Friday, September 3, 2010

பதினெட்டு வயதில்!!





இதுவும் ஒரு புதிய முயற்சி தான்..எப்போதும் தனியே கவிதைகளை மட்டும் பதிவிடுவதன் மூலம் உங்கள் கடுப்பை கிளறிவிடுவதை தவிர்ப்பதற்காக இன்று வித்தியாசமாக ஏதும் பண்ணலாமே என்று எண்ணிக்கொண்டு கழிவறையில் உட்கார்ந்து சிந்த்தித்துக்கொண்டிருந்த போது என் பொறியில் (அதாங்க மூளையில்)தட்டியது இந்த எண்ணம்!

இது வரை வந்த தமிழ் திரை இசை பாடல்களின் முதல் வரியை மட்டும் வைத்து கோர்வை ஆக்குவதன் மூலம் ஒரு "கவிதை"?? என்ற வடிவில் பதிவிடலாமே என்று முயற்ச்சித்தேன்..அதன் வெளிப்பாடு தாங்க இது!
"தமிழ்ப்படம"என்று அவங்க உல்டா பண்ணி பண்ணும் போது..நாம பதிவர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன!!
அது சரி அதுக்கும் தலைப்புக்கும் என்ன சம்பந்தமெண்டு தானே கேக்குறீங்க..என்ன பண்ணுறது இப்பிடி கிளுகிளுப்பா தலைப்பு வைச்சா தான் நம்ம இளைய சமுதாயத்துக்குபிடிக்குது!!
சரி இப்ப பாருங்க..பாத்திட்டு இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கு பார்த்த மாதிரி இருக்கு எண்டு பின்னூட்டமிட்டீன்களோ...விளைவுகளுக்கு நான் பொறுப்பாளி இல்லைங்கோ!!

ரு மாலை இளவெயில் நேரம்..
வராக நதிக்கரையோரம்..
கருகரு விழிகளால்
கண்கள் இரண்டால்
சுட்டும் விழி சுடரே
உயிரே உயிரே
அஞ்சலி அஞ்சலி
என் காதலே!
மார்கழிப்பூவே
மலரே மௌனமா?

ரு பொய்யாவது சொல் கண்ணே
சொல்லாயோ சோலைக்கிளி?
ஏன் பெண்ணென்று பிறந்தாய்?
மனசுக்குள்ளே காதல் வந்திச்சா?
முதல் முதலாய்?
லேசா லேசா?
மனப்பெண்ணே!
நேற்று இல்லாத மாற்றம் என்னது?
ரகசிய கனவுகள்..
சின்ன சின்ன ஆசை
இருபது கோடி நிலவுகள் கூடி
பூங்காற்றிலே உன் சுவாசத்தை
இரவா பகலா
முன் பனியா..
அது ஒரு காலம் அழகிய காலம் !!

வேறென்ன வேறென்ன வேண்டும்
புது வெள்ளை மழை
மின்னலே நீ வந்ததேனடி?
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ!
அழகிய லைலா!
என்னை கொஞ்சம் மாற்றி..

தினெட்டு வயதில்
அலைபாயுதே!
பால் போல பதினாறில்
அழகான புள்ளி மானே
ஈரமான ரோஜாவே
கண்ணே கலைமானே
கேளடி கண்மணி
உசிரே போகுதே உசிரே போகுதே
டெலிபோன் மணி போல்!
சௌக்கியமா கண்ணே?
அந்தி மழை பொழிகிறது!
சொட்ட சொட்ட நனையுது
என்ன இது என்ன இது..!!

ன்ன விலை அழகே
எவனோ ஒருவன்
எங்கேயோ பார்த்த மயக்கம்
மனம் விரும்புதே உன்னை உன்னை!
நீ நடந்தால் நடை அழகு!
சிறு பார்வையாலே கொன்றாய் என்னை
இரு விழி உனது!
தாலியே தேவையில்லை நீ தான் என் பொண்டாட்டி!

சரி என்ன தான் கோபதாபங்கள் இருந்தாலும் சொல்லிட்டு போங்கோ..பிடிச்சிருந்தா ஓட்ட போட்டு போங்கோ!



14 comments:

  1. புதிய முயற்சி..வாழ்க!

    ReplyDelete
  2. மொக்கை தலை வாழ்க!!சூப்பர் முயற்சி

    ReplyDelete
  3. Anonymous said...

    புதிய முயற்சி..வாழ்க!//

    நன்றிகள்.

    ReplyDelete
  4. jorge said...

    மொக்கை தலை வாழ்க!!சூப்பர் முயற்சி//


    ஏனப்பா?ஏன் இந்த கொலை வெறி!!

    ReplyDelete
  5. மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...

    ReplyDelete
  6. //கழிவறையில் உட்கார்ந்து சிந்த்தித்துக்கொண்டிருந்த போது//
    இத விட ஒரு நல்ல இடம் நமக்கு யோசிக்க இந்த உலகத்தில இருக்கா என்ன!!!
    பதிவு கலக்கல்...

    ReplyDelete
  7. கழிவறையில் சிந்தித்த கவிதை வாசல் வரைக்கும் வந்துவிட்டது அருமை...

    ReplyDelete
  8. வெறும்பய said...

    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...
    மைந்தன் சிவா வாழ்க...//

    என்ன அண்ணே அரசியல் கூட்டமா போடுறோம்??
    நான் ஒன்னும் இலவச கலர் டிவி குடுக்கலையே..அப்புறம் எதுக்கு?

    ReplyDelete
  9. AnushangR said...

    //கழிவறையில் உட்கார்ந்து சிந்த்தித்துக்கொண்டிருந்த போது//
    இத விட ஒரு நல்ல இடம் நமக்கு யோசிக்க இந்த உலகத்தில இருக்கா என்ன!!!
    பதிவு கலக்கல்...//

    அது தானே!!பல கலைஞர்களின் பிறப்பிடமாச்சே!!

    ReplyDelete
  10. மகாதேவன்-V.K said...

    கழிவறையில் சிந்தித்த கவிதை வாசல் வரைக்கும் வந்துவிட்டது அருமை...//


    நன்றி நன்றி!

    ReplyDelete
  11. புதிய முயற்சி..பாடல் வரிகளை அழகாக கோர்த்துள்ளீர்கள் அருமை!தொடருங்கள்!

    ReplyDelete
  12. நல்லாய் இருக்கிறது.

    ReplyDelete
  13. நன்றி நண்பரே..

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

பிடித்திருந்தால் மட்டுமே உங்கள் வாக்குகள் கருத்துரைகளை வழங்குங்கள்.
யாரையும் வற்புறுத்தி வாங்க நினைக்கவில்லை..!!