோர் கனவிலும் பேய்கள் வருவது பற்றித் தான் அறிந்திருக்கிறேன். ஆனால் தங்கள் கனவில் கொஞ்சம் வித்தியாசமாகப் பாம்பு வந்திருக்கிறது. நடுக்கத்திலை படுக்கையறை நனையவில்லையோ?

    ReplyDelete
  9. பத்தி ஐவர்
    ரதி ஒருத்தி
    இதிகாசம் சரியெனில்
    பரிகாசம் எதற்கு
    இன்று நம் கலாசாரம் மேல்!!//

    இன்றைய கால கலாச்சாரத்தை இலகுவான முறையில் சொல்லியிருக்கிறீர்கள். சிறிய கவிதை என்றாலும் காரம் அதிகம்...

    ReplyDelete
  10. //அழகான பூக்களெல்லாம்
    உனைக் கண்டதும்
    உதிர்ந்து விடுகிறனவே..
    தாழ்வு மனப்பான்மைக்கு
    ஒரு அளவு இல்லையா??

    சூப்பர் பாஸ்... உண்மையிலேயே அருமையான வரிகள்.

    ReplyDelete
  11. மாப்ள அடடா எப்படியா இதெல்லாம் ஹிஹி!

    ReplyDelete
  12. அட காதல் கவிதையா ? கலக்கலாயிருக்கே.. இல்ல இல்ல இது இல்லறக் கவியோ ?

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பதிவுலகில் சமூகபதிவாளனாக என்னை முத்திரை குத்திய முக்கிய சாதனை
    இனி வரும் பொழுதுகளில் தங்கள் தளத்திற்கு வாரம் ஒரு தடவையே வர முடியும் என்பதை மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்...

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!