Friday, July 30, 2010

கவிதாயினி தாமரை



பிறப்பு :கோயம்புத்தூர், தமிழ்நாடு
தொழில் :கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், ஊடகவியலாளர்
எழுதிய காலம்:1999—இன்று

தாமரையின் Website: http://kavithayani.blogspot.com/

கவிதாயினி தாமரை ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் பெண் கவிஞர் மற்றும் திரைப்பட பாடலாசிரியர்.

கோவையில் பிறந்த தாமரை, எந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார்.


இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக தென்றல் எந்தன் நடையைக் கேட்டது என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். "வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ... எனப் புகழ்மிக்க பாடல்கள் உள்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். தனக்கென ஒரு கொள்கை, வழிமுறை, இலக்கு ஆகியவற்றைக் கொண்ட இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி மிகச்சிறந்த வெற்றிப் பாடல்களை தந்துள்ளது.
ஈழநேசன் இணையதளத்திற்காக தனிப்பட்ட முறையில் தாமரை அளித்த பேட்டியைக் கீழே காணலாம்.

கேள்விகள்..
இரட்டை அர்த்தக்கலப்பற்ற.. மெல்லிய உணர்வுகளைக் காட்டக்கூடிய நல்ல தமிழ் வார்த்தைகளால் ஆன பாடல்களைத் தருவதற்கு நீங்கள் தனியாக முயற்சி எடுக்க வேண்டி இருக்கிறதா?

ஆமாம், நான் திரைப்படங்களில் பாடல் எழுத வந்து 12 வருடங்களாகின்றன. அப்பொழுது ஆங்கில வார்த்தைகளும் இரட்டை அர்த்தங்களுமான பாடல்கள் வெற்றிப்பெற்றுக் கொண்டிருந்த காலம் தான். வரும்போதே அப்படியான பாடல்களை எழுதமாட்டேன் என்று ஒரு முடிவெடுத்துத்தான் எழுத வந்தேன்... வாய்ப்புக் கிடைப்பதே அபூர்வமாக இருக்கும்; அல்லது வாய்ப்பே கிடைக்காது. நான் நிபந்தனை போடக்கூடிய நிலையும் இல்லை. ஆனாலும் நான் உறுதியாக இருந்தேன். நான் நினைப்பது போல எழுத வாய்ப்புக் கிடைத்தால் எழுதுவது, இல்லை என்றால் அந்த வாய்ப்பே வேண்டாமென்று இருந்தேன். அப்படி எத்தனையோ பாடல்களை நிராகரித்திருக்கிறேன். காலப்போக்கில் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி நல்ல அழகான பாடல்களாக எழுதும்போது அதுவே ஒரு அடையாளமாகி வெற்றிகளைப் பெற்று தந்திருகிறது.

முன்பெல்லாம் வானொலியில் கவிஞர்களைப் பற்றியும் பாடல்களை எழுதியபோதான சுவாரசியங்களையும் தொகுத்துப் பேசி பாடல்களை அளிப்பார்கள்.. இப்போது தொலைக்காட்சி, வானொலி ஏன் இணையம் என்பது ஒரு வரலாற்றுக் குறிப்பாக மாறிவருகிற காலகட்டத்தில் இணையத்திலும் கூட கவிஞர்களைப் பற்றிய அதிக குறிப்புகள் இருப்பதில்லை. இது பற்றி உங்கள் கருத்து?


இது ஒரு வருத்தமான விசயம்..கவிஞர்களுக்கான மரியாதை தரப்படவேண்டும்.. .குறுந்தகடுகள் ஒலிநாடாக்கள் வருகிறது இல்லையா? பலசமயங்களில் குறுந்தகடு வெளிவந்தபின் தான் எங்களுக்குத் தெரியவரும். அவர்கள் கவிஞர்களின் பெயரைக் குறிப்பிடத்தவறி இருக்கலாம், அல்லது ஒருபடத்துல நிறைய கவிஞர்கள் எழுதறாங்க .. அப்போழுது குறுந்தகட்டில் ஒன்றாகச் சேர்த்துப் போட்டு இருப்பாங்க.. எந்தப் பாட்டு யாரு எழுதினார்கள் என்று தெரியாது. . தற்பொழுது வெளிவந்த ஒரு திரைப்படக் குறுந்தகட்டில் கவிஞர்கள் பெயரே இல்லை..என்ன செய்வது நாம ? கண்டிக்கப்படவேண்டிய விசயம்தான் இது.

தாய்த் தமிழ்ப் பள்ளிக்கான உங்கள் (ஆர்வம்) ஆதரவு ,விரிவாக்கம் பற்றிச் சொல்லுங்களேன்?

ஆதரவுன்னு சொல்வதை விட அந்த முறையை சென்னையில் , அம்பத்தூர்ல ஆரம்பித்தது என் கணவர் தியாகு. இதே போன்ற பள்ளிகள் இன்று தமிழ்நாட்டில் 20 , 25 பள்ளிகள் இருக்குன்னு சொல்றாங்க.. அவற்றுக்கு முன்னோட்டம் எங்கள் பள்ளி. தமிழ்க் குழந்தைகள், தமிழ்வழியில் , தாய்மொழியில் படிக்கணும்னு முயற்சி எடுத்து தொடர்ந்து செய்து வருகிறார்.

இப்ப 5 ஆம் வகுப்பிலிருந்து 6 ஆம் வகுப்பு வரை என்றாகி இருக்கிறது. பள்ளியின் முதல்மாணவி இன்று பொறியியற் கல்லூரியில் சேர்ந்து பட்டமே வாங்கிட்டாங்க.. .இடம் வசதியும் போதவில்லை..உயர்நிலைப் பள்ளியாக்க உதவி தேவைப்படுகிறது. உதவி கிடைத்தால் கல்லூரிவரை கூடச் செய்யலாம்..

விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?

விருதுகளை நான் முக்கியமாக நினைப்பதில்லை . கவிஞர்கள் விருதைத் தாண்டி இருக்கவேண்டும் என்றும் நினைக்கிறேன். ஆரம்பக்கட்டங்களில் விருதுகள் ஊக்கமளிக்கலாம்.. எழுத்துக்கு அங்கீகாரமாகவும் , பரவலாகப் பலருக்கும் சென்று சேர்வதற்கும் அவை பயன்படலாம். ஒருகட்டத்தில் விருதுகளைத் தாண்டி நாம வளர்ந்துரனும். தகுதியான விருதுகளைப் பெற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தகுதியற்ற விருதுகளை மறுக்கவும் செய்யவேண்டும் . தமிழகஅரசு விருது, மக்களோட வரிப் பணத்துல இருந்து கிடைப்பது அந்த ஒரு காரணத்துக்காக அதை வாங்கலாம்ன்னு எனக்குத் தோணும்.. ஆனா எந்த விருதுகளா இருந்தாலும் அரசியல் இல்லாமல் உண்மையான நடுவர்குழு அமைத்துத் தேர்ந்தெடுக்கப்படனும்.

மற்றபடி விருதே வேணாம்ன்னு ஒரு நிலை எனக்கு வரனும்ன்னு நினைக்கிறேன்.. மக்கள் நினைக்கனும், இவர்களுக்கு விருதுகொடுக்கலையே, கொடுத்திருக்கலாமேன்னு நினைக்கனும்..இவங்களுக்குக் குடுத்துட்டாங்களேன்னு நினைக்கக்கூடாது..(சிரிக்கிறார்)

தாமரையின் புகழை மேலும் ஒங்கச்செய்த பாடல்களில் இதுவும் ஒன்று!

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை,
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சற்றென்று மாறுது வானிலை,
பெண்ணே உன் மேல் பிழை…

நில்லாமல் வீசிடும் பேரலை,
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காரிகை,
பெண்ணே நீ காஞ்சனை…

ஒ ஷாந்தி ஷாந்தி ஒ ஷாந்தி…
என் உயிரை உயிரை நீ ஏந்தி…
ஏன் சென்றாய் சென்றாய் என்னை தாண்டி…
இனி நீ தான் எந்தன் அந்தாதி… (நெஞ்சுக்குள்)

ஏதோ ஒன்று என்னை ஈர்க்க
மூக்கின் நுனி மர்மம் சேர்க்க
கள்ளத்தனம் ஏதும் இல்லா
புன்னகையோ போகன்வில்லா

நீ நின்ற இடமென்றால்
விலை ஏறிப் போகாதோ
நீ செல்லும் வழியெல்லாம்
பனிக்கட்டி ஆகாதோ

என்னோடு வா வீடு வரைக்கும்
என் வீட்டைப் பார் என்னைப் பிடிக்கும்

இவள் யாரோ யாரோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே
இது பொய்யோ மெய்யோ தெரியாதே
இவள் பின்னால் நெஞ்சே போகாதே… போகாதே…

தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
ஏக்கங்களை தூவிச் சென்றாய்
உன்னைத் தாண்டிப் போகும்போது
வீசும் காற்றின் வீச்சு வேறு

நில்லென்று நீ சொன்னால்
என் காலம் நகராதே
நீ சூடும் பூவெல்லாம்
ஒரு போதும் உதிராதே

காதல் எனைக் கேட்கவில்லை
கேட்டால் அது காதல் இல்லை

என் ஜீவன் ஜீவன் நீதானே
எனத் தோன்றும் நேரம் இதுதானே
நீ இல்லை இல்லை என்றாலே
என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே...

Post Comment

Wednesday, July 28, 2010

கதாநாயகிகள் மேல் என் கண்கள்!


ஒருத்தனுடன் இருந்தபோது
நீ "நல்ல" தாரா!
இரண்டாமவன் சேர்ந்தபோது
நீ "நாறல்"தாரா!
இரண்டாவதோடாதல் நீ
இறுக்கமாய் இரு!!


உலக அழகிகள் பலர்!
உன் அழகாலே
உள்ளம் கொண்ட
உலக அழகி
நீ மட்டுமே!


சஞ்சய்'யை பிடித்த
நீ தஞ்சை
போய் இருக்கலாமே!
பிடிக்கும் உன்னை நீ
இலங்கை வரும்
வரை!


வெளிறிய வெள்ளை
என்றார்கள்
தங்கப்பதுமை தமன்னா
எனக்கென்னமோ உந்தன்
குறும்புகள் பிடித்துப்
போய்விட்டன!!


திரிஷாவே சோப்பு
போட்டு குளிக்கிறாள்
உனக்கென்ன பஞ்சி
சோப்பு போடுடா
என்கிறனர் நண்பர்கள்!!


மற்ற கதாநாயகிகள்
காட்டாததை காட்டியே
மயக்கி விட்டாய்!
அத்துணை அழகு
உந்தன் கரு விழிகள்!!

Note:
பிடித்திருந்தால் மறக்காமல் ஒட்டு போட்டு செல்லுங்கள்!!ஒவ்வொரு ஓட்டுக்கும் ஒரு கலர் டிவி இலவசம்!!

Post Comment

Monday, July 26, 2010

பாரதிக்காக மீசை குறைத்த பாரதிதாசன்!




செம்மொழி மாநாட்டின்“தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு கவிஞர் வாலி தலைமை தாங்கி, தனது தலைமைக் கவிதையினை வாசித்தார்.

அதில், ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்று பாடிய, பாவேந்தர் பாரதிதாசன் தமது குருவாகிய பாரதியாரையே கவிதையில் மிஞ்ச வேண்டும் என்று அகத்தில் ஆசை வைத்தாலும், குருவை மிஞ்சும் அளவிற்கு முகத்தில் மீசை வைக்க வில்லை’ என்று அவர் குறிப்பிட்டார்.


இதோ அந்தக் கவிதை :-

தமிழுக்கு அமுதென்று பேர்!
அடடா!

இந்த ஒரு வாசகம்-
இணையற்ற பெருவாசகம்; இது-
இங்குள தமிழர்க்கெல்லாம்
இன்னுமொரு திருவாசகம்!


இந்தத்-
திருவாசகத்தை அருளிய
தீந்தமிழ்க் கவிஞன்...


பெருமாளைப் பாடிய-
நாயன்மாரில் ஒருவனல்ல;
பெரியாரைப் பாடிய-
நேயன்மாரில் ஒருவன்!


யாத்த கவிதைகள்
யாவையும்...


மாணிக்கம்
மாணிக்கமாய் யாத்ததால்-இவன்
மற்றொரு
மாணிக்க வசகனே!


ஆனால் ஒன்று;
இவனால்...
பரி நரியாகவில்லை;
நரி பரியாகவில்லை;


இவனால்...
வரி எரியாகியது;
எரி வரியாகியது; -அவ்
வரியில்-
எரியில்-
கண்மூடித் தனமெல்லாம்
காய்ந்து கரியாகியது!


இவன்
இருந்தமிழர் இருள் ஈக்கப்-

புதுவையில் உதித்த
புது வெயில்; இவன்-
நோவப் பிறந்தவரல்ல தமிழரென்று
கூவப் பிறந்த பூங்குயில்!

கொட்டோ கொட்டென்று
கொட்டினான் கவிப்பறை; அதில்
கந்தலோ கந்தலென்று
கிழிந்தது கீழவர் செவிப்பறை!


புரட்சிக் கவிஞன் என்று-
புகழ் பூத்து நின்ற பாரதிதாசன்...


புதிய தமிழ் நடையில்- பாக்கள்
புனைந்து தருவதில்-தனது
குருவை மிஞ்ச வேண்டுமென்று- அகத்தில்
குவித்து வைத்தான் ஆசையை;


ஆனால்
அதே நேரம்-
குருவை மிஞ்சக் கூடாதென்று- முகத்தில்
குறைத்து வைத்தான் மீசையை!


இத்தகு-
தகவார்ந்த கவிஞன் தான் அன்று- இசைத்தான்
‘ தமிழுக்கு அமுதென்று பேர்!’ என்று;


ஆம்;
அமுதும் தமிழும் ஒன்றுதான்!


அவ் அமுதம்-
பாற்கடல் தந்தது;

இவ் அமுதம்-
நூற்கடல் தந்தது;


அவ் அமுதம்-
வானவர் தானவர் கடைந்தது;

இவ் அமுதம்-
பாவலர் நவலர் கடைந்தது;


கண்ணுதல் பெருமான்-தன்
தொண்டை கொண்டு;
இந்த நஞ்சை அடக்கினான்
கவிஞர் பெருமான் -தன்
தொண்டைக் கொண்டு!


இவ்வாறு, கவிஞர் வாலி சந்தத்துடன் கவிதை வார்த்தார்.!

Post Comment

Friday, July 23, 2010

காதலித்து பார்-Vairamuththu


காதலித்து பார்,
உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்,
உலகம் அர்த்தப்படும்
இராத்திரியின் நீளம் விளங்கும்,
உனக்கும் கவிதை வரும்,
கையெழுத்து அழகாகும்,
தபால்காரன் தெய்வம் ஆவான்,
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்
கண்ணிரண்டும் ஒலி கொள்ளும்
காதலித்து பார்...


தலையனையை நனைப்பாய்
மூன்று முறை பல் துலக்குவாய்
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷம் என்பாய்
வந்துவிட்டால் வருஷங்க்ள் நிமிஷங்கள் என்பாய்
காக்கை கூட உன்னை கவனிக்காது
ஆனால் இந்த உலகம் உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா உருண்டை ஒன்று உருள காண்பாய்
இந்த வானம், இந்த அந்தி, இந்த பூமி, இந்த பூக்கள் எல்லாம்
காதலை கௌரவிக்கும் ஏற்பாடுகள் என்பாய்
காதலித்து பார்...

இருதயம் அடிக்கடி இடம் மாறி துடிக்கும்
நிசத்த அலைவரிசைகளில் உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்
உன் நரம்பே நாண் ஏற்றி, உனக்குள்ளே அம்பு விடும்
காதலின் திரைச்சீலையை காமம் கிழிக்கும்
ஆர்மோன்கள் நைல் நதியாய் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்
தாகங்கள் சமுத்திரமாகும்
பிறகு கண்ணீர் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்
காதலித்து பார்...

பூக்களில் மோதி மோதி உடைந்து போக உன்னால் முடியுமா
அகிம்சையில் இம்சையை அடைந்ததுண்டா?
அழுகின்ற சுகம் அறிந்ததுண்டா?
உன்னையே உனக்குள் புதைக்க தெரியுமா?
சபையில் தனிமையாகவும்
தனிமையை சபையாக்கவும்
உன்னாள் உன்னுமா?

அத்வைத்தம் அடைய வேண்டுமா?
ஐந்து அங்குல இடைவெளியில் அமிர்தமிருந்தும்
பட்டினி கிடந்து பழகியதுண்டா?
காதலித்து பார்...

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே அதற்க்காகவேணும்
புலங்களை வருத்தி புதிர்ப்பிக்க முடியுமே அதற்க்காகவேணும்
ஆண் என்ற சொல்லுக்கும், பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தங்கள் விலங்குமே அதற்க்காகவேணும்
வாழ்ந்து கொண்டே சாகவும் முடியுமே
செத்துக்கொண்டே வாழவும் முடியுமே , அதற்க்காகவேணும்
காதலித்து பார்...

சம்பிரதாயம் சட்டை பிடித்தாலும்
உறவுகள் உயிர் பிழிந்தாலும்
விழித்து பார்க்கையில் உன் தெருக்கள் களவு போய் இருந்தாலும்
ஒரே ஆணியில் இருவரும் சக்கனை சிலுவையில் அறையபட்டாலும்
நீ நேசிக்கும் அவனோ அவளோ உன்னை நேசிக்க மறந்தாலும்
காதலித்து பார்...

சொர்கம், நரகம் இரண்டில் ஒன்று இங்கேயே நிச்சயம்
காதலித்து பார்.........

Post Comment

Thursday, July 22, 2010

சாதனை நாயகனுக்கு ஒரு சலாம்!!


முரளி
கண்டி மைந்தனே!
சுழல் பந்தின் மேதையே!
கிரிக்கெட்டுக்கு புதுப்பொலிவு
தந்த பகலவனே!
இன்று உனக்கு இறுதி நாளாம்
டெஸ்ட்டில்!!
நீ விளையாடுவதில்
இன்று இறுதி நாளாயிருக்கலாம் ஆனால்
உன்னைப்பற்றி பேசப்போகின்ற
டெஸ்ட் போட்டிகளுக்கு
இன்றே முதல் நாள்!!
துடுப்புக்கு பிரட்மன் என்றார்கள்
இன்று மட்டும்,
நாளை தொடக்கம்
பந்து என்றால் முரளி
என்பார்கள் இருந்து பார்!!

சுழற்ற்றுபவர்களுக்கு முன்னோடியே!
விக்கெட் எண்ணிக்கையிலும் நீ
முன்னோடி விட்டாய்!!
உன் தூஸ்ராவில் மயங்காதோர்
எத்தனை பேர்??
மாஸ்டர் batsman கூட
உன் இறுதி டெஸ்ட்டில்
கதிகலங்கினாரே!!

உன்னில் குறை சொன்னோர்களுக்கு
சிரித்துக்கொண்டே
சாதித்துக்காட்டினாயே முரளி!
உன்னில் பிழையில்லை
வல்லோரை கண்டால் நலிந்தோருக்கு
கண் குத்தத்தான் செய்யும்
கண்டுக்காதே!!


இது உனக்கு முடிவல்ல முரளி
ஆரம்பமே!!
நீ வீட்டிலிருந்து இனி
போட்டிகளை ரசிப்பாய் ஆனால்
நீ இல்லாத போட்டிகளை
பார்க்க கூட மனம்
பிரியப்படவில்லை!!

நீ விளையாடிய காலத்தில்
அதை பார்க்க
நாம் வாழ்வு கொண்டோம்
என்பதில் எத்தனை சந்தோசங்கள்!!

நீ வென்று கொடுத்த போட்டிகள் ஏராளம்
உனக்கு ரசிகர்களோ பல்லாயிரம்!!
சொல்கிறார்கள் உனக்கு
முப்பத்தெட்டாம்!
உன் சிரிப்பிலே தெரிகிறது அது
பதினெட்டென்று!!

கிரிக்கெட்டில் ராஜ்ஜியம்
ஆண்டுவிட்டாய்
வாழ்க்கையில் மதியுடன்
என்றென்றும் மலர்வுடன்
பல்லாண்டுகள் வாழ
வாழ்த்துக்கள்..
வாழ்த்துகிறேன்
உன்னை பிரியும் சோகத்துடனே!!


என் நினைவுள்ளவரை என்னோடு
இருக்கும் உன் நினைவுகள்!!
உன் கோடிக்கணக்கான ரசிகர்களில்
ஒருவனாக...!!

Post Comment

Hosana.. ஹோசனா!



ஏன் இதயம்.. உடைத்தாய் நொறுங்கவே...
என் மறு இதயம்.. தருவேன் நீ உடைக்கவே...

அந்த நேரம் அந்தி நேரம் கண்பார்த்து
கந்தலாகி போன நேரம் ஏதோ ஆச்சே..

ஒ வானம் தீண்டி வந்தாச்சி அப்பாவின்
திட்டெல்லாம் காற்றோடு போயே போச்சே.. ஹோசனா

என் வாசல் தாண்டி போனாளே.. ஹோசனா
வேறொன்றும் செய்யாமலே ..

நான் ஆடிப்போகிறேன் சுக்கு நூறாகிறேன்
அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன் ..

ஹோசனா .. வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்
ஹோசனா .. சாவுக்கு பக்கம் நின்றேன்..
ஹோசனா .. ஏன் என்றால் காதல் என்பேன் ..

Everybody wanna know what'd be lika feel lika,
I really wanna be here with you…
It's not enough to say that we are made for each other,
It's love that is Hosanna true...
Hosana…be there when you're callin' out me name...
Hosana...feeling like me whole life has changed...
I never wanna be the same...
It's time we rearrange...
I take a step,
You take a step,
Im here callin out to youu...
Hello...Halloo……Halloooooo…


வண்ண வண்ண பட்டுபூச்சி பூத்தேடி பூத்தேடி
அங்குமிங்கும் அலைகின்றதே...
ஒ சொட்டு சொட்டாய் தொட்டுபோக மேகமொன்று மேகமொன்று
எங்கெங்கோ நகர்கின்றதே..

ஹோசனா.. பட்டுபூச்சி வந்தாச்சா..
ஹோசனா.. மேகம் உன்னை தொட்டாச்சா

கிளிஞ்சல் ஆகிறேன் நான்.. குழந்தை ஆகிறேன்
நான் உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன்

ஹோசனா..என் மீது அன்பு கொள்ள
ஹோசனா..என்னோடு சேர்ந்து செல்ல
ஹோசனா.. உம் என்று சொல்லு போதும்....


ஏன் இதயம்.. உடைத்தாய் நொறுங்கவே...
என் மறு இதயம்.. தருவேன் நீ உடைக்கவே...

Post Comment

கல்நெஞ்ச மறுமொழி??



காதல் என்னை தீண்டும் போதும்
காற்று மெல்ல வருடும் போதும்
பெண்மை என்னை இழுக்கும் போதும்
கவிதை தானடி உறைவிடமாகும்!

கண்ணுக்குள்ளே கதிர்வீச்சு
உன் கண்கள் கண்டால்
மனதில்
தெருக்கூத்து!
கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை நீ
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை!
என் மூச்சாகி நின்றவளே!


காலமெல்லாம் காத்திருப்பேன் என
மனம் கூறும் உறுதிமொழி
மன்மத்தின் திடத்தை
கலைக்க வருமா
கல்நெஞ்ச மறுமொழி??
புயல் அடித்த பின்பும்
தென்றலின் சுவாசம் நுகரலாம்..
உன் பதில் பார்த்து நானும்
எப்பாதை நகரலாம்??

Post Comment

Wednesday, July 21, 2010

உசுரே போகுதே ...


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

Post Comment

Tuesday, July 20, 2010

பூக்களும் காயம் செய்யும்!!

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்





இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

வைரமுத்துவின் வைரவரிகள்

Post Comment

கண்ணதாசனே !

Kannadasan 2

கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !

நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !

சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !

உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !

திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !

படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !

கண்ணனின் கைநழுவி
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !

அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !

பதினெட்டுச்
சித்தர்களுக்கும்
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !

கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும்
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !

இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..

எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.

அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

Post Comment

என்செய்வேனோ??

மனதிலோர் வெறுமை..

வேற்று கிரகத்தில் இருப்பது போல்

கண்களுக்கு பிரம்மை!

தனிமையில் இருந்தாலும்

தோல்வியின் துன்பம்!

கூட்டத்தில் இருக்கும்போது

தனிமையின் பிம்பம்!

தோல்வி தான்..

தோல்வியை அனுசரிக்க தெரியாத

என் மனதுக்கு தோல்வி தான்!

ஆறுதல் படுத்துவோர் சொற்கள்

செவிக்கு இனிமையாக இல்லை..

தோல்வியின் நினைவுகளால்

தினசரி தொல்லை!

நிற்கதியாக நானும் மனதும்...என்செய்வேனோ??

Post Comment

Tuesday, July 13, 2010

இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதிய பிரிவுக்கடிதம்!

இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.


மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன்

நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன்.



திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான்.


பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான்.

நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான்.


ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது.

பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஆர்மோனியமாகவே

நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம்.


என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய்.

உன்னை நானும் பார்க்கிறேன்.

தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது.

வார்த்தை துடிக்கிறது;

வைராக்கியம் தடுக்கிறது;

வந்துவிட்டேன்.





அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில்.


ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய்.

இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய்.


என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய்.


நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய்.

ஒரு கணம் திகைத்தேன்.


வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன்.



நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன.

சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன்.



நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன்.


உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை

நினைத்தேன்.


‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே

புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன்.


அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது.



எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது.

இருக்காதே என்று நினைக்கிறேன்.

பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன்.

உன் அறிக்கைதான்.


ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான்.

படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன்.


உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்!

உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்!

காரணமே இல்லையே.


இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு ‘சரி’ என்கிறேன்.


ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய்.

இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய்.

நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே!

இப்போது சொல்கிறேன்.


உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.


ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை.

உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு

வந்தார்கள்.


உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள்.

நான் கொதித்தேன்.


"அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச்

சினந்து "போய் வாருங்கள்" என்றேன்.


மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை.


இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது.



நீயும் நானும் சேர வேண்டுமாம்.

சில தூய இதயங்கள் சொல்லுகின்றன.

உனக்கு ஞாபகமிருக்கிறதா?


‘ஈரமான ரோஜாவே’ எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ

துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன்.


மழை வந்தது.

நின்று விட்டேன்.


என்னை நீ பிடித்து விட்டாய்.

அப்போது சேர்ந்து விட்டோம்.


ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம்.

இப்போது முடியுமா?


இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்?

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...